Monday, June 20, 2016

நல்லாட்சி அரசாங்கம் 24 மணிநேரமும் அச்சத்தில் உள்ளது: தினேஷ் குணவர்தன!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பலத்தினால் நல்லாட்சி அரசாங்கம் 24 மணிநேரமும் அஞ்சியே ஆட்சியில் இருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
மெகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை சந்திப்பதற்காக இன்று திங்கட்கிழமை(20) ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் விஜயம் செய்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்தன,
 
இந்த அரசியல் சூழ்ச்சி தொடர்பாக நாங்கள் வியப்படைகின்றோம். அரசாங்கம் ஏன் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பின்னால் முழுநேரம் கண்ணோட்டம் செலுத்தி அரசியல் சூழ்ச்சி செய்கின்றது?ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்விஷன் பலத்திற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது என்பது இதுமூலம் தெளிவாகின்றது.
 
இந்த நடவடிக்கையின் ஊடாக 24 மணிநேரமும் அரசாங்கம் பயத்துடனே இருக்கின்றது என்பது புலப்படுகின்றது.
அரசியல்வாதிகள் சிறைச்சாலைக்கு சென்றாலும், நாட்டின் அரசியல் மாற்றம் பெறாது. அடக்குமுறையும், அதனை மேற்கொள்பவர்களும் இறுதியில் அதனை அவற்றை வாபஸ் பெற்றுக்கொள்வதே காலத்தின் அடிப்படை என்றார்.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் முஸம்மிலுக்கு விளக்கமறியல்!

இன்று(20) காலை நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
கடந்த அரசாங்க காலத்தின் போது ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.


இதனையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜப்பான் டைம்ஸுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்தக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். தாம், மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வரமுயற்சித்த போதும் அதற்கு தடையேற்பட்டது. எனினும் பிரதமர் நிலைக்கு போட்டியிட தடையில்லை என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஒய்வு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
இறுதிப்போர் தொடர்பாக கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ச, நிலைமையை வேலுப்பிள்ளை பிரபாகரன் தவறாக எடை போட்டுவிட்டதாக தெரிவித்தார். எனினும் விடுதலைப்புலிகள் மீளிணைவதை தடுப்பதில் தற்போதைய அரசாங்கம் தவறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
 போரின் பின்னர் வடக்கின் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப தாம் பாரிய உதவிகளை செய்த நிலையில் அவர்களை தாம் நம்பியிருந்தபோதும் அவர்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதை கவலையளிப்பதாக மஹிந்த ராஜபக்க தெரிவித்தார்.

கடலில் தவித்த இலங்கை தமிழ் அகதிகள் கரைக்கு வர அனுமதி!

 பழுதடைந்த படகு ஒன்றுடன் இந்தோனேஷிய கடற்பகுதியில் தவித்த பல இலங்கை தமிழ் குடியேறிகள், கரைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அச்சேவின் கடற்கரைப் பகுதியில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கொட்டகைகள் அமைக்கப்பட்டு அதில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
 
அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்த அவர்கள் சென்ற படகில்
இயந்திர கோளாறு ஏற்பட்டது. முன்னர், அகதிகள் தங்கள் படகைவிட்டு இறங்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால், அந்தப் பகுதியில் காற்று பலமாக வீசியதாலும், கடும் மழை பெய்ததாலும், அதிகாரிகள் தங்கள் முடிவை மாற்றும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என, பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அத்துடன், அவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
அந்த அகதிகள் குழுவில் 9 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற 4600 படையினர் இராணுவ சேவையில் இருந்து நீக்கம்!

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற 4600 படையினர் பொதுமன்னிப்பின் கீழ் இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
 
இதில், 4229 இராணுவ சிப்பாய்களும், 206 கடற்படையினரும், 165 விமானப்படையினரும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
 
இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை குறித்த பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது

Sunday, June 19, 2016

கம்­மன்­பி­ல கைது கூட்டு எதிர­ணியை முடக்கும் சதி: விமல் வீர­வன்ச!

பிவிதுர ஹெல உறுமய அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­ன உதய கம்­மன்­பி­லவை கைது செய்துள்­ளமை கூட்டு எதிர­ணியை முடக்கும் சதி என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச குற்றம் சாட்­டி­யுள்­ளார்.
 
பாரா­­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில பொலி­­ஸ் விஷேட விசா­ரணை பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டு­ள்­ளதையிட்டு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்ட­வாறு தெரி­­விக்­கப்­பட்­டுள்­ள­­து.
 
பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தூய்­மை­யான நாளைக்­கான ஹெலஉறுமய அமைப்­பின் தலை­­வ­ரும் கூட்­டு எதி­ர­ணியின் அங்­கத்­த­­வ­ரு­மா­ன உதய கம்­மன்பில போலி குற்­றச்­சாட்­டினை மையப்­ப­டுத்தி கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அர­சாங்­கத்தின் இந்தச் செயற்­பாட்­டினை தேசிய சுதந்­திர முன்­னணி வண்­மை­யாக கண்­டிக்­கி­ற­து. அதே­நேரம் நாட்டின் தேசிய பாது­காப்பை முற்­றாக இல்­லா­தொ­ழித்து மீண்டும் தீவி­­ர­வாத சக்தி­க­ளுக்கு உயிர்­கொ­டுக்கும் செயற்­பா­டு­களை இந்த அர­சாங்கம் தொடர்­ந்­தும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. தேசத்­திற்கு துரோகம் செய்யும் இந்த அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு தொடர்பில் மக்­களும் அதி­ருப்­தி அடைந்­துள்­ள­னர். என்றும் அவர் கூறியுள்ளார்.

பாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பத்பநாபா அவர்களுக்கு ஆதரவாளர்களாலும் பொது மக்களாலும் நினைவு கூறப்பட்டது!

Sunday, June 5, 2016

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற முனைந்தால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் : மஹிந்த அணி எச்சரிக்கை!

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற முனைந்தால் நாடு பாரதூரமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எச்சரித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் - இலங்கை அரசின் இணை அனுசரணையுடனேயே கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு அதனை நிராகரிப்பதாக இருந்தால் தற்போது அது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
 
ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற முனைந்தால் நாடு பாரதூரமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடங்களை அரசு நிராகரிக்காது செயற்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம். இந்த விடயத்தில் அரசு விளையாட்டுத்தனமானக் கருத்துகளைக் கூறி நாட்டு மக்களை மடையர்களாக்கி சாதிக்க நினைக்கின்றது. எதிர்வரும் 13ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. இதில் அரசு தமது தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேண்டும்" - என்றார்.