Wednesday, June 19, 2013

Manmohan concerned at reports on Colombo’s move to dilute 13th Amendment!(The Hindu)

Wednesday, June 19, 2013
Chennai::For the first time since the end of the military annihilation of the LTTE in May 2009, and a raging debate within Sri Lanka on the way to go about redressing the political and social grievances of the island nation’s Tamils, India has expressed dismay over reports suggesting that Colombo is mulling over a review of the key issues related to devolution of powers to the provinces.
At an interactive session with a delegation of the Tamil National Alliance, the legislative representative group of the Sri Lankan Tamils in the North-Eastern province, Prime Minister Manmohan Singh is reported to have told them that reports of the Rajapaksa regime reneging on its commitment to New Delhi on a political package for resolution of the concerns of the Tamil community in the island nation are disturbing.
Dr. Singh said he was dismayed by reports suggesting that the Government of Sri Lanka planned to dilute certain key provisions of the 13th Amendment to the Constitution ahead of elections to the Northern Provincial Council.
 
The 13th Amendment is one of the key points of the 1987 India-Sri Lanka pact brokered by the then Prime Minister Rajiv Gandhi and his Sri Lankan counterpart J. R. Jayawardene.
Under the agreement, Sri Lanka is committed to devolving powers to the provinces, including in the Tamil-dominated North and East, to give a sense to the people in these regions that they have a say on most matters related to their governance.
 
The pact had also enabled the merger of the Northern and Eastern Provinces into one, subject to a referendum by the people of the east, but it was annulled by the island nation’s Supreme Court months after the Eelam-IV war began.
 
Since the end of the military conflict in early 2009, Colombo has reiterated many a time to New Delhi that it was committed to implementing the 13th Amendment in letter and spirit and also look at the possibility of 13th Amendment plus. However, President Mahinda Rajapaksa has been hedging on it, triggering misapprehensions among Tamils in Sri Lanka and India.
A spokesperson of the External Affairs Ministry said:
 
“At the meeting, it was noted that the proposed changes raised doubts about the commitments made by the Sri Lankan Government to India and the international community, including the United Nations, on a political settlement in Sri Lanka that would go beyond the 13th Amendment.
“The changes would also be incompatible with the recommendation of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC), set up by the Government of Sri Lanka, calling for a political settlement based on the devolution of power to the provinces.”
 
The LLRC was constituted by Mr. Rajapaksa to make recommendations on what should be done to assuage the sentiments of the Tamil community.
The delegation earlier called on the External Affairs Minister Salman Khurshid and National Security Adviser Shivshankar Menon, who had served as Indian High Commissioner in Sri Lanka.
“He [Dr. Singh] stressed on the expectation that the Sri Lankan Tamil community would lead a life of dignity, as equal citizens, and reiterated that India would make every effort to ensure the achievement of a future for the community marked by equality, justice and self-respect,” the spokesperson noted.
The meeting with Dr. Singh lasted 40 minutes.
 
It is believed that the discussion covered a wide range of issues including provincial elections, the situation in the North and Eastern provinces, Indian development assistance, reports of proposed constitutional amendment.
 
The six-member delegation of the Tamil National Alliance (TNA), Sri Lanka, which has been on a visit here from 16-19 June, is led by R. Sampanthan, MP, and consists of Mavai S. Senathirajah, (MP), K. (Suresh) Premachandran (MP), P. Selvarajah (MP), Selvam Adaikkalanathan (MP) and M.A. Sumanthiran (MP).
A TNA delegation had visited India in October 2012.
 
The Hindu.

18,000 இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்கும் தகுதியினைப் பெறுவர்: (கபே) நிர்வாக இயக்குநர் கீர்த்தி தென்னகோன்!

Wednesday, June 19, 2013
இலங்கை::இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான விஷேட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், சுமார் 18,000 இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்கும் தகுதியினைப் பெறுவர் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிர்வாக இயக்குநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
 
கீர்த்தி தென்னகோன், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன.
 
நாடாளுமன்றத்தில் நேற்றுநிறைவேற்றப்பட்ட, இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கான விஷேட சட்டமூலம் வரவேற்கத்தக்கது. மக்களின் இறைமையை பாதுகாக்கும் முதற்படியாக நான் இதனைக் கருதுகிறேன். இந்தச் சட்டமூலத்தின் மூலம் வாக்குரிமை பறிக்கப்பட்ட சுமார் 18 ஆயிரம் மக்கள் தமது வாக்குரிமையை பாவிக்கும் சந்தர்ப்பத்தை மீளப்பெற்றிருக்கிறார்கள்.
 
இந்த மசோதாவின்மூலம் தமது வாக்குரிமையையும் வாக்களிக்கும் அடிப்படை உரிமையையும் இடம்பெயர்ந்த மக்கள் பெற்றிருக்கிறார்கள்.
 
யுத்தகாலத்தில் வடக்கிலிருந்து பல வருடங்களாக மக்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கிறார்கள். அப்படி இடம்பெயர்ந்தவர்கள் நாட்டின் பல பகுதிகளில் வாழ்கின்றபோதிலும் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமது வாக்குரிமையை எங்கும் பதியாமல் இருந்திருக்கிறார்கள். இவர்களது பெயர் விபரம் 2012ஆம் ஆண்டு வாக்காளர் கணக்கெடுப்பு பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படாமல் இருந்திருக்கிறது. ஆகையினால், தமது வாக்குரிமையை இழந்த மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் வரபிரசாதத்தை இச்சட்டமூலத்தினால் மீளப் பெற்றிருக்கிறார்கள்.
 
இப்புதிய சட்டமூலத்தின் அடிப்படையில் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெயர்ந்து, வாக்குரிமையற்று வாழும் சுமார் 18,000 மக்கள் தம்மை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்வார்கள் என நம்புகிறோம்.
 
இந்த மசோதாவானது இடம்பெயர்ந்த மக்கள் எப்படி தங்களை வாக்காளர் பட்டியலில் இணைந்துக்கொள்வது என்பது பற்றி தெளிவாக தெரிவிக்கிறது. ஆகையினார் இடம்பெயர்ந்த மக்கள் இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி, தமது வாக்குரிமை என்னும் அடிப்படை உரிமையை முறையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கபே அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

புலிகளின் சந்தேகநபருக்கு புனர்வாழ்வளிக்க முடியாது: அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி அஜாட் நவாவியே!

Wednesday, June 19, 2013
இலங்கை::பாரதூரமான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய புலிகளின் சந்தேகநபருக்கு புனர்வாழ்வளிக்க முடியாது என்று அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

ஜா-எலவில் வைத்து 1999 ஆம் ஆண்டு படுகொலைச்செய்யப்பட்ட ஜெனரல் லக்கி அல்கம கொலை வழக்கில் ஆஜரான அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணியான அஜாட் நவாவியே நீதிமன்றத்தில் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில்,  சந்தேநபர்களான நால்வருக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் 110 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபரான ஆர்.ஏ.அஜித் நொஹான் என்ற கிச்சிமல்லி சார்பில் ஆஜரான சட்;டத்தரணி சந்தேகநபருக்கு தண்டனை வழங்காது அவரை புனர்வாழ்வளிப்புக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

தண்டனையின்றி புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவாராயின் தனது தரப்பை சேர்ந்தவரான அஜித் தனக்கெதிரான குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை அடுத்தே அரச சிரேஷ்ட சட்டத்தரணி, பாரதூர குற்றமான கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை புனர்வாழ்வுக்கு அனுப்புவது பொருத்தமில்லை என்று நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்த வழக்கில் ஆர்.ரவீந்திரன், நாகராஜா ஸ்ரீதரன், ஆஜித் குமாரசிறி ஆகியோர் ஏனைய சந்தேகநபர்களாவர். இந்நிலையில் இந்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக நீதிபதி மேற்படி வழக்கை செப்டெம்பர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்துத்துவால்தான் நாட்டில் மாற்றம் கொண்டு வரமுடியும்: ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன் பகவத்!

Wednesday, June 19, 2013
சென்னை::இந்துத்துவால்தான் நாட்டில் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். பாரதிய ஜனதாவில் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆதரவு கொடுத்து வருகிறது. 
 
உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் வெளிப்படையாக பேசினார். அத்வானிக்கும் நிதீஷ்குமாருக்கும் பதில் அளிக்கும் வகையில் பகவத் பேச்சு இருந்தது. யாரும் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்துத்வால்தான் நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடியும். இந்துத்வாலில்தான் இந்தியான் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்று பகவத் கூறினார்.
 
நாங்கள் தலைவர்களையும் கொள்கைகளையும் மாற்றினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்துத்வா கொள்கைகளால்தான் எதையும் செய்ய முடியும். இந்தியாவை வல்லரசாக்க அரசியல் ஒரு வழிமுறை அல்ல. இந்தியாவை வல்லரசு நாடாக்க இந்துத்துவால்தான் முடியும் என்றும் பகவத் கூறினார். மத்திய அரசானது தூதரக ரீதியாக தோல்வி அடைந்துவிட்டது. நாட்டின் எல்லைப்பகுதிகள் பாதுகாப்பாக இல்லை. இந்திய எல்லைக்குள் சீன படைகள் அடிக்கடி ஊடுருவி ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது. பின்னர் நிபந்தனையின் பேரில் சீனப்படை பின்வாங்கி செல்கிறது. ஆனால் சீனாவுக்கு நம்மால் பாடம் கற்பிக்க முடியவில்லை. இந்திய கைதி சரப்ஜித் சிங் படுகொலைக்கு பின்னர் பாகிஸ்தான் நாடானது அத்துமீறி செயல்படுகிறது என்று பகவத் கடுமையாக குற்றஞ்சாட்டினார்.

இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட 28 புதிய வீடுகள் சாம்பூரில் கையளிப்பு!

Wednesday, June 19, 2013
இலங்கை::சாக்பூர் வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 22 ஆவது பிரிவுப் படையினரால் கட்டப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கான 28 வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
 
இவ் வீடுகள்யாவும் சர்வதேச இந்திய திரைப்பட கல்லூரி மற்றும் வாழ்விட மனிதாபிமானத்தின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட செயலாளர் செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் படையினரால் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
விழாவின் போது, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) டீ.டீ.ஆர் டி சில்வா, திருகோணமலை மாவட்ட செயலாளர் ஆகியோர் கிழக்கு பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவுடன் இணைந்து உரிமையாளர்களுக்கான வீடுகளைக் கையளித்தனர்.

தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு உறுப்பினா்கள் நாடாளுமன்ற வெளிவிவகார குழுவுக்கு அறிவிக்காமல் இந்தியாவுக்கு சென்றமை தொடா்பாக நாடாளுமன்றம் விசாரணை நடத்த வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய!

Wednesday, June 19, 2013
இலங்கை::தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு உறுப்பினா்கள்  இந்தியாவுக்கு சென்றமை தொடா்பாக நாடாளுமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய சாபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது..
 
நாடாளுமன்ற வெளிவிவகார குழுவுக்கு அறிவிக்காமல் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வெளிநாடுகளுக்கு சென்று அந்த நாடுகளின் பிரதமா் அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் எவரையும் சந்திக்க முடியாது.
 
ஆகவே இலங்கை அரசியலமைப்பு விதிகளை மீறிய குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினா்கள் தன்டிக்கப்பட வேண்டும் என ஹெல உறுமயவின் நாடாளுமன்ற குழு தலைவா் அத்துரலியே ரத்தன தோர் கூறியதாக கொழும்பு தகவல்கள் குறிப்பிட்டுள்ளது.

Tuesday, June 18, 2013

மாகாண சபை முறைமையிலிருந்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிடுமாறு தேசிய சுதந்திர முன்னணி நாடளாவிய ரீதியில் திரட்டிய பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்து!

Tuesday, June 18, 2013
இலங்கை::மாகாண சபை முறைமையிலிருந்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிடுமாறு தேசிய சுதந்திர முன்னணி நாடளாவிய ரீதியில் திரட்டிய பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்து மகஜர் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
 
தேசிய சுதந்திர முன்னணின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்சவங்ச தலைமையிலேயே இந்த கையெழுத்துக்கள் அடங்கிய பிரதி ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கில் நான்கு கிராமங்களுக்கான மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!


Tuesday, June 18, 2013
இலங்கை::அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டல் மட்டுமன்றி இப்பகுதியின் மேம்பாடு தொடர்பில் அவர் கொண்டுள்ள அக்கறையின் காரணமாகவுமே இங்கு பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மருதங்கேணி பிரதேச செயலர் திருலிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் நான்கு கிராமங்களுக்கான மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2010 ம் ஆண்டு இப்பகுதியில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டதிலிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இங்கு அடிக்கடி வருகை தந்து மக்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளும் அதேவேளை, அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் துறைசார்ந்தோர் ஊடாக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்.

இதனடிப்படையில் தான் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் அமைச்சர் அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக போக்குவரத்து, கல்விவசதி, சுகாதாரம், குடிநீர்விநியோகம்,  இவற்றுடன் மட்டுமல்லாது 60 வீதமான மக்களுக்கு வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்கள் நலன்சார் விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போதும் கூட அவரது வழிகாட்டலுடன் வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாக நான்கு கிராமங்களுக்கான மின்விநியோக திட்டத்தை கிடைக்கப்பெறச் செய்வதில் அமைச்சர் அவர்களின் பங்கு முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே இப்பேற்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் எதிர்காலங்களிலும் அமைச்சர் அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

இதன்போது வடக்கின் வசந்தம் திட்டப் பணிப்பாளர் குணசீலன் உரையாற்றும் போது, யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கின் வசந்தம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையில் 600 கோடிரூபா செலவில் வடமாகாணத்தில் அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.  

சிறுநீரக நோய் பரவும் பிரதேசங்களில் பொது மக்;களுக்கு தூய குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்காக பவுசர்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்றது!

Tuesday, June 18, 2013
இலங்கை::சிறுநீரக நோய் பரவும் பிரதேசங்களில்  பொது மக்;களுக்கு தூய குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்காக பவுசர்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (18) நடைபெற்றது.

பெலவத்தையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்பு அமைச்சின் சுற்றாடலில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்தன- பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
 
பிட்டபெத்தர பிரதேசத்தில் 4 கிராம சேவவர் பிரிவுகளில் வசிக்கும் 6000 பொது மக்கள் இந்தத் திட்டத்தினால் நன்மையடைவர்.

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் தெரிவு!!!

Tuesday, June 18, 2013
இலங்கை::திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி – 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான  ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த போட்டி நடைபெற்றது. 30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள்  இந்த அழகு ராணி போட்டியில் கலந்துக் கொண்டனர்.
 
இப்போட்டியிலேயே இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, ஆசிய
சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்..இவர் நுகேகொடை சமுத்ராதேவி மகளிர் வித்தியாயலயத்தின் பழைய மாணவியாவார்.
கடந்த வருடமும் இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமாலீ பொன்சேகாவே இந்த அழகு ராணி கிரீடத்தை சுவீகரித்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத் தக்கது.

நாங்க பூமியில இருக்கோம்.. வேறு யாராச்சும் இருக்கீங்களா?’ வேற்றுக்கிரக வாசிகளுக்கு மெசேஜ்: விஞ்ஞானிகள் பிஸி சக்தி வாய்ந்த ஆன்டெனா ரெடி

Tuesday, June 18, 2013
இலங்கை::வாஷிங்டன்:வேற்றுக்கிரக வாசிகள் பறக்கும் தட்டில் வந்தார்கள், போனார்கள் என்று எத்தனை காலம்தான் வெட்டிக் கதை பேசுவது. வாருங்கள்.. எல்லாருமாக சேர்ந்து ‘நாங்க பூமியில இருக்கோம்’ என்று தொடர்ந்து மெசேஜ் அனுப்புவோம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

பறக்கும் தட்டுகள் பறப்பதாகவும் வேற்றுக்கிரகவாசிகள் எட்டிப் பார்த்ததாகவும் உலகம் முழுவதும் அவ்வப்போது கதைகள் உலா வருகின்றன. மேலே இருந்து விழுந்து எரிந்த பறக்கும் தட்டில் இருந்து விழுந்து எரிந்து கருகிப்போன வேற்றுக்கிரக வாசியின் அழுகிய உடலை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்று தகவல் கசியவிட்ட சீன ஆசாமி சமீபத்தில் கைது செய்யப்பட்டது தனிக்கதை.
இந்நிலையில், அமெரிக்காவில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் உள்பட பல தரப்பினர் சேர்ந்து ‘தி லோன் சிக்னல்’ என்ற புராஜக்ட் ஆரம்பித்திருக்கிறார்கள்.பூமியில் இருந்து சுமார் 17.6 ஒளி ஆண்டுகள் தொலைவில்

(166 லட்சம் கோடி கி.மீ.) உள்ள நட்சத்திர குடும்பம் ‘கிளயீஸ் 526’. இதன் கோள்களில் நம்மைப் போல உயிரினங்கள் வசிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம் இருப்பதாக தெரியவருவதால் அந்த ஏரியாவை குறிவைத்து சக்திவாய்ந்த சிக்னல்களை அனுப்ப இந்த குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதுபற்றி டீமின் தலைமை அதிகாரி ஜேக்கப் ஹக் மிஸ்ரா கூறியதாவது:

வேற்றுக்கிரக வாசிகளுக்கு மெசேஜ் அனுப்புவது என்பது ஆரம்பத்தில் காமெடி போல தெரியும். ஆனால், இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது, வேற்றுக்கிரக வாசிகளை தொடர்பு கொண்டுவிட வேண்டும் என்பது நம் இலக்கு. கலிபோர்னியாவில் 1968ம் ஆண்டு நிறுவப்பட்ட ஜேம்ஸ்பர்க் எர்த் ஸ்டேஷன் மூலம் இந்த சிக்னல்கள் அனுப்பப்படும். அதிக திறன் வாய்ந்த ஆன்டெனாவை 30 ஆண்டு குத்தகைக்கு எடுத்து இந்த புராஜக்டில் ஈடுபட உள்ளோம். டிவி சிக்னல், ரேடியோ சிக்னல், மின்காந்த கதிர்கள் ஏராளமாக பூமியை சுற்றி வலம் வருகின்றன. ஆனால், அவை வீக்கானவை. அவற்றைவிட சக்திவாய்ந்த, தொலைதூரம் பயணம் செய்தாலும் வலுவாக இருக்கக்கூடிய சிக்னல்கள் இங்கிருந்து அனுப்பப்படும். ‘நாங்கள் பூமியில் இருக்கிறோம். நீங்கள் யாராவது அங்கு இருக்கிறீர்களா’ என்ற தகவல் இதன்மூலம் பரப்பப்படும். பூமியின் இருப்பிடத்தை காட்டக்கூடிய சிக்னலும் அனுப்பப்படும்.

இதேபோன்ற ஆன்டெனாக்கள், வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்தால் நம் இருப்பிடத்தை கட்டாயம் தெரிந்துகொள்வார்கள். வேற்றுக்கிரக வாசிகளுக்கு நீங்கள் எதுவும் சொல்ல வேண்டியிருக்கிறதா? எல்லோரும் ஒன்றுசேர்ந்து மெசேஜ் அனுப்புவோம்.

21ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Tuesday, June 18, 2013
இலங்கை::ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேர, 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான சட்டமூலங்கள் அடங்கிய தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் இன்று சபை அமர்வுகளில் கலந்துகொண்டுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
 
அதேபோன்று, பாராளுமன்றத்தில் கடந்தவாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விசேட தேர்தல்கள் ஏற்பாடுகள் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

நடுவானில் விமானத்தில் பதற்றம் சாப்பாட்ல விஷம் கலந்துட்டேன் எல்லோரும் சாக போறீங்க.. புரளி கிளப்பிய வாலிபர் சிக்கினார்!!

Tuesday, June 18, 2013
நியூயார்க்::விமான பயணிகள் சாப்பிட்ட உணவில் விஷம் வைக்கப்பட்டிருந்ததாகவும் சிறிது நேரத்தில் அனைவரும்  இறந்து விடுவார்கள் என்றும் பீதி கிளப்பிய வாலிபரிடம் விசாரணை நடக்கிறது.அரபு நாட்டில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் நியூயார்க் புறப்பட்டது. இதில் 116 பயணிகள் இருந்தனர். விமானம் ஹாங்காங் வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, வாலிபர் ஒருவர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து பயணிகள் சாப்பிட்ட உணவில் விஷம் வைத்திருக்கிறேன். எல்லோரும் சிறிது நேரத்தில் சாக போகிறீர்கள் என்று கூறினார். இதனால் விமானத்தில் இருந்த பணிகள் அனைவரும் பீதியடைந்தனர். இதுகுறித்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனினும் விமானத்தை நடுவழியில் தரையிறக்காமல், பைலட் நியூயார்க் சென்றார். லிபர்ட்டி ஏர்போர்ட்டில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள், ஆம்புலன்சில் மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர். அதற்குள் விஷம் பரவி இறந்து விடுவோமோ என்ற பீதியிலேயே பயணிகள் இருந்தனர். விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு வீரர்கள் விரைந்து சென்று பீதி கிளப்பிய வாலிபரை மடக்கி அழைத்து சென்றனர்.

இதுகுறித்து விமானத்தில் பயணம் செய்த சான் பிரான்ஸ்சிஸ்கோ பல்கலை மாணவர் மெரில் ஆமோஸ் கூறுகையில், விமானம் புறப்படும் முன்பாக ரெஸ்டாரன்டில் பயணிகள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அங்குள்ள கண்ணாடி வழியாக நீண்ட நேரம் அந்த வாலிபர் பயணிகளை பார்த்து கொண்டிருந்தார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்று தெரியவில்லை என்றார்.வாலிபரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை. விமான பயணிகளை உடனடியாக பரிசோதித்தனர். உணவில் விஷம் எதுவும் கலந்திருக்கவில்லை என்பது உறுதியானது. அதன்பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

காங்கிரஸ் ஆதரவு கேட்டு விஜயகாந்த் கடிதம் ஞானதேசிகனிடம் தேமுதிக எம்எல்ஏக்கள் கொடுத்தனர்!

Tuesday, June 18, 2013
சென்னை::தேமுதிக எம்எல்ஏக்கள் அனகை முருகேசன், பாஸ்கர், அருண் சுப்பிரமணியன், முத்துக்குமார், மனோகர் ஆகியோர் இன்று காலை 11.20  மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு 25 நிமிடங்கள் நீடித்தது.
பின்னர் நிருபர்களிடம் அனகை முருகேசன் கூறுகையில், ‘‘மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் இளங்கோவன் வேட்பாளராக  நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரசின் ஆதரவு கேட்டு விஜயகாந்த் கொடுத்த கடிதத்தை ஞானதேசிகனிடம் கொடுத்தோம். அவர் காங்கிரஸ்  மேலிடத்துக்கு அனுப்பி, முடிவு அறிவிப்பதாக கூறினார்’’ என்றார்.

ஞானதேசிகனிடம் கேட்டபோது, ‘‘தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு 5 நாட்களுக்கு முன்பே காங்கிரஸ் மேலிடத்தை அணுகியுள்ளனர். இன்று  என்னை முறைப்படி சந்தித்து ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்தனர். அதை மேலிடத்துக்கு அனுப்புவதாக கூறியுள்ளேன். முடிவை கட்சி தலைமை  அறிவிக்கும்’’ என்றார். திமுக தரப்பில் ஆதரவு கேட்டுள்ளார்களா என்று கேட்டபோது, ‘திமுகவும் ஆதரவு கேட்டு கட்சி தலைமையை அணுகியுள்ளது’  என்றார் ஞானதேசிகன்.

சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Tuesday, June 18, 2013
இலங்கை::சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் வந்த, நிட்டம்புவ திகாரி பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து ஒரு கோடி 20 இலட்சம் பெறுமதியுடைய ஒரு கிலோ 510 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்...
 

13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது ஜெனிவாவோ ஜெயலலிதாவோ அல்லது வை.கோ.வோ அல்ல இந்த நாட்டு மக்களே அதனைத்தீர்மானிக்க வேண்டும்: கெஹெலிய ரம்புக்வெல்ல!

Tuesday, June 18, 2013
இலங்கை::13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது ஜெனிவாவோ ஜெயலலிதாவோ அல்லது வை.கோ.வோ அல்ல இந்த நாட்டு மக்களே அதனைத்தீர்மானிக்க வேண்டும்: கெஹெலிய ரம்புக்வெல்ல!
 
13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது ஜெனிவாவோ ஜெயலலிதாவோ அல்லது வை.கோ.வோ அல்ல இந்த நாட்டு மக்களே அதனைத்தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் இந்த நாட்டின் இறைமையைக் கட்டிக் காக்கும் பாரிய பொறுப்பு அவர்களையே சார்ந்ததாகும்.
 
 இந்த நாடு எக்காரணம் கொண்டும் இந்தியாவின் ஒரு பிராந்தியமாகவோ அல்லது அமெரிக்காவின் ஒரு பிராந்தியமாகவோ மாறுவதை நாம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கத் தயாரில்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை மாத்தளை வாடிவீட்டில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அகில இலங்கை பிரதேச சபைத் தலைவர்களின் சம்மேளனத் தலைவரும் - புரசிரிவர சமூக சேவை அமைப்பின் பணிப்பாளர் நாயகமுமான நிமல் ஜயவர்தனவின் ஏற்பாட்டில் கட்டார் நாட்டில் பணி புரிவதற்காகத் தெரிவு செய்யப்பட்ட 50 கட்டிடக்கலை நிபுணர்களுக்கு இலவசமாக நியமனக்கடிதங்களைக் கையளிப்பதற்காக மேற்படி வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
ஊடக அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய போது,
 
அதிகாரத்தைப் பகிர்வது பற்றி எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் அது எந்த வகையில் அமைய வேண்டுமென்பதை நாமே முடிவு செய்வோம். காலத்துக்கு ஏற்ற வகையிலான மாற்றங்களே தேவை. நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரன் கொலை செய்யப்பட பின் அவரது ஆயுதங்களை இன்று சம்பந்தனே கையிலேந்தியுள்ளார். இதைக் கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் யாருடன் வே
ண்டுமானாலும் பேசட்டும் இது அவருக்கு இருக்கின்ற ஜனநாயக உரிமை.
 
ஆனால் எந்த முடிவை எடுக்க வேண்டுமானாலும் அதனை மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப நாமே மேற்கொள்வோம். பிரபாகரன் அழிக்கப்பட்டதோடு கொலைக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதன் பின் நாம் அரசியல் செய்யவில்லை. அபிவிருத்தியே செய்து வருகிறோம். இன்று மக்களுக்கு சுதந்திரமாக சுவாசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் உருவான அணிசேரா நாடுகளுடனான தொடர்புகள் காரணமாகவே இன்று சுமார் 20 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாட்டில் தொழில் செய்கின்றனர். அவர்கள் மூலம் இந்த நாட்டுக்குக் கிடைக்கும் அந்நிய செலாவணி இல்லாவிட்டால் நம்மால் யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போயிருக்கும்.
 
எரிபொருள் தேவைகளைக் கூட ஈடு செய்ய முடியாமல் போயிருக்கும்.
ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களையும் சேர்த்தால் இன்று நாட்டில் 20 இலட்சம் பேர் அதாவது முழு ஜனத்தொகையில் 10 சதவீதத்தினர் இன்று அரச ஊழியம் பெற்று வருகின்றனர். அரச சேவையைப் பலப்படுத்த வேண்டுமென்பதே ஜனாதிபதியின் நோக்கம். பணம் கறந்து மோசடி செய்யும் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு ஏஜென்ஸி நிறுவனங்கள் நிறைந்துள்ள நிலையில் இலவசமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது ஒரு பாரிய சேவையாகும் எனக்குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது!

Tuesday, June 18, 2013
இலங்கை::இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தசட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் சில திருத்தங்களுடனேயே நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், 1983ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

வேறு எந்த இடத்திலும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படாதவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளதுடன் அதற்கான சட்டமூலமும் நீதியமைச்சரினால் நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வாழ்வோர் சொந்த மாவட்டங்களில் வாக்காளராக பதிவு செய்வதற்கு தற்போது சட்டத்தில் இடமில்லை.

இந்த திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 1983 மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெயர்ந்த 15,000 பொதுமக்கள் வடக்கில் தம்மை வாக்காளராகப் பதிவு செய்ய வழி பிறக்கும் என்று அந்த ச
ட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

லண்டனில் அடி வாங்கிய புலி ஆதரவு காடையர்கள்: புலிகளின் ஆதரவாளர்களுக்கும் மற்றும் இலங்கை ஆதரவாளர்கள் இடையில் மோதல்!

Tuesday, June 18, 2013
லண்டன்::இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ,புலி ஆதரவு காடையர்களுக்கும்,இலங்கை ஆதரவாளர்கள் இடையிலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே இலங்கையைப் புறக்கணிக்க வலியுறுத்தி  புலி ஆதரவு காடையர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
 
அதேவேளை, புலி கொடியேந்திய புலி ஆதரவு காடையர்கள் வன்முறையில் இறங்கி சிங்கக்கொடியேந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தினர். அதனால் சிங்கக்கொடியேந்திய ஆர்ப்பாட்டக்காரர்களும் திருப்பி தாக்கினர்.இதன்போது  பிரித்தானியக் காவல்துறையினர் ஆதரவாளர்களை தடுக்க முயன்றபோது அவர்களுடனும் மோதினர்.
 
இதையடுத்து வன்முறையில் இறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரித்தானியக் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். 
 
இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய புலிகளின் ஆதரவாளர்களுக்கும் மற்றும் இலங்கை ஆதரவாளர்கள் இடையிலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது..

குன்னூர் ராணுவ முகாம் முற்றுகை போராட்டம்: ம.தி.மு.க., பெரியார் திராவிட கழகத்தினர் புலிகளின் ஆதரவாளர்கள் கைது!

Tuesday, June 18, 2013
குன்னூர்::நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் ராணுவ முகாம் மற்றும் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு கடந்த 27-ந்தேதி முதல்  இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகிய 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமும் எழுதினார்.  வெலிங்டன் ராணுவ முகாமில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என்று   அவர் வலியுறுத்தினார்.

புலிகளின் ஆதரவாளர்கள் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவையும்  இலங்கை வீரர்களுக்கு தமிழ்நாட்டில்  பயிற்சி அளிப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த கட்சியை சேர்ந்தவர்கள் ராணுவ முகாம் முன்பு கடந்த வாரம் போராட்டம் நடத்தினார்கள்.

இன்று மீண்டும் வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று அரசியல் கட்சியினரும், தமிழ் அமைப்பினரும் அறிவித்தனர். இதனால் ராணுவ முகாம் எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் இன்று காலை முதல் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ராணுவ முகாமுக்கு முன்பாக தடுப்பு வேலிகள், கயிறுகள் அமைக்கப்பட்டிருந்தன. ராணுவ முகாம் வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. குன்னூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீஸ் துணை சூப்பிரண்டு மாடசாமி மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் புலிகளின் ஆதரவாளர்கள் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதிதமிழர் விடுதலை முன்னணி, தலித் விடுதலை கட்சி, தமிழ் தேசிய இயக்கம், தமிழ் புரட்சி கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், வணிகர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டனர்.

வக்கீல்கள், கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனே வெளியேற்று என்று கோஷ மிட்டனர். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் இருந்து வந்த ஏராளமானோர்  இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் சிலர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்தனர். இலங்கை கொடியும் எரிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் ராணுவ முகாமுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திடீரென வெலிங்டன் ராணுவ முகாம் முன்பு ரோட்டில் அமர்ந்து போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஊட்டி-குன்னூர் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட புலிகளின் ஆதரவாளர்கள் அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
tamil matrimony_INNER_468x60.gif

இலங்கை ராணுவத்தினர் பயிற்சிக்கு எதிர்ப்பு: முற்றுகை போராட்ட அறிவிப்பால் வெலிங்டனில் ராணுவம் குவிப்பு

Tuesday, June 18, 2013
குன்னூர்::நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் ராணுவ முகாம் மற்றும் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு கடந்த 27-ந்தேதி முதல் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகிய 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமும் எழுதினார். வெலிங்டன் ராணுவ முகாமில் இருந்து இலங்கை அதிகாரிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி ம.தி.மு.க., விடுதலைசிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் வெலிங்டன் ராணுவ முகாம் நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இன்று (18-ந் தேதி) மீண்டும் வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று அரசியல் கட்சியினரும், தமிழ் அமைப்பினரும் அறிவித்தனர். அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வெலிங்டன் ராணுவமுகாமை முற்றுகையிட உள்ளனர்.

இதனால் ராணுவ முகாம் எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவ முகாமுக்கு முன்பாக தடுப்பு வேலிகள், கயிறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் ராணுவ முகாம் வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீஸ் துணை சூப்பிரண்டு மாடசாமி மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையும் நடைபெறுகிறது. லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

குன்னூர் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். குன்னூர் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

பிழைப்பிற்காக மட்டும் குரல்கொடுக்கும் தமிழ்நாட்டுச் சினமாக்காரர்!


Tuesday, June 18, 2013
இலங்கை::ஒரு மனிதனின் மரணம் என்ற வகையில் மட்டும் மணிவண்ணனின் மரணம் வருந்தத்தக்கது. அதற்காக அவர், இவரைப் போன்றவர்கள் இலங்கை தமிழ் மக்களின் மீட்போர், மனித குலத்தின் விடிவிற்காக பாடுபட்ட தியாகிகள், ‘மாவீரர்கள்’ என்று புகழ்பாடும் அளவிற்கு இவர்கள் ஒன்றும் மாமனிதர்கள் அல்ல.
 
இலங்கை தமிழ் மக்களின் விடிவிற்காக அகிம்சாவழியிலும், ஆயும் ஏற்திய போராட்ட வடிவத்தினூடும் போராடின பல தமிழ அரசியல் அமைப்புக்கள், விடுதலை இயக்கங்கள். இதனை தனித்து புலிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் செய்தன, செய்கின்றன என்று விழுந்த வளத்திற்கு குறிசுடும் பார்வையையே தமிழ் சினமாக்காரர் கொண்டுள்ளனர்.
 
அதிலும் சீமான் போர்வாளைத் தூக்கிய பின்பு இப்போக்கு மேலும் அதிகரித்துள்ளது. இக்குழாத்தில் ஒரு கறிக்குதவாத மீன்களில் மணிவண்ணனும் ஒருத்தர். கூடவே இவரைப்போல் பலரையும் பட்டியல் இடலாம். அப்படி பட்டியல் இட இவர்கள் யாரும் உத்தமர்களோ, சரியான அரசியல் பார்வையுடையவர்களோ அல்ல. சிறப்பாக புலம் பெயர் தேசத்து டாலர்களுக்காக வாலை ஆட்டும் ஜீவராசிகள் மட்டுமே இவர்கள். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பிரபாகரன் என்று ஒரு ‘மாவீரன்’ இருந்தான் இவன்தான் இலங்கை தமிழ் மக்களின் மீட்போன்.
 
பிரபாகரனை துதிபாடினால் தங்கள் பிழைப்பு நன்றாக ஓடும், கூடவே சிறிய விளம்பரமும் கிடைக்கும் என்பது மட்டுமே. அதுவும் 1980 களில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்கள், இவர்களின் குரல் வளை புலிகளாலேயே நசுக்கப்பட்டது என்பதை பார்க்க விரும்பாவதவர்கள் இவர்கள். தமிழ் நாட்டின் பல்வேறு அகதிகள் முகாம்களில் உள்ள  இலங்கை தமிழரின் நலன்களுக்காக எச்சில் கையால் கூட காகம் கலைக்காதவர்கள இவர்கள்;. சரி இவற்றை விடுவோம் தமிழ் நாட்டு மக்களின் நலன்களைப்பற்றி பேசாதவர்கள், போராடாதவர்கள் இவர்கள்.
 
இவர்களின் மரணம் சாதாரண ஒரு மனிதனின் மரணத்திறகுள் அடக்க முடியுமே தவிர, வேறு ஒன்றும் இல்லை. இவற்றையும் தாண்டி பெண்களின் சேலையை உருவும் 3ம் தர சினமாக்களைத் தவிர வேறு எதனைத்தான் இந்த துச்சாதனர்கள் சினிமாவாக எடுத்து மக்களுக்கு சேவை செய்து விட்டனர். கூடவே ஆண் மேலாதிக்கதின் வன்புணர்வு உச்சத்தைத் தவிர இவர்கள் வேறு எதனை தமிழ் சினிமா உலகில் செய்து விட்டனர். மணிவண்ணன் வகையாறாக்கள் சுத்த வேஸ்ர். இவரையும் தாண்டி சில நல்லவர்கள் தமிழ் சினிமா உலகில் இல்லாமலும் இல்லை.
(சாகரன்)

தமிழ் தேசிய கூட்டமைப்பினர், இன்றைய தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளது!

Tuesday, June 18, 2013
சென்னை::தமிழ் தேசிய கூட்டமைப்பினர், இன்றைய தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளது.
 
இந்தியாவின் அழைப்பை ஏற்று அங்குச் சென்றுள்ள கூட்டமைப்பு, 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொரடர்பில் கலந்துரையாடி வருகின்றது.
 
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் சந்திக்கவுள்ளனர்.
 
இதனிடையே, நேற்றைய தினம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைகளை பூர்த்தி செய்யவே இந்தியா முனைப்பு காட்டி வருகின்றது: விமல் வீரவன்ச!

Tuesday, June 18, 2013
இலங்கை::இந்திய அரசாங்கத்தின் அழுத்தங்களை பொருட்படுத்த முடியாது என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவோ அல்லது வேறும் நாடொன்றோ பிரயோகிக்கும் அழுத்தத்திற்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றில் புலிகளை பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைகளை பூர்த்தி செய்யவே இந்தியா முனைப்பு காட்டி வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கிலே தமிழர்களும், கிழக்கிலோ முஸ்லிம்களும் மாகாணசபை ஆட்சியை கைப்பற்றினால் அது இரு மாகாணசபைகளையும் இணைக்க வழியமைக்கும் என அவர் சுட்டிக்காடடியுள்ளார்.
 
இந்திய அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நாட்டிற்கு அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சித்து வருவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய சமர்ப்பித்துள்ள தனி நபர் பிரேரணை முதலாம் வாசிப்பு இன்று!

Tuesday, June 18, 2013
இலங்கை::அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்னதேரர் சமர்ப்பித்துள்ள தனி நபர் பிரேரணை முதலாம் வாசிப்பிற்காக இன்று பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக பதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தேவல தெரிவித்தார்.
 
வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உட்பட மேலும் மூன்று அதிகாரங்களை திருத்தம் செய்யுமாறு வலியுறுத்தி ஜாதிக ஹெல உறுமயவினால் கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற இம் மாதத்திற்கான முதலாவது அமர்வின் போது பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனி நபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
 
இதன் பிரகாரமாக இன்று முதலாவது வாசிப்பிற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான தனி நபர் பிரேரணை பாராளுமன்றத்திற்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக 19 ஆவது திருத்தச் சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு நாம் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம்:ராஜித்த சேனாரட்ன!

Tuesday, June 18, 2013
இலங்கை::13 ஆவது அரசியலமைப்பின் திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக 19 ஆவது திருத்தச் சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு நாம் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம். ஆனால் இரண்டு மாகாணங்கள் இணைவதை தடுப்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 37 ஆவது பிரிவை நீக்கிவிடுவதற்கு நாம் எதிர்ப்பு வெளியிடவில்லை என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.

மாகாண சபை முறைமையின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைய முடியும் என்ற சட்டம் தற்போது இறந்துபோய்விட்டது. எனவே அதனை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுவதை எதிர்ப்பதில் அர்த்தமில்லை. ஆனால் அதனை 19 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவருவதை ஆதரிக்க முடியாது. மாறாக 13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற 37 ஆவது பிரிவை நீக்கிவிடலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தம் மற்றும் அரசாங்கத்தினால் 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ராஜித்த சேனாரட்ன.