Tuesday, January 31, 2012

சீனாவுக்கு 'ஷாக்' நியூஸ்..ரூ.50,000 கோடிக்கு 'டஸ்ஸால்ட் ரபேல்' போர் விமானங்களை வாங்கும் இந்தியா!

Tuesday, January 31, 2012
புதுடெல்லி::பிரான்ஸைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ. 50,000 கோடி மதிப்பிலான 126 அதி நவீன டஸ்ஸால்ட் ரபேல் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. இந்திய விமானப்படை மிகப் பெரிய தொகைக்கு வெளிநாட்டுப் போர் வி்மானங்களை வாங்கவிருப்பது இதுவே முதல் முறை . மேலும் உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு கொள்முதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்படும். டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் மிகவும் நவீனமானவை. இந்திய விமானப்படைக்கு இந்த போர் விமானங்கள் மிகப் பெரிய பலத்தை அளிக்கும் என்பதால் இந்த டீல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த நிதியாண்டில் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்று கையெழுத்தாகும். முதல் கட்டமாக 18 விமானங்களை டஸ்ஸால்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும். மீதமுள்ள 118 வி்மானங்களை இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து டஸ்ஸால்ட் ஏவியேஷன் தயாரித்து அளிக்கும்.

உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமாக மாறியுள்ள இதைப் பெற ரஷ்யாவின் மிக்-35, லாக்கீட் மாட்டினின் எப்-16 பால்கன், போயிங்கின் எப் 18 ஹார்னட், ஸ்வீடனின் சாப் கிரிப்பன், ஐரோப்பிய போர் விமானமான டைபூன் மற்றும் டஸ்ஸால்ட் ரபேல் ஆகியவற்றுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரபேல் வென்றுள்ளது.

ஈரோபைட்டர் எனப்படும் டைபூன் போர் விமானத்தை ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த நான்கு நாடுகளின் அரசுகளும் இந்திய விமானப்படையின் ஒப்பந்தத்தைப் பெற கடுமையாக முயன்று வந்தன. அதேசமயம், டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானத்திற்கு பிரான்ஸ் அரசு தீவிர ஆதரவு தெரிவித்து செயல்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி இறுதியாக இந்த இரண்டு நிறுவனங்களை மத்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தப் பரிசீலனையில் வைத்தது. இதில் டஸ்ஸால்ட் ரபேல் விமானங்களின் விலை டைபூனை விட குறைவாக இருந்ததாலும், அதன் துல்லியம் சிறப்பாக இருந்ததாலும், பிரான்ஸ் நிறுவனத்திற்கு தற்போது அடித்துள்ளது யோகம்.

மிராஜைத் தந்ததும் டஸ்ஸால்ட்தான்

இந்திய வி்மானப் படைக்கும், டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கும் இடையிலான தொடர்பு புதிதல்ல. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நிறுவனம்தான் மிராஜ் 2000 விமானத்தை இந்தியாவுக்குக் கொடுத்தது. இந்தியாவின் மிகச் சிறந்த போர் விமானங்களில் ஒன்று மிராஜ்தா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேரும்போது இந்திய விமானப்படையின் பலம் பலமடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நிச்சயம் சீனாவுக்கு இது கசப்பான செய்திதான்..!

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது, செயல்பாடுகளை தொடங்கலாம்: நிபுணர் குழு அறிக்கை!

Tuesday, January 31, 2012
புதுடெல்லி::கூடங்குளம் அணுசக்தி திட்டம் குறித்து அரசாங்கம் ஒரு நிபுணர் குழு அமைத்திருந்தது . அந்த குழு தனது அறிக்கையை இன்று சமர்ப்பித்துள்ளது.

அறிக்கையில், அணுசக்தி திட்டம் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் (AERB) நிபந்தனைகளுடன் முடிவடைந்தது தற்போதைய அனைத்து பாதுகாப்பு தேவைகளும் பூர்த்தியாகி உள்ளது மற்றும் ஒப்புதல் செயல்பாடுகளும் பாதுகாப்பானது உற்பத்தியை தொடங்கலாம் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது .

மேலும், அச்சங்களை போக்க அனைத்து பாதுகாப்பு பிரச்சினைகளுக்கும் அறிக்கையிடப்பட்டுள்ளது ஆனால் மக்கள் பிரதிநிதிகள் எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை என்பதால் பேச்சுவார்த்தையை தொடர முடியாத நிலையில் உள்ளது

அணுசக்தி திட்ட உண்மைக்கு எதிராக மக்கள் இயக்கம் தவறான திசையில் திருப்பபட்டிருப்பதை காணமுடிகின்றது என்றும் நிபுணர் குழு கூறியுள்ளது.

பேசாலை கிரா மீனவ்களுக்கான மீன் பிடி உபகரணங்களை வழங்கும் வைபவம்!

Tuesday, January 31, 2012
மன்னார் பேசாலை கிரா மீனவ்களுக்கான மீன் பிடி உபகரணங்களை வழங்கும் வைபவம் திங்கட்கிழமை பேசாலை கூட்டுறவு மண்டபத்தில் இடம் பெற்றது.இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற
உறுப்பினர் குனைஸ் பாருக் ஆகியோர் பேசாலை கிரா மீனவ்களுக்கான மீன் பிடி உபகரணங்களை வழங்கி வைத்தனர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரான எம்.ஏ.ஜே.மெண்டிஸ் பதவி விலகினார்!

Tuesday, January 31, 2012
இலங்கை::இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரான எம்.ஏ.ஜே. மெண்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் ஜனாதிபதியால் இவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது, உலகிலேயே சிறந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை மாற்றுமாறு ஜனாதிபதி எம்.ஏ.ஜே. மெண்டிஸிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இதற்காக தான் அனைவருடனும் ஒன்றிணைந்து பாடுபட்டதாகவும் ஜூன் மாதமளவில் தொடர்ந்து ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை தன்னால் முன்கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்ந்ததாகவும் மெண்டிஸ் தெரிவித்தார்.

இதனாலேயே தான் பதவி விலக எண்ணியதாகவும் அவர் குறிப்பிட்டார். மெண்டிஸின் சுயவிருப்பின் அடிப்படையிலான பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கூடங்குளம் விவகாரத்தில் போராட்ட குழு - இந்து முன்னணி நெல்லையில் பயங்கர மோதல்!

Tuesday, January 31, 2012
நெல்லை::கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து 4வது கட்ட பேச்சில் பங்கேற்க வந்த போராட்ட குழுவினருக்கும் இந்து முன்னணியினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்கள், செருப்புகளை வீசி தாக்கி கொண்டனர். இதனால் நெல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில நிபுணர் குழுவினர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் விளக்கம் அளிக்க இருந்தனர். பேச்சுவார்த்தையில் கூடங்குளம் போராட்ட குழுவினர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, மத்திய நிபுணர் குழு தலைவர் முத்துநாயகம் தலைமையில் 12 பேர் இன்று காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் செல்வராஜிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் போராட்ட குழு பிரதிநிதிகள் வருகைக்காக காத்திருந்தனர். இதற்கிடையே மாநில இந்து முன்னணி தலைவர் வி.பி.ஜெயக்குமார், நெல்லை மாவட்ட செயலாளர் உடையார் மற்றும் இந்து முன்னணியினர் கலெக்டரையும், மத்திய நிபுணர் குழுவையும் சந்தித்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்த போவதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்து கொண்டிருந்தனர்.
அப்போது கூடங்குளம் அணுமின் நிலைய போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், மாநில நிபுணர் குழுவை சேர்ந்த புஷ்பராயன், ஜேசுராஜ் மற்றும் வக்கீல் சிவசுப்பிரமணியன், முகிலன், நில்பிரட், ராதாபுரம் யூனியன் கவுன்சிலர் இனிதா மற்றும் சுந்தரி ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். திடீரென உடையார் உள்ளிட்டோர் போராட்ட குழுவினர் மீது பாய்ந்தனர். அவர்கள் வந்த வாகனங்களை கல்வீசி தாக்கினர். பதிலுக்கு போராட்ட குழுவை சேர்ந்த பெண்களும் இந்து முன்னணியினர் மீது செருப்புகளை வீசி கோஷமிட்டனர்.

இந்த திடீர் மோதலால் கலெக்டர் அலுவலக வளாகம் போராட்ட களமாக மாறியது. பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். கல்வீசி தாக்கியவர்களை கைது செய்தனர். அதே நேரத்தில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்ட குழுவினர் கோஷம் எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மணி நேரம் கடும் பதற்றம் நீடித்தது. நெல்லை கமிஷனர் கருணாசாகர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், ÔÔஅரசுக்கு மதிப்பளித்து 4வது கட்ட பேச்சில் பங்கேற்க வந்தோம். எங்கள் மீது இந்து முன்னணியினர் கல்வீசி தாக்கினர். எங்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் பேச்சில் பங்கேற்கவில்லை. கூடங்குளம் அணு உலையை எங்கள் உயிரை கொடுத்தாவது தடுப்போம் என்றார். இதற்கிடையில் இந்து முன்னணியினர் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆண்களுக்கு நூதன கருத்தடை விந்தணு எண்ணிக்கை குறைக்க அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை!

Tuesday, January 31, 2012
கிரீன்வில்::குழந்தை பெற முடியாத ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் சிகிச்சை முறை பிரபலமானது. இதையே உல்ட்டாவாக்கி, விந்தணு எண்ணிக்கையை குறைக்கும் கருத்தடை முறை குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடந்து வருகிறது. கருத்தடைக்கு ஆபரேஷன், ஆணுறை, மாத்திரைகள் என பல வழிகள் உள்ளன. இதை மேலும் எளிமையாக்குவது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் சுருடா தலைமையில் சமீபத்தில் இதுபற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. இதுபற்றி அவர் கூறியதாவது: ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக, வீரியமாக இருந்தால்தான் குழந்தை பெற முடியும். குழந்தை பெற முடியாத ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. மாறாக, விந்தணு எண்ணிக்கையை குறைத்து கருத்தடை முறையாக பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு நடத்தினோம்.

ஆண் சுண்டெலிகளின் விந்தணு எண்ணிக்கையை அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை மூலம் குறைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எலியின் விதை மீது 3 மெகா ஹெர்ட்ஸ் அளவுள்ள அல்ட்ரா சவுண்ட் அலையை செலுத்தி, விந்தணுவை உருவாக்கக் கூடிய ஜெர்ம் செல் அழிக்கப்பட்டது. ஆனால், சவுண்ட் அலை செலுத்தியதில் எலியின் விதை சற்று சூடாகியிருந்தது. மனிதர்களுக்கும் இதை கருத்தடை முறையாக பயன்படுத்தலாம். இது 40 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் இருந்துள்ளது. அப்போது, பிராஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டு, விதைகளை அகற்ற வேண்டிய நிலைமையில் இருந்த நோயாளிகள் சிலருக்கு அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களது ஜெர்ம் செல் எண்ணிக்கை கணிசமாக குறைந்தும் இருந்தது. வலி இல்லை என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த சிகிச்சை முறை சிக்கனமானது, நம்பகமானது. விருப்பப்பட்டால் மீண்டும் விந்தணு எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளவும் முடியும். அடிக்கடி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. பக்கவிளைவுகள் குறைவு. இறுதிகட்ட ஆராய்ச்சி மற்றும் முறைப்படியான ஒப்புதலுக்கு பிறகு, இது நடைமுறைக்கு வரும்.இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

பிரேக் பிடிக்காததால் தாறுமாறாக ஓடிய பஸ் : தி.நகரில் பரபரப்பு!

Tuesday, January 31, 2012
சென்னை::பிரேக் பிடிக்காததால் தாறுமாறாக ஓடிய பஸ், சென்டர்மீடியனில் மோதி நின்றது. இதில் பயணிகள் தப்பினர். 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அரசு பஸ் 47ஏ திருவான்மியூரில் இருந்து ஐசிஎப் நோக்கி காலை 8 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது. இதில் 30க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பாலத் தில் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென பிரேக் பிடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பஸ்சை நிறுத்த டிரைவர் ரஜினிகாந்த் ஹேண்ட் பிரேக் மூலம் தீவிரமாக முயற்சித்துள்ளார்.

பாலத்தின் கீழே இறங்கியதும் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்ற 11ஏ (தி.நகர்-வள்ளலார் நகர்) பஸ் மீது லேசாக மோதியது. பின்னர் சென்டர் மீடியன் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் டிரைவர்கள் ரஜினிகாந்த், லட்சுமணன் (11ஏ பஸ்) ஆகியோருக்கும், பயணிகள் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் அரசு பஸ்களை அப்புறப்படுத்தி, வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த ஐ.தே.க ஆதரவு வழங்கும்!

Tuesday, January 31, 2012
இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.இதனை தருஸ்மன் அறிக்கை எனவும் குறிப்பிடலாம் குறித்த அறிக்கையின் சிபார்சுகனை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட இலங்கை அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக் ஆணைக்குழுவை நியமித்தமையும் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தாது அவற்றை ஒரு புறத்தில் வைத்துவிட்டு தெரிவிக்குழுவொன்றை நியமிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் என்ன செய்ய முயற்சிக்கின்றனர் என்று கேள்வியெழுப்பிய பொதுச் சொயலாளர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தவதில் கவனம் செலுத்துமாறும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசிகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான கலந்துரையாடலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

வண்டலூர் அருகே ஏரியில் விழுந்து விமானம் நொறுங்கியது : மீட்பு பணிகள் தீவிரம்!

Tuesday, January 31, 2012
சென்னை::வண்டலூர் அருகே ஏரியில் விழுந்து பயிற்சி விமானம் நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் அய்யஞ்சேரியில் ஒரு பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இன்று காலை 11 மணி அளவில் பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. மீட்பு பணிக்காக 2 ஹெலிகாப்டர்கள் 11.30 அளவில் வந்தது. பயிற்சி விமானத்தில் வந்த தீபக் என்ற விமானி படுகாயம் அடைந்தார். மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கூடுவாஞ்சேரி, ஓட்டேரி போலீஸ் நிலையங்களில் இருந்து போலீசார் விரைந்து வந்தனர். இந்த சம்பவம் சுற்றுப்புற ஊர் மக்களுக்கு தெரிந்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் திரண்டு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திவாகரன் சேலத்தில் கைது!

Tuesday, January 31, 2012
சென்னை: சமீப காலம் வரை அதிமுகவில் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்தவரும், சசிகலாவின் சகோதரருமான திவாகரன் இன்று சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.

அதிமுக மற்றும் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனிலிருந்து சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வெளியேற்றப்பட்டதிலிருந்து, தமிழக அரசியல் என்பதே ஜெயலலிதா - சசிகலா பிணக்கு, மோதல், விரட்டல், பணப் பதுக்கல் தொடர்பானதாக மாறிவிட்டது.

சமீப காலமாக சசிகலாவின் உறவினர்கள் யாராவது ஒருவர் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வன்முறை, சட்டமீறல் போன்றவற்றுக்காக போலீசாரிடம் புகார் கொடுப்பதும், அவர்களை விரட்டிக் கொண்டு போலீஸ் படை செல்வதுமான காட்சிகள் தொடர்கின்றன.

சமீபத்தில் சசிகலாவின் மற்றொரு நெருங்கிய உறவினர் ராவணன் பல்வேறு புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் வரை இவர் ஆட்சியிலும் அதிமுகவிலும் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கும் மிக்கவராகத் திகழ்ந்தவர். விரைவில் அவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கூறப்படுகிறது.

இப்போது அடுத்ததாக, திருவாரூர் மாவட்டம் ரிஷியூர் கீழத்தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியனின் தொகுப்பு வீடு மற்றும் அவரது தந்தை மாணிக்கத்தின் வீடு ஆகியவற்றை இடித்த புகாரின் பேரில் திவாகரனைக் கைது செய்ய போலீஸ் தீவிரமுயற்சி மேற்கொண்டது.

திவாகரன் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் அவரைக் கண்டுபிடிக்க தமிழகம் மற்றும் அவருக்கு தொடர்புள்ள வேறு நகரங்களிலும் தேடுதல் தீவிரமாக நடந்தது.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சேலத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை போலீசார் உறுதிப்படுத்தவோ, மறுக்கமவோ இல்லை. விவரம் கேட்டால் மழுப்பலாகக் கூறிவருகின்றனர்.

மன்னார்குடி, சிவகங்கை, சேலம் பகுதிகளில் தீவிரமாக அவரைத் தேடி வந்த போலீஸ் படை, இன்று காலை சேலத்தில் திவாகரனைப் பிடித்துவிட்டதாகவும், தகவலை இப்போது ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

திவாகரன் கைது என்பது வெறும் வீடு இடிப்பு தொடர்பானது மட்டுமல்ல என்பதால், முழுவதுமாக தகவல்களைக் கறந்த பிறகே அவரை வெளியே காட்டுவார்கள் என்கிறது காவல்துறை வட்டாரம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்றக் குழுவொன்று இஸ்ரேலுக்கு விஜயம்!

Tuesday, January 31, 2012
இலங்கை::இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்றக் குழுவொன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளது.

அமைச்சர்களான நிஇலங்கைமல் சிறிபால டி சில்வா, மஹிந்த யாப்பா அபயவர்தன, பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜோன் அமரதுங்க, புத்திக்க பத்திரன, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட ஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர்.

கடந்த 29ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்ட இக்குழுவினர் எதிர்வரும் 2ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர். 'இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது. இது ஒரு நல்லிணக்கத்திற்கான விஜயம் ஆகும்' என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கியை கரும்புலிகள் தாக்கி இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தி!

Tuesday, January 31, 2012
இலங்கை::இலங்கை மத்திய வங்கியின் மீது புலிகள் இயக்கம் குண்டுத் தாக்குதல் நடத்தி இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

இதனை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தலைமையில் மத்திய வங்கியில் விசேட நினைவு தின நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்ததுடன் நினைவுப் பலகை ஒன்றும் திரைநீக்கம் செய்யப்பட்டது.

1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் திகதி புலிகள் இயக்க கரும்புலி போராளி ஒருவர் இலங்கை மத்திய வங்கியில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டார்.

இந்த குண்டுத் தாக்குதலில் சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் பலியானதோடு 400ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கொழும்பு - ஜம்பட்டா வீதியிலிருந்து வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற மணல் லொறி ஒன்றில் பயணித்த கரும்புலி போராளிகள் இலங்கை மத்திய வங்கியை அண்மித்த போது தங்கள் உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இந்நிலையில் புலிகள் இயக்க தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட சிலருக்கு மத்திய வங்கி தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் புலிகளின் தேசிய தலைவர் உள்ளிட்ட சிலருக்கு 200 வருடங்கள் சிறைதண்டனை விதித்து அப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி சரத் அபயபிட்டிய தீர்ப்பளித்தார்.

புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான மத்திய வங்கி கட்டடத்தின் சில பகுதிகளில் இன்றும் கருப்பு நிறத்தில் அடையாளங்கள் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

இலங்கையின் 64 ஆவது சுதந்திர தின விழாவை தமிழகத்திலும் நடாத்த ஏற்பாடுகள்!

Tuesday, January 31, 2012
இலங்கை::இலங்கையின் 64 ஆவது சுதந்திர தின விழாவை தமிழகத்திலும் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நீண்ட நாள் நட்பு வலுவடைய மேற்படி சுதந்திர தின விழா அமையுமென்று சென்னை மஹா போதி நிலையத்தின் பீடாதிபதி கலவானே மஹநாம தேரர் குறிப்பிட்டார்.

கடந்த 12 ஆண்டு காலமாக சென்னையில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் மஹாபோதி நிலையத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இம் முறையும் இலங்கையும் சுதந்திர தினத்தை சென்னையில் நடாத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

சென்னையில் எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாக உள்ள இலங்கையின் 64ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் உள்நாட்டு கலை, கலசார பாரம்பரிய நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன. அத்தோடு இசை நிகழ்ச்சி மற்றும் மத வழிபாடுகள் நடைபெற உள்ளதுடன் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி விசேட உரையாற்ற உள்ளார் எனவும் கூறினார்.

கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்:கூடங்குளம் எதிர்ப்பு அணியினருக்கு இந்து முன்னணியினர் செருப்படி!பதற்றம்!

Tuesday, January 31, 2012
இலங்கை::திருநெல்வேலி: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னனியினர் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுடன் மத்திய அரசு அமைத்த குழு இன்று 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களும் இடிந்தகரையைச் சேர்ந்த பெண்களும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.

அதே நேரத்தில் கூடங்குளம் அணு உலையை உடனே செயல்படுத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக நெல்லை மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையிலான ஒரு குழுவினரும் அங்கு வந்தனர்.

இரு தரப்பினரும் நேருக்கு நேர் சந்தித்ததால் அங்கு தகராறு ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே வாய் தகராறில் தொடங்கிய மோதல் பின்னர் அடிதடி, வன்முறையாக மாறியது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் வந்த வாகனங்கள் கல்வீசித் தாக்கப்பட்டன. அவர்கள் மீது செருப்புளும் வீசப்பட்டன.

இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

தாக்குதலை நடத்தியோரை கைது செய்ய வலியுறுத்தி நெல்லை மாவட்ட் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூடங்குளம் போராட்டக் குழுவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் இனி மத்திய அரசு அமைத்துள்ள குழுவுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பேச்சுவார்த்தைக்கு வந்த எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கிளம்பிப் போய் விட்டனர்.

இத்தாக்குதல் சம்பவம் காட்டுத் தீ போல பரவியதால் திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களில் பதற்றம் எழுந்துள்ளது.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் காவல் நீடிப்பு!

Tuesday, January 31, 2012
மண்டபம்::இரண்டு மாதங்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 5 பேரின் காவலை வரும் 13ம் தேதி வரை நீட்டித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மீனவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிளாடுவின் என்பவரது விசைப்படகில் மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், லாங்லெத், பிரசாத் ஆகியோர் 2011 நவம்பர் 28ம் தேதி மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அன்றிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 5 பேரையும் இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் சிறை பிடித்துச் சென்றனர். போதைப்பொருள் கடத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் சிறையில் உள்ளனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கச்சிமடம் மீனவர்களை அங்குள்ள கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களது காவலை பிப்ரவரி 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். தங்கச்சிமடம் மீனவர்களுக்கு 4வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 65 நாட்களாக இலங்கை சிறையில் வாடும் தங்கச்சிமடம் மீனவர்களை விரைவில் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டுமென மீனவர்களின் குடும்பத்தினர், மீனவர் நலச்சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜீவ் கொலையாளிகள் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான வழக்கு:விசாரணையை ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்!

Tuesday, January 31, 2012
சென்னை::பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுவின் பேரில், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன், ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் கருணை மனு தொடர்பாக முல்லர் என்பவர் தொடர்ந்த மற்றுமொரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு சாந்தன் உள்ளிட்ட மூவரின் வழக்கறிஞர்களும் விசாரணையை தள்ளி வைப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றனர். இதனையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

பின்லேடனை கண்டுபிடிக்க ரத்தம் சேகரித்த நர்ஸ்கள் தகவல் சொன்ன டாக்டர் மீது தேசதுரோக வழக்கு!

Tuesday, January 31, 2012
இஸ்லாமாபாத்::அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை கண்டுபிடிக்க, 2 நர்ஸ்கள் ரத்தம் சேகரித்துள்ளனர். இதில் அமெரிக்காவுக்கு உதவிய பாகிஸ்தான் டாக்டர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்வதா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ளது அபோதாபாத். இங்கு ராணுவ அகடமி உள்ளது. இதன் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்த அல்கய்தா தலைவன் ஒசாமா பின்லேடனை கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அந்த கட்டிடத்தில் ஒசாமா தங்கியிருந்தது பாகிஸ்தான் ராணுவம், உளவு நிறுவனம் ஐஎஸ்ஐக்கே தெரியாது என்று கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவுக்கு எப்படி தகவல் கிடைத்தது என்பது மர்மமாகவே இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் டாக்டரின் உதவியால் ஒசாமா இருப்பிடத்தை அமெரிக்கா கண்டுபிடித்தது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏவின் ஆட்கள் ஒசாமாவின் இருப்பிடத்தை தேடி வந்துள்ளனர். அப்போது டாக்டர் ஷகீல் அப்ரிடி என்பவர் அவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். அபோதாபாத்தில் ஒசாமா பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தபோது, அந்த பகுதியில் தடுப்பூசி போடுவது போலவும், ரத்த மாதிரிகள் சேகரிப்பது போலவும் ஷகீல் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். அதன்படி 2 நர்ஸ்களை ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தினார். அவர்கள் தெரு தெருவாக சென்று, எல்லோருடைய ரத்தத்தையும் சேகரித்துள்ளனர். அப்போது பின்லேடன் தங்கியிருந்த வீட்டிலும் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் Ôதி கார்டியன்Õ பத்திரிகை கடந்த ஆண்டு ஜூலையில் முதன்முதலில் வெளியிட்டது. அதை அப்போது சிஐஏ செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால், பத்திரிகையில் வந்த செய்தி உண்மைதான் என்பது இப்போது உறுதியாகி உள்ளது.

பின்லேடனின் சகோதரி 2010ம் ஆண்டு பாஸ்டன் நகரில் காலமானார். அப்போது அவருடைய டிஎன்ஏவை அமெரிக்க அதிகாரிகள் சேகரித்து வைத்தனர். அபோதாபாத்தில் உள்ளவர்களின் ரத்தத்தை அந்த டிஎன்ஏவுடன் ஒவ்வொன்றாக ஒப்பிட்டு பார்த்த பிறகே, பின்லேடன் பதுங்கியிருக்கும் வீட்டை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ÔÔ2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நர்ஸ்கள் போல 2 பெண்கள் வந்தனர். அவர்களுடன் ஒரு ஆண் வந்தார். அவர் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டார். நர்ஸ்கள் மட்டும் வீட்டுக்குள் வந்து ஹெபடிடிஸ் பி நோய் வராமல் இருக்க இலவச தடுப்பூசி போட்டனர். பாகிஸ்தான் சுகாதார துறையில் இருந்து வருவதாக சொன்னார்கள். வீட்டில் உள்ளவர்களின் விவரங்களை தெரிவித்தால்தான் தடுப்பூசி போட முடியும் என்றனர். எங்கள் ரத்தத்தை சேகரித்து சென்றனர்ÕÕ என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், டாக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்லேடன் பதுங்கியுள்ள தகவலை பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்காமல், அமெரிக்காவுக்கு தெரிவித்த குற்றத்துக்காக, அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய கமிஷன் பரிந்துரைத்தது. அதற்கு அமெரிக்க ராணுவ அமைச்சர் லியோன் பனெட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். Ôஅவர் எங்களுக்கு சில தகவல்கள்தான் கொடுத்தார். அதற்கும் தேச துரோகத்துக்கும் சம்பந்தம் இல்லை. தனி மனிதரை பிடித்து சிறையில் அடைப்பது சரியல்ல. தீவிரவாத ஒழிப்பில் அமெரிக்காவுடன் இணைந்து பாகிஸ்தான் செயல்படுவது உண்மையானால், டாக்டரை விடுவிக்க வேண்டும்Õ என்று வலியுறுத்தினார். இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கதிர்காமத்தில் புலிகளின் தற்கொலை அங்கி மீட்பு!

Tuesday, January 31, 2012
இலங்கை::கதிர்காமத்தில் புலிகளின் தற்கொலை அங்கி மீட்பு:-

கதிர்காமம் நகரிலுள்ள ஓய்வு விடுதியொன்றிலிருந்து இன்று முற்பகல் புலிகளின் தற்கொலை அங்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.

குண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர் அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பதவி பறிப்பு மேன்முறையீடு பெப்ரவரி 30ம் திகதி பரிசீலனைக்கு!

Tuesday, January 31, 2012
இலங்கை::தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தாக்கல் செய்த மேன்முறையீடு எதிர்வரும் பெப்ரவரி 30ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனு இன்று (31) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சரத் பொன்சேகா சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இரண்டாம் இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இன்று (31) குறிப்பிட்டுள்ளார்.

இதனை பரிசீலித்த சஞ்சித் டி சில்வா, நலின் பெரேரா ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு, உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது.

இதன்படி, பெப்ரவரி 30ம் திகதி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அன்றைய தினம் மனுவை விவாதிப்பதற்கு திகதி குறிக்கப்படும் என நீதிபதிகள் குழு அறிவித்தது.

இரண்டாம் இராணுவ நீதிமன்றம் தனக்கு வழங்கிய தீர்ப்பை அடுத்து பாராளுமன்ற செயலாளர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்தமை சட்டவிரோதமானதென அறிவிக்கும்படிக் கோரி சரத் பொன்சேகா மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரணாப் திட்டவட்டம்: ஈரான் பெட்ரோல் இறக்குமதி தொடரும்!

Tuesday, January 31, 2012
சிகாகோ::ஈரானில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை நிறுத்த வாய்ப்பே இல்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பா குற்றம் சாட்டி வருகின்றன. ஈரானில் இருந்து பெட்ரோல் இறக்குமதி தொடர்பாக அந்நாட்டு மத்திய வங்கியுடன் பணப் பரிமாற்றம் செய்ய அமெரிக்காவும், பெட்ரோல் இறக்குமதிக்கு ஐரோப் பாவும் அண்மையில் தடை விதித்தன. அதனால், பெட்ரோல் இறக்குமதிக்கு பணம் செலுத்துவதில் இந்தியாவுக்கு பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள நிதியமைச்சர் பிரணாப் கூறியதாவது:

உலக அளவில் பெட்ரோல் பயன்பாட்டில் 4வது இடத்தில் உள்ள இந்தியா, பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்துள்ளது. அதிலும், ஈரானில் இருந்துதான் அதிக அளவில் பெட்ரோல் இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரானில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை குறைக்க வாய்ப்பே இல்லை. ஐரோப்பாவின் கடன் நெருக்கடி, வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி குறைவால் இந்தியாவின் வளர்ச்சி பாதித்தது. அதனால், 2011,12ல் நாட்டின் வளர்ச்சி 6.5,7 சதவீதமாக இருக்கும். இருப்பினும், அடுத்த அல்லது 2 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். இவ்வாறு பிரணாப் தெரிவித்தார்.

அவுட்சோர்சிங் நிறுத்த கூடாது: அமெரிக்காவில் இந்தியாவுக்கான அவுட்சோர்சிங் பணிகளை தடை செய்தால், இருநாட்டு பொருளாதாரமும் பாதிக்கும் என்பதால், தடை விதிக்கக் கூடாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். அவுட்சோர்சிங் பணிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மீது மறுஆய்வு செய்ய வேண்டும் என்றார் அவர்.

கிரிக்கெட் மைதானத்தில் பெண் போலீஸை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி கைது- காட்டிக் கொடுத்தது சிசிடிவி!

Tuesday, January 31, 2012
பெங்களூர்::பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி அனுஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊப்ளி மாவட்ட மின்சார துறை நிர்வாக இயக்குனரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவும் இருப்பவர் பங்கஜ்குமார் பாண்டே. இவரது மனைவி அனுஜா துபே பாண்டே. நேற்று முன்தினம் இவர், தனது மகளுடன் பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த சி.சி.எல் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை காண சென்றார்.

ஸ்டேடியத்தின் 1-வது நுழைவு வாயில் வழியாக ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியும், மகளும் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அல்சூர் கேட் பெண்கள் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா நாயக், ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியிடம் நுழைவு டிக்கெட்டை கொடுக்கும்படி கேட்டார். அவரிடம் ஒரே ஒரு டிக்கெட் மட்டும் தான் இருந்தது. இதனால் யாரையாவது ஒருவரை தான் உள்ளே செல்ல அனுமதிக்க முடியும் என்று இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா தெரிவித்தார்.

இது தொடர்பாக ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் மனைவி அனுஜாவிற்கும், இன்ஸ்பெக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே ஹனு, சின்னசாமி மைதானத்தின் உறுப்பினர்களுக்கு போன் செய்தார். அங்கு வந்த அதிகாரி ஒருவர், மற்றொரு டிக்கெட்டை கொடுத்து ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் மனைவி, மகளை ஸ்டேடியத்திற்குள் அழைத்து சென்றார்.

போட்டி முடிந்து வெளியே திரும்பி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திட்டியதாகவும், பின்னர் திடீரென்று அவரை தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் ஸ்டேடியத்தின் 1-வது நுழைவு வாயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மைதானத்தில் உள்ள காமிரா மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி, போலீசை தாக்கியது உறுதியானது.

இதையடுத்து அஞ்சுமாலா கொடுத்த புகாரின் பேரில் நேற்று கப்பன்பார்க் போலீசார், ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவிக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக கோரமங்களாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் அங்கு வீடு பூட்டப்பட்டு கிடந்தது. அவரது ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் தலைமறைவாக இருந்த அனுஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் த.தே.கூ. சாட்சியமளித்தால் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்!

Tuesday, January 31, 2012
இலங்கை::ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சாட்சியமளித்தால் உள்நாட்டின் நீதிமன்றம் ஊடாக ஆயுள்கால சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையை சர்வதேச விசாரணை பொறிமுறையில் சிக்கவைக்க அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் சூழலை அமைத்து விட்டன. இதிலிருந்து தப்பிக்க வேண்டுமாயின் ஒன்றிணைந்து கடுமையாக போராட வேண்டும் என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அமைப்பாளரும் செயலாளருமான வசந்த பண்டார கூறுகையில்,

இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகள் தற்போதுவெளியில் வர ஆரம்பித்துள்ளன. அரசாங்கத்தை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகள் தற்போது தீவிரம் கண்டுள்ளது. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் என இந்தியாவின் தலைமையில் உள்நாட்டில் பேசும் போதே அதனை நிறுத்தியிருக்க வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழு அநாவசியமாக தேசிய அரசியல் விடயங்களை பேசப் போய் அது நாட்டிற்கு ஆபத்தாகி விட்டது. எதிர்வரும் மார்ச் மாதத்திலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவான விசாரணைகளை சர்வதேச சமூகம் வலியுறுத்தும்.

அதேபோன்று இதுவரை காலமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாட்டிற்கோ தமிழ் மக்களுக்கோ நன்மை ஏற்படுத்தும் வகையில் செயற்படவில்லை. இவர்களே போலியான தகவல்களை சர்வதேசத்திற்கு பரப்பி வருகின்றனர். மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தால் கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் எனக் கூறியவர்கள் கைது!-கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது!

Tuesday, January 31, 2012
இலங்கை::ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் என கூறிய இரண்டு சந்தேகநபர்கள் கல்கிரியாகமவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுக்குச் சொந்தமான வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது!

கொழும்பு கேசர் வீதியில் வர்த்தகர் ஒருவரின் பணத்தை கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்கள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி குறித்த வர்த்தகர் மூன்றரைக் கோடி ரூபாவை கொழும்பு கோட்டையில் இருந்து, தெஹிவளை வரை கொண்டு சென்ற வேளையில் சந்தேகநபர்கள் பணத்தை கொள்ளையிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளரான குறித்த நபர், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில், வேனில் சென்ற சந்தேகநபர்கள் அவரை அச்சுறுத்தி பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த முகாமையாளருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபரையும் சந்தேகநபர்கள் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பிலான தகவல்களை ஆராய்ந்து, சந்தேகநபர்களை கண்டறிந்ததன் பின்னர், வெலிகம பகுதியில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடகு கடையில் துளை போட்டு ரூ.1.25 கோடி நகைகள் கொள்ளை!

Tuesday, January 31, 2012
ஆம்பூர்::அடகு கடையில் நள்ளிரவில் துளை போட்டு ரூ.1.25 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (53). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். தேசிய நெடுஞ்சாலையை அருகே இவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. அதில் கடந்த 15 ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறார். கடைக்கு பின்னால் ஒரு பகுதியை ஷூ கம்பெனிக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை சத்தியமூர்த்தி கடையை திறந்து உள்ளே சென்றவர் அதிர்ச்சி அடைந்தார். பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அங்கிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருந்தன. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கடையின் பின்பக்கத்தில் உள்ள ஷூ கம்பெனி வழியாக நுழைந்து அடகுகடை சுவற்றில் துளைபோட்டு உள்ளே புகுந்து நகைகளை திருடிச் சென்றனர்.

இந்த துணிகர திருட்டு குறித்து ஆம்பூர் போலீசில் அவர் புகார் செய்தார். விசாரணையில் ஒரு கோடியே 25 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சத்தியமூர்த்தி மற்றும் அவரது உதவியாளர் ராமு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தட ய அறிவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் சோதனையும் நடந்தது. இந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உணவு உற்பத்தி 100 லட்சம் டன்னாக உயரும்!

Tuesday, January 31, 2012
சென்னை::மேட்டூர் அணையிலிருந்து முன் கூட்டியே பாசனத்திற்காக நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டதால், மாநிலத்தில் அபரிமிதமான குறுவை விளைச்சல் ஏற்பட்டது. இதனால், கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட 75.95 லட்சம் டன் என்ற அளவை விஞ்சி இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி முதல் முறையாக 100 லட்சம் டன் அளவை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமங்களில் வரவேற்பு: விலையில்லா கறவைப் பசுக்கள், ஆடுகள் வழங்கும் இந்த அரசின் சிறப்புத் திட்டங்கள் கிராமப்புற ஏழை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. சுமார் 1.12 லட்சம் குடும்பங்கள் 2011 ,2012ம் ஆண்டில் இந்தத் திட்டங்களால் பயன் பெறும். புதிய ஒருங்கிணைந்த காப்பீடு 1.34 கோடி குடும்பங் கள் பயன்: புதிய ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 1.34 கோடிக்கும் மேலான குடும்பங்கள் பயன்பெறுகின்றன.

பேறுகாலத்தில் தாய் இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் போன்றவற்றை மேலும் குறைக்கும் நோக்குடன், விரிவான மகப்பேறு அவசர சிகிச்சைப் பிரிவுகள் வலுப்படுத்தப்பட்டதுடன், பச்சிளம் குழந்தைகளுக்கான 41 புதிய அவசர சிகிச்சைப்பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதுமட்டு மின்றி, ஏழை தாய்மார்களின் மகப்பேறு உதவித் தொகையை நாட்டிலேயே மிக உயரிய அளவாக 12,000 ரூபாய் என அரசு உயர்த்தியுள்ளது.

சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் மேலும் 5 லட்சம் பயனாளிகள்: நாட்டிலேயே உயர் அளவாக, சமூகப் பாதுகாப்பு உதவித் தொகையை இரட்டிப்பாக தமிழக அரசு உயர்த்தியது. 5 லட்சம் புதிய பயனாளிகள் சமூகப் பாதுகாப்பு உதவித் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, முறைகேட்டைத் தடுக்கும் வண்ணம், அவரவர் வங்கிக்கணக்கின் மூலமாக நேரடியாகப் பணப்பட்டுவாடா செய்யவும்வ கைசெய்யப்பட்டுள்ளது. ஆதரவற்ற, ஒதுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான ஒரு சமூகப்பாதுகாப்பு உதவித் திட்டத்தை தமிழ்நாடு பெற்றிருப்பதை இத்தகைய முயற்சிகள் உறுதி செய்யும்.

சுற்றுலாவில் தனியார்: ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியில் ஒருங்கிணைந்த சுற்றுலா உள்கட்டமைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அரசு தனியார் பங்களிப்புடன் தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான கொள்கை வரும் ஆண்டுகளில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

பட்டா மாறுதல் பலன்: அரசால் கொண்டு வரப்பட்ட விரைவுவழி பட்டா மாறுதல் திட்டம் நல்ல பயனை அளித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 50 விழுக்காடு பட்டா மாறுதல்கள் நடந்துள்ளன.நில அபகரிப்பு நடவடிக் கை தொடரும்: நில அபகரிப்பு மீதான நடவடிக்கை குறித்து ஆளுநர் உரையில்:

பலவந்தமாக அபகரிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நிலங்கள் இந்த அரசால் ஒவ்வொரு மாவட்டத் திலும் அமைக்கப்பட்ட நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவுகளால் மீட்டளிக்கப் பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களை அச்சுறுத்தி சுரண்டும் இத்தகைய நில அபகரிப்பாளர்களை சட்டத்தின்முன் கொண்டு வந்து உரிய நீதியை வழங்க இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.

மாணவர் விடுதிகளுக்கு சொந்த கட்டிடங்கள்

சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் பழங்குடியினர் போன்றவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விடுதிகளில் தங்கிப் பயிலும் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான உணவு மானியம் இந்த அரசால் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வாடகைக் கட்டடங்களில் தற்போது இயங்கிவரும் அனைத்து விடுதிகளுக்கும் சொந்தக் கட்டடம் கட்டித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் ரோசய்யா உரையில் பல அம்சங்களும் இங்கே தனித்தனியாக தரப்பட்டுள்ளது.

தமிழ் ஆட்சிமொழியாக...

தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். திருக்குறள், தெரிந்தெடுக்கப்பட்ட பாரதியார் மற்றும் பாரதிதாசன் படைப்புகளை சீன மற்றும் அரேபிய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறந்த தமிழ் அறிஞர்களின் படைப்பு களைப் பாதுகாத்து, அவற்றை அனைவரிடத்தும் கொ ண்டு செல்லும் வகையில் நாட்டுடைமையாக்கப்பட்ட 1,472 புத்தகங்கள் தமிழ் இணைய பல்கலைக்கழக இணையதளத்தில் அரசால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசு , தனியார் பங்களிப்பு விரைவில் கொள்கை அறிவிப்பு

சென்ற ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்றவுடன் தொலைநோக்குத் திட்டம் 2025 தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான திட்ட அறிக்கையை முதல்வர் விரைவில் வெளியிட இருக்கிறார். முக்கியமான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி என்ற ஒன்று தனியாக இந்த அரசால் ஏற்படுத்தப்படும். இந்த வகையில், திட்ட செயலாக்கத்தில் அரசு மற்றும் தனியார் நிதி ஆதாரங்களை ஒருங்கிணைக்க அரசு ­தனியார் பங்களிப்புக் கொள்கை ஒன்றை இந்த அரசு விரைவில் வெளியிடும்.

கச்சத்தீவை திரும்ப பெறுவோம்

கச்சத்தீவு தொடர்பாக ஆளுநர் உரையில்: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் இந்த அரசுக்கு ஆழ்ந்த கவலையளிப்பதாக உள்ளது. நமது ஆட்சேபங்களுக்குப் பிறகும் இந்நிகழ்வுகள் தொடர்கின்றன. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண இலங்கையிடம் மத்திய அரசு கடுமையாக வலியுறுத்த வேண்டும்.

பாக் வளைகுடாப் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்கவும் ,அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கவேண்டும் என்று, இந்த அரசுகேட்டுக்கொள்கிறது. கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதன் மூலமே தமிழக மீனவர்கள் இழந்த உரிமையை மீளப்பெற இயலும் என்ற இந்த அரசின்உறுதியான முடிவினை இத்தருணத்தில் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

மாநகரங்களில் பெருந்திட்டம்

புறநகர்ப்பகுதிகள் இணைக்கப்பட்டு, சென்னை மாநகராட்சி தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுபோலவே, ஏழு பிற மாநகராட்சிகள் மற்றும் எட்டு நகராட்சிகளின் எல்லைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புர உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவைப்படும் கூடுதல் நிதி ஆதாரத்தைப் பெறுவதற்காக சென்னைப் பெருநகர வளர்ச்சி இயக்கம் ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி இயக்கம் ஆகியவற்றை இந்த அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது.

சாலைகள், தெருக்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களை மேம்படுத்துவதுடன் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை முறைகளைச் செயல்படுத்தவும் இந்த அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும். பெருந்திட்டம் இல்லாத விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் புதிதாக பெருந்திட்டம் தீட்டப்படும்.

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதை மாநிலம் தழுவிய மக்கள் இயக்கமாக மேற்கொள்ள ரூ.5 கோடியும், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பரிசோதனை அடிப்படையில் தார் சாலைகளை அமைப்பதற்கு ரூ.50 கோடியும் இந்த அரசு கடந்த பட்ஜெட் அறிக்கையில் ஒதுக்கியிருந்தது. இம்முயற்சியின் விளைவாக, பிளாஸ்டிக்கழிவுகளைக் கொண்டு 50 கோடி மதிப்பீட்டில் சுமார் 146 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுத்து, நீடித்த பயன் தரும் இது போன்ற சாலைகளை பெருமளவில் அமைக்க விரிவான தொரு திட்டம் செயல்படுத்தப்படும்.

நொய்யல் தீர்வு நானோ

நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் பொருட்டு, பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை மீண்டும் செயல்படச் செய்ய அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுத்துவருகிறது. அருள்புரம் பொதுக்கழிவு சுத்திகரிப்பு ஆலையில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் கழிவுநீரே வெளியேறாத நிலையை எய்தக் கூடிய நானோ வடிகட்டல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மூடிக்கிடக்கும் பொது சுத்திகரிப்பு நிலையங்களை மீண்டும் செயல்படவைக்க வட்டியில்லாக்கடனாக 179 கோடி ரூபாயை இந்த அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது.

இதுதவிர, நீதிமன்றத்தால் இழப்பீட்டுத் தொகை உறுதி செய்யப்படுவதை எதிர்நோக்கி, நொய்யல் பாசனப்பகுதி விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு 75 கோடி ரூபாய் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சம்பந்தப்பட்ட தொழில் அதிபர்கள் மற்றும் விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

4,704 மெகாவாட் மின்சாரம்

கடன் சுமையால் மூழ்கும் நிலையிலுள்ள மின்வாரியத்திற்கு புத்துயிரூட்ட ரூ.2,600 கோடி பங்கு மூலதனமாகவும், 955 கோடி கடனாகவும் அரசு வழங்கியுள்ளது. மின் உற்பத்தியை அதிகப்படுத்தவும், பற்றாக்குறையை குறைக்கவும் அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்ய நிறுவப்பட்ட 556 மெகாவாட் தவிர, மாநில தொகுப்பில் 30 மெகாவாட்டும், மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் பங்காக 113 மெகாவாட்டும் கூடுதல் மின் உற்பத்தித்திறனாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4,704 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும் வகையில் புதிய திட்டங்கள் செயல்பட தொடங்கும்.

நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டம்

நகர்ப்புரங்களில் நிலவும் அதிக வறுமை நிலையைப் போக்குவதற்கான ஒருங்கிணைந்ததிட்டம் ஒன்று வரும் பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்படும். வறுமை, வேலையின்மையோடு தொடர்புடைய பிரச்னையாகும். திறன்மேம்பாட்டுப் பயிற்சியின் மூலமாக இளைஞர்களை வேலைவாய்ப்பு பெறும் தகுதியுடையவர்களாக உருவாக்குவதையும், புதியதொழில் முனைவோரை ஊக்குவித்து வேலைவாய்ப்பைப் பெருக்குவதையும், இருமுனை நடவடிக்கைகளாக இந்தஅரசு செயல்படுத்தி வருகிறது. திறன் வளர் பயிற்சிகளையும் பயிற்சி மையங்களையும் தேர்ந்தெடுத்தல் மற்றும் பயிற்சிகளைக் கண்காணித்தல், பயிற்சி பெற்றவர் வேலைவாய்ப்பைப் பெறும்வரை கண்காணித்தல் போன்றவை ஒரே அமைப்பின்கீழ் கொண்டு வரப்படும்.

வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1.85 லட்சம் கோடி
திட்ட வடிவமைப்பில் சுதந்திரம் தேவை

மந்தமான வளர்ச்சி, தொடர்ந்து காணப்படும் அதிக பணவீக்க அளவு, சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு, உயர்ந்து வரும் வட்டி விகிதம் ஆகியவை நாம் உயர்வளர்ச்சி இலக்கை எட்டுவதற்கு தடை கற்களாக உள்ளன. இதன் விளைவாக, முதலீடுகள் குறைந்து வருவதுடன் தேசிய அளவில் 2011,2012ம் ஆண்டிற்கான வளர்ச்சி மதிப்பீடு கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொருளாதார மந்த நிலையின் எதிர் மறை விளைவுகளால் மாநிலப் பொருளாதாரம் பாதிக்கப்படுவது தவிர்க்க இயலாதது ஆகும்.
இந்த எதிர்மறை சூழ்நிலைகளுக்கு இடையிலும், உள்கட்டமைப்புக்கும் சமூகப் பாதுகாப்புக்கும் எவ்வித குறைவுமின்றி போதிய நிதியை ஒதுக்கீடு செய்வதில் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. வரும் 12வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், இந்த அரசு 1,85,000 கோடி ரூபாயைத் திட்டப்பணிகளுக்கு செலவிட திட்டமிட்டுள்ளது.

இது 11வது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் செலவிடப்பட்ட 85,000 கோடி ரூபாயை விட இரண்டு மடங்குக்கும் அதிகமானதாகும். இந்த உயர் இலக்கு தமிழ்நாட்டை மீண்டும் துரித வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும். மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்டங்களை இயற்ற தொடர்ந்து முயற்சி செய்து வருவதும், திட்டங்களை வடிவமைப்பதில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான அணுகு முறையைத் திணிப்பதும் மத்திய மாநில உறவுகளில் ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்பட வழிவகுக்காது.

இணக்கமான செயல் முறையைப் பின்பற்றி, பரந்த குறிக்கோள்களை மட்டும் மத்திய அரசு நிர்ணயிக்கவேண்டும் என்றும், அத்தகைய திட்டங்களில் மத்திய நிதியுடன் மாநிலத்தின் நிதியையும் ஒருங்கிணைத்து, மாநிலங்களின் தேவைகளுக்கேற்ப, அந்தந்த மாநில அரசுகளுக்கே திட்டங்களை வடிவமைக்கும் சுதந்திரத்தை அளிக்க வேண்டும் என்றும் இந்த அரசு வலியுறுத்துகிறது.

மோனோ ரயில் விரைவில் டெண்டர்

2011,2012ம் ஆண்டில், 539.83 கோடி ரூபாய் செலவில் 3,000 புதிய பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், முதல் முறையாக இன்ஜின், அடிச்சட்டம் ஆகியவை நல்ல நிலையில் உள்ள 1,432 பழைய பஸ்களின் மறு கட்டுமானத்துக்கு 97.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சிகள் போக்குவரத்துக் கழகங்களின் செயல் திறனை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க உதவும் என நம்புகிறேன். சென்னையில் ஒருங்கிணைந்த பன்முறை நகர் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கத்தில், மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

அரசு ஆபீஸ்கள் உறுதி தன்மை ஆராய வல்லுனர் குழு

சேப்பாக்கம் அரசு அலுவலக வளாகத்தில் ஜனவரி 15ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தை போன்று வருங்காலங்களில் நிகழாது தவிர்க்கும் வகையில், அரசு அலுவலகங்கள் செயல் படும் அனைத்து தொன்மையான கட்டடங்களின் கட்டமைப்பு உறுதித்தன்மையை மதிப்பீடு செய்ய ஒரு வல்லுநர்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுநுழைவு தேர்வு எதிர்ப்பு தொடரும்

கற்றல் முறையை எளிதாக்கவும், மாணவர்களின் சுமையை குறைக்கவும், 2012, 2013ம் கல்வியாண்டு முதல் முப்பருவ முறையை எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில், 11 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 34 அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு மடிகணினி: மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்த, விலையில்லா மடிக்கணினி வழங்கும் மாபெரும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்விகளுக்கு, மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள பொது நுழைவுத் தேர்வு முறை நமது மாணவர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் அதை நாம் தொடர்ந்து எதிர்ப்போம்.

அமெரிக்கா விஜயம் செய்யுமாறு ஜீ.எல்.பீரிஸிற்கு, ஹிலரிகிளின்ரன் அழைப்பு!

Tuesday, January 31, 2012
இலங்கை::அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன், அமைச்சர்ஜீ.எல்.பீரிஸை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நிலைமைகள் மற்றும் நல்லிணக்கப்பணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதமளவில் இந்த விஜயம் இடம்பெறும் எனத்தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணசபைத் தேர்தல்கள், குற்றச் செயல்களுக்கு தண்டனைவிதித்தல், மனித உரிமை நிலைமைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம்செலுத்தப்பட உள்ளது.

எவ்வாறெனினும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கஅமெரிக்காத் தீர்மானித்துள்ளது.

ஹிலரி கிளின்ரனின் அழைப்பு தொடர்பான கடிதம், ஏற்கனவே அமைச்சர்பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி நல்லிணக்கநடவடிக்கைகளை ஏற்படுத்துவதில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாக கிளின்ரனின் கடிதத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்அதற்கு இந்தியாவும் ஆதரவளிக்கக் கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பாட் பைன் அதிரடி ரூ.15 லட்சத்தை தாண்டியது வசூல்!

Tuesday, January 31, 2012
சென்னை::வாகனங்களுக்கான ஸ்பாட் பைன் நேற்று முதல் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. முதல் நாளே ரூ.15 லட்சத்துக்கு மேல் வசூலானது. சென்னையில் கடந்த சில நாட்களாக வாகன விதிகளை மீறுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, நகர் முழுவதும் 200 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் தெருவுக்குத் தெரு நின்று விதிகளை மீறுகிறவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

முன்பு அபராத தொகை கட்டுவதற்கு ரசீது வழங்கப்பட்டது. இப்போது, நவீன இயந்திரம் வழங்கப்பட்டு, அதில் இருந்து ரசீது வழங்கப்படுவதோடு, இயந்திரத்திலேயே வாகன ஓட்டிகளின் கையொப்பமும் பெறப்படுகிறது. இதனால் முறைகேடு நடப்பது தடுக்கப்படுகிறது. இந்நிலையில், எவ்வளவுதான் அபராதம் விதித்தாலும், தொடர்ந்து சிலர் விதிமுறைகளை மீறி வருகின்றனர். குறிப்பாக, பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை. இதனால், கட்டணத்தை அதிகரித்து வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முதல் அபராதக் கட்டணம் அதிகரித்து வசூலிக்கப்பட்டது.

வழக்கம்போல நேற்றும் 200 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் காலை முதல் நள்ளிரவு வரை அபராதத் தொகையை வசூலித்தனர். அதில் நேற்று மட்டும் சுமார் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதன் மூலம் ரூ.15 லட்சத்துக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை இவ்வளவு பணம் வசூலானதில்லை. முதல் முறையாக அதிகமான அபதார கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் பலரும் பல இடங்களில் குறைந்த அளவே பணம் கொண்டு வந்ததாக, போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். ஆனாலும், போலீசார் பணத்தை வசூலித்த பிறகே வாகனத்தை எடுக்க அனுமதித்தனர். இதனால், இன்று முதல் ஓரளவு வாகன விதிமுறை மீறல்கள் குறைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்ட எந்தவொரு இராணுவமேஜர் ஜெனரலும் அமெரிக்காவில் சாட்சியமளிக்கவில்லை-கோதபாய ராஜபக்ஷ!

Tuesday, January 31, 2012
இலங்கை::புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்ட எந்தவொரு இராணுவமேஜர் ஜெனரலும் அமெரிக்காவில் சாட்சியமளிக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2010ம் ஆண்டில் இலங்கையின் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் அமெரிக்கசட்டத்தரணிகளிடம் நான்காம் ஈழப் போர் தொடர்பில் சாட்சியமளித்ததாக ஊடகங்களில்தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

யுத்தத்தில் ஈடுபட்ட சகல உயரதிகாரிகளும் இன்னமும் கடமையில்ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் நாட்டுக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள் எனவும்பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கியநாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை முன்னிட்டு நாட்டுக்கு எதிரான பிரச்சாரங்கள் சூடுபிடிக்கக் கூடும் எனவும், இதனை அரசாங்கம் எதிர்பார்த்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இராணுவ ஜெனரல் யுத்தக் குற்றச் செயல்களை ஒப்புக்கொள்கின்றார் என்ற தலைப்பில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், சாட்சியமளித்த இராணுவ ஜெனரலின் பெயர்வெளியிடப்படவில்லை.

யுத்தம் இடம் பெற்ற போது கடமையாற்றிய சிலர் தண்டனை அடிப்படையில்பணி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் அவர்கள் எவருமே நேரடியாக யுத்தத்தில் ஈடுபடவில்லைஎன கோதபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இனந்தெரியாத நபர் ஒருவரினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களின்அடிப்படையில் நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவிற்குலஞ்சம் வழங்கி, நாட்டுக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுக்க அமெரிக்க முயற்சிசெய்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாக்.கில்தான் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன: தேசிய புலனாய்வு மையம்!

Tuesday, January 31, 2012
கொச்சி::இந்தியாவில் கைப்பற்றப்படும் கள்ள நோட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டுள்ளவை என்று கொச்சி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கோழிக்கோடு மற்றும் கொச்சி விமான நிலையங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகளை கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

கொச்சி தனி நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையை என்ஐஏ நேற்று தாக்கல் செய்தது.

அதில், இந்தியாவில் கைப்பற்றப்படும கள்ள நோட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில்தான் அச்சடிக்கப்படுகின்றன என்றும் கள்ள நோட்டுகளை முக்கிய நகரங்களில் புழக்கத்தில் விட ஏஜென்டுகள் உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்

Tuesday, January 31, 2012
சென்னை::நடிகர் இடிச்சபுளி செல்வராஜ், சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 72. காமெடி நடிகர் பாண்டுவின் அண்ணன், இடிச்சபுளி செல்வராஜ். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், அஜீத் உட்பட பல ஹீரோக்களுடன் இணைந்து, 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆருடன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ முதல் பல படங்களில் இணைந்து நடித்தார். ‘இதயக்கனி’, எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். பாக்யராஜுடன் ‘எங்க சின்ன ராசா’, அஜீத்துடன் ‘வில்லன்’, ‘வரலாறு’ படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி இருந்த அவர், நேற்று காலை மூச்சுத்திணறலால் பெரிதும் அவதிப்பட்டார். இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நடுவழியிலேயே மரணம் அடைந் தார். அவருக்கு செல்லம் மாள் என்ற மனைவியும், பசந்தி என்ற மகளும் உள்ளனர்.

சென்னை நந்தனம் சத்தியமூர்த்தி நகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த இடிச்சபுளி செல்வராஜின் உடலுக்கு, தமிழ்த் திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.

ஹெல உறுமய, வெளிநாட்டவரை வெறுக்கும் தன்மையுடைய கட்சியாகும் - விக்கிலீக்ஸ்!

Tuesday, January 31, 2012
இலங்கை::ஜாதிக ஹெல உறுமய கட்சி வெளிநாட்டவரை வெறுக்கும் தன்மையுடைய கட்சியென அமெரிக்கா அடையாளப்படுத்தியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உத்தேச மதமாற்றச் சட்ட மூலம் தொடர்பில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தல்களில் பெரும்பான்மை மக்களின் ஆதரவினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜாதிக ஹெல உறுமய கட்சி மாதமாற்ற சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களை வெறுக்கும் மனோ நிலையிலேயே ஜாதிக ஹெல உறுமய கட்சி திகழ்கின்றது என அமெரிக்கா அடையாளப்படுத்தியுள்ளது.

இன்னும் 45 வருடத்துக்கு தமிழகத்தில் காங். ஆட்சிக்கு வர முடியாது... அய்யர் 'பகீர்'!

Tuesday, January 31, 2012
டெல்லி::தமிழத்தில் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. இது நீடித்தால் இன்னும் 45 வருடங்களுக்கு தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த சோனியா காந்தி குறித்த நூலின் தமிழ் மொழி பெயர்ப்பின் வெளியீடு நடந்தது. இதில் கலந்து கொண்டு அய்யர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 1967-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர இயலவில்லை. அதற்குக் காரணம், கட்சித் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததுதான்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தயவு இன்றி வேறு எந்தக் கட்சியாலும் ஆட்சிக்கு வர முடியாது. அந்த நிலை தமிழ்நாட்டிலும் வர வேண்டும்.

கட்சித் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையேயான இடைவெளி இனியும் நீடித்தால் அடுத்த நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குக் கூட தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றார் அவர்.

நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும் கலந்து கொண்டார்.

ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Tuesday, January 31, 2012
இலங்கை::முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளினதும் செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளது.

அரசியற் கட்சிகளால் முன்வைக்கப்படும் யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து தேர்தல்கள் ஆணையாளரினால் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையார் மேலும் தெரிவித்துள்ளார்.

மெகசின் சிறை மோதல் சம்பவம்; அறிக்கை தயார்!

Tuesday, January 31, 2012
இலங்கை::கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்டமோதல் தொடர்பான விசாரணை அறிக்கை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம், இன்றையய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கை நாளைய தினம் தமக்கு கிடைக்குமென அமைச்சர் சந்திரசிறி கஜதீர குறிப்பிட்டார்

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் அடங்கிய குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டது

இந்த விசாரணைகளில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அறிக்கையின் ஊடாக வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கும்பல்களுடன் தொடர்பு அம்பலம்: ஏ.டி.எம்.,இலங்கை கொள்ளையர் பற்றி "திடுக்' தகவல்!

Tuesday, January 31, 2012
திருச்சி::திருச்சியில் சிக்கிய இரண்டு ஏ.டி.எம்., கொள்ளையர்களுக்கு, சர்வதேச கும்பல்களுடன் தொடர்பு இருப்பது, விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவர்கள், திருச்சியில் மட்டும் நான்கு ஆண்டுகளில், கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியது தெரியவந்துள்ளது.

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., முன், நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியில் இருந்து, "இன்னோவா' கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. 4 மணி வரை அங்கேயே நின்ற கார் குறித்து, கண்டோண்மென்ட் குற்றப் பிரிவு ஏ.சி., காந்தி, இன்ஸ்பெக்டர் வரதராஜன் விசாரணை நடத்தினர்.

ஏ.டி.எம்.,மில் இருந்து வெளியே வந்த டிப்-டாப் இளைஞர்கள் இருவர், தங்களது கார் என்றும், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கச் சென்றிருந்ததாகவும் கூறினர். பல மணி நேரம் ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தது குறித்து, போலீசார் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். அவர்கள் கையில், 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஏ.டி.எம்., கார்டுகள் இருந்தன. சந்தேகத்தின்படி, இருவரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள்: திருச்சி கருமண்டபம் ஜெய்நகரை சேர்ந்த திருச்சிற்றம்பலம் மகன் ராகவன்,30. தில்லைநகரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் ஐ.ஓ.பி., நகரை சேர்ந்த முரளி (18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). ராகவனின் அண்ணன்கள் ராஜன், ராஜ்பாபு, ராஜ்மோகன் லண்டனில் இருக்கின்றனர். சில ஆண்டுக்கு முன் தான், லண்டனில் இருந்து ராகவன் திருச்சி வந்தார்.

அண்ணன்களின் நண்பர் ராஜ்குமார் என்பவர், பெல்ஜியத்தில் வசிக்கிறார். பெல்ஜியத்தை பொறுத்தவரை, கணக்கில் உள்ள பணம் குறைந்தாலோ, திருட்டுப் போனாலோ இன்சூரன்ஸ் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதால், அங்குள்ளவர்கள் புகார் கொடுப்பதில்லை.

கைரேகை, கண்ணின் கருவிழி பதிவு உள்ளிட்ட காரணங்களால், பெல்ஜியத்தில் வெறும், "பின்' நம்பரை மட்டும் வைத்து பணம் எடுக்க முடியாது. இதனால், அங்குள்ள ஏ.டி.எம்., கார்டுகளை ராஜ்குமார் போலியாக தயாரித்து, கூரியர் மூலம் இங்கு அனுப்புவார். ராகவன் அதை வைத்து, நள்ளிரவு 2 மணி முதல் 5 மணிக்குள் பணத்தை எடுத்துவிட வேண்டும். ஒரே ஒரு முறை மட்டுமே போலி கார்டுகளை பயன்படுத்துவர். கார்டுகளை பொறுத்து, ஒருமுறைக்கு, 10 லட்ச ரூபாய் வரை பணமெடுப்பார்.

பணத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக எடுத்துக் கொண்டு, ராஜ்குமாருக்கு பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் மீதித் தொகையை அனுப்பி விடுவார். ராகவனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரும், கடந்த நான்காண்டுகளாக இவ்வேலையில் ஈடுபட்டு, 10 கோடி ரூபாய் வரை பணம் எடுத்தனர். அதற்கு கமிஷன் பெற்று, மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.

ராகவன், முரளி ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 13 போலி ஏ.டி.எம்., கார்டுகள், 1.60 லட்ச ரூபாய் ரொக்கம், 15 சவரன் நகைகளை கைப்பற்றினர். ராகவன் மத்திய சிறையிலும், முரளி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

ராகவன் அளித்த தகவலின்படி, ஏ.டி.எம்., கொள்ளையில் தொடர்புடைய ஐ.ஓ.பி., காலனியை சேர்ந்த சுமன், கணேசனை தேடிச் சென்றனர். தலைமறைவாகிவிட்ட அவர்களின் அறையில் இருந்து, 42 போலி ஏ.டி.எம்., கார்டுகளை போலீசார் கைப்பற்றினர். ஏ.டி.எம்., கொள்ளையில் ஈடுபட்டுள்ள லண்டன், பெல்ஜியம் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும், இலங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் தடுமாற்றம்? : திருச்சி குற்றப் பிரிவு போலீசார் வழக்கை விசாரித்தாலும், ஏ.டி.எம்., மொபைல் போன், இன்டர்நெட் போன்ற, "நவீன' கொள்ளை குறித்து முழுமையாக விசாரிக்கவோ, அவற்றை கண்டறியவோ உரிய சாதனங்கள் இங்கில்லை. இதனால், வெறும் திருட்டு வழக்கோடு குற்றவாளிகள் தப்பிவிடுவர்.

இதனால், அவர்களின் பின்னணியில் உள்ள, தமிழகத்தை மையமாக வைத்து கொள்ளையடிக்கும் சர்வதேச கும்பல் குறித்த விவரங்கள் வெளிவராமலேயே போய்விடும். இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை, ஆதி முதல் அந்தம் வரை விசாரிக்கும் திறன் படைத்த, சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார், இவ்வழக்கில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வாக்கு சரிவதை அவதானிக்கமுடிகின்றது- டி.எம்.சந்திரபால!

Tuesday, January 31, 2012
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோட்டைகளாக விளங்கிய பல கிராமங்களில் தமிழ் மக்கள் அக்கட்சியை விட்டு விலகி சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துள்ளனர்.

இதிலிருந்து கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வாக்கு பாரியளவில் சரிவதுடன் எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்து விடுவார்கள் எனபது விளங்குகின்றது. இவ்வாறு சிறீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.

மட்டக்களப்பு தம்பானம்வெளி கிராமத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை புதிய சிறீலங்கா சுதந்திரகட்சி கிளையை திறந்’து வைத்து பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அமைப்பாளர் பேசுகையில் நீண்டகால யுத்தம் முழுமையாக நிறைவுபெற்றுள்ளது. மக்கள் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர். இப்போது மக்களுக்குத்தேவை அபிவிருத்தியுடன் கூடிய நிம்மதிமிக்க வாழ்க்கைதான் அவற்றை செய்யவேண்டுமானால் ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும்.

சரத்பொன்சேகாவை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி ஜனாதிபதியாக்க முனைந்த லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமே இன்று ஜனாதிபதி அவர்களின கரங்களை பலப்படுத்தி அரசாங்கத்தில் அமைச்சராகவுள்ளளர். ஆனால் இன்னும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வீரம்பேசிக்கொண்டு எதிர்தரப்பிலேயே அமர்ந்துள்ளனர்.

அழிந்துபோன எமது மண்ணைக்கட்டியெழுப்ப ஆழும் அரசுக்கு ஒத்துழைப்பை வழங்குகுவதை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லமுனைவதால் தான் தமிழ் மக்கள் அக்கட்சியிலிருந்து விலகி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

Monday, January 30, 2012

தமிழகத்தில் பழிவாங்கும் ஆட்சி நடக்கிறது : மு.க.அழகிரி!

மதுரை::திமுகவினரை பழிவாங் கும் நோக்குடன் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. அதை சட்டபூர்வமாக சந்திப்போம் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார். மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு இன்று 61வது பிறந்த நாள். இதையொட்டி திமுக தலைவர் கருணாநிதி, தயாளு அம்மாள் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மதுரை சத்யசாய் நகரில் உள்ள வீட்டில் இன்று காலை அழகிரி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் உள்ள மகாராஜா கல்யாண மண்டபத்தில் நகர், புறநகர் மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் 16 ஆயிரத்து 661 ஏழைகளுக்கு அழகிரி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:

அரசியல் ரீதியாக எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

போகப்போக நீங்களே தெரிந்து கொள்வீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்.

திமுக உயர்நிலைக்குழு கூட்டம் வரும் 2ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறதே?

இதுவரை எனக்கு தெரியாது.

எத்தகைய ஆட்சி வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

மக்கள் எதிர்காலம் சிறக்க வேண்டும். மக்கள் நலனே என்றும் திமுகவுக்கு முக்கியம். அப்படிப்பட்ட ஆட்சிதான் தேவை. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அமைச்சராக இருந்து நான் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். அமைச்சர் பொறுப்பில் இல்லாத நேரத்திலும் என்னுடைய பிறந்த நாள் விழாக்கள் மூலம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி உள்ளேன். இது மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னை 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற செய்தனர்.

திமுகவில் மூன்று முறை மாவட்ட செய லாளர் பதவியில் இருப்பவர்கள் மாற்றப்படலாம் என்று செய்தி வந்துள்ளதே?

பத்திரிகைகளில் எதை எதையோ எழுதுகின்றனர். என்னுடைய மகனை இளைஞரணி பதவிக்கு கொண்டு வர நான் முயற்சிப்பதாக கூட ஒரு பத்திரிகையில் எழுதியுள்ளனர்.

அது தவறு. நானே பதவிக்கு ஆசைப்படாதவன். என்னுடைய மகனுக்கு நான் எப்படி பதவி வேண்டும் என்று கேட்பேன்?

தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பற்றி உங்கள் கருத்து?

வேண்டுமென்றே திமுகவினர் மீது பழிவாங்கும் நோக்குடன் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. இதை சட்டப்பூர்வமாக சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு அழகிரி கூறினார்.

செனட் சபை உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

Monday, January 30, 2012
இலங்கை::செனட் சபை உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் எனினும் அதிகாரப் பரவலாக்கத்திற்கும் செனட் சபைக்கும் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையின் கீழ் அரசியல் தீர்வு யோசனையாக அதிகாரப்பகிர்வு குறித்தே தாம் பேசிவருவதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும் அதிகாரப்பரவலுடன் தொடர்புபடுத்தி செனட் சபை பற்றிய விடயங்களை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதற்கு எவ்விதத்திலும் தாம் தயாரில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவருக்கு மீண்டும் சிறை நீடிக்கப்பட்டுள்ளது!

Monday, January 30, 2012
இலங்கை::போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவருக்கு மீண்டும் சிறை நீடிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 28ம் திகதி மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் ஐவர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மல்லாகம் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது 5 பேரையும் எதிர்வரும் பெப்ரவரி 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5 மீனவர்களின் சிறை 7வது முறையாக நீட்டித்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு மரண தண்டனை!

Monday, January 30, 2012
இலங்கை::ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சுரசேன முன்னிலையில் குறித்த நபர் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி பௌத்தலோக்க மாவத்தையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்த ஆறு கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது குறித்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புலிகள் தடை விவகாரம் : பிப்.20ல் பதில் மனு, அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

Monday, January 30, 2012
சென்னை::புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் 20ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் இன்று உத்தரவிட்டது.

புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர்-(புலி)வைகோ, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் விசாரித்து, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தடையை விலக்க முடியாது, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார். தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டார். இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு வரும் 20ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் : கவர்னர் ரோசய்யா!

Monday, January 30, 2012
இலங்கை::சென்னை: தமிழக சட்டசபையில் கவர்னர் இன்று ஆற்றிய உரை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படு வதும் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது. நமது ஆட்சேபங்களுக்கு பிறகும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண இலங்கையிடம் கடுமையாக வலியுறுத்துமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள உணவு பாதுகாப்பு சட்ட முன்வடிவு, தற்போது அனைவரும் பெற்றுள்ள உணவு பாதுகாப்பில் இருந்து தமிழக அரசு பெறும் உணவு தானிய ஒதுக்கீட்டை குறைக்க வழி செய்கிறது. எனவே, மத்திய அரசு முன்மொழிந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டத்தின் தற்போதைய வடிவை இந்த அரசு எதிர்க்கிறது. வன்பொருள் உற்பத்தியில் அதிக முதலீடுகளை ஈர்ப்பது குறித்த சாத்திய கூறுகளை ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை அளிக்க தொழில்துறை பிரதிநிதிகளை உள்ளடக்கிய வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும்.

சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த சுற்றுலா உள்கட்டமைப்பு திட்டம் விரை வில் தொடங்க உள்ளது. தனியார் பங்களிப்புடன் தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்து வதற்கான கொள்கை வரும் ஆண்டுகளில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த புதிய திட்டம் : கவர்னர் ரோசய்யா!

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான புதிய செயல்திட்ட அறிக்கை, அடுத்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று சட்டசபையில் கவர்னர் ரோசய்யா தெரிவித்தார். சட்டசபையில் இன்று கவர்னர் ஆற்றிய உரை வருமாறு: உள்ளாட்சி அமைப்புகளை மேலும் வலுப்படுத்த, 4-வது மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகளின் படி, இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அது குறித்த செயல் அறிக்கை பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் வைக்கப்படும். மோசமான நிதி நிலைமையிலும், முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.8 ஆயிரம் கோடிக்கு கூடுதல் நிதி பல்வேறு புதிய நலத்திட்டங்களுக்காக இந்த அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் இந்த அரசு 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயை திட்டப் பணிகளுக்கு செலவிட திட்டமிட்டுள்ளது. இது 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செலவிடப்பட்டதைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமானதாகும். தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை கண்டறிதல், முன்னுரிமைப்படுத்துதல் போன்றவற்றை வழி நடத்த, ‘தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம்’ தோற்றுவிப்பதற்கான சட்ட முன்வடிவு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அறிமுகப்படுத்தப்படும்.

முக்கியமான திட்டங்களை செயல்படுத்துவதற்கு ‘உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி’ தனியாக அரசால் ஏற்படுத்தப்படும். அரசு மற்றும் தனியார் நிதி ஆதாரங்களை ஒருங்கிணைக்க அரசு தனியார் பங்களிப்பு கொள்கை ஒன்றை அரசு விரைவில் வெளியிடும். மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்க முதல்வர் உத்தரவிட்டதால், மாநிலத்தில் அபிரிமிதமான குறுவை விளைச்சல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட 75.95 லட்சம் டன் என்ற அளவை விஞ்சி இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி முதல்முறையாக 100 லட்சம் டன் அளவையும் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.