Wednesday, December 7, 2016

சுப்ரமணியன் சுவாமி பேட்டி; அ.தி.மு.க. நிச்சயம் உடையும்!

தமிழக முதல்வர்  ஜெயலலிதா இறந்து ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் ‘அதிமுக’ வை உடைக்க பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சதி செய்வதாக சொல்லப்படுகிறது

உடல்நிலைக் குறைபாடு காரணமாக திங்கட்கிழமை இரவு தமிழக முதல்வர்  ஜெயலலிதா உயிரிழந்தார். இதனால் அதிமுக-வில் பெரும் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், அ.தி.மு.க கட்சி நிச்சயம் உடையும் என்று பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:-
 
அ.இ.அ.தி.மு.க. ஒரே கட்சியாக இருக்காது. சசிகலா நடராஜன் அந்த கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பார். பன்னீர் செல்வத்தை சுதந்திரமாக இருக்க விடமாட்டார்.
 
தன்னுடைய குடும்பத்தில் இருந்து பன்னீர் செல்வம் இடத்திற்கு ஒருவரை கொண்டு வருவார்.
பன்னீர் செல்வத்திற்கு கட்சிக்குள் எந்தவித அடித்தளமும் இல்லை. அதேபோல் சசிகலாவிற்கும் எந்தவொரு அரசியல் புத்திசாலித்தனமும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரபல காமடி நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமி காலமானார்!

பிரபல காமடி நடிகரும், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமி (Cho Ramaswamy) இன்று (புதன்கிழமை) காலமானார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சோ, சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் சுவாசப் பிரச்சினையினாலும், உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதாலும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

திரைப்படங்களில் காமடி நடிகராக அறிமுகமாகி திரைப்படத்துறையில் நிறைய நண்பர்களை பெற்று இருந்தார்.தன்னை அரசியல் விமர்சகராக நிலைநிறுத்திக்கொன்டாலும் பாஜக சார்பு, குறிப்பாக ஆர் எஸ் எஸ் வட்டாரங்களில் இவருக்கு தேசிய அளவில் நண்பர்கள் உண்டு. நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். துக்ளக்’ வார இதழை 1970-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tuesday, December 6, 2016

ஜெயலலிதா மறைவு: திமுக தலைவர் கருணாநிதி, மு.க ஸ்டாலின் இரங்கல்!

ஜெயலலிதா மறைவையொட்டி திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர்  ஜெயலலிதாவிற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழக தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர்கள் உள்ளட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில், “உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு சில நாளில் வீடு திரும்பவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் எல்லாம் சிகிச்சை அளித்தும், அரசியல் கட்சி தலைவர்கள், லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள், தாய்மார்கள் வாழ்த்தியதற்கு மாறாகவும், ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்று செய்திக் கேட்டு வருந்துகிறேன்.
கட்சி ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், அவரது கட்சி நலனுக்காக பல துணிச்சலான காரியங்களை ஆற்றியவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.குறைந்த வயதில் இறந்துவிட்டார் என்ற போதும், அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. அவரை இழந்து வாடும் அவரது கட்சி முன்னணியினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறியுள்ளார்
அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தனது இரங்கல் செய்தியை பகிர்ந்து கொண்டார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-  பெண் அரசியல்வாதியாக வியக்க வைக்க தலைவர் ஜெயலலிதா. அவரது போராட்ட குணங்களை கண்டு வியக்கிறேன். அதிமுக தொண்டர்களிடம் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்...
 
பொதுமக்கள் அஞ்சலிக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரளாக குவிந்தனர்.இதனிடையே ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.  அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்திற்கு காலை 5.50 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.
ஆயுதம்  தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதா உடல் எடுத்துச்செல்லப்பட்டது.  ஜெயலலிதா வழக்கமாக கோட்டைக்கு செல்லும் கடற்கரை சாலை வழியாகவே அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது.  காலை 6.10 மணியளவில் அவாது உடல் ராஜாஜி அரங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர். இன்னும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜாஜி அரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் , முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் என அனைவரும்  ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்
* ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வருகை.
* முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் அஞ்சலி
* முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு  நடிகர் பிரபு, விக்ரம் பிரபு அஞ்சலி செலுத்தினர்
* மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த கேரள ஆளுனர் சதாசிவம், கேரள் முதல்வர் பிரணாய் விஜயன் சென்னை வருகை,
* மத்திய அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு,கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், அரசு விழாக்களை ரத்து செய்ய உத்தரவு
* கேரள,கர்நாடக, புதுச்சேரி, உத்தரகாண்ட் , பீகார் மாநில அரசு சார்பில்  ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
* திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து
* ஜெயலலிதா மறைவையொட்டி தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் ஒரு நாள் ரத்து
* மறைந்த ஜெயலலிதா உடலுக்கு  திராவிட கழக தலைவர் கீ. வீரமணி அஞ்சலி
* ஜெயலலிதாவின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஈ,வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்
* ஜெயலலிதாவின் உடலுக்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
* ஜெயலலிதாவின் உடலுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, பி.வாசு அஞ்சலி செலுத்தினர்
* ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தினார்
* ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் அஞ்சலி செலுத்தினார்
* ஜெயலலிதாவின் உடலுக்கு  நடிகர்கள் மன்சூர் அலிகான்,ராதாரவி அஞ்சலில் செலுத்தினர்
* ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்
* இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
‘அமெரிக்கா-இந்தியா இடையிலான நெருங்கிய உறவுகளை ஆதரித்ததுடன் தமிழ்நாட்டுக்காக பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்தவர் என்ற முறையில் ஜெயலலிதா     நினைவுகூரப்படுவார்.இந்த துயரமான நேரத்தில் எங்களது எண்ணங்களும் பிரார்த்தனையும் தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்திருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஜெயலலிதா மறைவுக்கு  7 நாட்கள் தமிழக அரசு துக்கம் அனுசரிப்பு; 3 நாட்கள் பள்ளி கல்லூரி விடுமுறை
* ஜெயலலிதாவின் உடலுக்கு  கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார்.சந்தியாவுக்கு மகளாக பிறந்து இந்தியாவின் மகளாக மறைந்த ஜெயலலிதா – கவிஞர் வைரமுத்து புகழாரம்
* நடிகர்கள் சங்கம் சார்பில் கார்த்தி,நாசர், பொன்வண்னன், ஒய்.ஜி மகேந்திரன் கோவை சரளா, சத்யராஜ, மனோபாலா,ஸ்ரீமான்,ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்
* ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகைகள் கவுதமி, விந்தியா அஞ்சலி செலுத்தினர்.
* தி.மு.க பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் ஆறுதல் கூறினார்.ஜெயலலிதா எந்த பொறுப்பேற்றாலும் அதில் தனி முத்திரை பதிக்க கூடியவர் என பாராட்டு தெரிவித்தார். அ.தி.மு.க நிர்வாகிகள் தொஇண்டர்களுக்கு ஆழ்ந்த் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். என கூறினார்.
*  விடுதலை சிறுத்தைகள் தலைவர் .தொல்.திருமா வளவன் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்றுள்ளார்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுள்ளார்.  புதிய முதல்வராக பன்னீர்செல்வத்துக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 15 அமைச்சர்க

இதற்கான நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது ஜெயலலிதாவின் மறைவிற்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக சென்னை ராயப்பேட்டை உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரவு 10.30 மணியளவில் நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பன்னீர்செல்வம் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்க உள்ளார். முன்னதாக ஏற்கனவே பன்னீர் செல்வம் இரண்டு முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது.
அப்பல்லோ மருத்துவமனை சார்பில்வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி காய்ச்சல், மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கிரிட்டிக்கல் கேர் யூனிட் பிரிவில் பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் உடல் நலம் தேறி சாதாரணமாக வாய்மூலம் உணவு உட்கொள்ளும் அளவிற்கு முன்னேறினார். இதன் அடிப்படை
யில் அவர் கிரிட்டிக்கல் கேர் பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார்.
 
அங்கும் அவருக்கு சிறந்த மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலை நன்கு தேறி வந்தது.
துரதிஷ்டவசமாக டிசம்பர் 4ம் தேதி மாலை அவருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர் இன்டென்சிவ் கேர் பிரிவிற்கு மாற்றப்பட்டு அவர் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. உலக அளவில் அளிக்கப்படும் ஒரு சிறந்த சிகிச்சைதான் எக்மோ சிகிச்சை அவருடைய உயிரை காப்பாற்ற இயன்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் அவர்கள் உடல் நிலை மிகவும் மோசமடைந்து 5ம் தேதி இரவு 11.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது...
 
முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வும் அரசியலும்!!
 

தமிழக முதல்வர்  ஜெ. ஜெயலலிதா கர்நாடகாவில் உள்ள  மாண்டியா மாவட்டத்தில், பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் ஜெயராம் – வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார்.
jeya4

பெங்களூரில் ஜெயலலிதா பிஷப் கார்ட்டன் பெண்கள் உயர்நிலைப்  பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்..
jeya-3

ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிருக்கும் ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.
1981ல் அ.தி.முக. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். எம் ஜி ஆரின்  மறைவுக்குப் பின் அதிமுக ஜானகி அணி, ஜெயல்லிதா அணி என் இரண்டாக பிரிந்தது. தேர்தல் தோல்விக்கு பின் 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.
 
இவர் தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 அன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.  2016 இல் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். எம் ஜி ஆருக்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார்.
jeya-5

1991 முதல் 1996 வரையிலான  ஆட்சியின் மீது பல  ஊழல் வழக்குகளும், வளர்ப்பு மகன் திருமணம் என குற்றசாட்டுகளும் முன் வைக்கப்பட்டன,  அதற்கான வழக்குகளை அவர் இன்னும் எதிர்கொள்கிறார்.
கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும், அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தர்மபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர்.
 
ஜெயலலிதா முதல் முறையாக  தமிழக முதல்வராக இருந்த (1991-1996) போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது. அதேபோல  1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
jeya-2

தமிழ்நாட்டில் 2001 ஆம் ஆண்டில் 1000 குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என இருந்த பாலின சதவிகிதம் 2011 ஆம் ஆண்டில் 946 ஆக அதிகரித்துள்ளது. தொட்டில் குழந்தைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பெண் குழந்தை விகிதங்கள் அதிகரித்துள்ளது.
 
2011 ஆம் ஆண்டு மிண்டும் ஜெயல்லிதா முதல்வராக வந்த பின்  மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்துள்ள கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கு தொட்டில் குழந்தைத் திட்டம் விரிவாக்கம் செய்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
2004 ஆம் ஆண்டு  நவம்பர் 11 ஆம் தேதி  ஜெயலலிதா  முதல்வராகவும் காவல்துறை அமைச்சராகவும் இருந்த போது இந்தியாவின் எல்லா  அதிகார மையங்களோடு குடியரசு தலைவர் அமைச்சர்கள் வரை வந்து சந்தித்து செல்லும் அதிகாரோத்தோடு இருந்த காஞ்சுபுரம் ஜெயேந்திரை  சங்கர்ராமன் கொலை வழக்கில் கைது செய்தது  மிக துணிச்சலான  முடிவாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து இடஒதிக்கீட்டிற்கான போராட்டங்கள் நடத்தி இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் 69 சதவித இடஒதிக்கீடு இருக்கிறது.
 
50 சதவித்திற்கு மேல் இட ஒதிக்கீடு  இருக்ககூடாது என  உச்சநீதி மன்றம் தீர்ப்பு கொண்டு வந்தபோது   69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையைப் பாதுகாத்திட 1993 ஆம் ஆண்டு, ஜெயலலிதா அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசியல் சட்டத்தின் 31சி பிரிவின் கீழ் சட்டம் கொண்டு வந்தது. பின்னர் மத்திய அரசு இதனை அரசியல் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்த்து இதுவும் இவரின் அரசியல் வாழ்வில் முக்கியமானதாக  கருதப்படுகிறது.
 
செப்., 22 முதல் டிச., 5 வரை...

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில், 74 நாட்களாக, சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று (டிச.,4) மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவரை, டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா செப்., 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று வரை மேற்கொண்ட சிகிச்சை விபரங்களை இங்கு பார்ப்போம்:
ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று வரை...
2016 செப்., 22; காய்ச்சல், நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.
2016 செப்., 23: முதல் மருத்துவ அறிக்கையை அப்பல்லோ வெளியி்ட்டது. உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்.
செப்., 24: சாதாரண உணவுகளை ஜெயலலிதா உட்கொள்வதாக தகவல்.
செப்., 25: ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வார் என்பது போன்ற தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என அப்பல்லோ நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
செப்., 27 : காவிரி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முதல்வர் உடன் நடந்ததாக தகவல் வெளியீடு.
செப்., 29: ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது, அவர் சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்.
அக்., 2: லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை.
அக்., 3: ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோயை சரிசெய்ய, ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டதுடன், சுவாசக் கருவியும் பொருத்தப்பட்டது.
அக்., 4: ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை தொடர்வதாகவும் தகவல்.
அக்., 6: டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வந்து லண்டன் டாக்டர், அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆலோசனை.
அக்., 8: நுரையீரலில் இருக்கும் நீரை நீக்க சிகிச்சை.
அக்., 10: சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் வந்து உடற்பயிற்சி அளிக்க தொடங்கினர். அதே நாளில், டில்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் மீண்டும் அப்பல்லோ வந்தனர்.
அக்., 21: தீவிர சிகிச்சைப் பிரிவு டாக்டர்களின் தலைமையில் இதயநோய், நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை.
நவ., 14: அ.தி.மு.க., மூத்த உறுப்பினர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு, அவரது மகனிடம் ஜெ., தொலைபேசியில் இரங்கல் தெரிவி்ததார்.
நவ., 19: தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு ஜெயலலிதா மாற்றம். தொடர்ந்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது.
நவ., 22: மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றதையடுத்து ஜெ., மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
டிச., 4: ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை .வெளியீடு.
டிச., 5: ஜெயலலிதா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துமனை அறிக்கை.
டிச., 5:முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது.
 

Sunday, December 4, 2016

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க செல்வோம்: மீனவர்கள் ஆவேசம்!

ராமேஸ்வரம்:கச்சத்தீவு அந்தோணியார் கோவில் ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க, தடையை மீறி படகில் செல்வோம்' என, மீனவர்கள் தெரிவித்தனர். கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில் பழைய சர்ச் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.
 
இதன் திறப்பு, ஆர்ச்சிப்பு விழா வரும், 7ல் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு, இலங்கை அரசு அழைப்பு விடுக்க வில்-லை. இந்நிலையில், கச்சத்தீவு ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க, தமிழக மீனவர்களுக்கு அனுமதி கோரி, ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ் மற்றும் மீனவர் சங்க தலைவர்கள் தமிழக அரசிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. இலங்கையில் உள்ள மீ
னவர்களை அனுமதிக்காத நிலையில், தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
 
இது, தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ராமேஸ்வரம் பாதிரியார் உட்பட நான்கு பேருக்கு, கச்சத்தீவு சர்ச் விழாவில் பங்கேற்க, இலங்கை பாதிரியார் ஜோசப் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். இதை ஏற்க பாதிரியார் மற்றும் மீனவர்கள் மறுத்துவிட்டனர்.
இது குறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சகாயம் கூறுகையில், ''கச்சத்தீவு சர்ச் விழாவில் இருநாட்டு மீனவர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது. தடையை மீறி, ராமேஸ்வரத்தில் இருந்து, மூன்று படகுகளில் பாதிரியார், கன்னியாஸ்திரிகள் உட்பட, 105 பேர், கச்சதீவு செல்வோம்,'' என்றார்.

Saturday, December 3, 2016

டிரம்ப் குடும்பத்துக்கு ஒரு நாள் பாதுகாப்பு செலவு 1 மில்லியன் டாலர்!

வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்துக்கு ஒருநாள் பாதுகாப்பு செலவு
மட்டும் 6 கோடியே 71 லட்சத்து 79 ஆயிரத்து 450 ரூபாய். ( 1மில்லியன் டாலர்) ஆகிறது.
 
நியூயார்க்கின் மான்ஹாட்டன் நகரில் உள்ள டிரம்ப் டவருக்கு ஆகும் பாதுகாப்பு செலவை அமெரிக்க அரசே ஏற்க வேண்டும் என நியூயார்க் மேயர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதியின் அழைப்பில் உத்தியோகபூர்வ தன்மை இல்லை: தினேஸ் குணவர்த்தன!

 தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான வட்ட மேசை பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி அழைத்துள்ளதன் உத்தியோகப்பூர்வ தன்மை தொடர்பில் சந்தேகம் உள்ளது என கூட்டு எதிர்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனப்பிரச்சினைக்கு வருமாறு அழைத்துள்ளதாக கூறுகின்றீர்கள். அவ்வாறான உத்தியோகப்பூர்வ அழைப்பு எமக்கு கிடைக்வில்லை. அழைத்துள்ளார் என்றால் நாங்கள் எங்கே செல்வது. கொழும்பிற்கா? அதிகாரத்தில் நாங்கள் இல்லை . பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுமே உள்ளனர்.
 
 அதே போன்று அரசியலமைப்பு சபை ஒன்றுள்ளது. ஆனால் எவ்விதமான தெளிவற்றதும் உத்தியோகப்பூர்வமற்றதுமான அறிவிப்புகள் மற்றும் அழைப்புகளை மையப்படுத்தி எம்மால் செயற்படவோ பதிலளிக்கவோ முடியாது. பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பதாயின் வெளிப்படைத்தன்மை மற்றும் நிகழச்சி நிரல் காணப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

வெடித்து சிதறிய ரஷ்ய விண்கலம்!

மாஸ்கோ: சர்வதேச விண்வெளி மையத்துக்கு, நேற்று ஏவப்பட்ட ரஷ்யாவின் ஆளில்லா சரக்கு விண்கலம் வெடித்துச் சிதறியது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில், சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இது பூமியில் இருந்து சுமார் 28 ஆயிரம் கி.மீ., உயரத்தில் விண்வெளியின்
மேற்பரப்பில் அமைந்துள்ளது.
 
 இங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக விண்வெளி வீரர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர். இதற்காக அங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள்-, வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். தற்போது அங்கு 6 வீரர்கள் தங்கியுள்ளனர்.இவர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கஜகஸ்தான் நாட்டின் பைக்கானுார் ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவுக்கு சொந்தமான விண்கலம் மூலம் அனுப்பப்படுகிறது.
 
இந்நிலையில் 2.4 டன் எடை கொண்ட உணவு, தண்ணீர், எரிபொருள், ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் 'MS-04' என்ற விண்கலம், சோயுஸ் ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த விண்கலம் புறப்பட்ட 6 நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க விண்வெளி மையமான 'நாசா' தெரிவித்துள்ளது.

Sunday, November 27, 2016

செவ்வாயில் தண்ணீர் 'நாசா' கண்டுபிடிப்பு!

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக 'நாசா' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சூரிய குடும்பத்தில் உள்ள சிவப்பு கோளான செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான சூழல் உள்ளதா என்பதை ஆராய்ச்சி செய்யும் பணியில் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம்(நாசா) தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலத்தில் இருந்து வரும் தகவல்களை ஆய்வு செய்கிறது.
இந்நிலையில், செவ்வாயில் உடோபியா பிளனிசியா பகுதியில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 மீட்டர் தடிமனில் மணல் ஈரப்பகுதி உள்ளதாகவும், அது 12,100 கன கி.மீ., பரப்பளவுக்கு உள்ளதாகவும் 'நாசா' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பரப்பளவு அமெரிக்காவின் சுப்பீரியர் ஏரியின் பரப்பளவை விட பெரியது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் செவ்வாய் ஆராய்ச்சிக்கென 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியுள்ளது.

Saturday, November 26, 2016

புலிகளை நினைவு கூர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியை சீர்குலைக்க வேண்டாம் பாதுகாப்பு அமைச்சு!

மாவீரர் தினத்தில்  புலிகளை நினைவு கூர்ந்து, நீண்டகால போரின் பின்னர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியை சீர்குலைக்க வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
 
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் போரின் போ
 
து உயிரிழந்தவர்களை நினைவு கூரலாமே தவிர  புலிகளுக்கு அஞ்சலி செலுத்தி நிகழ்வுகளை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
மேலும், நீண்ட கால போரின் பின்னர் தற்போது நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் புலிகளை நினைவுகூர்ந்து நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

கியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார்!

கியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை இரவு 10.29 (இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணி) மணிக்கு காலமானார்’’, என்று அவரது சகோதரரும் கியுப அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்திருக்கிறார்.
 
ஃபிடல் காஸ்ட்ரோ கியுபாவை சுமார் 50 ஆண்டுகளுக்கு ஒரு கட்சி அரசாக ஆண்டு வந்தார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008ல்தான் அவருக்கு அடுத்த அதிபராகப் பதவியேற்றார்.
மிகவும் சோகமான முகத்துடன் கியுபா அரச தொலைக்காட்சியில் எதிர்பார்க்கப்படாத பின்னிரவு ஒளிபரப்பில் இந்த அறிவிப்பை ரவுல் காஸ்ட்ரோ செய்தார்.
 
ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
ஃபிடலின் மறைவையொட்டி கியூபாவில் பல நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்.
அவ்வப்போது அவர் எழுதி வந்த பத்திரிகை கட்டுரைள் தவிர, ஃபிடல் காஸ்ட்ரோ அரசியல் வாழ்விலி்ருந்து ஏறக்குறைய ஓய்வு பெற்ற நிலையிலேயே இருந்தார்.
 
கடந்த ஏப்ரல் மாதத்தில் , நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி காங்
கிரஸின் கடைசி நாளன்று, ஃபிடல் , அபூர்வமாகத் தோன்றி உரையாற்றினார்.
 
கியூபா நாட்டின் அதிபராகவும், பிரதமராகவும் சுமார் அரை நூற்றாண்டுக்காலம் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. கடந்த 2008-ம் ஆண்டு வயோதிகத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்து வந்தார். அதன்பின்னர் மிக அபூர்வமாக பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வந்தார்.

விதவிதமான சுருட்டுகளை பிடிப்பதில் பிரியம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90–வது பிறந்த தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினார். அப்போது, அவருக்கு பரிசளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட 90 அடிநீளம் கொண்ட சுருட்டு கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனையாக பதிவாகி இருந்தது.

இந்நிலையில், சிலநாட்களாக முதுமைசார்ந்த உடல் நலக்குறைவினால் பாதிக்கபட்டிருந்த பிடல் காஸ்ட்ரோ, உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் காலமானதாக அவரது சகோதரரும் அந்நாட்டின் அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

கியூபாவின் புரட்சித் தலைவர் என்றழைக்கப்படும் பிடல் காஸ்ட்ரோவின் உடல் அரசு மரியாதைகளுடன் நாளை (சனிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் எனவும் ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

Wednesday, November 16, 2016

இரு நாட்டு உறவை புதுப்பிக்க ஒப்புதல் : டொனால்டு டிரம்ப் - புடின் தொலைபேசியில் பேச்சு!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், முதன்முறையாக, நேற்று தொலைபேசியில் பேசினர்; அப்போது, இரு நாட்டு உறவுகளை புதுப்பித்து, நட்புறவுடன் திகழ, இருவரும் சம்மதித்தனர்.
 
சமீபத்தில் முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், வெற்றி பெற்றார். அடுத்தாண்டு ஜனவரியில், அமெரிக்க அதிபராக, அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், நேற்று தொலைபேசியில் முதன்முறையாக பேசினர். டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த புடின்,
 
 முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார விவகாரங்கள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து விவாதித்தார். டிரம்ப் பேசுகையில், ''அமெரிக்கா - ரஷ்யா இடையிலான நட்புறவு மீண்டும் மலர வேண்டும்; ரஷ்ய மக்களுடன் நல்லுறவு நீடிக்க வேண்டும்,'' என்றார். இரு தலைவர்களும், இரு நாடுகள் இடையே நட்புறவை புதுப்பித்து, நட்புறவுடன் திகழ சம்மதித்தனர்.

Sunday, October 23, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் இத்தாலி!

தேசிய கடனை குறைப்பதற்கான ஐரோப்பிய விதிமுறைகளுக்கு சவால் விடுகின்ற வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த ஒரு வாரத்திற்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது கடுமையான தாக்குதல் ஒன்றை இத்தாலிய நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
 
இத்தாலி மீதான நடவடிக்கைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் ஆலோசித்து வருகிறது.
ஆனால், இத்தாலியின் தேசிய கடனில் மிதமான அதிகரிப்பை பிரஸல்ஸ் ஏற்றுகொள்ளவில்லை என்றால், அது ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு தொடக்கமாக இருக்கும் என்று பியர் கார்லோ பாதுவான் கூறியிருக்கிறார்.
 
சமீபத்திய நிலநடுக்கத்தின் செலவுகளையும், ஐரோப்பாவிற்கு வந்துள்ள புதிய குடியேறிகள் மற்றும் அகதிகளை ஏற்பதனால் ஏற்படும் செலவுகளையும் இத்தாலி உள்ளடக்க வேண்டியிருப்பதாக, ல ரிப்பபிளிக்கா என்ற செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் பாதுவான் தெரிவித்திருக்கிறார்.
சுவர்கள் கட்டுவதென இன்னொரு வழியை ஹங்கேரி தெரிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.
 
 

தற்போதைய அரசாங்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது: குமார வெல்கம!

Image result for kumara welgama
தற்போதைய அரசாங்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையல் அமைக்கப்படும் கூட்டணிக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
 
புளத்சிங்கள பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய குமார வெல்க, மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய கூட்டணியின் சின்னம் பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார்.
 
மேலும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அண்மையில் தனது தோட்டத்தில் இரண்டு டிப்பெண்டர் வண்டிகளை தேடி சோதனை நடத்திய சம்பவம் தொடர்பாகவும் வெல்கம கருத்து வெளியிட்டுள்ளார்.

Monday, October 17, 2016

சீன விஞ்ஞானிகள் இருவருடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‛ஷெங்ஸோ-11!

சீனா, இரண்டு விஞ்ஞானிகளுடன் ‛ஷெங்ஸோ-11' என்ற ராக்கெட்டை இன்று(அக்., 17) காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள
 
சீனா, கடந்த 2013ம் ஆண்டு மூன்று சீன விஞ்ஞானிகளுடன் 'டியாங்காங்-1' என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக அவர்கள் பூமிக்கு திரும்பினர்.
 
இந்நிலையில், வடக்கு சீனாவில் உள்ள ஜியோசுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்திலிருந்து, சென் டாங் மற்றும் ஜின் ஹயெ்பெங்க் என்ற இரு விஞ்ஞானிகளுடன், 'ஷெங்ஸோ-11' ராக்கெட் இன்று வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் சுமார் ஒருமாத காலம் தங்கியிருக்கும் இரு விஞ்ஞானிகளும், அங்கு ஆய்வுப்
பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினா!

ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
அண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சி
றிசேன ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட மூன்று கடற்படை தளபதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
 
அந்த ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி, இவ்வாறு செயல்பட்டால் அந்த ஆணைக்குழுவிற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடுமென்றும் என்று எச்சரித்திருந்தார்.
 
இந்த பின்னணியில், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினாமா செய்துள்ளார்.

Saturday, October 1, 2016

சிரியாவில் தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு 96 குழந்தைகள் பலி; போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ராணுவம் திடீரென குண்டு வீச்சு!

கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடக்கும் சிரியாவில்  கடந்த மாதம்7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம்  ஏற்பட்டது. எனவே, அரசு ராணுவமும் கிளர்ச்சியாளர்களும் போரிடாமல் அமைதி காத்தனர்.
 
ஆனால் கடந்த  19-ந் தேதி போர்  நிறுத்த ஒப்பந்தம் மீறல் ஏற்பட்டது. கிளர்ச்சியாளர்கள்  வசம் நீண்ட  நாட்களாக இந்த அலெப்போ   பகுதியை மீட்க ராணுவம் திடீரென குண்டு வீச்சு   நடத்தியது..
அங்கு குண்டு வீச்சு நடத்தப்பட்டது என்பதை விட குண்டு மழை பொ
ழியப்பட்டது என்றே  கூறலாம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 1900  குண்டுகள் வீசப்பட்டன.
இதனால் அலெப்போ மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளும், வானுயர்ந்த கட்டிடங்களும் இடிந்து  தரைமட்டமாயின.  குண்டு வீச்சுக்கு ஆஸ்பத்திரிகளும்,  மின் நிலையங்களும்,  குடிநீர் சப்ளை  நிலையங்களும் தப்பவில்லை.  இவை அனைத்தும் தரைமட்டமாயின.
 
இத்  தாக்குதலில் அலெப்போ நகரில் மட்டும் 320 பேர் பலியாகினர். அவர்களில் 96 குழந்தைகள் அடங்குவர்.இது தவிர  அலெப்போ மாகாணத்தில்  குண்டு வீச்சில் இடிந்து தரை மட்டமான  வீடுகளில்  இடிபாடுகளில் சுமார் 3 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். அவர்களில்  1 லட்சம் பேர் குழந்தைகள்  அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது

இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்!

எல்லையில் இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று ஐ.நா.வும், அமெரிக்காவும் வற்புறுத்தின.
 
காஷ்மீரில் உரி ராணுவ முகாம் மீது கடந்த 18-ந்தேதி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் 28-ந் தேதி. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 7 முகாம்களை இந்திய ராணுவம் துவம்சம் செய்தது. இதில் 38  பேர்கள் கொல்லப்பட்டனர்.
 
இதனால் காஷ்மீரில் எல்லையில் உள்ள குப்வாரா, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
 
இதுதொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டிபானே துஜாரிக் கூறியதாவது:-
 
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவி வரும் பதற்றமான நிலையை ஐ.நா. தொடர்ந்து மிகவும் கவலையுடன் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தப்படுவதை நாங்கள் அறிவோம். எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும்.
 
இதேபோல் இரு நாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 
அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “இரு நாடுகளுமே எல்லையில் அடக்கத்துடன் நடந்து கொள்ளவேண்டும். இந்திய-பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகள் எல்லையில் தொடர்பில் இருப்பார்கள் என்று நம்புகிறோம். எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்கு இதுபோன்ற தொடர்புகள் மிகவும் அவசியம்” என்றார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் :ஜனாதிபதிக்கு மனு!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வவுனியா அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு எதிராக வவுனியாவில் நேற்று அணிதிரண்ட பொது பலசேனா உள்ளிட்ட பௌத்த சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த மகஜரை கையளித்துள்ளன.
 
‘எழுக தமிழ்’ பேரணிக்கு தலைமை தாங்கிய விக்னேஸ்வரன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், கலாபோபஸ்வெவ பிரதேசத்தை உள்ளடக்கிய தனிப்பிரதேச செயலக பிரிவு உருவாக்கப்பட வேண்டும், மீள்குடியேறிய சிங்கள மக்களுக்கு மத்திய அரசாங்கம் உதவி வழங்க வேண்டும், வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது, விகாரைகளுக்கு
பாதுகாப்பு வழங்கவேண்டும், உள்ளூராட்சி சபை எல்லைகளை சரியாக மேற்கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
 
நேற்றைய எதிர்ப்பு பேரணியில் சிங்கள ராவய, சிங்கள பெரமுன, பொது பலசேனா, வடக்கை காத்து நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கம், கலாபோபஸ்வெவ மக்கள் உள்ளிட்ட பௌத்த சிங்கள அமைப்புக்கள் என்பன கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Saturday, September 10, 2016

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தாது காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் முடிந்தால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தி காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலி;ல் கூட்டு எதிர்க்கட்சி சிறந்த வெற்றியை பதிவு செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள மகிந்த நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதனால் அரசாங்கம் தேர்தல்களுக்குச் செல்ல அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளார்.

Tuesday, September 6, 2016

அனைத்திற்கும் துணிந்த என்னை புலம்பெயர் புலி பிரிவினைவாதிகளாலோ புலி பயங்கரவாதிகளாலோ ஒன்றும் செய்து விட முடியாது: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

அனைத்திற்கும் துணிந்த என்னை புலம்பெயர்   புலி பிரிவினைவாதிகளாலோ   புலி பயங்கரவாதிகளாலோ ஒன்றும் செய்து விட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
5 நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த மாதம் 31 ஆம் திகதி மலேஷியா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
'மலேஷியாவில் இலங்கைக்கான தூதுவர் தாக்கப்பட்டமை அரசாங்கத்திற்கு விழுந்த அடி என்பதை உணர வேண்டும். தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டிற்கோ மக்களுக்கோ எமக்கோ எவ்விதமான பலனும் இல்லை. ஆகவே அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவது என்பது ஒருபோதும் சாத்தியமற்ற விடயமாகும். கட்சி கொள்கை எமக்கும் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல்:புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை: மலேசிய எச்சரிக்கை!


மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐந்து சந்தேகநபர்கள் மலேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தது.
 
இந்த நிலையில் நேற்றைய தினம் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் எதிர்க்கட்சி எம்பியான தினேஷ் குணவர்த்தன ஆகியோரை விமானநிலையத்தில் வழியனுப்பி வைக்கச் சென்று திரும்பிய போதே இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவை வழியனுப்பி வைத்துவிட்டு உயர்ஸ்தானிகர் திரும்பியதாக எண்ணியே குண்டர்கள் குழு தாக்குதல் நடத்தியதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் மலேசிய விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் குழுக்கள் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தன. மஹிந்த ராஜபக்‌ச விகாரைக்குச் செல்லப் போகிறார் என்ற தகவலின் அடிப்படையில் விகாரை மீதும் விகாராதிபதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. எல்.ரி.ரி.ஈ.யினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் உச்சகட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கூட இவ்வாறான தாக்குதல் சம்பவங்களோ அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களோ மலேசியாவில் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லையென அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
நாம் விமானத்தில் ஏறுவதற்காகச் சென்று விட்டோம். அதன் பின்னரே அவர் தாக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பான இடத்துக்கு அவர் சென்றிருந்த போதும் அவரைப் பின்தொடர்ந்தவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த விமானநிலைய பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என தினேஷ் குணவர்த்தன எம்பி கூறினார்.எனினும், தாக்குதல் நடத்தியவர்களில் எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக இல்லை.
எவ்வாறிருந்தாலும் மலேசிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 
தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருவதாக மலேசிய பொலிஸ்மா அதிபர் டான் ஶ்ரீ காலித் அபூபக்கர் மலேசிய ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 வயதுக்கும் 56 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும் பாதுகாப்பு மீறல் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் கூறினார்.
 
எல்.ரி.ரி.ஈயினருக்கு ஆதரவாகவும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியோர் தொடர்பில் பாதுகாப்பு மீறல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாகவும், இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் எல்.ரி.ரி.ஈயினருக்கு நிதியுதவி வழங்குவதுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்த விசாரணைகளும் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மாலை 4 மணிக்கு நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நால்வர் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், ஐவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தூதுவருக்கு முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு வைத்திய நிலையத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கவலையடைகிறோம் என்றும் தெரிவித்தார்.
 
ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ அமைப்புக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென இந்தக் குழுவினருக்கு எச்சரிக்கின்றேன் என நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மலேசிய பொலிஸ் மா அதிபர் டான் ஶ்ரீ காலித் அபூபக்கர் கூறியுள்ளார்.
 
இதேநேரம், இந்தத் தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியிருக்கும் வெளிவிவகார அமைச்சு, இதனைக் கண்டித்திருப்பதுடன், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

 

Sunday, September 4, 2016

மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எழுதிய 'நந்திக்கடலுக்கான வழி ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிடப்படவுள்ள!

மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எழுதி ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிடப்படவுள்ள புநந்திக்கடலுக்கான வழிபூ நூல் குறித்து பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நூல் எதிர்வரும் 6 ஆம் திகதி- கமல் குணரட்ன ஓய்வுபெறும் தினத்திற்கு மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்த நூலில்  புலிகளின் தலைவர்  பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் விடயங்கள் உட்பட சில முக்கிய விடயங்கள் அடங்கியிருக்கும் எனக் கூறப்படுகிறது.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்றதாக இலங்கை இராணுவத்தினர் கூறும் 53 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக 2009 ஆம் ஆண்டு கமல் குணரட்ன கடமையாற்றினார்.

புலிகள் எதிர்க்கின்றனர் என்பதற்காக தான் பயணத்தை நிறுத்த போவதில்லை:முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ!

மலேசியாவுக்கு செல்லும் முன்னரே, அங்கு தனக்கு எதிர்ப்பு இருக்கும் என அறிந்திருந்தாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 
 
புலிகள் எதிர்க்கின்றனர் என்பதற்காக தான் பயணத்தை நிறுத்த போவதில்லை. யுத்தத்தை நான் பொறுப்பேற்றுக்கொண்டதன் காரணமாகவே எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு எதிராகவே ஆர்ப்பட்டங்கள் நடத்தப்படுகின்றன.
 
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அதிகளவான மக்கள் ஆதரவுள்ள உறுப்பினர்களை தற்போதைய ஆட்சியாளர்கள் கட்சியை விட்டு விரட்டுகின்றனர். இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் கடும் வெறுப்பில் உள்ளனர் எனவும் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Saturday, September 3, 2016

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தாக்குவது, விரட்டியடிப்பது, சிறை பிடித்துச்செல்வது, மீன்பிடி கருவிகளைப் பறித்துக்கொண்டு வலைகளை வெட்டி வீசுவது என இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கின்றன.
 
இந்நிலையில், இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள 113 படகுகளையும்  உடனடியாக விடுவிக்கவும், கடலில் மூழ்கிய 18 படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளனர்.
 
அதன் முதல்கட்டமாக இன்று மீன்பிடிதுறைமுகம் அருகே கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீனவர்கள் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என மீனவர் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

குருணாகலில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை!

குருணாகலில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அந்நிகழ்வில் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளப் போவதில்லையென மஹிந்த குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
 
இதேபோன்று, மஹிந்த குழு சார்ந்த மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் கலந்து கொள்வதில்லையென ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் அவர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதான நோக்கம், நல்லிணக்கச் செயற்பாடுகளை நோக்கியதாக இருக்க வேண்டும்- பான் கீ மூன்!

இறுதி கட்ட  போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இலங்கைக்கான மூன்று நாள் பயணத்தின் முடிவில், கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் பங்கேற்ற பான் கீ மூனிடம், சர்வதேச பங்களிப்பை அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்துவருகின்றமை குறித்து கேள்வி எழுப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த ஐ.நா செயலர், இலங்கையின் பிரதான நோக்கம், நல்லிணக்கச் செயற்பாடுகளை நோக்கியதாக இருக்க வேண்டும். நிலைமாறு நீதிப்பொறிமுறையில் முழுமையான அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் பங்கெடுத்துள்ளன என நான் நினைக்கின்றேன். பங்குபற்றுதல் மட்டத்தில் வேறுபாடுகள் காணப்படலாம். அல்லது முக்கியமான விடயங்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து வேறுபாடுகள் காணப்படலாம்.
 
ஐக்கிய நாடுகள் சபை மிக முக்கியமான மூன்று விடயங்களை நோக்கி பயணிக்கின்றது.ஒன்று நல்லிணக்கம், அதனை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என நான் நினைக்கின்றேன்.அடுத்தது சர்வதேச நிலைமாறுநீதிப்பொறிமுறை, அந்த விடயத்திலும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் சர்வதேசத்துடனும் இணைந்து பயணிக்க வேண்டும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நம்பகமான நிலைமாறு நீதிப்பொறிமுறையை அமைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
நம்பகத்தன்மை என்பது தேசிய ரீதியானதும் சர்வதேச ரீதியானதுமாக அமைய வேண்டும். சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஆழமாகவும் நேரடியாகவும் ஈடுபட்டுள்ளது. புரிந்துணர்வு குறைபாடு அல்லது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் வேறுபாடுகள் காணப்படலாம். எனினும் நாம் சரியான திசையை நோக்கி முன்னோக்கி பயணிக்கின்றோம். நீங்கள் முன்னோக்கி பயணிக்கின்றீர்கள்.
 
பரஸ்பர புரிந்துணர்வு, பரஸ்பர மரியாதை, மன்னிப்பு வழங்குதல், பொறுமை காத்தல் உள்ளிட்ட இவை அனைத்தையும் ஸ்ரீலங்கா மக்களுக்கும் அரசாங்கமும் இந்த தருணத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவற்றை நோக்கிய நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். என குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் வருகை எதிர்த்து இன்று மூன்றாவது நாளாக புலிகளுக்கு ஆதரவான மலேசியர்கள் போராட்டத்தில் இறங்கினர்!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் வருகை எதிர்த்து இன்று மூன்றாவது நாளாக புலிகளுக்கு  ஆதரவான    மலேசியர்கள் புத்ரா உலக வணிப மையத்திற்கு முன்புறம் போராட்டத்தில் இறங்கினர். ராஜபக்சே மலேசியாவில் இருக்கும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என அவர்கள் கூறினர்.
 
ஆசியான் அரசியல் கட்சிகளின் மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக நாடு தழுவிய அளவில் புலிகளுக்கு  ஆதரவான    மலேசிய மக்கள் போலீஸ் புகார் அளித்தும் போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். கடந்த வியாழன்கிழமையும் நேற்றும் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தின் முன் கண்டன ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுப்பட்ட புலிகளுக்கு  ஆதரவான   அமைப்புகளைச் சேர்ந்த மலேசியத் தமிழர்கள் இன்றும் ஒன்று கூடி தனது அதிருப்தியினைத் தெரிவித்தனர்.
 
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று ஒன்று திரண்ட வேளை, "ராஜபக்சே மாநாட்டிலோ அல்லது நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் எங்கள் நாட்டை விட்டு வெளியேறும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என அவர்கள் கோஷமிட்டனர்.
 
மையத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த வேளை, போலீஸ்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறினர்.
நேற்று ஏற்பாட்டுக்குழு சார்பில் பேசிய அதிகாரி ஒருவர், மாநாட்டு மண்டபத்தில் ராஜபக்சே இல்லை என்று கூறிய ஒரு மணிநேரத்திற்குள் மாநாட்டு மேடையில் ராஜபக்சே உரையாற்றிய புகைப்படங்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

Monday, August 15, 2016

ஐக்கிய தேசியக்கட்சியின் கிளைக் காரியாலயமாகவே நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு இயங்குகின்றது – நாமல் ராஜபக்ஸ!

ஐக்கிய தேசியக்கட்சியின் கிளைக் காரியாலயமாகவே நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு இயங்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஓர் காவல்துறைப் பிரிவு அல்ல எனவும் அது சிறிகொத்தவின் ஓர் கிளை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மா அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் செயற்பட்டு வருவதாகவும், தம்மை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைக் கொண்டு எதிர்க்கட்சியினர் ஒடுக்கப்படுவதாகத்தெரிவித்துள்ளார்.

இந்தியா- வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து: மோடி!


டெல்லி: இந்தியா, வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு பிரதமர் மோடி  சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார். டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
 
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதில் பேசிய மோடி, நமக்கு சுதந்திரம் எளிதில் கிடைத்துவிடவில்லை என்றும் இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் லட்சக்கணக்கானோரின் தியாகம் உள்ளதாகவும்  குறிப்பிட்டார்.