Saturday, July 23, 2011அமெரிக்க வெளிவிவகார நடவடிக்கைகளுக்கான பிரேரணையால் நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அமெரி்க்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரம சூரிய தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு இலங்கையில இடம்பெற்ற யுத்தத்தினபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் சமபவங்களுக்கான பொறுப்புடமை குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது அமெரிக்காவால் இலங்கைக்கு பாரிய உதவிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை எனவும் அது மிகவும் சாதகமானதொரு விடயமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொறுப்புடமை கூற வேண்டிய சம்பவங்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போர் நிறைவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு இடைக்கிடையே தெளிவுபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அசாதாரண சூழ்நிலை காரணமாக சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்களில் சுமார் 2 இலட்சத்து 90 ஆயிரம் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதுவரை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 11 ஆயிரத்து 600 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாகவும் வீடுகளை அமைத்தல், வீதிகளை புனரமைத்தல் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றுதல் போன்ற விடயங்கள் முன்னெடுக்ப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்ளத்திற்கு அடிக்கடி தெளிவுபடுத்தப்படும் எனவும் அவற்றினை கருத்திற் கொண்டே மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் அமெரிக்கா தீர்மானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.





Saturday, July 23, 2011











Friday, July 22, 2011








Friday, July 22, 2011
















