Wednesday, July 29, 2015

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு தடை நீடிக்கப்பட்டது!

Wednesday, July 29, 2015
கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடை, ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த வழங்கு மாவட்ட நீதிபதி ஹர்ஸ சேதுங்க முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனுவனை விசாரணை செய்ததன் பின்னர் கடந்த 15ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்திருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு அவசரமாக கூடவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, அதற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.            

No comments:

Post a Comment