Friday, February 17, 2012

சிங்கப்பூரில் மெரினா பராஜ் நீர்ப்பாசனத்திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ பார்வையிட்டார்!

Friday, February 17, 2012
சிங்கப்பூர்::சிங்கப்பூர் தேசிய பல்கலைகழக மற்றும் தெற்காசிய கல்வி நிறுவகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த விஷேட கலந்துரையாடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றிருந்தார்.

யுத்த வெற்றியின் பின்னர் இலங்கை பெற்று கொண்ட முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் இதன்போது வினவப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதை நிலவரம், முதலீடு, இலங்கை முதலீட்டு சபை வழங்கும் சலுகை மற்றும் நிவாரணம் என்பன தொடர்பாக ஜனாதியினால் இதன்போது விளக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜென்கி கண்காட்சி மத்திய நிலையத்தில் இடம் பெறும் சிங்கப்பூர் வான் கண்காட்சியை பார்வையிட வருகை தருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ள பாரிய நீர் விநியோக திட்டத்தினை நேற்று கண்காணித்துள்ளார்.

இந்த நீர் விநியோகத்தின் சிறப்பம்சம், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நீர் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றமையாகும்.

இந்த நீர் விநியோகத்திட்டத்தை பார்வையிட சென்ற ஜனாதிபதியை அந்த நாட்டு சுற்றாடல்துறை அமைச்சர் வரவேற்றுள்ளார்.

இதன்போது நீர் விநியோக திட்டம் மற்றும் அதற்காக பயன்படுத்தும் தொழில்நுட்ப முறை தொடர்பில், சிங்கப்பூரின் சுற்றுலா துறை அமைச்சர், ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது...

சிங்கப்பூரில் மெரினா பராஜ் நீர்ப்பாசனத்திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ பார்வையிட்டார். படத்தில் சிங்கப்பூர் அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணா, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி யின் செயலாளர் லலித் வீரதுங்க,
உள்ளிட்டோர் காணப்படுகின்றனர்.

சிலாபம் மீனவர்கள் நேற்றும் பணிப் பகிஷ்கரிப்பு:சூட்டு சம்பவம் குறித்து சி.ஐ.டி. விசாரணை: வாள்கள்,குண்டுகள் மீட்பு:பலியானவரின் இறுதிக் கிரியை இன்று!

Friday, February 17, 2012
இலங்கை::சிலாபம், மஹாவெல்ல பகுதியில் நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்டம், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 04 வாள்கள், 06 பெட்ரோல் குண்டுகள், 04 இரும்புக் கம்பிகள் 80 போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நேற்று நான்காவது நாளாகவும் சிலாபம் மீன் சந்தை உட்பட கடற்கரை பிரதேசம் வெறிச்சோடிக் கிடந்தன. சிலாபம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதியிலுள்ள எந்தவொரு மீனவரும் கடற்றொழிலுக்காக செல்லவில்லை.

எந்நேரமும் ஆர்ப் பாட்டக்காரர்கள் நகருக் குள் நுழையலாம் என்ற நோக்கில் சிலாபம் கடற் கரை வீதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரில் இராணுவ டிரக் வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விசேட அதிரடிப்படைக்கு பதிலாக இராணுவத்தினரே அதிகளவு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் சிலாபம் நகருக்குள் கொண்டு வரப்படும் வெளி மாவட்ட மீன்கள் அனைத்தும் முன்னேஸ்வரம் ஆலயத்துக்கு அப்பால் மைதான மொன்றில் வைத்து விற்பனை செய்யப்பட்டன. வழமையை விட மீன் விலை வெகுவாக குறைந்து காணப்பட்டது.

துப்பாக்கி சூடு இடம் பெற்ற மகாவெல்ல பகுதியில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளில் ஈடுபட்டனர். சுமார் 25 பேரிடமிருந்து வாக்கு மூலங்கள் பெறப்பட்டன. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் நடைபெற்று வரும் இவ் விசாரணையின் போது 4 வாள்கள், 4 இரும்பு கம்பிகள், 10 தடிகள், 80 போத்தல்கள், 06 பெட்ரோல் குண்டுகள் என்பவையும் கண்டெடுக் கப்பட்டுள்ளன.

இறுதிக் கிரியை இன்று

இதேவேளை, மரணமானவரின் மனைவி இன்று நாடு திரும்புகிறார். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைத் சென்றுள்ள அவர் நாடு திரும்பிய பின்னர் நாளை எண்டனி பர்னாண்டோவின் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன.

இறுதிப் கிரியைகள் நடை பெறுவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானதை கண்டித்தும் துக்கத்தை வெளிக்காட்டும் நோக்குடனும் நகரில் கறுப்பு கொடிகளும், வெள்ளைக் கொடிகளும் பறக்க விடப்பட்டுள் ளன.

இதேவேளை, மீனவர்கள் தமது பகுதி கிராம சேவகரிடமிருந்து தாம் மீனவர் என்பதை உறுதிப்படுத்தும் கடிதம் ஒன்றை பெற்றுக் கொள்வதன் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 25 ரூபா விலைக்கழிவுடன் மண்ணெண் ணெய்யை பெற்றுக் கொள்ள முடியும் என சிலாபம் மஹா வெல்லையில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் ஏழு உறுப்பினர்களுக்கு அனுமதி!

Friday, February 17, 2012
இலங்கை::பொலிஸ் ஆணைக்குழுவிற்காக பெயரிடப்பட்ட ஏழு உறுப்பினர்களை பாராளுமன்ற பேரவை அங்கிகரித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் தலைவராக முன்னாள் உயர்ஸ்தானிகர் சேனக்க வல்கம்பாய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய உறுப்பினர்களாக எல்லே குணவங்ச தேரர், டி திஸாநாயக்க, ஆர்.சிவராமன், எம்.எம்.எம்.மவுஜிட், நியுட்டன் குணரத்ன மற்றும் ச்சாமனி மதுரசிங்க ஆகியோர் இடம்பெற்றுளளனர்.

ஜனாதிபதியால் பெயரிடப்படும் உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற பேரவை அங்கீகாரம் வழங்குவதன் மூலம் பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மும்பை மாநகராட்சி தேர்தலால் மோனோ ரயில் சோதனை தள்ளிவைப்பு!

Friday, February 17, 2012
மும்பை::மும்பையில் இன்று நடைபெறுவதாக இருந்த மோனோ ரயில் சோதனை ஓட்டம், மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு வரும் சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மும்பையில் மோனோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. மலேசியாவை சேர்ந்த ஸ்கோமி நிறுவனம், எல் அண்ட் டி நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வடலா டிப்போவிலிருந்து மைசூர் காலனி வரை 4 கிலோ மீட்டர் பாதை முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்று மோனோ ரயில் வெள்ளோட்ட சோதனை நடத்த மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் திட்டமிட்டிருந்தது. இதற்கிடையில் மும்பை உள்ளிட்ட 10 மாநகராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த நேரத்தில் மோனோ ரயில் சோதனை நடத்துவது வாக்காளர்களை ஆளும் கட்சிக்கு ஆதரவாக திருப்பும் செயல் என பாஜ தலைவர் மாதவ் பண்டாரி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருந்தார். தேர்தல் நன்னடத்தை விதிமீறல் எனவும் தனது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சோதனை ஓட்டம் வரும் சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் நடந்த இந்திய கண்காட்சியில் திருட்டு ரூ 10 லட்சம் வைர நெக்லஸ் மீட்பு!

Friday, February 17, 2012
லாகூர்::இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு சார்பில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் ‘இந்தியா ஷோ’ என்ற கண்காட்சி நடந்தது. இந்திய தயாரிப்புகள் பற்றி பாகிஸ்தானில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 11-ம் தேதி முதல் 3 நாட்கள் கண்காட்சி நடந்தது. இதில் 50-க்கும் அதிகமான இந்திய கம்பெனிகள் ஸ்டால்கள் அமைத்திருந்தன. நகைகள், நவரத்தின கற்கள், காஸ்அழகு சாதன பொருட்கள், கலைபொருட்கள், இயந்திர உதிரி பாகங்கள், கெமிக்கல் என பல்வேறு வகையான பொருட்கள் 110 ஸ்டால்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. வரலாற்று சிறப்புமிக்க இந்த கண்காட்சியை பாகிஸ்தான் வர்த்தக துறை அமைச்சர் மக்தூம் அமின் பாகிம் தொடங்கி வைத்தார். 60 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர். இதற்கிடையில், கண்காட்சியின் 2-வது நாளில், கமல் கந்த் என்ற வியாபாரியின் வைர நகைஸ்டாலில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் திருடு போனது. இதையடுத்து போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கமலிடம் விசாரணை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதல்வர் ஷாபாஸ் ஷரீப், திருடர்களை உடனே பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், நெக்லஸை திருடியதாக முகமத் ஷகில், முகமது சலீம் ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை மீட்கப்பட்டது. போலீஸ் கண்காணிப்பாளர் மாலிக் கூறுகையில், ‘நெக்லசை சலீம் உதவியுடன் ஷகில் திருடியுள்ளார். 48 மணி நேரத்தில் நகை மீட்கப்பட்டுள்ளது’ என்றார்.

எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து இரண்டு ரூபாவால் உயரும் மீற்றர் டெக்ஸி கட்டணம்!

Friday, February 17, 2012
இலங்கை::எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து தமது கட்டணங்களையும் உயர்த்தியுள்ளதாக இலங்கை மீற்றர் டெக்ஸி சேவை சங்கம் குறிப்பிடுகிறது.

இதனடிப்படையில் முதலாவது கிலோமீற்றருக்கான 50 கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படாது எனவும் இரண்டாவது கிலோமீற்றருக்காக இதுவரை அறவிடப்பட்டு வந்த 30 ரூபா கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் 32 ரூபாவாக உயர்த்தியுள்ளதாகவும் மீற்றர் டெக்ஸி சங்கத்தின் செயலாளர் ஆர்.பீ.லால் காலிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வாரமும், நான்கு மாதங்களுக்கு முன்னதாகவும் இரண்டு தடவைகள் எரிபொருளின் விலை 12 ரூபாவால் உயர்த்தப்பட்ட போதிலும் தங்கள் கட்டணங்களை உயர்த்தவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

கூடங்குளம் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தமிழக நிபுணர் குழு இன்று ஆலோசனை : ரஷ்ய விஞ்ஞானிகள் முடிவில் திடீர் மாற்றம்!

Friday, February 17, 2012
சென்னை::கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை குறித்து ஆராய தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் முதல் கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது. அக்குழுவின் முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரூ.13,500 கோடி செலவில் 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் கடந்த டிசம்பர் மாதமே மின் உற்பத்தி துவங்க இருந்தது. இந்நிலையில், அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீரென மறியல், பேரணி, முற்றுகை என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அணு மின் நிலையத்தில் தற்போது அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. இதற்கிடையே, மின் பற்றாக்குறையால் தமிழகத்தில் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு தற்போது 8 மணி நேரமாக அதிகரித்துள்ளது. பல இடங்களில் 11 மணி நேர மின்வெட்டும் அமல்படுத்தப்படுகிறது. மின்வெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்களும், தொழிற்சாலை உரிமையாளர்களும் வீதிக்கு வந்து போராட துவங்கியுள்ளனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் நெருங்கும் நிலையில், மாணவர்களும் படிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

கூடங்குளம் மின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மைய பேராசிரியர் இனியனை அமைப்பாளராக கொண்டுள்ள இந்த குழுவில் அணுசக்தி கழக முன்னாள் தலைவர் சீனிவாசன், அண¢ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவு ஒளி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயராகவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அணுமின் நிலையத்தை திறக்காவிட்டால், கூடங்குளத்தில் உள்ள எங்கள் விஞ்ஞானிகளை திரும்ப பெறுவோம் என மத்திய அரசுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. அப்போது, கூடங்குளம் விவகாரத்தில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, யார், யாரை சந்தித்து பேசுவது, போராட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை இக்குழு எடுக்கும் என கூறப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, கூடங்குளம் குறித்த அறிக்கையை தயாரிப்பது குறித்தும் குழுவினர் முடிவு செய்கின்றனர்.

அதே நேரத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. தொடர் போராட்டங்களால் கடந்த 4 மாதமாக ரஷ்ய விஞ்ஞானிகள் எந்த வேலையும் இல்லாமல், அணு விஜய் குடியிருப்பில் குடும்பத்துடன் முடங்கிக் கிடக்கின்றனர். ஒப்பந்த பணியாளர்களும் வேலையின்றி ஊரை காலி செய்துவிட்டனர். அவசர பராமரிப்பு பணிகள் மட்டுமே அவ்வப்போது நடந்து வருகிறது. அதற்காக தங்கியுள்ள சில பணியாளர்கள், யுரேனியத்தை பாதுகாக்கும் பணியை மட்டும் செய்து வருகின்றனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அத்தியாவசிய பணிக்கு செல்பவர்களை நேற்று இரவு போராட்ட குழுவினர் வழிமறித்து, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு மிரட்டினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. எனவே, பணியாளர்கள் வேலைக்கு செல்லவே பயப்படுகின்றனர். கூடங்குளத்தில் தங்கியுள்ள மூத்த விஞ்ஞானிகள் குழு, நாடு திரும்ப திட்டமிட்டிருந்தது. தற்போது தமிழக அரசு நிபுணர் குழுவை நியமித்துள்ளதால், அதன் முடிவுக்காக சில நாட்கள் காத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக குழுவினர் அளிக்கும் அறிக்கையை பொறுத்தே, ரஷ்ய விஞ்ஞானிகளின் அடுத்தகட்ட செயல்பாடுகள் அமையும் என கூறப்படுகிறது.

ஹெரோய்ன் விற்றவருக்கு மரண தண்டணை!

Friday, February 17, 2012
இலங்கை::ஹெரோய்ன் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டணை விதித்துள்ளது.

813.3 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்ததாகவும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகவும் குறித்த சாரதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபட்ட பஸ் ஒன்றின் சாரதியாக பணியாற்றிய போது அவர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டமை வழங்கு விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தி வந்த பேச்சுக்கள் தோல்வியை நோக்கிய பயணம்!!

Friday, February 17, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தி வந்த பேச்சுக்கள் முடங்கிப் போயுள்ள நிலையில், தெரிவுக்குழுவுக்குள் கூட்டமைப்பை இழுப்பதற்கான அரசதரப்பு நகர்வுகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்குள் வந்தால் தான் இனிமேல் அவர்களுடன் பேச்சுக்களை நடத்த முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ள நிலையில் அடுத்த கட்டப்பேச்சுகள் எப்போது என்று யாருமே கேள்வி கேட்பதும் இல்லை. பதில் கொடுப்பதும் இல்லை.

இந்தக் கட்டத்தில் கடந்த வாரம் ஐதேகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தியிருக்கிறது.

இதன்போது கூட்டமைப்பு அங்கம் வகிக்காத தெரிவுக்குழுவில் தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை என்று ஐதேக கூறியுள்ளது. அதுமட்டுமன்றி நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்தும் அரசாங்கத்துக்கு வெறுப்பைக் கொடுத்துள்ளது.

இதன் காரணமாக அரசு மீதான நெருக்கடிகள் மேலும் வலுவடைந்த சூழலில் தான் அமெரிக்க இராஜதந்திரிகள் அடுத்தடுத்து வந்து அரசாங்கத் தரப்புக்கு எரிச்சலூட்டியுள்ளனர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பு அரசாங்கத்தின் மீது இயல்பாகவே சுமத்தப்பட்டது. ஆனால், அரசாங்கமோ பிடிகொடுக்காமல் நழுவி, அந்தப் பொறுப்பை தனது தலையில் இருந்து இறக்கி விட்டு அடுத்தவரைச் சுமக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டது.

அதற்காகவே தெரிவுக் குழுவையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.ஆனால், இப்போது அரசியல் பேச்சுக்களும் இல்லை, தெரிவுக்குழுவும் இல்லை. ஐதேகவும் கூட்டமைப்பும் பங்கேற்காத ஒரு தெரிவுக்குழுவை அரசாங்கத்தால் அமைக்க முடியாது.

அப்படி அமைத்தால்கூட அது அரசதரப்புக் குழுவாகவே இருக்கும். அந்தக் குழுவின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் ஒன்று தான் அரசாங்கமே தீர்வை அறிவிப்பதும் ஒன்று தான்.

இதில் எந்தத் தரப்பின் ஊடாக அரசியல்தீர்வு முன்வைக்கப்பட்டாலும் அது அரதரப்புக்கு சிக்கலானதொன்றாகவே அமையும்.

இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு மாகாணங்களுக்கு பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்து வருவதற்கு காரணம் அரசியல் நோக்கம் தான்.

தமிழர்களுக்கு நியாயமான அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்தால் அவர்கள் பிரிந்து போய் விடுவார்கள் என்று கூறுவதெல்லாம் வெட்டியான நியாயங்களே தவிர உண்மையானவை அல்ல.

இதற்காகவே போரின் முடிவில் அழிந்து போனதாக அறிவித்த புலிகள் இயக்கத்தை அரசாங்கமே மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

இலங்கையில் பிரிவினைவாதம் இனித் தோன்றாது என்று அடித்துக் கூறிய அரசாங்கம், இப்போது பிரிவினைவாதிகள் நாட்டைப் பிரிக்க முனைவதாக பிரசாரம் செய்கிறது.

நடைமுறையில் இப்போது பிரிவினை கோரிப் போராடும் நிலையில் தமிழர்கள் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனாலும் அரசாங்கம் அதிகாரப்பகிர்வை நிராகரிப்பதற்காக பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்க முனைகிறது.

பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால் மாலைதீவில் ஏற்பட்ட நிலை தான் இங்கும் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் சட்டத்தரணி கோமின் தயாசிறி. மாலைதீவில் ஏற்பட்ட பிரச்சினைக்கும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்வதற்கும் துளியளவும் தொடர்பில்லை.

அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பது ஆயுதக்கிளர்ச்சிக்கு வழிவிடும் என்ற கருத்தை சிங்களத் தேசியவாதிகள் இப்போது தீவிரமாக பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால் அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்க மறுப்பதே அத்தகைய பிரச்சினைக்கு வழிகோலும் என்பதை அரசாங்கம் உணரவில்லை.

இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான அரிய சந்தர்ப்பத்தை அரசாங்கம் தொலைத்து விட்டது- தொலைத்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் இதுபோன்ற பெரும்பான்மை பலத்துடனும் அதிகாரபலத்துடனும் முன் எவரும் ஆட்சியில் இருக்கவும் இல்லை. இன்னொரு முறை ஆட்சிக்கு வரமுடியும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

ஆனால் இந்தப் பெரும்பான்மை பலத்தை கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கவில்லை. அரசியல் நலன்கள் பாதிக்கப்பட்டு விடலாம் என்ற அச்சமே இதற்குக் காரணம்.

உள்நாட்டில் அரசியல் நலனை முன்னிறுத்தி அரசாங்கம் செயற்படத் தொடங்கியதன் விளைவாக - சர்வதேச சமூகத்தின் ஆதரவை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் விளைவு தான் அமெரிக்கா இப்போது இலங்கைக்கு எதிராக எடுத்துள்ள முடிவு.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஜெனீவாவில் கொண்டு வரும் முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அதைவிடஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அரசியல் பேச்சுக்கள் விடயத்தில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டைக் கூட ஆதரிக்கும் நிலையில் அமெரிக்கா இப்போது இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுக்களின் மூலம் எட்டப்படும் இணக்கப்பாடு தெரிவுக்குழுவுக்கான விவாதப் அமைய வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் குறித்து அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிர்மாறானது.

முன்னர் அரசாங்கத்தின் பக்கம் நின்ற அமெரிக்கா இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் மாறி நிற்கிறது. இப்போதெல்லாம் கொழும்பு வரும் அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரிகள்இ முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தான் சந்திக்கிறார்கள்.

அதன் பின்னர் தான் அரசதரப்புடன் பேசுகிறார்கள். இதுவும் கூட அரசாங்கத்துக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசதரப்புடன் முதலில் பேசாமல் கூட்டமைப்புடன் பேசுவது இராஜதந்திர வழிமுறைகளுக்கு முரணானது என்றும் இலங்கை அரசு கருதுகிறது. முன்னரெல்லாம் இப்படியான நிலை இருந்ததில்லை. சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் இவை.

இதற்குக் காரணம் போர் முடிந்த 33 மாதங்களில் அரசாங்கத்தினால் செய்ய முடியாமல் போன விடயங்கள் தான். போர் நடந்த காலத்தில் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றிருந்த அரசாங்கம், போர் முடிந்த பின்னர் அவற்றைத் தக்க வைப்பதில் தோல்வி கண்டு விட்டது.

போரில் கிடைத்த வெற்றியைக் கொண்டும், அதையடுத்து தேர்தல்களில் கிடைத்த மாபெரும் வெற்றிகளைக் கொண்டும் அரசாங்கம் போட்ட கணக்கு தப்பாகி விட்டது.

இலங்கையில் நீடித்த அமைதியை உருவாக்க விரும்பும் சர்வதேச சமூகம் அதை அரசாங்கத்தின் மூலம் செய்யவே விரும்புகிறது. ஆனால், அரசாங்கமோ அதற்குப் பிடிகொடுக்காமல் நழுவப் பார்க்கிறது. இதன் விளைவாகத் தான் சர்வதேச அரங்கில் – ஜெனிவா கூட்டத்தொடரில் கண்டனத் தீர்மானம் ஒன்றுக்கு முகம் கொடுக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போது கூட, சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்க அரசுக்கு வழிகள் உள்ளன. ஆனால் அந்த வழிகளை தெரிவு செய்வதானால், அரசியல் நலன்களைத் துறந்து விட்டுத்தான் பயணிக்க வேண்டும். அதனைச் செய்ய அரசாங்கம் இன்னமும் தயாராகவில்லை. இதேநிலை தொடருமானால் ரொபர்ட் ஓ பிளேக் எச்சரித்துள்ளது போன்று, சர்வதேசம் தலையிடும் நிலை ஏற்படலாம்.

(கே.சஞ்சயன்) (சிறப்புக்கட்டுரை)TM.

Thursday, February 16, 2012

64வது பிறந்த நாள்.. சென்னையில் 64 ஜோடிகளுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!

Thursday, February 16, 2012
சென்னை::முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட அதிமுகவினர் மாநிலம் முழுவதும் தடபுடலாக தயாராகி வருகிறார்கள். சென்னையில் 64 ஜோடிகளுக்கு இலவச திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஜெயலலிதா தனது கையால் தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைக்கிறார்.

முதல்வர் ஜெயலலிதா வருகிற 24ம் தேதி தனது 64வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இதையொட்டி மாநிலம முழுவதும் நல உதவிகள் வழங்குவது, கோவில்களில் திருத்தேர் இழுப்பது, அன்னதானம், ரத்ததானம் என பல்வேறு வகையான கொண்டாட்டங்களுக்கு அதிமுகவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

சென்னையில் ஜெயலலிதா பேரவை சார்பில் 64 ஜோடிகளுக்கு இலவச கல்யாணம் நடத்தி வைக்கவுள்ளனர். இதை முதல்வர் ஜெயலலிதாவை தனது கையால் தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைக்கிறார்.

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 19-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்டு 64 ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

64 வகை சீர்வரிசை

பின்னர் மணமக்களுக்கு 64 சீர்வரிசை பொருட்களை ஜெயலலிதா தனது கையால் வழங்குகிறார். மணமக்களுக்கு பட்டு வேட்டி, சேலை, தாலிக்கு 4 கிராம் தங்கம், சீர் வரிசையாக மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், குடம், குத்து விளக்கு, கியாஸ் அடுப்பு, பாத்திரங்கள், கடிகாரம், மெத்தை, ஜமுக்காளம், தலையணை, சூட்கேஸ் உள்பட 64 விதமான பொருட்கள் வழங்கப்படுகிறது.

மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பில் ஒவ்வொரு ஜோடிக்கும் இந்த சீர்வரிசைப் பொருட்கள் தரப்படுகிறது. இதில் மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், தாலித் தங்கம் ஆகியவற்றை அரசே இலவசமாக கொடுக்கிறது. அந்தத் திட்டத்தை இந்த கல்யாணத்திற்குப் பயன்படுத்திக் கொள்வார்களா என்பது தெரியவில்லை.

கல்யாணத்தையொட்டி கல்யாண ஜோடிகளுக்கும், கல்யாணத்திற்கு வருவோருக்கும் சிறப்பான விருந்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனராம்.

அரசாங்கத்துக்கு ஆதரவில்லை–ரணில்!-ஐ.தே.கவுக்கு ஆதரவில்லை - ஜே வி பி!-எதிர்கட்சி ஆர்ப்பாட்டத்தில் த.தே.கூ!

Thursday, February 16, 2012
இலங்கை:: பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஆதரவளிக்கப்படு;ம்

எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க போவதில்லை என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், அரசாங்கம், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன இணங்கிக் கொண்ட விடயங்களை முதலில் ஆமுல்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜே வி பி இது தொடர்பில் இணங்கிய விடயங்கள் தொடர்பில் தெரியவரவில்லை

எனினும் இது தொடர்பில் கலந்துரையாடி, அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணவும், அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது விலைகளை அதிகரித்து வருகிறது.

தமக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களை அரசாங்கம் சுட்டுக் கொல்கிறது.

இவற்றுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஒரு போதும் ஆதரவளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்...

ஐ.தே.கவுக்கு ஆதரவில்லை - ஜே வி பி!

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஜே வி பி தெரிவித்துள்ளது.

ஜே வி பியின் பொது செயலாளர் டில்வின் சில்வா பத்தரமுல்லை – பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி எரிபொருள் விலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக வாய் முனகல்களை மாத்திரமே வெளியிட்டு வருகிறது.

ஆனால் தற்போதே ஜே வி பி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டது.

நாளைய தினம் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்த்திற்கு ஐக்கிய தேசிய தமக்கு அழைப்பு விடுவிக்கவில்லை.

அவ்வாறு அழைப்பு விடுத்தாலும், விடுக்காவிட்டாலும், தாங்கள் இதில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேச பற்றுள்ள அரசாங்கம் தற்போது வல்லரசுகளுடன் இணக்கம் பெற்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.

அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து அதன் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்படுகிறது.

இதன் அடிப்படையிலேயே விலை அதிகரிப்புகள் இடம்பெற்றுள்ளது.

தேசப்பற்றுள்ள அரசாங்கம் தற்போது தற்போது வல்லரசு நாடுகளுக்கு அடிமையாகி, இணங்கி செயற்பட ஆரம்பித்துவிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்கட்சி ஆர்ப்பாட்டத்தில் த.தே.கூ!

நாளை நடைபெறவுள்ள எரிபொருள் விலை ஏற்றத்துக்கு எதிரான எதிர்கட்சிகளின் ஆர்ப்பாட்த்தில் தாமும் கலந்துக் கொள்ளவிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அண்ணா நூலக வழக்கு ஒத்திவைப்பு!

Thursday, February 16, 2012
சென்னை::அண்ணா நூற்றாண்டு நூலக வழக்கை 3 வாரத்துக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலக வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய 3 வது முறையாக தமிழக அரசு அவகாசம் கேட்டுள்ளது. இதனால், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, வழக்கில் பதில் மனு தர 6 மாதம் தேவைப்படுமா- என்று தமிழக அரசிடம் தலைமை நீதிபதி கேள்வி எழப்பியுள்ளதாகவும் தெரிகிறது. மேலும், பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் கண்டிப்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், நூலக வழக்கு நிலுவையில் உள்ளபோதே தமிழக அரசு நூலகத்துக்கான வசதியை குறைப்பதாகவும், நூலகத்துக்கு நூலகள் மற்றும் பணியாளர்களை குறைத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பிட்ட மனுதாரரின் புகாரை தனி மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி அறிவுரை வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கச்சதீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு!

Thursday, February 16, 2012
சென்னை::தமிழக வருவாய் ஆவணங்களின் படி கச்சதீவு தமிழகத்திற்கு சொந்தமான பகுதி என்பதால், இலங்கைக்கு வழங்கப்பட்ட அந்தத் தீவை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டதாக சன் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு சொந்தமாகவிருந்த கச்சதீவை இலங்கைக்கு வழங்குவதற்கு முன்னதாக, மத்திய அரசு தமிழக அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டுவிட்டதால் தமிழக மீனவர்களின் பாராம்பரிய உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வருவாய்துறை ஆவணங்களின் படி கச்சதீவு தமிழகத்திற்கு சொந்தமான பகுதி என்பதால், அந்தத் தீவை இலங்கைக்கு வழங்கியமை செல்லுபடியாகாது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு விட்டதால், பாக்கு நீரினைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும்போது தாக்குதலுக்கு இலக்காக நேரிடுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே தமிழகத்திற்கு சொந்தமான பகுதியை மீட்க மத்தியரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக சன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கச்சதீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்க உரிமை கிடையாது என்றும், வலைகளை மட்டுமே காயவைக்கலாம் என்றும், கடந்த வாரம் மத்தியரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு தமது புது விளக்கத்தை முன்வைத்துள்ளது.

சசிகலா தம்பி திவாகரனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Thursday, February 16, 2012
திருவாரூர்::சசிகலாவின் தம்பி திவாகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திருவாரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சரவணன் என்பவர் தன்னுடைய உறவினரைத் சசிகலாவின் தம்பி திவாகரன் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் எடையூர் போலீசார் திவாகரன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் திவாகரன், அவரது உதவியாளர் ரகுநாதன், செங்கமலத்தாயார் கல்லூரி மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் திவாகரன் உள்பட 3 பேரும் ஜாமீன் கேட்டு திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு ஜாமீன் கொடுக்க அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த மனு திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிபதி இளங்கோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரிஷியூர் கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்பவரது வீட்டை இடித்த வழக்கில் திவாகரன் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாபம் கடற்றொழிலாளர் ஆர்ப்பாட்ட சம்பவம்; காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில்!

Thursday, February 16, 2012
இலங்கை::சிலாபத்தில் கடற்தொழிலாளர்கள் நேற்று முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட அமைதியின்மையினால் காயமடைந்த மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர்கள் என வைத்தியசாலையின் திடீர் விபத்துக்கள் பிரிவு பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ஆரிவங்ச கூறினார்.

வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருபவர்களி்ன் உடல் நிலை தேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பிரதேசத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

45 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கோகோயின் கடத்திய பிலிபைன்ஸ் பெண் கட்டுநாயக்கவில் கைது!

Thursday, February 16, 2012
இலங்கை::45 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கோகோயின் போதைப் பொருளை பிரேசிலில் இருந்து இலங்கைக்கு கடத்திவந்த பிலிபைன்ஸ் நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் புறக்கணியுங்கள்.. கட்சியினருக்கு திமுக வேண்டுகோள்!

Thursday, February 16, 2012
சென்னை::திமுகவுக்கு எதிராக, உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவது பத்திரிகா தர்மம் அல்ல. அப்படிப்பட்ட செய்திகளைப் புறக்கணித்து விட்டு கழகப் பணியாற்ற வேண்டும் தொண்டர்கள் என்று திமுக தலைமைக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்த செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.அவரும் அதற்குப் பதிலளித்தார். அப்போது ஒரு செய்தியாளர், திமுக தலைவர் பதவியைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டபோது கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றார் அழகிரி. இது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது.

இந்த நிலையில், திமுக தலைமைக் கழகம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அதில்,

கழகத்திற்கு எதிராக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது பத்திரிகா தர்மம் அல்ல. சிலரின் வஞ்சகப் போக்கை கழகத்தினர் புரிந்துகொண்டு, அத்தகைய செய்திகளைப் புறக்கணித்து கழகப் பணி ஆற்றிடுவீர் என தொண்டர்களுக்கு அது வேண்டுகோள் விடுத்துள்ளது.

மண்மேடு சரிந்ததில் இரு சிறுவர்கள் பலி!

Thursday, February 16, 2012
இலங்கை::வெலிமடை பிரதேசத்தில் இன்று அதிகாலை வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

16 வயது மற்றும் 11 வயது சிறுமி ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த சிறுவர்களுடன் அவர்களது பாட்டி வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவருக்கு இந்த விபத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த இரண்டு சிறுவர்களது சடலங்கள் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சீட் கிழிக்கப்படும் ஜாக்கிரதை!!!,தேர்தல் பிரசாரத்தின்போது பேப்பரைக் கிழித்தெறிந்து டென்ஷனாக பேசிய ராகுல் காந்தி!

Thursday, February 16, 2012
இலங்கை::லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே மக்களுக்குத் தருவதாக கூறிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, கையில் இருந்த பேப்பரைக் கிழித்தெறிந்து கோபமாக பேசியதால் பிரசாரக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கோபாவேசமாக பேசினாலும் கூட பொறுமை இழக்காதவர் ராகுல் காந்தி. ஆனால் நேற்று உ.பி. மாநிலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது அவர் கையில் இருந்த பேப்பரைக் கிழித்தெறிந்து டென்ஷனானது காங்கிரஸாரையே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

லக்னோவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடிக் கட்சியும் மக்களுக்கு வெற்று வாக்குறுதிகளை மட்டுமே தருகின்றன. மின்சாரம் தருவோம், குடிநீர் தருவோம், வேலைவாய்ப்பு தருவோம் என்கிறார்கள். ஆனால் இதெல்லாம் வெற்று வாக்குறுதிகளே, வேலைக்கு ஆகாத வாக்குறுதிகள் என்று கூறிய அவர் கையில் இருந்த பேப்பரை எடுத்து டார் டாராக கிழித்தெறிந்தார்.

பின்னர் அவர் தொடர்ந்து பேசுகையில், நான் ஏன் பேப்பரைக் கிழித்துப் போட்டேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா. அவர்களது வாக்குறுதிகள் எங்கு போக வேண்டும் என்பதைத்தான் இவ்வாறு செய்து காட்டினேன்.

ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறிக் கொள்வோர் கர்நாடகத்திலும், உ.பி.யிலும் நடைபெறும் ஊழல்களை மட்டும் பார்க்க மறுக்கிறார்கள் என்றார் ராகுல்.

பொட்டம்மானின் கட்டளைப்படியே அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்பட்டனர் - கருணா!

Thursday, February 16, 2012
இலங்கை::பொட்டம்மானின் கட்டளைப்படியே அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்பட்டனர் - கருணா:-

தனது கட்டளையின்படி அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்படவில்லை எனவும் புலிகளின் புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டம்மானின் கட்டளையின்படியே இந்த பிக்குகள் கொலை செய்யப்பட்டதாக புலிகளின் முன்னாள் முக்கிய தளபதிகளில் ஒருவரும், தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொட்டம்மான் உள்ளிடோரே அரந்தலாவ பிரதேசத்தில் பிக்குகளை கொலை செய்தனர். இநத தாக்குதலுக்கு 6 பேர் கொண்ட சிறிய குழு சென்றுள்ளது. நான் அப்போது தொப்பிகல பிரதேசத்திற்கு பொறுப்பான தலைவராக இருந்தேன். கடற்புலிகளுக்கும், புலனாய்வு பிரிவினருக்கும் பொட்டம்மானே நேரடியாக கட்டளைகளை வழங்கினார். ஆயுதப்படைகளை அவர் கட்டுப்படுத்த முடியாது. எது எப்படி இருந்த போதிலும், பிரபாகரன் மற்றும் தமிழ்ச் செல்வன் போன்றவர்களும், பொட்டம்மானின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின்னரே என்னை கிழக்கு மாகாண தலைவராக நியமித்தனர் எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

28ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவு!

Thursday, February 16, 2012
திருப்பூர்::தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திருப்பூர் மாவட்ட தொமுச கோரிக்கை விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது

திருப்பூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க இணைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம் குமரன் ரோடு தொமுச அலுவலகத்தில் நடைபெற்றுது. இந்த கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நான்கே மாதங்களில் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என உறுதியளித்தது. ஆனால் தற்போது 7 மாதம் ஆகியும் மின் வெட்டை சரிசெய்யவில்லை. மாறாக தினசரி சுமார் 10 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன், பஞ்சாலை, விசைத்தறி, விவசாயம், அதை ஒட்டியுள்ள குறு, சிறு உப தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே,தமிழக அரசு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், முன்பேர வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், பொது வினியோகத்தை பலப்படுத்த வேண்டும், தொழிலாளர், தொழில் தகராறு சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாததால் வரும் 28ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெறும். இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு வெற்றி பெற வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கமே தடைகளை ஏற்படுத்துகிறது - வாசுதேவ நாணயக்கார!

Thursday, February 16, 2012
இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமே தடைகளை ஏற்படுத்துவதாக தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெற்றது.

இந்த நாடு இரண்டாகப் பிளவுபடுவதை தடுப்பதற்காகவே யுத்தம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, யுத்தத்தின் பின்னரும் இரண்டு நாடுகள் உருவாகியுள்ளதாக கூறினார்.

வட பகுதியில் ஒரு விதமான நிர்வாகம் இடம்பெறுவதாகவும், வடக்கில் ஜனநாயக ரீதியில் தெரிவான பிரதிநிதிகள் நிருவாகம் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கிலும் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை இயங்கும் நிலையில், அங்கும் உரிய முறையில் நிருவாகத்தை முன்னெடுக்க முடியாதுள்ளதென தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கமே நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் அதற்கு அரசாங்கம் தடையாகவும் உள்ளது எனக் கூறினார்.

இராணுவத்தினர் அழுத்தங்களில் இருந்து மீண்டு மக்கள் சுதந்திரமாக செயற்பட இடமளிக்க வேண்டும் என ஆணைக்குழுவின் பரிந்துரைகளி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் அறிக்கையானது நாட்டு மக்களின் மனசாட்சியைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்றும் தேசிய மொழிகள் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

சில ஊடகங்கள் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றன–ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா!

Thursday, February 16, 2012
நியூயார்க்:சில வெளிநாட்டு ஊடகங்கள் தமக்கு எதிராக தீவிர பிரச்சாரங்களைஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிதி மேஜர் ஜெனரல்சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து சிலர் இவ்வாறு தமக்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம்சுமத்தியுள்ளார்.

சில மனித உரிமை அமைப்புக்களும் இந்த முனைப்புக்களுக்கு ஆதரவளித்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சில ஊடகங்கள் தற்போது தம்மை இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமைதி காக்கும் ஆலோசனைக் குழுவின் விசேட பிரதிநிதியாக நியமித்தபோது அமைதி காத்து வந்த சில ஊடகங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை இலக்குவைத்து தற்போது சர்ச்சையை கிளப்பி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஈரான் விஞ்ஞானிகள் படுகொலைக்கு டெல்லியி்ல் 'பதில்' கிடைக்கும் என்பதை எதிர்பாராத மொஸாத்!

Thursday, February 16, 2012
டெல்லி::ஈரானிய அணு விஞ்ஞானி படுகொலைசெய்யப்பட்டதால் இஸ்ரேல் மீது ஈரான் மறைமுகமாகத் தாக்குதல் நடத்தலாம் என்று ஊகித்து வைத்திருந்த இஸ்ரேல் உளவு நிறுவனமான மொஸாத், அதற்குப் பதில் டெல்லியில் வைத்து தங்களது நாட்டை ஈரான் குறி வைத்துத் தாக்கியதை சற்றும் எதிர்பார்க்கவில்லையாம்.

காந்த வெடிகுண்டு, ஸ்டிக்கர் வெடிகுண்டு என டெல்லியே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் தூதரக அதிகாரியின் காரில் வைக்கப்பட்ட குண்டு எந்த குண்டு என்பதை விட புதிய வகை குண்டை இந்தியாவுக்குள் கொண்டு வந்து விட்டார்களே, இனி இது எங்கெல்லாம் பரவுமோ என்ற அச்சம்தான் இந்திய உளவுத்துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினர் மத்தியில் பெரிதாக நிலவி வருகிறது.

அதேபோல இஸ்ரேலைக் குறி வைத்து இந்தியாவில் தாக்குதல் நடைபெறும் என்பதை இந்தியாவும் கூட எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக அமெரிக்கர்களைக் குறி வைத்துத்தான் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத் தகவல்கள் அடிக்கடி வருவது வழக்கம். ஆனால் இதுவரை ஒருமுறை கூட யூதர்களைக் குறி வைத்தோ அல்லது இஸ்ரேலியர்களைக் குறி வைத்தோ நடக்கும் என்று இந்திய உளவுத்துறையினருக்குத் தகவல் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வெடிகுண்டுச் சம்பவத்தால் இஸ்ரேல் பெருமளவில் அதிர்ந்து போயுள்ளது. காரணம், எதிர்பார்த்தது ஒன்று, நடந்தது வேறொன்றாக இருப்பதால். காரணம் இஸ்ரேல் மீதுதான் மறைமுகமாக ஈரான் சார்பில் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் எதிர்பார்த்திருந்தது. இதற்காக அனைத்து நாடுகளிலும் தங்களது உளவு கட்டமைப்புகளை உஷார் நிலையில் வைத்திருந்தனர். அத்தனை உளவு தகவல்களும் கூட இஸ்ரேலில்தான் தாக்குதல் நடைபெறலாம் என்று கணித்திருந்தன. ஆனால் சற்றும் எதிர்பாராமல் டெல்லியில் கை வைத்து விட்டதால் இஸ்ரேல் சற்றே அதிர்ந்து போயுள்ளதாம்.

கடந்த வாரம் கூட இஸ்ரேலிய மொஸாத் அதிகாரிகள், இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளனர். அதில் இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல் வாய்ப்புகள் குறித்து அவர்கள் விவாதித்துள்ளனர். இருப்பினும் ஈரான் சார்பில் இந்தியாவில் இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதலுக்கு வாய்ப்பில்லை என்று அந்தக் கூட்டத்தில் முடிவுக்கு வரப்பட்டிருந்தது.

மேலும், துருக்கி, கிழக்கு ஆசிய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை விட இந்தியாவில்தான் யூதர்களுக்கு பாதுகாப்பு அதிகம் என்று மொஸாத்தின் தலைவர் தமீர் பர்டோவும் கூட உறுதியாக நம்பியிருந்தார். காரணம், ஈரானுக்காக, இந்தியாவில் வைத்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த எந்த அமைப்பும் இல்லை என்பதால். ஆனால் அத்தனை பேரின் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு நடந்துள்ள இந்த தாக்குதல் இஸ்ரேலை மட்டுமல்லாமல் இந்தியாவையும் கூட சற்றே ஆட வைத்து விட்டது.

தற்போது இந்தியாவின் மிகப் பெரிய கவலை என்னவென்றால், இஸ்ரேல் தூதரக அதிகாரியின் காரில் வைக்கப்பட்ட புதுவிதமான குண்டுதான். இந்த காந்த குண்டு கலாச்சாரம் விரைவில் தெற்காசியா முழுவதும் பரவி விடுமோ என்ற அச்சம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும் இந்த குண்டை வைப்பது எளிது என்பதால் இது வேகமாக தீவிரவாதிகள் கையில் தவழ ஆரம்பிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மேலும் பாகிஸ்தானைக் களமாக கொண்ட சில தீவிரவாத அமைப்புகள் இத்தகைய குண்டுகளை ஏற்கனவே வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் உளவு அமைப்புகளுக்குக் கிடைத்துள்ளது. எனவே அத்தகைய அமைப்புகளில் யாருக்கேனும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆரம்பத்தில் இத்தகைய காந்த வெடிகுண்டுகள் ஈராக்கில்தான் பயன்படுத்தப்பட்டன. பின்னர் இது ஈரானுக்கும் பரவியது. இதனால்தான் தற்போதைய தாக்குதலில் ஈரான்தான் பின்னணியில் இருக்கும் என்ற சந்தேகத்தை இஸ்ரேல் வலுவாக எழுப்பி வருகிறது.

இதுவரை எத்தனையோ வகையான குண்டுகளை இந்திய பாதுகாப்புப் படையினரும், உளவுப் படையினரும் பார்த்து விட்டனர். தற்போது புதிதாக பிறந்துள்ள இந்த வகை குண்டுகளால் பாதுகாப்புப் படையினருக்கான சவால் மேலும் அதிகரித்துள்ளது.

இதுவரை இந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட டெட்டனேட்டரையோ அல்லது டைமரையோ காவல்துறையினராலும், புலனாய்வுப் படையினராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு நுனுக்கமான முறையில் இந்த வெடிகுண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெடிகுண்டை வைத்தது நிச்சயம் இந்தியாவைச் சேர்ந்த நபராகத்தான் இருக்க முடியும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.காரணம், வெளிநாட்டுக்காரராக குறிப்பாக ஈரானியராக இருந்தால் மூலப் பொருட்களைப் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படும். அதுவே உள்ளூர்க்காரராக இருந்தால் அதைப் பெறுவது எளிதானது. எனவே உள்ளூர்க்காரரைப் பயன்படுத்தி இந்த வெடிகுண்டைத் தயாரித்து அவர் கையிலேயே கொடுத்து அனுப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே தாய்லாந்தில் நடந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் தன்மை குறித்த தகவல்களை இந்திய விசாரணை அமைப்புகள் கோரியுள்ளன. அதேபோல ஜார்ஜியாவில் நடந்த சம்பவம் குறித்தும் இந்தியா சார்பில் தகவல்கள் கோரப்பட்டுள்ளன. 3 இடத்திலும் நடந்த தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் சந்தேகிக்கிறது.

இந்த குண்டுவெடிப்புகளுக்குக் காரணம், இஸ்ரேலிய மொஸாத் மற்றும் இஸ்ரேலியப் படையினரின் கூட்டு முயற்சியால் படுகொலை செய்யப்பட்ட ஈரான் அணு விஞ்ஞானி முஸ்தபா அகமதி ரோஷன் மற்றும் ஹிஸ்புல்லா கமாண்டர் இமாத் முக்னியாக் ஆகியோரின் கொலைகளுக்குப் பழிவாங்கும் செயலாகவே கருதப்படுகிறது.

ஜனவரி 11ம் தேதி கார் குண்டு மூலம் முஸ்தபா கொல்லப்பட்டார். அதேபோல 2008ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி இமாத் கொல்லப்பட்டார். இந்தக் கொலைகளுக்கு இஸ்ரேல் பழிவாங்கப்படலாம் என்ற உளவுத் தகவல் மட்டும் மொஸாத்திடம் இருந்தது. இருப்பினும் இந்தியாவில் தாக்குதல் நடத்தப்படும் என்பதை மொஸாத்தே எதிர்பார்க்கவில்லையாம்.

டெல்லி சம்பவம் மூலம், யானைக்கும் அடி சறுக்கும் என்பது உறுதியாகி விட்டது...

சவேந்திர சில்வா தொடர்பில் நவநீதம் பிள்ளை விடுத்த கோரிக்கையை பான்-கீ-மூன் நிராகரித்துள்ளார் - திவயின!

Thursday, February 16, 2012
இலங்கை::மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை, ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியில் இருந்து நீக்க வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துமாறு மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை விடுத்த கோரிக்கை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் நிராகரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையும், பாதுகாப்புச் சபையின் சட்ட கட்டமைப்பின் கீழ் ஐ.நா அமைதிப்படை இயங்குவதால், தன்னால், எதனையும் செய்ய முடியாது என பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஐரோப்பாவில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சிலரும், சர்வதேச அரசசார்பற்ற அமைப்பின் குழுவினரும், ஜெனிவாவில் நவநீதம் பிள்ளையை சந்தித்து, ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதுடன், சவேந்திர சில்வாவை நீக்குமாறு, பான்-கீ-மூனிடம் கோரிக்கை விடுக்குமாறு கோரியிருந்தனர் என திவயின தெரிவித்துள்ளது.

அதேவேளை ஐ.நா அமைதிப்படையின் ஆலோசனை சபைக்கு சவேந்திர சில்வாவை நியமிக்க வேண்டும் என பரிந்துரை செய்த, ஆசிய நாடுகள் பலவற்றிற்கும், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள புலிகளின் வலையமைப்பினர், சவேந்திர சில்வாவை அந்த பதவியில் இருந்து நீக்குமாறு கோரி, 200 மகஜர்களை அனுப்பியுள்ளனர்.

சவேந்திர சில்வாவை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற புலிகளின் சர்வதேச வலையமைப்பினர் பல மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருவதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

தந்தை கருணாநிதியின் திருவாரூர் தொகுதியில் பாலம் கட்ட ரூ. 1.15 கோடி அளித்தார் கனிமொழி!

Thursday, February 16, 2012
சென்னை::திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியின் திருவாரூர் தொகுதியில், பாலம் கட்டுவதற்காக, கருணாநிதியின் விருப்பத்திற்கு இணங்க ரூ. 1.15 கோடி நிதியை மகள் கனிமொழி ஒதுக்கியுள்ளார்.

தனது ராஜ்யசபா உறுப்பினர் தொகுதி நல நிதியிலிருந்து இதை அவர் ஒதுக்கியுள்ளார்.

இதுதொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கை:

தி.மு.க. தலைவரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி விருப்பத்திற்கிணங்க பாராளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி, தனது பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உள்பட்ட கமுக்குடி மற்றும் அபிவிருத்தீஸ்வரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக வெட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக ரூ.1 கோடியே 15 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த பாலம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த பாலம் அமைவதன் மூலம் அபிவிருத்தீஸ்வரம், சிட்டிலிங்கம், லிங்கத்தடி, வளவநல்லூர், கீழஆதிச்சமங்கலம், கமுக்குடி, திருவரங்கநல்லூர், புரசத்தாங்குடி, புத்தூர்மேல்கரை, அரசமங்கலம், அஸ்கனோடை ஆகிய கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவார்கள்.

இத்தகைய பாலம் இல்லாததால் மாணவர்களும், பணிக்கு செல்வோரும் மற்றும் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலம் குடவாசல் வட்டாட்சி அலுவலம் போன்ற இடங்களுக்கு செல்வோரும் 8 கிலோ மீட்டர் தேவையின்றி பயணம் செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. அந்த பாலம் அமைந்தால் பயண தூரம் 1 கிலோ மீட்டராக குறையும்.

மேற்கண்ட கிராமங்கள் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளதால் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் நேரும் போது, மக்களுக்கு உதவ படகுகளில் செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நிவாரண உதவிகள் வழங்குவதிலும் காலதாமதங்கள் ஏற்படுகின்றன. இந்த பாலம் அமைவதன் மூலம் அந்த சிரமத்தையும் தவிர்க்க இயலும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

நடுக்கடலில் 2 மீனவர்கள் சுட்டுக்கொலை: குமரி. மீனவ கிராமங்களில் சோகம்: இத்தாலி கப்பல் மாலுமிகளிடம் விசாரணை!

Thursday, February 16, 2012
நாகர்கோவில்::குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களான ராமன்துறை, இரயுமன் துறை, பூத்துறை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கேரள கடலில் மீன்பிடித் தொழில் செய்வது வழக்கம். இதுபோல பூத்துறையை சேர்ந்த பிரடி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த அஜீஸ் டிங்கு(20), கிலாரி, ஜான்சன், முத்தப்பன், அலெக் சாண்டர், பிரான்சிஸ், பிங்செரியன், மார்ட்டின், ஆன்டனி, குளச்சலை சேர்ந்த ஜெலஸ்டின் ஆகி யோரும் கேரளாவை சேர்ந்த சில மீனவர்களும் இணைந்து கொல்லம் கடலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்கச் சென்றனர்.

நேற்று காலை ஆழ்கடல் பகுதியில் இவர்கள் வலை வீசி மீன்களை பிடிக்க காத்திருந்த போது அந்த வழியாக ஆயில் டேங்கர் ஏற்றிய சரக்கு கப்பல் வந்தது. திடீரென கப்பலில் இருந்தவர்கள் விசைப்படகின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படகின் மேல்தளத்தில் நின்று கொண்டிருந்த அஜீஸ் டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோர் மீது குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் படகு தளத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.

அஜீஸ் டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோரின் அலறலைக் கேட்டு படகின் கீழ்தளத்தில் இருந்தவர்கள் மேல்தளத்திற்கு ஓடி வந்தனர். அதற்குள் மீனவர்களை சுட்ட கப்பல் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது. இதுபற்றி படகில் இருந்தவர்கள் பூத்துறையில் உள்ள உறவினர்களுக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த தகவல் கொல்லம் மீன்பிடித்துறைமுக அதிகாரிகளுக்கு கூறப்பட்டது.

உடனே அதிகாரிகள் கடலோர காவல்படையினரின் உதவியுடன் தப்பிச் சென்ற கப்பலை விரட்டிச் சென்று மடக்கினர். நடுக்கடலில் பிடிபட்ட அந்த கப்பல் பின்னர் கொச்சி துறை முகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கப்பலின் மாலுமிகளிடம் துறைமுக அதிகாரிகள் விசாரித்தனர். இத்தாலி கப்பல் மாலுமிகள் கூறும்போது, விசைப்படகில் இருந்தவர்கள் கடற்கொள்ளையர்கள் என கருதி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தனர்.

இருந்தாலும் மாலுமி கூறிய காரணத்தில் உண்மை இருக்கிறதா? என்பதை கண்டறிய அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே குண்டடிப்பட்டு இறந்து போன குமரி மீனவர்கள் அஜீஸ்டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோரின் உறவினர்கள் தகவலறிந்து அழுது புலம்பினர்.

தற்போது இருவரின் உடலும் கொச்சியில் இருந்து இன்று மாலை பூத்துறை கிராமத்திற்கு வந்து சேரும் என்று தெரிகிறது. அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பூத்துறை, இரயுமன்துறை மற்றும் குளச்சல் பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள் குடும்பத்துடன் பூத்துறை ஆலயம் முன்பு கூடினர். இதனால் மீனவ கிராமங்களே சோகத்தில் ஆழ்ந்தது. பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.வீடுகள் முன்பு கறுப்புக் கொடி கட்டி துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட அஜீஸ் டிங்கு பெற்றோரை இழந்தவர். இவருக்கு அபினா சேவியர்(17), அபுனா சேவியர் (15) என்ற இரண்டு சகோதரிகள் மட்டுமே உள்ளனர். அஜீஸ் டிங்குக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்த பின்பு தான் அவர் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கொலையுண்டதால் அவரது சகோதரிகள் இருவரும் வாழ்க்கையே இருண்டு போனதாக கூறி கதறி அழுதனர்.

அவர்களை கண்டு கிராமமே கண்ணீர் வடித்தது. இறந்து போன இன்னொரு மீனவரான ஜெலஸ்டின் குளச்சலை சேர்ந்தவர். தற்போது குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வந்தார். அவர் இறந்த தகவல் குளச்சலில் உள்ள அவரது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இறந்து போன மீனவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணியிலும் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை பெற்றுத் தரும் முயற்சியிலும் மீனவர் சங்க பிரதிநிதிகளும், வள்ளவிளை ஆலய பங்குதந்தை பிரடியும் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப் பின் பொதுச் செயலாளர் பாதிரியார் சர்ச்சில் கூறியதாவது:-

2 மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடல் தொழிலுக்கு சென்று இத்தாலி கப்பல் மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட குமரி மீனவர்கள் அஜீஸ் டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோரின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

அதோடு, மீனவர்களை ஈவு, இரக்கமின்றி சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் நிறுவனமும் நஷ்டஈடு தர வேண்டும். சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.50 லட்சம் நிவாரணநிதி அளிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூன்று கடத்தல் சம்பவம்; ஆட்கொணர்வு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

Thursday, February 16, 2012
இலங்கை::மூன்று கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நலீன் பெரேரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான மனுவும் இவற்றுள் உள்ளடங்கியுள்ளது.

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குகன் முருகானந்தன் மற்றும் லலித் குமார் வீரராஜ் ஆகியோர் தொடர்பில் ஏனைய இரண்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எக்கெனலிகொட தொடர்பிலான மனுவின் சாட்சி விசாரணை ஹோமாகம நீதவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அந்த நீதிமன்ற விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிந்துகொள்வதற்காக இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எக்னலிகொடவின் மனு தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் சாட்சியமளிப்பதற்கு நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸுக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்தார்.

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைகளை நிறைவுசெய்து அது தொடர்பில் ஏப்ரல் 26 ஆம் திகதி மீண்டும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த இரண்டு மனுக்களினதும் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த பொலிஸ் மாஅதிபர் நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் வருகைதந்திருந்தார்.

குகன் மற்றும் வீரராஜ் ஆகிய இருவரினதும் மனுக்கள் தொடர்பில் பிரதிவாதிகளுக்கு இதுவரையில் நோட்டீஸ் கிடைக்கப்பெறாமையால், அவருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்திரவிட்டது.

இந்த இரண்டு மனுக்களிலும் யாழ் இராணுவ கட்டளைத் தளபதி, இராணுவத் தளபதி, அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை இம்மாதம் 29 ஆம் திகதி நடத்துவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது..

பாரத்த லக்ஷ்மன் கொலை சம்பவம்; சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க கோரிக்கை!

பாரத்த லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று பிணை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பாதுகாவலர் மற்றும் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் ஏழு சந்தேகநபர்களுக்காக இந்த பிணை மனு தாக்கல் செய்யப்பட்டு்ள்ளது.

இதில் சட்டமா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளார். இதற்கமைய பிரதிவாதிகளுக்கு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வீடுகளில் சோதனை!

Thursday, February 16, 2012
அருப்புக்கோட்டை::திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு சொந்தமான வீடு மற்றும் அவரது உறவினர், உதவியாளர் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதிமுக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. கடந்த சட்டசபை தேர்தலில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ.வானார்.

இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு. இங்குள்ள வீட்டில் நேற்று காலை 6.50 மணிக்கு தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ரங்கராஜன் தலைமையில் வந்த போலீசார் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். சோதனையின்போது தங்கம் தென்னரசு மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளே இருந்தனர்.
குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துக்கள், வங்கி இருப்பு உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும், ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். போலீசார் உள்ளே நுழைந்ததும் வீட்டின் கதவுகள் மூடப்பட்டன. உள்ளேயும், வெளியேயும் யாரையும் அனுமதிக்கவில்லை. இதேபோல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள தங்கம் தென்னரசுவின் வீட்டிலும் சோதனை நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வெரியப்பூர் அருகே உள்ள காளிபாளையத்தில் தங்கம் தென்னரசுவின் மாமனார் முத்துச்சாமி வீட்டிலும் சோதனை நடந்தது. அதேபோல, மதுரை கே.கே.நகரில் உள்ள தங்கம் தென்னரசின் உதவியாளர் பாலகுருவின் வீட்டில் புதுக்கோட்டை டிஎஸ்பி ரத்தினவேலு தலைமையில் சோதனை நடந்தது. நண்பகல் 12 மணிக்கு சோதனை முடித்து போலீசார் வெளியில் வந்தனர்.

சோதனை குறித்து டிஎஸ்பி ரத்தினவேலுவிடம் கேட்ட போது, ‘இப்போதைக்கு எதுவும் கூற முடியாது' என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினார். காரியாபட்டியில் உள்ள பாலகுருவின் தம்பி செந்தில்குமார் வீட்டில் சிவகங்கை டிஎஸ்பி அருளானந்தம் தலைமையில் சோதனை நடந்தது. தங்கம் தென்னரசுவின் ஆதரவாளரும், நரிக்குடி ஒன்றிய திமுக செயலாளருமான கவுன்சிலர் போஸ் வீட்டில் கன்னியாகுமரி டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.

தங்கம் தென்னரசு வீட்டில் போலீசார் சோதனை நடத்துவதாக வந்த தகவலை அடுத்து, திமுகவினர் அங்கு குவியத் துவங்கினர். முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் காலை 10 மணிக்கு தங்கம் தென்னரசுவின் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவரது தலைமையில் திமுகவினர் அதிமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பழிவாங்குவதில் மட்டுமே கவனம்’

சோதனை குறித்து தங்கம் தென்னரசு கூறுகையில், ‘'அதிமுக அரசு தொடர்ந்து திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 9 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை உள்ளது. தொழில்கள் அனைத்தும் நலிவடைந்து விட்டன. தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி முறையாக போய் சேரவில்லை. சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போய் விட்டது. இதையெல்லாம் சரிசெய்யாமல் திமுகவினர் மீது அடக்குமுறைகளை அரசு ஏவி விடுகிறது. இதற்கெல்லாம் அஞ்சிவிடாமல் சட்டப்பூர்வமாக இதனை எதிர்கொள்வோம்' என்றார்.

சிலாபத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது; பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது!

Thursday, February 16, 2012
இலங்கை::நேற்றிரவு முதல் சிலாபம் நகரில் அமுலில் இருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்தனர். இதனையடுத்து பிரதேசத்தில் அமைதியின்மை எற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று பிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய சம்பவத்தில் உயிரிழந்தவர் தொரடர்பாக குறித்த குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகள் நிறைவு பெற்றவுடன் சம்பவம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சட்டத்தையும் அமைதியையும் பாதுகாப்பதற்கு மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செல்போனில் ஆபாச படம் எதிரொலி: தமிழக பேரவைக்குள் எம்எல்ஏக்கள் செல்போன் கொண்டு செல்ல தடை!!

Thursday, February 16, 2012
சென்னை::கர்நாடக சட்டப்பேரவைக்குள் அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின்போது எம்எல்ஏக்கள் செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட உள்ளது. அவர்கள் அவசரமாக தொலைபேசி பேச பேரவை லாபியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தின்போது கடந்த வாரம் அவைக்குள்ளேயே சில அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்தனர்.

இதுபற்றி தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடகாவில் 3 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சர்களே செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக வெளியான சம்பவம் தற்போது பொதுமக்களி டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை யில் தமிழக பட்ஜெட் கூட்டம் மார்ச் 16ம் தேதிக்கு மேல் துவங்கும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் செல்போன் பேச மற்றும் பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு தயாராகி வருகிறது.

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சட்டப்பேரவைக்கு வரும் எம்எல்ஏக்கள் பேரவைக்குள் செல்போன் கொண்டு வர தடை செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதே நேரத் தில், எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் போனில் பேச சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதன்படி பேரவை கூட்டம் நடைபெறும் வளாகத்தில் உள்ள லாபி யில் எம்எல்ஏக்கள் தொலைபேசியில் பேச வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் பயன்படுத்த தொலைபேசிகள் வைக்கப்படும். பிஎஸ்என்எல் மூலம் லேன்ட் லைன் போன் வைக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இப்படி சட்டப்பேரவைக்குள் தொலைபேசி வசதி செய்து கொடுத்தால், கர்நாடகா சட்டப்பேரவையில் ஏற்பட்டது போன்று வீண் பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும் என்று தமிழக அரசு கருதுகிறது. மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா அவை நடவடிக்கைகளை செல்போனில் படம் எடுத்ததாக குற்றம் சாட்டி 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதுபோன்ற சம்பவங்களும் இனி சட்டப்பேரவைக்குள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று கருதப்படுகிறது.

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சிறப்பு சுற்றுக்காவல்படை அமைப்பு!

Thursday, February 16, 2012
சென்னை::ரேஷன் அரிசி பக்கத்து மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் எல்லையோர மாவட்டங்களில் சிறப்பு சுற்றுக்காவல் படைகளை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தமிழக ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர ஆதரவற்றோருக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசியை சிலர் ரேஷன் ஊழியர்கள் உதவியோடு மூட்டை மூட்டையாக கடத்துகின்றனர். இந்த அரிசி பாலிஷ் செய்யப்பட்டு உயர் ரக அரிசி போல கிலோ க்ஷீ 30 வரை விற்கப்படுகிறது.

மேலும் தமிழகத்துக்கு பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் தமிழகத்தை விட அரிசி விலை அதிகம் என்பதால் இங்கு இலவசமாக கிடைக்கும் அரிசியை சிலர் வாங்கி பக்கத்து மாநிலங்களில் விற்பனை செய்கின்றனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளபோதும், அவர்கள் கண்ணை மறைத்து கடத்தலில் கொடி கட்டிப்பறக்கின்றனர்.

வருவாய்த்துறையினரும் அவ்வவ்போது ரெய்டு நடத்தி வருகின்றனர். மாநில எல்லைகளான ஓசூர் (தமிழக & கர்நாடகா எல்லை), காட்பாடி (தமிழக & ஆந்திரா எல்லை), கோவை (தமிழக & கேரள எல்லை), போன்ற எல்லைகளின் வழியேதான் அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது என்ற நிலையில் இப்பகுதிகளில் செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன தணிக்கை நடத்தப்படுகிறது. மூட்டை மூட்டையாக அரிசியும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலும் தவிர்க்கும் வகையில் சிறப்பு சுற்றுக்காவல் படைகளை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த சிறப்பு சுற்றுக்காவல் படைகள் அமைக்கப்படுகின்றன. இந்த படையினருக்கு வாகனங்களில் தீவிர ரோந்து பணி, கண்காணிப்பு பணி போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் இல்லாமல் எந்நேரமும் ரோந்திலேயே இருக்கும் வகையில் இந்த சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1 கோடியே 36 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பொள்ளாச்சி பகுதியில் அரிசி கடத்தலை தவிர்க்கும் வகையில் சிவில் சப்ளை சிஐடி சார்பில் புதிய பிரிவை துவக்கவும் அரசு உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் தூதுக்குழுவினர் வடக்கு சென்று உண்மை நிலையை அறியலாம்:பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி!

Thursday, February 16, 2012
இலங்கை::பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வரும் 54 நாடுகளை சேர்ந்த தூதுக்குழுவினர் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவதன் மூலம் அங்கு மேற்கொள்ளப்படும் நல்லிணக்கம் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகள் குறித்து நேரடி தகவல்களை பெற முடியும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.

இத்தூக்குழுவினர் வட மாகாணம் உட்பட நாட்டின் எப்பாகத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவதன் மூலம் அங்கு மேற்கொள்ளப்படும் நல்லிணக்கம் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகள் குறித்து நேரடி தகவல்களை பெற முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த விஜயத்தின் ஊடாக குறித்த தூதுக்குழுவினர் மூன்றாம் தரப்பினரினால் வழங்கப்படும் தகவல்கள் உண்மையா அல்லது பொய்யா என்பதை அறிய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் 58ஆவது கூட்டத்தொடர் ஏற்பாடுகள் தொடர்பாக கண்கானிப்பதற்காக தூதுக்குழுவொன்று தற்போது இலங்கை வந்துள்ளது.

இத்தூதுக்குழுவினர் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு கருத்து தெரிவித்த பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் நிறைவேற்று குழுவின் குழுவின் தலைவர் சேர். அலன் ஹசலதர்ஸ்ட்,

யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் இடம்பெறும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பிர்களிடம் காண்பிப்பதற்கு பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் கூட்டத்தொடர் சிறந்த தெரிவாகும்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தூக்குழுவினர் இங்கு நடைபெறும் செயற்திட்டங்களை நேரடியாக அவதானிக்க முடியும்" என்றார்.

தற்போது சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தொடர்பில் கருத்து கேட்ட போது, தனிநபர்கள் குறித்து பேசுவதற்கு இது உகந்த சந்தர்ப்பமல்ல" என ஹசலதர்ஸ்ட் தெரிவித்தார்.

கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பியதற்கு ' இன்று சிறந்த ஜனநாயகத்தை தேடுவது கடினம்' என அவர் தெரிவித்தார்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகத்தை பெறுவதற்கான உதவிகளை பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கம் வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் தலைவராக சமல் ராஜபக்ஷ செயற்படுகின்றார். இந்நிலையில் இம்மாநாடு இலங்கையில் முன்றாவது தடவையாக நடைபெறவுள்ளது. முன்னர் 1976 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் தூதுக்குழுவினர் பிரதமர் தி.மு.ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொள்ளும் இத்தூதுக்குழுவினர் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார், யாழ். ஆயர் தோமஸ் சௌந்தர்நாயம் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர்.

சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி!!!

Thursday, February 16, 2012
சிங்கப்பூர்::இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அந்நாட்டு ஜனாதிபதியை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு சிங்கப்பூர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு தரப்புடனும் தொடர்புடைய முக்கிய விடயங்கள் தொடர்பாக இருநாட்டு ஜனாதிபதிகளும் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இருதரப்புடனும் தொடர்புடைய முக்கிய திட்டங்கள் தொடர்பில் தமது மகிழ்ச்சியை தெரிவித்த சிங்கபூர் ஜனாதிபதி டொனி டென் கென் ஜம் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து செயற்படுவது முக்கியமானதென கூறியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சிங்கப்பூர் முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு தாம் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக சிங்கப்பூர் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூனிற்கும்,ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மிக குறுகிய காலத்திற்குள் இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தியை வரவேற்றுள்ள அந்நாட்டு பிரதமர், இந்த அபிவிருத்தி பணிகளில் இணைந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமையை இட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை முதலீட்டு சபைக்கும், சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனத்திற்கும் இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை அதிகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சொந்த செலவில் "காண்டம்' பெட்டி அமைக்கும் எச்.ஐ.வி., பாதித்த வாலிபர்!!!

Thursday, February 16, 2012
காரைக்குடி::தன்னைப் போன்று, பிறரும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்படக் கூடாது எனக்கருதி, காரைக்குடியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் "காண்டம்' பாக்கெட்கள் உள்ளடக்கிய பெட்டிகளை தன் சொந்த செலவில் பொது இடங்களில் அமைத்துள்ளார்.

கட்டட பணி செய்து வரும் இவருக்கு, 2000ல் திருமணம் நடந்தது. இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின், பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதால், 2008ம் ஆண்டு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காரைக்குடி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தார். எச்.ஐ.வி., பாதித்திருப்பது தெரியவந்தது. இந்த விபரம் மனைவிக்கு தெரியவர அவர் விவாகரத்து பெற்று பிள்ளைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.மனைவி, பிள்ளைகளை இழந்த சோகத்துடன் கடந்த சில ஆண்டுகளாக தனிமையில் வசித்து வருகிறார். கிடைத்த வேலைகளை செய்து வருகிறார்.

தன்னைப்போன்று யாரும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கக்கூடாது என எண்ணி சொந்த செலவில் பெட்டி வாங்கி அதில் தொண்டு நிறுவனம் மூலம் பெறப்பட்ட"காண்டம்' பாக்கெட்களை போட்டுள்ளார். அப்பெட்டியில், சுய பாதுகாப்பு... சுய கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே "எய்ட்ஸ்' நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என, வாசகம் எழுதி வைத்துள்ளார். காரைக்குடி புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் இப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

அவர் கூறுகையில், "" அர்ப்ப ஆசையால் அழகான குடும்பத்தை பறி கொடுத்தேன். என்னால், முடிந்த உதவியை இச்சமுதாயத்திற்கு செய்ய வேண்டும் என கருதி நான்கு இடங்களில் "காண்டம்' பாக்கெட் அடங்கிய பெட்டிகளை சொந்த செலவில் அமைத்துள்ளேன்,'' என்றார்.

Wednesday, February 15, 2012

அரசாங்கத்தை கவிழ்க்க ஒத்துழைப்பு வழங்குமாறு JVP மற்றும் TNA க்கு UNP அழைப்பு!

Wednesday, February 15, 2012
இலங்கை::அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளாக யுத்தத்தை காட்டி இந்த அரசாங்கம் மக்களை வசியப்படுத்தி வந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசப்பற்று என்ற பெயரில் மக்களிடையே குரோத உணர்வுகளை இந்த அரசாங்கம் தூண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தேசத்திற்கு மகுடம் என்ற கண்காட்சி ஜனாதிபதியின் நன்மதிப்பை மேம்படுத்தும் நோக்கில் பாரியளவில் பணம் செலவழித்து கண்காட்சி நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கண்காட்சியைப் பார்வையிடச் சென்றவர்களுக்கான தற்காலிக மலசல கூடங்களுக்காக மட்டும் 700 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பணத்தைக் கொண்டு 700 கிராமங்களை அபிவிருத்தி செய்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை தவிர்ப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக நாட்டின் அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கட்சி பேதமின்றி பாரியளவில் போராட்டங்களை நடத்த வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 17ம் திகதி பிற்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

போலியான நாணய தாள்களுடன் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பெங்களூரில் கைது!

Wednesday, February 15, 2012
பெங்களூர்::போலியான நாணய தாள்களுடன் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று இலங்கையர்கள் தப்பி சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட இலங்கையரிடம் இருந்து போலியான ஒரு லட்சத்து 50 ஆயிரம் இந்திய ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர குறித்த ஐந்து பேரும் பயணித்த இரண்டு கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இஸ்ரேல் தூதரக தக்குதலுக்கும், பாங்காக் தொடர் குண்டு வெடிப்புக்கும் தொடர்பு?: தாய்லாந்து!

Wednesday, February 15, 2012
பாங்காக்::டெல்லியில் பிரதமர் வீடு அருகே இஸ்ரேல் தூதரகம் மீது நடத்தப்பட்ட காந்த வெடிகுண்டு தாக்குதலுக்கும், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த 3 தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என பாங்காக்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு தாக்குதலிலும் பயன்படுத்தப்பட்டுள்ள குண்டுகள் ஒரே மாதிரியானவை எனவும் அந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே டெல்லியில் இஸ்ரேல் தூதரக தாக்குதலை நடத்திய ஆசாமி மோட்டார் சைக்கிளில் வந்ததாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது
.

::தமிழக காவல்துறையை உலகின் மிகச்சிறந்த காவல்துறையாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்-முதல்வர் ஜெயலலிதா!

Wednesday, February 15, 2012
சென்னை::தமிழக காவல்துறையை உலகின் மிகச்சிறந்த காவல்துறையாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை, ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, நான் முதன் முறை முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்தே, தமிழகக் காவல் துறை தனக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லாமல் தனிச் சிறப்பு பெற்று திகழ வேண்டும் என்பதும்; அவ்வாறு தமிழகக் காவல் துறை திகழ்வதற்கு ஏதுவாக, உலகத் தரம் வாய்ந்த காவல் உயர் பயிற்சியகம் தமிழ்நாட்டில் நிறுவப்பட வேண்டும் என்பதும் எனது கனவாக இருந்தது.

அதன் அடிப்படையில், தமிழகக் காவல் துறை மிகச் சிறந்த காவல் துறையாக விளங்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை நான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போதெல்லாம் தொடர்ந்து எடுத்து வந்துள்ளேன்.

இதற்கும் மேலாக தமிழக காவல்துறையை உலகின் மிகச்சிறந்த காவல்துறையாக்குவதே தனது லட்சியம் என்றும் கூறினார்.