Friday, July 22, 2011

யாழ் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு பின்புற வீதியில் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

Friday, July 22, 2011
யாழ் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு பின்புற வீதியில் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

குருநகரைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான சி.ஜேசுதாஸ் (வயது68) என்ற முதியவர் கடுமையாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலம் இன்று காலை நல்லூர் கைலாயப் பிள்ளையார் ஆலயத்திற்கருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.குறித்த முதியவர் நேற்று மாலை மதுச்சாலையொன்றில் மது அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இவரை அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் இவர் வீடு திரும்பாத நிலையில் இவரது குடும்பத்தினர் இவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் இவரது சடலம் நேற்றுக்காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சடலத்தை யாழ் மாவட்ட நீதவான் ஆனந்தராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.

No comments:

Post a Comment