Friday, July 31, 2015

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு இழைத்த தவறுகள் அனைத்தும் திருத்தி அமைக்கப்படும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Friday, July 31, 2015
ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு இழைத்த தவறுகள் அனைத்தும் திருத்தி அமைக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆறு மாத காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு இழைத்த தவறுகளை திருத்திக் கொள்ள தேர்தலின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 58000 அபிவிருத்தித் திட்டங்களை இந்த அரசாங்கம் நிறுத்தியுள்ளதுடன் பதினைந்து லட்சம் பேரின் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மொனராகல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் மோசமான சுகாதாரக் கொள்கைகளை பின்பற்றியதாக குற்றம் சுமத்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், பெனடேல் மாத்திரையின் விலையைக் கூட இதுவரையில் குறைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தினமின செய்தித்தாளிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளார்!

Friday, July 31, 2015
இலங்கை அரசாங்கத்தினால் தேடப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் என வர்ணிக்கப்படும் முகமட் முபராக்குடன் தான் காணப்படும் படத்தை பிரசுரித்தமைக்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தினமின செய்தித்தாளிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலஸ் டலகபெரும இதனை தெரிவித்தார்.

ராஜபக்ச ஓரு தேசிய வீரர், அவர் நாட்டிற்காக பல தியாகங்களை மேற்கொண்டுள்ளார். ராஜபக்ச முபாரக்கை செல்வம் படவெளியீட்டிலேயே சந்தித்தார். அந்த திரைப்படத்தின் இயக்குநர் விடுத்த அழைப்பின்பேரிலேயே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார், ஊடகங்கள் போதைப்பொருள் கடத்தல்புள்ளிக்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் தொடர்புள்ளதாக எவ்வாறு தெரிவிக்க முடியும் என அலகபெரும கேள்வி எழுப்பியுள்ளார்.

லேக்ஹவுஸ் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் உத்தரவின் கீழ் செயற்படுகின்றது. அவரது விசுவாசியின் சகோதரரே அதன் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமரிற்கு ஊடகவியலாளர்களுடன் தொடர்பில்லை அவர் எப்போதும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களையே தொடர்புகொள்கிறார் என அவர் தெரிவி;த்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் நாட்டை ஓர் காவல்துறை இராச்சியமாக மாற்றியுள்ளது: கோதபாய ராஜபக்ஸ!

Friday, July 31, 2015
இலங்கை காவல்துறை இராச்சியமாக மாற்றமடைந்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் நாட்டை ஓர் காவல்துறை இராச்சியமாக மாற்றியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளர்ர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கடும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழு ஆகியன காவல்துறை இராச்சியங்களில் செயற்படுவதனைப் போன்று செயற்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தினர் பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணிய பல வர்த்தகர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப் படவில்லை எனவும் பொய்யாகவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்: டிலான் பெரேரா!

Friday, July 31, 2015
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மட்டுமன்றி, ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

கொட்டாஞ்சேனை தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகத் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதாள உலகக் குழுக்கள் ஆதரவளிப்பதாகவும் அவ்வாறான பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அல்வா கொடுத்த செசன்யா நாட்டுப் பெண்கள்: 3 ஆயிரம் டாலர்களை சுரண்டி கைவரிசை!!

Friday, July 31, 2015
குரோஸ்னி:வீரர்கள் தேவை, வீராங்கணைகள் தேவை, எங்கள் வீரர்களுக்கு 'சேவை' செய்ய இளம்பெண்கள் தேவை என இணையதளம் மூலமாக ஆள்பிடிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து ரஷ்யாவின் செசன்யா நாட்டுப் பெண்கள் 3 ஆயிரத்து 300 டாலர்களை மோசடி செய்த தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களின் மூலம் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் ஆள்தேர்வு முகாம் நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், இங்கிருந்து சிலரை தேர்வு செய்து, சிரியா மற்றும் ஈராக் நாட்டுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த வலைத்தளத்தில் தங்களது பெயரை பதிவு செய்திருந்த 3 பெண்கள், ஐ.எஸ். படையில் சேர்ந்து சண்டையிட விருப்பம் தெரிவித்தனர்.

ஆனால், சிரியாவுக்கு செல்ல தங்களிடம் பணம் இல்லை, பண உதவி செய்தால் உடனடியாக சிரியாவுக்கு புறப்பட தயார் என அந்த இளம்பெண்கள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, ரகசியமாக 'ஆன்லைன் டிரான்ஸ்பர்' மூலம் இந்த மூன்று பெண்களுக்கும் தலா ஆயிரத்து நூறு அமெரிக்க டாலர்கள் விமான கட்டணமாக அனுப்பி வைக்கப்பட்டது.

3 ஆயிரத்து 300 டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 2 லட்சத்து பத்தாயிரம் ரூபாய்) பணத்தை பெற்றுக்கொண்ட அந்த 3 கைகாரிகளும் உடனடியாக தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தை இழுத்து மூடிவிட்டனர். இதைப்போன்ற முறைகேடான பணப் பரிமாற்றத்தை கண்காணித்துவந்த ரகசிய போலீசார் மூலம் இந்த தகவல் வெளியாகி, ரஷ்ய ஊடகங்களில் தற்போது தலைப்பு செய்தியாக உலா வருகிறது.

எதிர்­வரும் பாரா­ளுமன்ற பொது தேர்­தலில் வெற்­றி­யீட்டி ­ மக்கள் வழங்­கப்­போகும் 117 ஆச­னங்­களை கொண்டு ஐக்­கிய தேசிய கட்­சியின் தேசிய அர­சாங்க கனவை உடைத்­தெ­றிவோம்: முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ!

Friday, July 31, 2015
எதிர்­வரும் பாரா­ளுமன்ற பொது தேர்­தலில் தாம் அமோக வெற்­றி­யீட்­ட­வுள்­ள­தை­ய­டுத்து மக்கள் வழங்­கப்­போகும் 117 ஆச­னங்­களை கொண்டு ஐக்­கிய தேசிய கட்­சியின் தேசிய அர­சாங்க கனவை உடைத்­தெ­றிவோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்
 
பது­ளையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் மக்கள் சந்­திப்பில் பங்­கேற்று உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
 
ஐக்­கிய தேசிய கட்சி தமது ஆறு மாத கால ஆட்­சியில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்ட­மைப்பின் உறுப்­பி­னர்­களை பழி­வாங்­கு­வ­தை மட்­டுமே தொழி­லாக கொண்­டி­ருந்­தது.100 நாள் அர­சாங்­கத்தில் 180 நாட்கள் இவ்­வாறு பழி­வாங்­கலுக்­கா­கவே பயன்ப­டுத்­தப்­பட்­டது.
 
கடந்த ஆறு மாதம் இடம் பெற்ற ஐக்­கிய தேசிய கட்சி நாட்டை ஆட்சிசெய்த போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­பி­னதும் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னதும் ஆட்­சிக்கு இடையில் வேறு­பா­டு­களை விளங்கிக்­கொண்­டுள்ள மக்கள் மீண்டும் மஹிந்த வேண்டும் என்ற நிலை­ப்பாட்­டிற்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர்.
 
அவ்­வாறு கோரிக்­கை விடுத்­த­மைக்கு அமை­யவே தேர்­தலில் மீண்டும் ஒரு­முறை போட்­டி­யிட தீர்­மா­னித்­துள்ளேன். அதனால் கடந்த ஜன­வரி மாதம் நாட்டு மக்கள் விட்ட சிறு தவறை மீண்டும் செய்­யக்­கூ­டாது. அவ்­வாறு முன்பு செய்த தவரை திருத்­திக்­கொள்ள நாட்டு மக்­க­ளுக்கு கிடைத்­துள்ள சந்­தர்ப்­பத்தை மக்கள் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.

அதனால் எதிர்­வரும் தேர்தலின் பின்னர் நாம் ஐக்கிய தேசிய கட்சி தற்போது விதைத்துள்ள தேசிய அரசாங்கம் என்ற கனவை தகர்த்து தனியாட்சியொன்று அமைப்போம் என தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு: பெண் பலி ; பலர் காயம்!

Friday, July 31, 2015
கொழும்பு , கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் , அவர்களில் 2 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு , கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனையடுத்து காயமடைந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இருவர் அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மக்கள் தொகை, மதிப்பீட்டை விட விரைவாக வளர்ச்சி கண்டு, 2022ல், சீனாவை விஞ்சும்: ஐ.நா!

Friday, July 31, 2015
நியூயார்க்:இந்திய மக்கள் தொகை, மதிப்பீட்டை விட விரைவாக வளர்ச்சி கண்டு, 2022ல், சீனாவை விஞ்சும் என, உலக மக்கள் தொகை தொடர்பாக, ஐ.நா.,
வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் உள்ள விபரம்:

தற்போது, இந்தியாவின் மக்கள் தொகை, 131 கோடியாக உள்ளது. இது, 2030ல் 150 கோடியாகவும், 2050ல், 170 கோடியாகவும் உயரும். அதே சமயம், சீனாவின் தற்போதைய, 138 கோடி அளவிலான மக்கள் தொகை, 2030 வரை, மிதமான அளவிலே இருந்து, அதன் பிறகு, சற்று குறையும். இந்தியா, 2100 வரை, உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும்.

கடந்த, 2013ம் ஆண்டு ஆய்வறிக்கையில், மக்கள் தொகையில், இந்தியா, 2028ல் சீனாவை விஞ்சும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்த இலக்கு எட்டப்படும் என,
மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 2050 வரை, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும். அதன் பிறகு, 21ம்

நுாற்றாண்டின் இறுதியில், இந்திய மக்கள் தொகை, 166 கோடியாக சற்று குறையும்.தற்போது, 730 கோடியாக உள்ள உலக மக்கள் தொகை, 2030ல், 850 கோடியாகவும், 2050ல், 970 கோடியாகவும் உயர்ந்து, 2,100ல், 1,120 கோடியாக அதிகரிக்கும். 2015 - 50 வரையிலான காலத்தில், உலக மக்கள் தொகை வளர்ச்சியில், இந்தியா,

நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, அமெரிக்கா, இந்தோனேஷியா, உகாண்டா ஆகிய ஒன்பது நாடுகளின் பங்களிப்பு,

50 சதவீதமாக இருக்கும்.அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியா, அதிக அளவில் இளைஞர்களைக் கொண்ட நாடாக உருவெடுக்கும். இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம், 2025 - 30ல், 71.7 வயதாகவும், 2045 - 50ல், 75.9 ஆகவும், 2095 - 2,100ல், 84.6 வயதாகவும் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திரக் கூட்டமைப்பு கூடுதல் ஆசனங்களை கைப்பற்றும்: டிலான் பெரேரா!

Friday, July 31, 2015
ஐக்கயி மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டும் என்ற எதிர்வு கூறல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூடி மறைத்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திரக் கூட்டமைப்பு கூடுதல் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் என கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபரங்களை வெளியிட வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க, ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் கோரியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இ;ந்த பேச்சுவார்த்தையின் போது அவ்வாறு செய்ய முடியாது எனவும் அனைத்து தரப்பிற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் ஒரு ஊடக நிறுவனத்தின் தலைவர் கூறியதாக டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நிறுவனத் தலைவர் பேச்சுவார்த்தையின் இடைநடுவில் எழுந்து சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முதுகெலும்புடைய தலைவர் என்றால் அவர் விரைவில் பதவியை ராஜினாமா செய்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகளில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
 
இந்த கருத்து கணிப்பு அறிக்கையை அரச ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடக தலைமை அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஒரு ஊடக நிறுவனத்தின் தலைவர் அவ்வாறு செய்ய முடியாது, அனைத்து தரப்புக்கும் இணையான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
 
ஊடக நிறுவனத்தின் அந்த தலைவர் இடைநடுவில் எழுந்து சென்றுள்ளார். அவர் முதுகெலும்பு உள்ளவர் என்றால், தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார்.
 
குறித்த ஊடக நிறுவனத்தின் தலைவர் முதுகெலும்பு பலத்துடன் பணியாற்ற சக்தி கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். தொடர்ந்தும் நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டால் அவர் பதவியில் இருந்து விலக தைரியம் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

நேபாள நிலச்சரிவில் 13 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 25 பேர் பலி!

Friday, July 31, 2015
காத்மாண்டு:நேபாளத்தில் பலத்த மழையைத் தொடர்ந்து வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, 13 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 25 பேர் பலியாகினர்.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பேரிடர் மீட்புக் குழுவினருடன் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர்கள் உதவியுடன், நேபாள ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.காஸ்கி மாவட்டத்தின் பொக்காரா பகுதியில் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்கள் 11 பேர்; ஆண்கள் 8 பேர்.
மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 14 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
 
அதே மாவட்டத்தில் பதௌரே என்னும் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரு பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
 மியாத்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உயிரிழந்தது. இந்த நிலச்சரிவுகளில் ஏராளமான வீடுகள் மண்ணுக்கடியில் புதையுண்டன.

பல வீடுகள் மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.இந்த சம்பவங்களில் மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மண்ணுக்கு அடியில் புதையுண்ட வீடுகளில் எவரேனும் உயிருடன் உள்ளனரா எனத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Thursday, July 30, 2015

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் எந்த கட்சிக்கும் ஆதரவின்றி நடு நிலைமை என்கிறார் - வடமாகாண முதலமைச்சர்!

Thursday, July 30, 2015
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் எந்த கட்சிக்கும் ஆதரவின்றி நடுநிலை வகிக்கவிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு இடம்பெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலேயே போட்டியிட்டு வடமாகாண முதலமைச்சராக அவர் பதவி ஏற்றிருந்தார்.

ஆனாலும், முதலமைச்சராக இருந்து அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதை முறையான விடயமாக தாம் கருதவில்லை என்று அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தாம் தேர்தலில் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தேர்தலுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடாது என்பதே தமது நிலைப்பாடு என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், தமிழ் மக்களின் அரசியல் ரீதியான போராட்டம் பெரும்பான்மை சமுகத்தினால் மூழ்கடிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
                       

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சுமார் 14 மில்லியன் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவுறும் நிலையில்!

Thursday, July 30, 2015
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சுமார் 14 மில்லியன் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இன்னும் 2 மில்லியன் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த முறை 16 மில்லியன் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படவுள்ளன.

இதேநேரம், பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை பகிரும் நடவடிக்கைகள் இன்றையதினம் முதல் ஆரமபிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் வரையில் இந்த பணிகள் இடம்பெறவுள்ளன.

இதற்கிடையில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் எதிர்வரும் தேர்தல் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.

இதில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்!

புதுடெல்லி:மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் இன்று காலை 6.35 மணியளவில் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பில் 257 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பினர். தாக்குதலுக்கு நிதி திரட்டி கொடுத்ததாக டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன், நேபாளத்தில் கடந்த 1994ல் கைது செய்யப்பட்டார்.  அவருக்கு 2007ல் மும்பை தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து, யாகூப் மேமன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள், மும்பை ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடியானது.மேமனின் கருணை மனுவும் கடந்தாண்டு மே மாதம் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் யாகூப் தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவும் கடந்த ஏப்ரல் 9ல் தள்ளுபடி செய்யப்பட்டது. கடைசி முயற்சியாக சுப்ரீம் கோர்ட்டில் யாகூப் மேமன் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
 
மனநல பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும், 20 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாலும், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்க வேண்டுமென யாகூப் மேமன் கூறியிருந்தார். காரணங்களை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, டி.எஸ்.தாக்கூர், ஏ.ஆர் தாவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சீராய்வு மனுவை  கடந்த 21ல் தள்ளுபடி செய்தது.  இதையடுத்து, தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மகாராஷ்டிரா மாநில ஆளுநருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பினார் யாகூப். மேலும், தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் யாகூப் மேமன் மீண்டும் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.தாவே, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று முன்தினம் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். யாகூப் மேமன் கருணை மனு மீது, மகாராஷ்டிர ஆளுநர்தான் முடிவு செய்ய வேண்டும் என நீதிபதி தாவே தெரிவித்தார்.
 
நீதிபதி குரியன் ஜோசப், ‘‘யாகூப் மேமனின் சீராய் வு மனுவை முடிவு செய்ததில் விதிமுறை மீறல் உள்ளது. ஒருவருடைய உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தை தீர்மானிக்கும் சீராய்வு மனு பரிசீலனையில், நீதிமன்றம் வகுத்த சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இந்த குறை சரிசெய்யப்பட வேண்டும். யாகூப் மேமனின் சீராய்வு மனு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார். நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை அடுத்து, இம்மனுவை 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரிக்க தலைமை நீதிபதி எச்.எல்.தத்து உத்தரவிட்டார். அதன்படி யாகூப் மேமனின் மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி பந்த் மற்றும் அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது. நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும், சீராய்வு மனுவை பரிசீலிக்க வேண்டும் எனவும், யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது எனவும் யாகூப்மேமனின் வக்கீல்கள் வாதாடினர்.
 
அட்டர்ஜி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடுகையில், நாட்டில் முதல் முறையாக நடந்த மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் இது என்றும், தாக்குதலில் 257 பேர் பலியாயினர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், இதை நீதிமன்றம் கருத்தில்கொள்ள வேண்டும் என்றார்.  வாதத்தை கேட்ட நீதிபதிகள், மும்பை தடா நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டில் சட்டரீதியாக குறைபாடு எதுவும் கிடையாது. சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சரியானது. தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க முடியாது. முதல் கருணை மனுவை ஜனாதிபதி கடந்தாண்டு நிராகரித்ததை எதிர்த்து, யாகூப் மேமன் மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் 2வது கருணை மனு, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தடையாக இருக்க முடியாது. இந்த மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது’’ என்றனர். இந்நிலையில் யாகூப் மேமனின் கருணை மனுவை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசகர் ராவும் நேற்று நிராகரித்தார்.
 
மேலும், பொது  மன்னிப்பு கேட்டு யாகூப் மேமன் சார்பில் 2வது முறையாக ஜனாதிபதி பிரணாப்  முகர்ஜிக்கு நேற்று கருணை மனு அனுப்பப்பட்டது. அதை உள்துறை  அமைச்சகத்துக்கு ஜனாதிபதி பிரணாப் நேற்று அனுப்பினார். இதையடுத்து, கருணை மனுவை நிராகரிக்கும்படி ஜனாதிபதிக்கு  மத்திய அரசு நேற்றிரவு பரிந்துரை செய்தது. கருணை மனுவை ஜனாதிபதி  நேற்றிரவே மீண்டும் நிராகரித்து உத்தரவிட்டார். இதையடுத்து மகாராஷ்டிரா டிஜிபி சஞ்சீவ் தயாள், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸை சந்தித்து சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், யாகூப் மேமனை நாக்பூர் சிறையில் தூக்கிலிடுவதற்கான பணிகள் துவங்கின.
 
சிறையில் அடைக்கப்பட்ட யாகூப் மேமன் இன்று அதிகாலை 3.30 மணியளவில் எழுந்தார். அவர் குளிப்பதற்கு சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். பின்னர், அவருக்கு புதிய ஆடைகள் கொடுக்கப்பட்டன.   தூக்கிலிடுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அந்தவகையில், அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதையடுத்து அவர் தொழுகை செய்ய அனுமதிக்கப்பட்டார். தூக்கு மேடைக்கு யாகூப் மேமன் கொண்டுவரப்பட்டார். சரியாக 6.35 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார். 30 நிமிடங்கள் கழித்து யாகூப் மேமன் இறந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.  யாகூப் மேமனின் உடல் மும்பை கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது. மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா சட்டசபை இன்று கூடுகிறது. அப்போது, யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது குறித்து முதல்வர் பட்நாவிஸ் அறிவிக்கிறார். -

ஐக்கிய தேசிய கட்சி தமது ஆட்சியின் கீழ் பழிவாங்கும் செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுத்ததாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்!

Thursday, July 30, 2015
ஐக்கிய தேசிய கட்சி தமது ஆட்சியின் கீழ் பழிவாங்கும் செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுத்ததாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பதுளையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 180 நாட்கள் ஆட்சி காலத்தில் பழிவாங்கும் செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன.

நாட்டில் உள்ள சகல மக்களும் விடுத்த வேண்டு கோளுக்கு அமையவே தாம் மீண்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்...
 
ஜனவரி 8 ஆம் திகதி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த சென்ற இளைஞர்களுக்கு அந்த மாற்றத்தை 180 நாட்களுக்குள் புரிந்து கொள்ள முடிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி குண்டசாலை - மெனிக்கின்ன பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த இளைஞர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதி அனுபவமும் தெரிந்திருக்கவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்...
                      

தேர்தல் வன்முறைகள், விதிமுறை மீறல்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு: கபே அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது!

Thursday, July 30, 2015
தேர்தல் வன்முறைகள் மற்றும் விதிமுறை மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கபே அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
 
பாராளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு வார காலத்துக்குச் சற்று கூடுதலான நாட்களே இருக்கும் நிலையில், இதுவரை  700 முறைப்பாடுகள் வந்துள்ளன என்று கபேயின் தேசிய அமைப்பாளர் அஹமட் மனாஸ் மகீன் பி.பி.சி. தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
இந்தச் சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை நடத்துவதாகவும் சட்டவிரோதமான வகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.
 
தேர்தல் வன்முறைகளைப் பொறுத்தவரை ஆதாரவாளர்கள் மீதான தாக்குதல்கள், தேர்தல் பிரசார  அலுவலகங்கள் மீதான தாக்குதல்களே கூடுதலாக இடம்பெற்றுள்ளன என்றும் மகீன் தெரிவித்தார்.
 
விருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்வது தொடர்பில்  ஒரே கட்சியினர் பல  இடங்களில் மோதிக்கொள்கிறார்கள் எனவும் கபேயின் அதிகாரி கூறுகிறார். கடந்த சில தினங்களில் கிழக்கு மாகாணத்திலிருந்து கூடுதல் முறைப்பாடுகள் கிடைத்திருந்தாலும் இதுவரை கொழும்பு தேர்தல் மாவட்டத்திலேயே  அதிகூடிய விதிமீறல்களும் வன்முறைகளும் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன எனவும் தெரிவித்தார்.

ராணுவ மரியாதையுடன் மண்ணில் விதைக்கப்பட்டார் ஏவுகணை மனிதர்: பிரதமர் மோடி - ராகுல் இறுதி அஞ்சலி!!

Thursday, July 30, 2015
கலாம் அடக்கம் செய்யப்பட்ட கபர் அருகே குடும்ப உறுப்பினர்கள் துவா ஓதி பிரார்த்தனை-அப்துல் கலாமுக்கு பாதுகாப்புப் படையினர் இறுதி இசை அஞ்சலி-மக்களின் ஜனாதிபதி மக்களிடம் இருந்து இறுதி விடைபெற்றார்-மகத்தான மாமனிதரை மண்ணுக்குள் விதைத்தோம்...-ஆயிரக்கணக்கான மக்கள் அப்துல் கலாம் வாழ்க கோஷம்
 
-முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது-ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் முழு அரசு மரியாதையுடன் கலாம் புகழுடல் நல்லடக்கம்-மக்களின் ஜனாதிபதியாக திகழ்ந்த அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது-கலாமின் உடல் முப்படை வீரர்களால் தூக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைப்பு-கலாமின் குடும்ப உறுப்பினர்கள் துவா ஓதி பிரார்த்தனை -அப்துல் கலாம் உடலுக்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்தினர்-இஸ்ரோ, டிஆர்டிஓ அதிகாரிகள் கலாமுக்கு இறுதி அஞ்சலி -கலாமின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றம்-தேசியக் கொடியை முப்படை வீரர்கள் 6 பேர் ராணுவ மரியாதையுடன் எடுத்துச் சென்றனர்
 
இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்தது-சிறிது நேரத்தில் அப்துல் கலாம் உடல் அடக்கம்-அரசியல் தலைவர்கள் அமர்ந்த மேடையை தவிர்த்து கலாம் குடும்பத்தினருடன் வைகோ-பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா அஞ்சலி -வைகோ மலர் தூவி கலாமுக்கு இறுதி அஞ்சலி-விஜய்காந்த், பிரேமலதா, சுதீஷ் மலர் தூவி அஞ்சலி -அன்புமணி, ஜி.கே.மணி அப்துல் கலாமுக்கு அஞ்சலி-இளங்கோவன், திருநாவுக்கரசர், வாசன், திருமாவளவன் மலர் தூவி அஞ்சலி-கேரள முதல்வர் உம்மன் சாண்டி அஞ்சலி-வரிசையில் நின்று ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி-குலாம்நபி ஆசாத், ஷானவாஸ் ஹூசேன் பாத்திஹா ஓதி அஞ்சலி-ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா அஞ்சலி-முப்படைத் தளபதிகளும் கலாம் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி
 
காங். துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலாமுக்கு இறுதி வணக்கம்-அப்துல் கலாம் உடலுக்கு கவர்னர் ரோசைய்யா, பாதுகாப்பு அமைச்சர் பரிக்கர் மலர் தூவி அஞ்சலி-அமைச்சர் பன்னீர்செல்வமும் மலர் தூவி அஞ்சலி-ஆளுநர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தமிழக அமைச்சர்கள் கலாம் உடலுக்கு இறுதி வணக்கம் -கலாமின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி -அப்துல் கலாம் உடலை கும்பிட்டபடி வலம் வந்தார் மோடி -அடக்க ஸ்தலத்தில் வைக்கப்பட்டது கலாமின் உடல் -இரு நிமிடம் மெளன அஞ்சலி அனுசரிப்பு -முப்படை வீரர்கள் கலாமின் உடலை அடக்க ஸ்தலத்துக்கு ஏந்தி வருகின்றனர் -கலாமின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி -பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று இறுதி வணக்கம் செலுத்தினர் -பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி வணக்கம் செலுத்தி மக்கள் ஜனாதிபதிக்கு இறுதி விடை அளித்தனர்
 
கலாம் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மத்திய, தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு - கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரளா முதல்வர் உம்மன் சாண்டி., ஆந்திரா முதல்வர் சந்திரபாபு பங்கேற்பு - ராணுவ வாகனத்தில் பேக்கரும்பு கிராமத்துக்கு ஊர்வலமாக கலாம் புகழுடல் செல்கிறது - பள்ளிவாசலில் இருந்து பேக்கரும்பு நோக்கி கலாமின் கடைசிப் பயணம் - லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலியுடன் இறுதி பிரியா விடை - சாலையின் இருபுறமும் மக்கள் குவிந்து மலர்தூவி மக்களின் ஜனாதிபதிக்கு இறுதி விடை கொடுத்தனர் - ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்படும் கலாமின் உடல் - வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பூக்களைத் தூவி அஞ்சலி - அப்துல் கலாம் அடக்கப்படும் செய்யும் பேக்கரும்பில் தலைவர்கள் குவிந்தனர்
 
துயில் கொள்ள புறப்பட்டது மக்கள் ஜனாதிபதி கலாம் உடல் - ராணுவ மரியாதையுடன் ஊர்வலம் - வழிநெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி -பிரதமர் மோடி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் புறப்பட்டார் -பள்ளிவாசலில் இருந்து பேக்கரும்பு கிராமத்துக்கு கலாம் உடல் எடுத்து செல்லப்படுகிறது -கலாம் உடலுக்கு பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை -தொழுகைக்குப் பின்னர் பேக்கரும்பு கிராமத்துக்கு கலாம் புகழுடல் எடுத்துச் செல்லப்படுகிறது -சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் பிரதமர் மோடி -கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார் மக்கள் மனதில் விதைக்கப்படுவார் கலாம் - இன்று காலை 11 மணிக்கு ராமேஸ்வரத்தில் நல்லடக்கம்! -பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை முடிந்த பின் உடல் இறுதிச் சடங்கு இடத்துக்கு கொண்டு செல்லப்படும் -வீட்டில் கண்ணீர்மல்க கலாமுக்கு பிரியாவிடை கொடுத்தனர்
 
 உறவினர்கள் -முப்படை வீரர்கள், உறவினர்கள் உடலை ஏந்தி பள்ளிவாசல் செல்கின்றனர் -கலாமின் உடல் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்படுகிறது -திருச்சியிலிருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் -ராமேஸ்வரத்தில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் -கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டத்தில் திணறுகிறது ராமேஸ்வரம் -மிக பலத்த பாதுகாப்புப் பணியில் ராணுவம், போலீசார் -சிறிது நேரத்தில் அப்துல் கலாமின் உடல் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்படும் -ஜனாஸா தொழுகைக்குப்பின் உடல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் -இதையடுத்து முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் -உடலை பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்ல ராணுவ வீரர்கள் கலாம் இல்லம் வந்தனர்

ஐ.தே.க. கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஐ.தே.க. நிறைவேற்றும். அதற்கமைவான தேர்தல் விஞ்ஞாபனத்தையே அவர்கள் முன்வைத்துள்ளனர்: உதய கம்மன்பில!

Thursday, July 30, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மஹிந்தவின் கொள்கைக்கே இணங்கிப்போவதாகவும் ஆனால், மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகளுக்கு எதிரானதாகும் என்றும் பிவிதுறு யஹல உறுமயவின் தலைவரும் கொழும்பு மாவட்ட ஐ.ம.சு.மு. வேட்பாளருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
 
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- "ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது.
 
நாங்கள் பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி என அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றுவதற்கான திட்டங்களையும் மக்கள் நல அம்சங்களையுமே உள்வாங்கியுள்ளோம். ஆனால், ஐ.தே.கவின் தேர்தல் விஞ்ஞாபனம் அதற்கு நேர்மறையான திட்டங்களைக் கொண்டுள்ளது. அரச நிறுனங்களைத் தனியார்மயப்படுத்தும் கொள்கையையே ஐ.தே.க. கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஐ.தே.க. நிறைவேற்றும். அதற்கமைவான தேர்தல் விஞ்ஞாபனத்தையே அவர்கள் முன்வைத்துள்ளனர்.
 
 அமெரிக்க இந்தியா நாடுகள் சமஷ்டி முறையில் சுயாட்சியை எவ்வாறாவது ஐ.தே.கவிடமிருந்து பெற்றுத் தருவதாக த.தே.கூவிடம் வாக்குறுதி வழங்கியுள்ளது. ஆகவே, ஐ.தே.கவை உறுதிப்படுத்தும் வகையில் த.தே.கூவுக்கு செயற்படுமாறும் அந்நாடுகள் ஆலோசனை வழங்கியுள்ளன.
 
இலங்கை வரலாற்றில் போர்த்துக்கேயரின் கைப்பொம்மையாக இருந்த தொன் ஜுவானுக்கு அடுத்து அமெரிக்க இந்திய நாடுகளின் கைப்பொம்மையாக செயற்படுவது ரணில் விக்கிரமசிங்கவாகும். மற்றுமொரு தொன் ஜுவான் ரணில் சர்வதேசத்துக்கு தேவைக்கேற்பவே செயற்படுகின்றார்" - என்றார். ஐ.ம.சு.மு. தேர்தல் விஞ்ஞாபனமானது மைத்திரிபாலவின் கொள்கைகளுக்கு முரணானதாக அமைந்துள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "முரணானதாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு இணங்கிப்போகத்தான் வேண்டும்.
 
மாற்றுக் கருத்துடையவர்கள் திருமணப்பந்தத்தில் இணைந்து விட்டுக்கொடுப்புடன் வாழ்க்கை நடத்துவது போன்றே செயற்படவேண்டும். முரண்பாடுகள் இருந்தாலும் மைத்திரியின் திட்டம் 100 நாட்களை அடிப்படையாகக்கொண்டது"

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஸ்டி கோரிக்கையை ஐதேக நிராகரிப்பு!

Thursday, July 30, 2015
இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக சமஸ்டி தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறான தீர்வு ஒன்று காணப்படுமானால் இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழமுடியாது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டி தீர்வை வலியுறுத்தியுள்ளது.இது தென்னிலங்கையில் தற்போது தீவிரமாக பேசப்படும் கருவாக மாறியுள்ளது.


இந்த நிலையில் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களை பகிர்வதே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை என்று அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி கட்டமைப்புக்குள் அதிகூடிய அதிகாரப்பகிர்வு அவசியம்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியுள்ள நிலையில், ஒற்றை ஆட்சிக்குள் அதிகூடிய அதிகாரப்பகிர்வை வழங்குவோமே தவிர, சமஷ்டி முறைமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்'' என்று ஐக்கிய தேசியக் கட்சிஉறுதியாகத் தெரிவித்துள்ளது. அத்துடன், நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட

மைப்பின் ஆதரவைத் தாம் எதிர்பார்க்கவில்லை என்றும், பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற்று ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் தடையாக அமைந்துள்ளது: ஜாதிக ஹெல உறுமய!

Thursday, July 30, 2015
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் தடையாக அமைந்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய வேட்பாளர் நிசாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.
 
ஜாதிக ஹெல உறுமய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், 1948 முதல் இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இதேபோன்ற இனவாத விஞ்ஞாபனங்களையே வெளியிட்டு வந்தனர்.
 
தமிழ் அரசு கட்சி ஆரம்பித்ததால் தமிழ் இனம் வேறு திசைக்கு தள்ளப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்துக்கிருந்த தடைகளை அகற்ற த. தே. கூ. ஒத்துழைப்பு வழங்கியது. இதேபோன்று தமிழ் சமூகம் மீண்டும் இனவாதத்தின் பக்கம் செல்வதை தடுக்க தமிழ் அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் தலைவர்கள் தொடர்ந்தும் தமிழ் சமூகத்தை தவறாக வழி நடத்தி சமஷ்டி ஊடாக நாட்டை துண்டாட முயன்றால் சம்பந்தன் போன்றவர்களுக்கும் வரலாற்றில் குப்பை தொட்டிக்குள் வாழ நேரிடும்.
1
948 முதல் தமிழ் ஈழ கருத்தை தமிழ் சமூகத்திற்கு ஊட்டி ஆயுதம் ஏந்த உதவிய இவர்கள் இன்று ஆயுதம் வழங்க முடியாததால் மீண்டும் இனவாத அரசியலினூடாக தமது நோக்கத்தை நிறைவேற்ற முயல்கின்றனர் என்றார்.

பாதுகாப்புச் செயலாளர் சீன இராணுவத்தின் வருடாந்த நிகழ்வில்!

Thursday, July 30, 2015
கொழும்பு கிங்ஸ்வெரி ஹோட்டலில் நடைபெற்ற சீன இராணுவத்தின் 88வது வருடாந்த நிகழ்வில் பாதுகப்புச் செயலாளர் திரு.பிஎம்யூடி பஸ்நாயக அவர்கள் நேற்று  கலந்து கொண்டார்.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த பாதுகப்புச் செயலாளர் இலங்கைக்கான சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்னல் லி செங்லின் அவர்களினால் வரவேடற்கப்பட்டார்.

மேலும் மக்கள் விடுதலை இராணுவம் சீன குடியரசின் ஒரு ஆயுதப் படையாகும் அத்துடன் இப்படை உலகின் மிகப் பெரிய இராணுவப் படையாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முப்படைத்தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர.

இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டம்!!

Thursday, July 30, 2015
வாஷிங்டன்: பாகிஸ்தானில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
 
 பாகிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் தொடர்புடைய அந்நாட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தில் திடுக்கிடும் தகவல்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. உருது மொழியில் இருந்த 32 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று யுஎஸ்ஏ டுடே நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்தியா மீது தாக்குதல் நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வரப்படுவதாகவும், அமெரிக்காவுடன் கூட்டணி வைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை தாக்க நினைத்தாலும் முஸ்லீம்கள் ஒன்றுப்பட்டு இறுதிகட்ட போர் நடக்கும் என்றும் அந்த ஆவணத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆவணத்தை ப்ருக்ளிங் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ப்ரீட் ரீடெல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். தெற்காசிய ஜிஹாதிகளுக்கு இந்தியாவை தாக்குவது தான் குறியாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
ஐஎஸ்ஐஎஸ் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க முயற்சி செய்கிறது. இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக வந்த தகவல் உண்மை இல்லை என்று இந்திய உளவுத் துறை தெரிவித்துள்ளது.

Wednesday, July 29, 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைகளை கவனத்தில் கொண்டு சோபித தேரர் - ரணில் உடன்படிக்கை: குணதாச அமரசேகர!

Wednesday, July 29, 2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தால், அது தொடர்பாக இனவிரோத முத்திரை குத்தப்படுவது வழமையான நிகழ்வு என தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவரும் தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
 
இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைகளையும் கவனத்தில் கொண்டு சோபித தேரர் – ரணில் விக்ரமசிங்க உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளதாகவும் சம்பிக்க, ரத்ன தேரர் ஆகியோர் இதற்கு வெள்ளை சுண்ணாம்பு பூசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய, தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் உறுப்பினர் பொங்கமுவே நாலக தேரர், சம்பிக்க ரணவக்க நாடாளுமன்ற பதவியுடன் திருப்தியடையும் நபர் அல்ல.
 
சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிக்கு மோப்பம் பிடித்து வருகிறார். ஆனால், எந்த கட்சியாக இருந்தாலும் ரத்ன தேரருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி போதுமானது என்றார்.

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது!

Wednesday, July 29, 2015
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 
அமைச்சர் பிரேமதாச திவிநெகுமு பிரஜைகள் வங்கியின் பணத்தை துஸ்பிரயோகம் செய்ததாக சஜித் பிரேமதாசவிற்கு எதிராக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி விவசாய ஆய்வு உதவி அதிகாரிகளின் சங்கத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
அமைச்சருக்கு எதிரான முறைப்பாடு குறித்து துரித கதியில் விசாரணை நடத்த வேண்டுமென நிதிக் குற்றவில் விசாரணைப் பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
 
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 
இந்த மனு எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கி காட்டுவோம்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க!

Wednesday, July 29, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கி காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த மிகப் பெரிய தவறு, சிறுபான்மை பலமுடைய தரப்பிற்கு அரசாங்கம் அமைக்க சந்தர்ப்பம் வழங்கியதாகும். மைத்திரி கடந்த காலங்களில் அரச தலைவர் ஒருவர் ஆற்றக் கூடிய வகையிலான உரைகளையா ஆற்றினார்?
 
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்காக எல்லாவற்றையும் அவ்வாறு செய்ய முடியாது. யார் என்ன சொன்னாலும் நாட்டின் அடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவேயாகும். அவரை எவ்வாறு பிரதமராக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என சாலிந்த திஸாநாயக்க தம்புத்தேகமவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட: முருகன், சாந்தன், பேரறிவாளனின் மரண தண்டனையை ரத்து செய்தது சரிதான் மத்திய அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Wednesday, July 29, 2015
புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரிதான் என்று  அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த  1991 மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கூட்டத்தில், புலிகளின் மனித வெடிகுண்டுக்கு பலியானார்.   இந்த படுகொலை தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்பட 28 பேருக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர், நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன்  ஆகியோரின் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக  குறைக்கப்பட்டது.
 
மற்றவர்களுக்கான தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்ட கருணை மனுவின் அடிப்படையில்  நளினியின் தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி  ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர்.   கருணை மனு மீது உரிய முடிவு எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும்  வழக்கு தொடரப்பட்டது. 
 
வழக்கை விசாரித்த அப்போதிருந்த தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் கடந்த ஆண்டு 3 பேரின் தூக்குத்  தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், 3 பேரும் 22 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக  அரசு பரிசீலனை செய்யலாம் என்றும் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
இதையடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருடன் ஆயுள்  தண்டனை பெற்ற  ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய  தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் திருத்தம் செய்யக் கோரியும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு  மே மாதம் தனித்தனி கோரிக்கைகளுடன் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பினாகி கோஸ்,  ஏஎம்.சாப்ரே, யு.யு.லலிதா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.
 
இதையடுத்து, வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தொடர்ந்த வழக்கு என்பதால் அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம்  இல்லை என்று அரசியல் சாசன பெஞ்ச் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. வழக்கின் இறுதி விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம்  உத்தரவில் கூறியது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று அரசியல் சாசன பெஞ்சில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தீர்ப்பில் திருத்தம் கோரிய மனு என்பதால்  திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவில்லை. நீதிபதிகள் அறையில் விசாரணை நடந்தது.
 
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜீவ் கொலை வழக்கில்  முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள்தண்டனையாக குறைத்து உத்தரவிட்ட உச்ச  நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மத்திய அரசின் கோரிக்கையில் முகாந்திரம் எதுவும் இல்லை. எனவே, தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய  அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது.இந்நிலையில், 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்சில் விசாரணையில் உள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு தடை நீடிக்கப்பட்டது!

Wednesday, July 29, 2015
கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடை, ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த வழங்கு மாவட்ட நீதிபதி ஹர்ஸ சேதுங்க முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனுவனை விசாரணை செய்ததன் பின்னர் கடந்த 15ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்திருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு அவசரமாக கூடவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, அதற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.            

கொழும்பில் தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையில் பெண்ணின் சடலம்!

Wednesday, July 29, 2015
கொழும்பு- பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் செல்வதற்கான வரிசையில் இருந்தே இது மீட்கப்பட்டுள்ளது. பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணியளவிலேயே இது கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் அவ்விட த்தில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை பிரி­வி­னையின் பாதையில் கொண்டு செல்லும் நோக்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் கைகோர்த்­துள்­ளன: அதேபோல் தமிழ் பேசும் மக்­களை எமக்கு எதி­ராக திருப்பி நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றனர். மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, July 29, 2015
நாட்டை பிரி­வி­னையின் பாதையில் கொண்டு செல்லும் நோக்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் கைகோர்த்­துள்­ளன. அதேபோல் தமிழ் பேசும் மக்­களை எமக்கு எதி­ராக திருப்பி நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றனர். ஆனால் இந்த நாட்டில் சிறு­பான்மை மக்கள் அச்­சப்­படும் எந்த நட­வ­டிக்­கை­யையும் நாம் முன்­னெ­டுக்க மாட்டோம் என உறு­தி­ய­ளிப்­ப­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். ஆட்­சி­ய­மைத்து ஆறு­மாத காலத்­துக்குள் நாட்­டுக்கு பொருந்­தக்­கூ­டிய புதிய அர­சியல் அமைப்­பொன்றை உரு­வாக்­கு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
 
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­பனம் நேற்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மையில் வெளி­யி­டப்­பட்­டது. கொழும்பு ௦5 இல் அமைந்­துள்ள ஹென்றி பெட்ரிஸ் மைதா­னத்தில் நடை­பெற்ற இந்த நிகழ்வில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பி­னர்கள் மற்றும் மதத் தலை­வர்கள்,கலை­ஞர்கள் உள்­ளிட்ட பொது­மக்கள் பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். இந்த தேர்தல் விஞ்­ஞா­பன வெளி­யீட்டு நிகழ்வில் பிர­தான உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,
 
எம்மால் இன்று வெளி­யி­டப்­பட்­டி­ருக்கும் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை பார்க்கும் போது அன்று நாம் வெளி­யிட்ட மஹிந்த சிந்­த­னையே நினை­விற்கு வரு­கின்­றது. நாட்டின் இன்­றைய நிலைமை அன்று இருக்­க­வில்லை. இன்று மக்கள் சுதந்­தி­ர­மாக வாழ்­கின்­றனர். ஆனால் அன்று எம்மால் சுதந்­தி­ர­மாக செயற்­பட முடி­ய­வில்லை. இரா­ணுவ பாது­காப்பு, பொலிஸ் பாது­காப்­புக்கு மத்­தி யில் நாம் செயற்­ப­ட­வேண்டி இருந்­தது. அன்று எம்மால் வவு­னி­யாவைத் தாண்டி பய­ணிக்க முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. வடக்கு எப்­படி இருக்கும் என்­பது எமக்கு தெரி­ய­வில்லை. இன்று வடக்கில் வாழும் எமது விவ­சா­யிகள் வெங்­காயம் விதைப்­ப­தைப்போல் அன்று புலி­க­ளினால் மிதி­வெ­டிகள் விதைக்­கப்­பட்­டி­ருந்­தன.
 
அதேபோல் அன்று கொழும்பின் நிலைமை மிக மோச­மாக இருந்­தது. குப்­பையால் நிறைந்­தி­ருந்த கொழும்­பையே அன்று நாம் பார்த்தோம். கொழும்பு மட்­டு­மல்ல நாட்டில் அனைத்து பகு­தி­களும் மிகவும் மோச­மான நிலையில் தான் இருந்­தன. அவற்றில் இருந்து நாட்டை மீட்­டெ­டுத்­தது நாம்தான். கடந்த நான்கு ஆண்­டு­களில் நாம் நாட்டை மாற்­றி­ய­மைத்தோம். அமை­தி­யான நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைக்க முடிந்­தது.
 
மோச­மான நிலையில் நாடு
ஆனால் மீண்டும் நாட்டின் நிலைமை மாறி­வ­ரு­கின்­றது. மீண்டும் சாதா­ரண மக் கள் கஷ்­டப்­படும் நிலைமை ஏற்­பட்­டு ள்­ளது. இந்த நிலையில் மஹிந்­த­வுக்கு மீண்டும் ஏன் இடம் வழங்­கப்­பட்­ட­தென ரணில் கேள்வி எழுப்­பி­யுள்ளார். ஆனால் நான் ஆட்­சியில் இருந்து வெளி­யே­றிய போதும் மக்கள் என்னை மீண்டும் அழைக்­கின்­றனர். இலட்சக் கணக்­கி­லான மக்கள் எனது வீடு­தே­டி­வந்து தலை­மைத்­து­வதை ஏற்க வற்­பு­றுத்­து­கின்­றனர். அவர்கள் அனை­வரும் விடுக்கும் கோரிக்­கையை நல்ல தலைவன் புறக்­க­ணிக்க முடி­யாது. அதே போல் இன்று வடக்கில் இரா­ணுவம் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளமை, வடக்கில் பெண்­களின் பாது­காப்­புக்கு அச்சம் ஏற்­பட்­டுள்ள நிலையில், வேறு மாவட்­டங்­களில் இருக்கும் மக்கள் வடக்­குக்கு செல்ல முடி­யாத நிலையில் மக்கள் பாரிய சிக்­கல்­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே மீண்டும் அமை­தி­யான நாட்டை உரு­வாக்கிக் கொடுக்­கவே மக்கள் என்னை அழைக்­கின்­றனர்.
 
எமது அர­சாங்­கத்தில் 15 இலட்சம் மக்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களை பெற்றுக் கொடுத்தோம். விவ­சா­யி­க­ளுக்கு உர மானி­யங்­களை பெற்றுக் கொடுத்தோம். பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை மேற்­கொண் டோம். பெருந்­தோட்ட துறையின் அபி­வி­ருத்­திக்கு நாம் பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். ஆனால் அவை அனைத்தும் இன்று அடி­மட்­டத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது. இந்த ஆறு­மாத ஆட்­சியில் இந்த நாடு 25ஆண்­டுகள் பின்­னோக்கி சென்­றுள்­ளது. அந்த உணர்வு மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டதன் கார­ணத்­தினால் தான் மக்கள் மீண்டும் என்னை நாடி வந்­துள்­ளனர்.
 
மீண்டும் போராடத் தயார்
நாம் கடந்த காலத்தில் நல்ல படிப்­பி­னை­யினை கற்­றுள்ளோம். பொறுத்துக் கொள்­ளக்­கூ­டிய அளவு நாம் பொறுத்­துக்­கொண்­டுள்ளோம். நாட்­டுக்­காக நாம் போரா­ட­வேண்டி இருந்த நிலை­யிலும், யுத்தம் ஒன்றை செய்ய வேண்­டிய நிலை­யிலும் நாம் அவற்றை செய்தோம். அதேபோல் மீண்டும் இந்த நாட்­டுக்­காக போரா­ட­வேண்­டிய நிலைமை ஏற்­படும் சந்­தர்ப்­பத்தில், நாட்­டுக்­காக யுத்தம் ஒன்றை மீண்டும் மேற்­கொள்­ள­வேண்­டிய சந்­தர்ப்­பத்தில் அதை நாம் மேற்­கொள்ள தயா­ராக உள்ளோம். நாம் மீண்டும் புதி­தாக சிந்­திக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. கடந்த ஆறு மாத­காலம் மக்கள் சிந்­திக்க வேண்­டிய கால­மாக இருந்­தது. இப்­போது நாம் புதி­தாக செயற்­பட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. எம்மால் முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்­திகள் இந்த ஆறு­மாத காலத்தில் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. அவற்றை மீண்டும் நாம் முன்­னெ­டுக்க வேண்டும். கொழும்பை சுத்­த­மான நக­ர­மாக மாற்றும் அதே நேரம் ஏனைய மாவட்­டங்­க­ளையும் சுத்­த­மான நக­ர­மாக மாற்றி இலங்­கையை தூய்­மை­யான நாடக மாற்ற வேண்டும்.
 
மீண்டும் நிவா­ரணம்
இந்த ஆறு­மாத காலத்தில் நிலைமை இப்­ப­டி­யென்றால் 6௦ மாத காலத்தில் நாட்டின் நிலைமை எப்­ப­டி­யி­ருக்கும். நாடு முற்­றாக அழிந்­து­விடும். நாம் மீண்டும் இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப தயா­ராக உள்ளோம். நாட்டை நவீ­ன­ப்ப­டுத்தும் பய­ணத்தில் இளை­ஞரை ஒன்­றி­ணைத்து கொண்­டு­செல்ல வேண்டும். பொரு­ளா­தா ரத்தை பலப்­ப­டுத்த வேண்டும். மக்கள் உண­ரக்­கூ­டிய நிவா­ர­ணங்­களை கொண்­டு­வ­ருவோம். அனைத்து மக்­க­ளுக்கும் வீட்டு வச­தி­களை பெற்றுக் கொடுப்போம். போசாக்­கான உணவு, சுகா­தார வச­தி­களை மேலும் பலப்­ப­டுத்­துவோம். அரச மற்றும் தனியார் துறை­யி­ன­ருக்கும் சலு­கை­களை பெற்­றுக்­கொ­டுப்போம்.
 
ஒரு அணி­யாக கட்சி
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணயில் இரண்டு அணி இல்லை. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் ஒரு அணி மட்­டுமே உள்­ளது. அந்த அணியும் ஐக்­கிய தேசியக் கட்­சியை எதிர்க்கும் அணி­யா­கவே உள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் தான் பல அணிகள் இன்று உரு­வா­கி­யுள்­ளன. இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஒன்­றாக கைகோர்த்­துள்­ளன. அதேபோல் வேறு பல கட்­சி­களும் கைகோர்த்­துள்­ளன. அன்று சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட ஜாதிக ஹெல உறு­ம­யவும் அவர்­க­ளுடன் தான் கைகோர்த்­துள்­ளது. நாட்டு மக்கள் அனை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை பார்த்­தி­ருப்­பீர்கள். அது என்ன சொல்­கின்­றது.
 
அவர்­க­ளது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திற்கு ஏற்ப சுய நிர்­ணய கொள்­கைக்கு இடம் கொடுக்க முடி­யுமா? வடக்­கையும், கிழக்­கையும் ஒன்­றி­ணைத்து தனி­நா­டாக மாற்­று­வதும், ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­குழு விசா­ர­ணைக்கு முன்னால் எம்மை நிறுத்த முயற்­சிப்­பதும் ஏற்­றுக் ­கொள்ள முடி­யுமா? ஒட்­டு­மொத்த பிரி­வினை சக்­தி­களும் இன்று ஒரு அணியில் கைகோர்த்து நாட்டின் நல்­லாட்சி, ஜன­நாயகம் பற்றி பேசு­கின்­றனர். ஆகவே இவர்கள் நினைப்­பது நாட்டை நல்­லாட்­சியின் பாதையில் கொண்­டு­செல்­லவோ, நாட்டில் நல்­லாட்­சியை உரு­வாக்­கவோ அல்ல. இந்த நாட்டை பிரி­வி­னையின் பாதையில் கொண்டு செல்­லவே இவர் கள் முயற்­சி­கின்­றனர்.
 
சிறு­பான்மை இனத்­துக்கு தடை­யாக இருக்க மாட்டோம்
எமது ஆட்­சியில் நாம் சிறு­பான்மை மக்­களின் உரி­மை­க­ளையும் அவர்­க­ளது கலா­சா­ரத்­தையும் பாது­காத்தோம். கடந்த கால போராட்­டத்தில் இடிக்­கப்­பட்ட இந்து ஆல யங்கள், கத்­தோ­லிக்க தேவா­ல­யங்கள் முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களை நாம் புனர்­நிர்­மாணம் செய்து கொடு த்தோம். ஆனால் கடந்த குறு­கிய காலத்தில் தமிழ், முஸ் லிம் மக்கள் மத்­தியில் எம்­மைப்­பற்­றிய தவ­றான எண்­ணத்தை வர­வ­ழைத்து எமக்கு எதி­ரான வகையில் சில சூழ்ச்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அவர்கள் மத்­தியில் ஒரு அச்சம் ஏற்­பட்­டுள்­ளன என்று சொன்­னாலும் அது தவ­றில்லை. அது இந்த தேர்­தலில் நிரூ­ப­ணமா­கி­யது. ஆகவே இவர்­க­ளது சூழ்ச்­சியை தமிழ் மக்கள் தெளி­வாக விளங்­கிக்­கொள்ள வேண்டும். எந்த மதத்­துக்கும், சிறு­பான்மை இனத்­துக்கும் எந்த வகை­யிலும் நாம் தடை­யாக இருக்க மாட்டோம். அனை­வ­ரையும் பாது­காக்கும் ஆட்­சியை முன்­னெ­டுப்போம்.
 
ஆறு­மாத காலத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு
அதேபோல் நாட்டின் சுயா­தீன தன்­மையை பாது­காக்கும் சகல நட­வ­டிக்­கை­களையும் நாம் முன்­னெடுப் போம். பல­மான சட்ட, நீதி முறை­மை­யினை நாம் உறு­திப்­ப­டுத்­துவோம். அதேபோல் சர்­வ­தேச உற­வு­மு­றையை பலப்­ப­டுத்தும் வகையில் எமது வெளி­நாட்டு கொள்கைகளை அமைத்துக்கொள்வோம். அத்தோடு நாம் தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டு வரும் கொள்கையையும் பொறுப்பேற்று புதிய தேர்தல் முறைமையை உருவாக்குவோம். அதேபோல் பாராளு மன்றத்தை பலமான சபையாக மாற்றி அடுத்த

ஆறுமாத காலத்தில் நாட்டுக்கு பொருந்தக் கூடிய புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவோம். மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடிய பலமும் உறுப்பினர்களும் எம்மிடம் இருக்கின்றனர். மீண்டும் இந்த நாட்டை சிறப்பான பாதையில் கொண்டு செல்ல எம்மால் முடியும். இந்த நாட்டை கோபத்தாலும் வைராக்கியத்தாலும் முன்னெ டுத்து செல்ல முடியாது. ஒற்றுமையான ஒன்றுபட்ட சமூகத்தின் மூலமாகத்தான் நாட்டை முன்னெடுக்க முடியும். ஆகவே மீண்டும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம் எனக் குறிப்பிட்டார்.