Tuesday, March 28, 2017

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை : கோத்தபாய ராஜபக்ச!

போரின் போது சில குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை தான் நிராகரிக்கவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்று கோல்பேஸ் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும், நாட்டுக்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன். நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் என்பது நிச்சயமில்லை. ஆனால், அரசியலை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி எப்போதும் கூறுவார்.
எனது கொள்கைக்கு இணக்கமான ஒரு தலைவரை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பிரவேசத்தை ஒரு உதாரணமாக எடுத்து, அவரது முறைமைகளை ஆராய்ந்து வருகிறேன்.
 
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு புதிய விசாரணைப் பொறிமுறைகள் தேவையில்லை. தற்போதுள்ள நீதிப் பொறிமுறைகளே போதுமானது. போரின் போது தனித்தனியான சில குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை நான் நிராகரிக்கவில்லை. ஆனால், முழு இராணுவத்தையும் குற்றம்சாட்டுவது நியாயமானதல்ல.
 
எனது கட்டுப்பாட்டில் இருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவொன்று ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது. இராணுவப் புலனாய்வுப் பிரிவு அவ்வாறு செயற்பட்டிருந்தால், அப்போதைய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.இராணுவப் புலனாய்வுப் பிரிவு தனது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்று அவரால் எப்படிக் கூற முடியும்? இது ஒரு நகைச்சுவை என்றும் அவர் கூறியுள்ளார்.
 

எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சம்பந்தன் விலக வேண்டும் : ஆனந்தசங்கரி!

எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் வீ.ஆனந்தசங்கரி இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
 
தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய பல உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை.
 
இந்த நிலையில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை இந்திய கூட்டு இராணுவ பயிற்சி !

இந்த ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து பல இராணுவக் கூட்டுப் பயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சுபாஸ் பஹாரே இதனை இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
 
இலங்கை, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளுடன் இந்திய படையினர் கூட்டுப் பயற்சிகளில் ஈடுபடவுள்ளனர். 
 
அத்துடன் பயிற்சியளிப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் இதர நடவடிக்கைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
 
இலங்கை உள்ளிட்ட நாடுகளுடனான பாதுகாப்புத் தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த பயிற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, March 27, 2017

ராஜிவ் கொலை குற்றவாளி முருகனிடமிருந்து 2 மொபைல்போன்கள் பறிமுதல்!

வேலூர் : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை குற்றவாளியான முருகனிடம் இருந்து, இரண்டு மொபைல் போன்கள், மூன்று சிம் கார்டுகள், சார்ஜர்களை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மொபைல் போன்கள் பறிமுதல் :



ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருபவர் முருகன். இவர், மற்றொரு குற்றவாளியான நளினியின் கணவர் ஆவார். இவர்கள் இருவரும் தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை சிறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது முருகனின் அறையில் இருந்த சுவாமி படங்களுக்கு பின் மறைத்து வைக்கப்பட்டிருந்த, இரண்டு மொபைல் போன்கள், மூன்று சிம் கார்டுகள், சார்ஜர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சலுகைகள் ரத்து :

அதிக பாதுகாப்பு நிறைந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக்கில் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைக்குள் வைத்திருந்தது தொடர்பாக முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சிறை கேன்டீனில் இருந்து தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பது உள்ளிட்ட முருகனுக்கு அளிக்கப்பட்டிருந்த சில சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக தொடருது :

மொபைல் போன்கள், சிம் கார்டுகள் எப்படி கிடைத்தது என முருகனிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. யார் உதவியுடன் அப்பொருட்களை கிடைத்தது என கூற முருகன் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் காரணமாக முருகனுக்கு வாரத்திற்கு ஒருமுறை தனது மனைவி நளினியை சந்திப்பதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியும் மறுக்கப்படலாம் என கூறப்படுகிறது. 2010 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நளினியின் சிறை அறையில் இருந்தும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் சரவணன் என்ற ரவுடி அடைக்கப்பட்டுள்ள அறையில் இருந்தும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறை காவலர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் நிறைந்தது என கூறப்படும் வேலூர் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாகி வருவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  

Friday, March 24, 2017

ஜெயலலிதா சமாதிக்கு சென்றால் பதவி இழப்பு?

ஜெ., சமாதிக்கு சென்று வணங்கினால், ஏதாவது ஒன்றை பறிகொடுக்க நேரிடும்' என, சமூக வலைதளங்களில் பரவும் தகவலால், அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சென்னை,

இப்படி, ஜெ., சமாதியை வணங்கிய ஒவ்வொருவரும், அடுத்தடுத்து ஒன்றை இழப்பதற்கு காரணம், தனக்கு துரோகம் செய்தவர்கள், வேஷம் போடுவதை சகிக்க முடியாத, ஜெ.,யின் ஆவி தான், பழி வாங்கி வருவதாக, சமூக வலைதளங்களில், 'கமென்ட்' பரவி வருகிறது. இதை பார்க்கும், அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.
மெரினாவில் உள்ள, ஜெ., சமாதிக்கு சென்று வணங்கிய பின், பழனிசாமியிடம் முதல்வர் பதவியை பறிகொடுத்தார். அடுத்து, ஜெ., சமாதிக்கு சென்ற சசிகலா, சட்டசபை குழு தலைவராக, அதாவது, முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஆவணத்தை, சமாதியில் வைத்து வணங்கினார். அதோடு நேராக, ஜெயிலுக்கு தான் சென்றார். ஜெ., சமாதிக்கு சென்று வணங்கிய தினகரன், இரட்டை இலை சின்னத்தை இழந்தார். சமாதியில் வலம் வந்து வணங்கிய தீபா, கணவர் மாதவனை பிரிந்தார்.

பிரிட்டன் பார்லி. அருகே தாக்குதலுக்கு : ஐ.எஸ்.பொறுப்பேற்பு!

ரிட்டன் பார்லிமென்ட் அருகே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் மீது தாக்குதல் நடத்திய நபரை, அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள வெஸ்ட் மின்ஸ்ட
ர் பாலம் அருகே, நேற்று கையில் கத்தியுடன் வந்த மர்ம நபர், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் மீது, துப்பாக்கியால் சுட்டான். இதையடுத்து, போலீசார் அவன் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவன் பலியானான்.
 
இந்த பாலத்திற்கு மிக அருகில், அந்நாட்டு பார்லிமென்ட் அமைந்துள்ளதால், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், பார்லிமென்ட் ஊழியர்கள் பீதியடைந்தனர்.இதையடுத்து, பார்லிமென்ட் கதவுகள் உடனடியாக மூடப்பட்டன. அப்பகுதியில் உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். பிரதமர் மற்றும் பார்லிமென்ட் உறுப்பினர்கள் பத்திரமாக உள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 
இந்த சம்பவத்தில், 12 பேர் காயம் அடைந்ததாக, தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் யார், எதற்காக இந்த தாக்குதல் நடந்தது என்பது குறித்து, அந்நாட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆனாலும், பயங்கரவாத தாக்குதல் நடந்தால், அதை முறியடிக்க, எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படுமோ, அது போன்ற நடவடிக்கையை மேற்கொள்வதாக, பிரிட்டன் போலீசார் தெரிவித்தனர்.
 
இதற்கிடையே, கத்தியால் தாக்கிய மர்ம நபர், முன்னதாக காரில் வந்ததாகவும், சாலையோரத்தில் நடந்து சென்றவர்கள் மீது, அவன், காரை மோதியதாகவும் உறுதி  தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
லண்டன் நகரில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் பாலம் அருகே, மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் பலியாயினர் 12 பேர் காயம் அடைந்தனர். சுதாரித்த போலீசார் அவன் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவன் பலியானான். பாலத்திற்கு மிக அருகில், அந்நாட்டு பார்லிமென்ட் அமைந்துள்ளதால், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், பார்லிமென்ட் ஊழியர்கள் பீதியடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். இ்ந்நிலையில் இத்தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. மேலும் பிரிட்டன் போலீசார் விசாரணை நடத்தி தாக்குதலுக்கு தொடர்புள்ளதாக 8 பேரை கைது செய்துள்ளனர்.

Thursday, March 23, 2017

உலகின் மிகக் கொடூரமான புலிகள் அமைப்பை இலங்கை இராணுவம் தோற்கடித்துள்ளது : சரத் வீரசேகர!

உலகின் மிகக் கொடூரமான புலிகள் அமைப்பை இலங்கை இராணுவம் தோற்கடித்துள்ளது. இந்த போரில் 29 ஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், 14 ஆயிரம் இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர் என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
 
மனித உரிமைகள் ஆணையமானது போர் குற்ற நடவடிக்கைகள் என்ற பெயரில் இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. இது ஒசாமா பின்லேடனை கொலை செய்த அமெரிக்க கடற்படைக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது போன்று அமைந்துள்ளது.
 
அத்துடன், புலிகள் ஆதரவு அமைப்புகள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் மன்றத்தை தவறான கருத்துகளால் திசைத்திருப்பியுள்ளது. தமிழர்களின் தற்போதைய நிலைக்கு காரணமே புலிகள் அமைப்பு மட்டுமே.
 
புலிகள் ஆதரவு அமைப்புகள் கொணர்ந்துள்ளவை அனைத்துமே ஆதாரமற்றவை. இதை இலங்கையில் வந்து பார்வையிட்டாலே உண்மை நிலையை தெரிந்து கொள்ளலாம்.
 
இலங்கை அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தந்துவவேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Wednesday, March 22, 2017

மைத்திரிபாலவுக்கு முதுகெலும்பு இருந்தால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை ஆறாவது பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜீ.எல்.பீரிஸ்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முதுகெலும்பு இருந்தால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பிலான யோசனையின் ஆறாவது பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் ஆணையாளரால் நாளை இலங்கை தொடர்பிலான விடயங்கள் ஆணைக்குழு அமர்வில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், இது குறித்த இறுதி முடிவு வௌ்ளிக்கிழமை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
2015இல் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட யோசனை மிகவும் தௌிவாக, வௌிநாட்டு நீதிபதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என, தெரிவித்துள்ள நிலையில், அது இரண்டாவது முறையும் உறுதிப்படுத்தப்படும் எனவும், இதற்கு இணை பங்களிப்பு வழங்க வேண்டாம் என, ஜனாதிபதியிடம் கோருவதாகவும், பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, March 21, 2017

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
 
படகு பழுது காரணமாக நின்ற ஜஸ்டீன் என்பவரது படகில் இருந்த 10 மீனவர்களை கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர்.
 
படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். டில்லியில் இன்று தமிழக மீனவர்கள், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவை சந்திக்க உள்ள நிலையில், இலங்கை கடற்படையினரின் செயல் மீனவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நாளையதினம் ஜெனீவா ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் குளோபல் இலங்கை அமைப்பு!

புலிகளுக்கு எதிராக 30 வருட யுத்தத்தை நிறைவு செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கிய இராணுவத்தினருக்கு சர்வதேச நீதிமன்றில் தண்டணை வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
 
இதற்கு எதிராக நாளையதினம் ஜெனீவா ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட குளோபல் இலங்கை அமைப்பு தீர்மானித்துள்ளது.
 
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் இராணுவத்தினர் மீது சுமத்தும் போர்க்குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு வெளியிடப்படவுள்ளது.
 
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு, இலங்கையின் உள்ளக பிரச்சினையில் தலையிடுவதற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்ன இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
 
இதேவேளை, தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணத்தில் ஈடுப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளார்.
 
சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் வாழும் இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் வசந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.

தலாய் லாமாவால் உறவு பாதிக்கும்; சீனா மீண்டும் எச்சரிக்கை!

பீஜிங்: 'எங்கள் பேச்சை கேட்காமல், தலாய் லாமாவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுப்பதன் மூலம், இந்தியா - சீனா உறவு மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என, சீனா எச்சரித்துள்ளது.
சீனா கடும் எதிர்ப்பு:

திபெத் புத்த மதத் தலைவரான தலாய் லாமாவை, பிரிவினைவாதியாக சீனா அறிவித்துள்ளது. அதே நேரத்தில், மதத் தலைவர் என்ற முறையில், தலாய் லாமா மீது இந்தியா மிகுந்த மரியாதை வைத்துள்ளது. சமீபத்தில், அருணாசல பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலாய் லாமா பங்கேற்றார். இதில் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுத்ததற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பீஹார் மாநிலம் நாளந்தாவில், சமீபத்தில் சர்வதேச புத்த மதக் கருத்தரங்கம் நடந்தது. இதில், பங்கேற்க, தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவரும் பங்கேற்றார்.
உறவில் பாதிப்பு:

இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்ஹிங் கூறியதாவது: சீனாவின் கருத்துகளுக்கு, அதன் எதிர்ப்புகளுக்கு இந்தியா செவி சாய்ப்பதில்லை. சர்ச்சைக்குரிய தலாய் லாமாவுக்கு இந்தியாவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கக் கூடாது என, தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்; ஆனால், அதை இந்தியா மதிப்பதில்லை.

இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவில், ஒரு நாடு தெரிவிக்கும் பிரச்னையை மற்ற நாடு மதிக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து, தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம், இந்தியா - சீனா இடையேயான உறவு மேலும் மோசமடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Monday, March 20, 2017

போரின் இறு­திக் கட்­டத்­தில் படை­யி­ன­ரி­டம் சர­ணடை­ந்ததைப் பார்த்தவர்கள் எவரும் இல்லை ; கோத்­த­பாய ராஜ­பக்ச!

போரின் இறு­திக் கட்­டத்­தில் படை­யி­ன­ரி­டம் சர­ணடை­ந்ததைப் பார்த்தவர்கள் எவரும் இல்லை என்று முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்­கி­ல பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
இலங்கை அரசு உரு­வாக்­க­வுள்ள காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கம் யதார்த்­த­பூர்­வ­மற்­றது. காணா­மற்­போ­ன­வர்­கள் குறித்து பல சம்­ப­வங்­கள் உள்­ளன. அதில் ஒரு விட­யத்­தையே நான் நவ­நீ­தம் பிள்­ளை­யி­டம் சுட்­டிக்­காட்­டி­னேன். போரில் தங்­கள் குடும்­பத்­த ­வர்­கள் உயி­ரி­ழந்­ததை ஏற்­ப­தற்கு எப்­படி பெற்­றோர்­கள் தயா­ரில்லை என்­ப­தை­யும் அவர்­கள் உயி­ரு­டன் இருக்­கின்­றார்­கள் என்று அவர்­கள் நம்­பு­வ­தை­யும் நான் சுட்­டிக்­காட்­டினேன்.
 
இளை­யோர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தில் இணை­யும் போது அவர்­க­ளது பெற்­றோர்­கள் அங்கு இருப்­ப­தில்லை.தங்­கள் பிள்­ளை­கள் எங்­கி­ருக்­கின்­றார்­கள் என்­ப­தும் அவர்­க­ளுக்­குத் தெரி­யாது. இதன் கார­ண­மாக அவர்­கள் மோத­லில் கொல்­லப்­பட்­ட­தும், அவர்­கள் உடல்­கள் மீட்­கப்­ப­டாத போது, பெற்­றோர்­கள் தங்­கள் பிள்­ளை­கள் உயி­ரு­டன் இருப்­ப­தா­கக் கரு­து­கின்­ற­னர்.
 
இலங்­கை­யில் இர­க­சிய முகாம்­கள் என்று எவை­யும் இல்­லாத போதி­லும், இந்­தப் பெற்­றோர் தங்­கள் பிள்­ளை­கள் இர­க­சிய முகாம் களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று நம்­பு­கின்­ற­னர். நவ­நீ­தம் பிள்ளை வடக்­கில் மக்­களை சந்­தித்­த­வேளை, அவ­ரி­டம் பலர் தங்­கள் குடும்­பத்­த­வர்­கள் இர­க­சிய முகாம் க­ளில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­வித்­தி­ருந்­த­னர். அவ­ரும் அதனை நம்­பி­னார். காணா­மற்­போ­ன­வர்­க­ளில் சிலர் வெளி­நா­டு­க­ளில் வாழ்­கின்­ற­னர்.
 
இதற்­கான உதா­ர­ணத்தை நான் நவ­நீ­தம்­பிள்­ளை­யி­டம் முன்­வைத்­தேன்.காணா­மற்­போ­ன­வர்­கள் விவ­கா­ரம் விசா­ரணை செய்­வ­தற்கு இல­கு­வான ஒன்­றல்ல. அது மிக­வும் குழப்­ப­க­ர­மா­னது. இரா­ணு­வத்­தி­டம் எவ­ரும் சர­ணை­டைந்­த­தற்­கான ஆதா­ரங்­கள் எது­வு­மில்லை. மக்­கள் பல வதந்­தி­களை அடிப்­ப­டை­யாக வைத்து பல கதை­களை முன்­வைத்­த­னர். அவர்­கள் சிலர் சொல்­வ­தா­கவே கதை­க­ளைச் சொல்­கின்­ற­னர். சர­ணை­டை­வ­தைப் பார்த்­த­வர்­கள் எவ­ரும் இல்லை. போரின் யதார்த்­தம் இதுவே. இவற்றை நம்ப முடி­யாது.
வடக்­கில் போர் இடம்­பெற்­ற­வேளை 5 ஆயி­ரம் படை­யி­னர் கொல்­லப்­பட்­ட­னர். வலு­வான இரா­ணு­வத்­தி­லேயே இத்­தனை பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­னர் என்­றால், விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தில் எத்­தனை பேர் கொல்­லப்­பட்­டி­ருப்­பர் என்­பதை நினைத்து பார்க்க வேண்­டும்.
 
கிரா­மத்­துத் தமி­ழர்­க­ளுக்கு நாட்­டின் அரச தலை­வர், தலைமை அமைச்­சர் ஆகி­யோ­ரின் பெயரே தெரி­யாது. இப்­ப­டி­யா­ன­வர்­கள், இரா­ணுவ அதி­கா­ரி­யைச் சுட்­டிக்­காட்டி, அவ­ரி­டமே தங்­க­ளின் குடும்­பத்­த­வர் கள் சர­ண­டைந்­த­னர் என்று எப்­ப­டித் தெரி­விக்க முடி­யும்> என்று கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

Saturday, March 18, 2017

புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீடிப்பு!

புலிகள் அமைப்பிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு முன்வைத்த கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
மூன்று வருடங்களின் பின்னர் இந்த நிராகரிப்பு தீர்ப்பு வழங்கப்பட்டமையின் மூலம், அந்த அமைப்பின் மீதான தடை நீடிக்கப்படுவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
 
தாம் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் செயற்பட்ட அமைப்பு எனவும், புலிகள் அமைப்பின் சட்டதரணி விக்டர் கோபேயினால் வெளியிடப்பட்ட கருத்தை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
 
லக்சம்பர்க் நகரத்தில் ஐரோப்பிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினால் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்ந்து நீடிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
 
புலிகள் அமைப்பு தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என புலிகள் அமைப்பின் சட்டதரணி நீதிமன்றத்தின் முன் கருத்து வெளியிட்டிருந்தார் என திவயின தகவல் வெளியிட்டுள்ளது.

Friday, March 17, 2017

இலங்கைக்கு வந்த கோடிக்கணக்கான பணம் இல்லாது போயுள்ளது : மஹிந்த ராஜபக்ஷ!

பாதுகாப்பு விடயத்தில் காணப்படும் முரண்பாடுகளை அரசாங்கம் தாமதமாக புரிந்துகொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
நிட்டம்புவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இதன்போது, கடற்கொள்ளையர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடுள்ள அவர்,
 
கடற்பகுதியில் இடம்பெறும் கடத்தல்களை அவன்கர்ட்  நிறுவனம் நிறுத்தியிருந்தது.
 
உரிமையாளர் எவராக இருந்தாலும், அவன் கார்ட் என்பது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
 
இதனூடாக இலங்கையர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சுமார் 150 கப்பல்களுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
 
இவ்வாறான நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச ரீதியாக இணைந்து அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச ரீதியில் அல்ல, இலங்கையால் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை வழங்கினர்.
 
இந்த நிலையில், அவர்களை இதிலிருந்து நீக்கியதால், இலங்கைக்கு வந்த கோடிக்கணக்கான பணம் இல்லாது போயுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்து விடுதலை: மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நிராகரிப்பு?

பிரெக்ஸிட்டுக்கு முன்னதாக ஸ்காட்லாந்து விடுதலை பற்றிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரிட்டிஷ் அரசு நிராகரிக்க உள்ளது.
 
ஸ்காட்லாந்து விடுதலை பெறுவதற்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த இது சரியான நேரமல்ல" என்று பிரிட்டன் பிரதமர் தெரிசா மே கூறியிருக்கிறார்.
 
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்போது, பிரிட்டன் முழுவதற்குமான ஒரு நல்ல ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கிடைப்பதில் இப்போது கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்று பிரதமர் தெரீசா மே கூறியிருக்கிறார்.
 
2019 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்வைக்கப்பட்ட நிக்கோலா ஸ்டர்ஜனின் கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்படும் என்று ஸ்காட்லாந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரூத் டேவிட்சன் தெரிவித்திருந்தார்.
 
மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தடுப்பது "ஜனநாயக அட்டூழியமாக" இருக்கும் என்று ஸ்டர்ஜன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
 
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட, ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் அரசின் செயல்பாட்டை, பிரிட்டிஷ் அரசு தடுக்க உரிமை இருக்கிறது என்று நினைப்பது, சுருங்க சொன்னால், இது விடுதலை பெறுவதற்கான ஒரு வாதமாகும்" என்று ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் ஸ்டர்ஜன் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்
 
வரலாறு இந்த நாளை திருப்பி பார்த்து, ஒன்றியத்தின் இருப்பை முடித்துவிட்ட நாளாக பார்க்கும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
 
ஐரோப்பிய ஒன்றியத்தோடு பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளை ஐக்கிய ராஜ்ஜியம் நடத்துகின்ற அதேவேளையில், 2018 ஆம் ஆண்டு இலையுதிர் காலம் அல்லது வசந்த காலத்தில் ஸ்காட்லாந்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஸ்டர்ஜன் கோரிக்கை விடுத்திருந்தார்.

Wednesday, March 15, 2017

புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது!

வெள்ளவாய கொடவெஹரகள பகுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட  புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்த நிலையில், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
1998ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையில்  புலிகள் அமைப்பின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய பெண் உறுப்பினர் ஒருவரே நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் அந்த பகுதிக்கு சென்றமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்தவர் எனவும், படையினரிடம் சரணடைந்த பின்னர் 2009ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையில் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்கள் அதிகம்: ஐ.நா, தகவல்!

நியூயார்க்: உலக அளவில் இந்தியர்கள் அதிகளவில் புலம் பெயர்ந்துள்ளனர், என ஐ. நா. சபை உலகளவில் புலம் பெயர்ந்தவர்களுக்கான ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

உலகளவில் 2015 ஆண்டு கணக்கு படி சுமார் 1.60 கோடி இந்தியர்கள் மற்ற நாடுகளில் குடியேறியுள்ளனர். இதில் 40 சதவீதம் இந்தியர்கள் குறிப்பிட்ட மூன்று நாடுகளில் மட்டும் குடியேறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் சுமார் 30 லட்சம் இந்தியர்களும், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் தலா 20 லட்சம் புலம் பெயர்ந்த இந்தியர்களும் வசித்து வருகின்றனர்.

ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில், புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்கு பெருமளவு உள்ளது.அதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஐந்து இந்தியர்கள் அமெரிக்க காங்கிரசுக்கு தேர்வாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை ஐ. நா.வின் அறிக்கையில் இருந்தாலும் இந்தியாவில் இதற்கான அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் இல்லை. மேலும், 2015ல் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் நமது நாட்டிற்கு அனுப்பிய தொகை ரூ 4 லட்சத்து 76 ஆயிரம் கோடியாகும்.

Tuesday, March 14, 2017

யுத்தத்தினால் பெற்றுக்கொள்ள முடியாததை புலிபயங்கரவாதிகளுக்குக் கையளிப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது : மஹிந்த ராஜபக்ஷ!

இலங்கையின் அரசியலமைப்பு, அரச கட்டமைப்பு, சட்டத்தொகுதி ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சியானது, மிகவும் அபாயகரமானது. அதன் ஊடாக, யுத்தத்தினால் பெற்றுக்கொள்ள முடியாததை, புலிபயங்கரவாதிகளுக்குக் கையளிப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- மேற்குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்பில், கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல், ஒவ்வொரு விடயங்களும் ஊடகங்களின் ஊடாக வெளியாகியுள்ளன அல்லது உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்து அரசாங்கத்தின் உள்நோக்கம் வெளிப்பட்டுள்ளது. அரசியலமைப்பில், உப-குழுக்களின் அறிக்கைகள் கடந்த நவம்பர் மாதம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன. நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பிலான செயலணியின் அறிக்கையானது ஜனவரி மாதம் வெளியானது. அதில், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்வதற்காக இலங்கைக்கு விதிக்கப்பட்ட 58 நிபந்தனைகள், பயங்கரவாதச் தடைச்சட்டத்துக்கு பதிலாக, பிரதமரினால் முன்மொழியப்பட்ட புதிய சட்டமூலம் ஆகியனவும் ஊடகங்கங்களினால் பகிரங்கப்படுத்தப்பட்டன.
 
இவையாவும், 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், இலங்கையில் நல்லாட்சிக்கு உதவி மற்றும் இணை அனுசரனையுடன் ஒபாமா நிர்வாகம், ஐரோப்பிய சக்திகளினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்குள், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட யோசனையை அடிப்படையாகக் கொண்டதாகும். தற்போதைய சூழ்நிலையில், ஒபாமாவின் ஆட்சி நிர்வாகம் துடைத்தெறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, அதில் உள்ள பிரிவுகளை மாற்றிக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதனை மக்களுக்கு தெளிவுப்படுத்திக் கொள்கின்றேன்.
 
தேசத்துரோகமான நிகழ்ச்சி நிரலினால்தான் இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அதனால்தான், 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு அமெரிக்கா அல்ல இலங்கை அரசாங்கமே தோள்கொடுக்க வேண்டியுள்ளது. பிரதமரின் நல்லிணக்கம் தொடர்பிலான செயலணியின் பரிந்துரைகளின் பிரகாரம், இந்த நாட்டில் ஏற்பட்ட ஆயுதப் போராட்டத்துக்கு, பிரதிவாதிகளிடம் மன்னிப்புக் கோரவேண்டும். எனினும், பயங்கரவாதிகள் அமைப்பு அல்லது அவர்களுக்கு உதவி ஒத்தாசை நல்கிய வேறு அரசியல் அமைப்புகளிடம் மன்னிப்பு கோரவேண்டியதில்லை. அதனடிப்படையில், பயங்கரவாத்தை ஒழிப்பதற்கு இலங்கை அரசாங்கம் செய்தமை தவறானது என்ற கருத்து உலகத்துக்கு எடுத்தியம்பப்பட்டுள்ளது.
 
புலிகளின் மயானங்கள் முன்பிருந்ததை போலவே மீண்டும் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்றும், மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதற்கு தேவையான ஏற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும். புலி உறுப்பினர்களின் உறவினர்கள், உயிரிழந்த புலி உறுப்பினர்களின் படங்கள், புலிச் சீருடை ஆகியவற்றை தங்களுடைய வீடுகளில் காட்சிக்கு வைத்திருப்பதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி, வெற்றிகொண்ட வெற்றியை கொண்டாடுவது தொடர்பில் அந்த செயலணியில் எங்குமே பரிந்துரைக்கப்படவில்லை.
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படாத சகல புலிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். எனினும், குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் இராணுவத்தினர் சிறைவைக்கப்பட வேண்டும் என்றும் அந்த செயலணி பரிந்துரைத்துள்ளது. நல்லிணக்கத்துக்கு இது அத்தியாவசியமானதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
2015ஆம் ஆண்டு ஓபாமா அரசாங்கம், மனித உரிமைகள் பேரவை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸூக்கான நிபந்தனைகளின் பிரகாரம் எங்களுடைய படையினருக்கு எதிராக வெளிநாட்டு, நீதிபதிகள் அடங்கிய யுத்தக்குற்ற நீதிமன்றத்தை நிறுவுவதற்கும் பிரதமரின் இந்த நல்லிணக்க செயலணி பரிந்துரைத்துள்ளது. புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு உள்ளமையால், நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், இந்த யுத்தக் குற்ற நீதிமன்றத்தின் ஊடாக புலி உறுப்பினர்களுக்கு எதிராக செயற்படக்கூடாது என்றும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், புலி அமைப்பிலிருந்து விலகி, அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட புலித் தலைவர்களுக்கு எதிராக யுத்தக்குற்ற விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் அந்த செயலணி பரிந்துரைத்துள்ளது.
 
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் யோசனையின் பிரகாரம், யுத்தக்குற்றத்தை இழைத்ததாகச் சந்தேகிக்கப்படும். எனினும், யுத்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு போதியளவான சாட்சிகள் இல்லையாயின், இராணுவத்தினரை நிர்வாக செயற்பாட்டின் ஊடாக, சேவையிலிருந்து நீக்கப்பட வேண்டும். எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக பிரதமரினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாத சந்தேகநபர்களுக்கு எதிராக போதியளவான சாட்சிகள் இல்லாவிடின், மன்னிப்பு கோருவதற்கு, மனம்திரும்புதல் அறிக்கையை கொடுத்தல், புனர்வாழ்வை பெற்றுகொள்ளல், எதிர்காலங்களில் குற்றச்செயல்களை செய்யாமல் இருப்பதற்கு உறுதிபூணுதல், சமூக சேவையில் ஈடுபடல் ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையில் சட்டமா அதிபர் அல்லது மேல் நீதிமன்றமானது அந்த பயங்கரவாதிக்கு எதிராக கொண்டுவந்த சட்டமுறையை கைவிடமுடியும்.
 
யுத்தக்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவ உறுப்பினர்களுக்கு எவ்விதமான பொது மன்னிப்பு வழங்கப்படகூடாது என்றும் அந்த செயலணியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, எனினும், பிரதமரின் புதிய சட்டத்தினால், நீதிமன்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பயங்கவாதி, பயங்கரவாதத்தை பகிரங்கமாக கண்டித்தல், மனம்திரும்பு அறிக்கையை கொடுத்தல், மேலிருந்து வழங்கப்பட்ட அழுத்தம் உத்தரவு காரணமாகவே அக்குற்றத்தை புரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆகியவற்றின் ஊடாக சிறை தண்டனை குறைப்பதற்கான உறுப்புரையும் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
அனுபவமிக்க இராணுவத்தினரையும் இராணுவ அதிகாரிகளையும் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, நாட்டின் தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்று அந்த செயலணியின் பரிந்துரையில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. பிரதமரின் புதிய சட்டத்தின் பிரகாரம், கைது செய்யப்படுகின்ற பயங்கரவாத சந்தேகநபர்களின் பாதுகாப்பை, அப்பிரதேசத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி, மனித உரிமை ஆணைக்குழு, மாகாணத்தில் உள்ள நீதவான் ஆகியோர் உறுதிப்படுத்தவேண்டும். தடுத்துவைத்தல் மூன்று மாதங்களிலிருந்து 30 நாட்களாக குறைந்துள்ளது. தடுத்துவைக்க கூடிய ஆகக்கூடிய காலமான 18 மாதங்கள் 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராக ஒருவருடத்துக்குள் வழக்கு தாக்கல் செய்யப்படாது. எனினும், வழக்குகாலம் 2 வருடங்களுக்கு மேல் நீடிக்கப்படுமாயின் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்படவேண்டும்.
 
பயங்கரவாதிகளுக்கு ஆகக்கூடிய இடம் வழங்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினருக்கு ஆகக்கூடிய இடையூறுகளும் இந்த புதிய சட்டத்தில் உள்ளக்கப்படும் வகையிலேயே பிரதமரின் செயலணியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தை பிரகரனடப்படுத்தும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டும் வகையில், செயலணியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவை, சமாதானம் சீர்குலையும் போது, பொலிஸ், முப்படைகளின் கைகளை கட்டிவிடுவதாகும். அவ்வாறான நிலைமை ஏற்படுமாயின், நாட்டின் சமாதானத்தை எவ்வாறு பாதுகாப்பது.
 
இலங்கைச் சட்டத்துக்குள் சர்வதேசம் நுழையும் வகையில், சட்டமுறைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஜெனீவா மனித உரிமைகள் பேரவை, இலங்கைக்கு மேன்முறையீட்டை முன்வைப்பதற்கு இடமளிக்கவேண்டும் என்று சட்டம் தொடர்பிலான குழு, யோசனையை முன்வைத்துள்ளது. இது இலங்கையின் உயர்நீதிமன்றமே என்ற மிக உயர்ந்த நீதிமன்றம் என்ற நிலைமையிலிருந்து இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. இலங்கை மதம் அல்லாத நாடாகவும் பிரகடனப்படுத்துவதற்கான யோசனை, பிரதமரின் செயலணியின் ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
மாகாண ஆளுநர்களின் சகல அதிகாரங்களையும் இல்லாமற் செய்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அந்த மாகாணத்தின் முதலமைச்சர்களால், தங்களுடைய விருப்பத்தின் பிரகாரம், ஆளுநர்களை நியமித்துகொள்ளமுடியும். அதேபோல, அந்த அமைச்சரவையின் ஆலோசனையின் பிரகாரம் ஆளுநர் செயற்படமுடியும். இதன் ஊடாக ஒன்றையாட்சி இல்லாமற் செய்யப்பட்டு, பெடரல் ஆட்சிமுறைமையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு அரசாங்கம், நாட்டின் சமாதானத்துக்கும் ஒன்றுமைக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில், தேசத்துரோகமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றது என்பதனை சகலருக்கும் தெரிவித்து கொள்கின்றேன் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பொறுப்புகூற வேண்டும் : கோட்டபாய ராஜபக்ஷ!

புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பொறுப்புகூற வேண்டுமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுத்த இராணுவத்தினர், மனித உரிமை மீறல்களை முன்னெடுக்கவில்லையென தெரிவிக்கும் அறிக்கையை வெளியிடும் நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கோட்டபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
நாட்டின் அமைதிக்காக உயிரை பணயம் வைத்து பேராடிய இராணுவ வீரர்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கத்தின் செயற்பாட்டினை அரசாங்கத்துக்கு வெளியே உள்ள நிபுணர்குழு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
தேசப்பற்றுள்ள பொதுமக்கள் தங்கள் இராணுவவீர்ர்களை காப்பாற்றுவதற்காக பல ஆதாரங்களுடன் கூடிய அறிக்கையொன்றை தயாரித்து, அதனை ஜெனிவாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமரப்பிக்க திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்க செயற்பாடாகும்.
இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான செயற்பாடுகளின் போது (யுத்தகாலத்தின் போது) பாதுகாப்பு அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கபட்டிருந்தது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மற்றும் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதை கண்காணிப்பதற்காக இந்த குழு அமைக்கப்பட்டது.
 
இக்குழுவில் சுகாதார அமைச்சு உட்பட பல்வேறு அமைச்சுகளின் செயலாளர்களும், வெளிநாட்டு தூதுவர்கள், ஐ.நா சபையின் இலங்கைக்கான பிரதிநிதி மற்றும் ஐ.நா சபையின் கிளை அமைப்புகளின் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர்.
 
இந்த குழுவில் இருந்த எந்தவொருவரின் வாக்குமூலமும் இலங்கைக்கெதிரான விசாரணைகளில் உள்வாங்கப்படவில்லை.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உரிய வகையில் இலங்கை அரசாங்கம் மக்களுக்கான
 
அத்தியாவசிய பொருட்களை வழங்கவில்லையென கூறினால் அதற்கு மேற்குறித்த சர்வதேச அமைப்புகளும் பொறுப்புகூற வேண்டும்.
ஏனெனில் உணவு மற்றும் மருந்து பொருட்களை புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் கொண்டு சேர்த்தது அந்நிறுவனங்களே. ஆகவே தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடும் எமக்கெதிரான குற்றச்சாட்டுகள் உண்மையானதல்ல.
 
யுத்தம் உச்சகட்டத்தில் சென்றுகொண்டிருந்த போது உலக உணவு அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி மாற்றப்பட்டார்.
 
இலங்கையின் நிலையில் எவ்வித பிரச்சனையும் இல்லையென அறிந்துகொண்டதனாலேயே அவ்வமைப்பு தமது பிரதிநிதியை ஜப்பானுக்கு இடமாற்றம் செய்தது.
இதுபோன்ற நபர்களின் வாக்குமூலங்களை ஏன் சர்வதேச விசாரணைகளின் போது பெற்றுக்கொள்ளவில்லை?. சர்வதேசத்தில் எற்படும் மாற்றங்களை இவ்வரசாங்கம் சூட்சமமான முறையில் கையாள பழகிக்கொள்ள வேண்டும்.
இலங்கைக்கெதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தீர்மானங்களை கொண்டுவந்த சமந்த பவர் போன்ற அமெரிக்க பிரநிதிகளை அமெரிக்காவின் புதிய அரசாங்கம் அப்பதவிகளிலிருந்து நீக்கியுள்ளது.
 
இவ்வாறானதொரு நிலையில் நாங்களே எமக்கெதிரான தீர்மானத்தை பலப்படுத்துவது எமது வெளிவிவகார அமைச்சு உட்பட அரசாங்கத்தின் கையாளாகாத தனமாகும்.
அத்தோடு அன்று மனிதஉரிமை மீறல் செயற்பாடுகள் மேற்கொண்ட நபர்களே, இன்று மனித உரிமைகள் பற்றி பேசுகின்றன.
 
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் பக்கம் இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சி, அக்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புகூற வேண்டும் என கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Constitutional and legal reforms to destroy the nation!

Constitutional and legal reforms to destroy the nation  Former President of Sri Lanka

The reason why the government is pursuing some of the agenda with great enthusiasm while completely ignoring the constitutional pledges they gave to the people is obviously because they have other, more important masters to please than the people of this country, former President Mahinda Rajapaksa said. “I invite all SLFP members in the government, and parliamentarians of the UNP as well, to read the five documents mentioned here and to decide for themselves whether they want to betray the country and the nation by supporting this traitorous agenda,” he said in a statement on Monday.

Sunday, March 12, 2017

2030-ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை 145 கோடியாக அதிகரிக்கும்!

உலகின் மக்கள் தொகையில் முதலிடத்தை தற்போது சீனா வகித்து வருகின்றது. 135 கோடி மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.  ஒரு தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளும் சட்டம் சீனாவில் நடைமுறையில் இருந்துவந்தது. இச்சட்டத்தால் வரும் காலத்தில் இளைஞர்கள் பலம் குறையும் எனக் கருதிய அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் அச்சட்டத்

இந்நிலையில்,  2016-ம் ஆண்டில் 1.84 லட்சம் குழந்தைகள் புதிதாக பிறந்துள்ளன. இதே விகிதம் நீடித்தால் வரும் 2030-ம் ஆண்டில் மக்கள் தொகை 145 கோடியாக அதிகரிக்கும் என அந்நாட்டு தேசிய சுகாதார மற்றும் குடும்பக் கட்டுப்பாடு இயக்குநகரத்தின் துணைத் தலைவர் வாங் பேய்ன் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 75 சதவிகித்தினர் 15 முதல் 65 வயதுடையவராக இருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தை நீக்கியது.

Thursday, March 9, 2017

இலங்கை மற்றும் இந்திய சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் பரஸ்பரம் ஒப்புதல்!

புதுடில்லி: இலங்கை மற்றும் இந்திய சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் பரஸ்பரம் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

ராமேஸ்வரம் மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இந்தியா, இலங்கை நாடுகளின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 
இதன்படி, இருநாட்டு சிறைகளில் உள்ள மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 85 பேர்
 விடுவிக்கப்பட உள்ளனர்.

கச்சத்தீவு திருவிழா: இந்திய மீனவர்களுக்கு இலங்கை அமைச்சர் அழைப்பு!

கச்சத்தீவில் நடைபெறும் ஆலய விழாவிற்கு வருகை தருமாறு இந்திய மீனவர்களுக்கு இலங்கை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை வசம் உள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் - 11, 12 ஆகிய இருநாட்கள் நடைபெறுகிறது. இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுகொல்லப்பட்டார். இதை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கச்சத்தீவு திருவிழா தொடர்பாக, இலங்கை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியதாவது:

துப்பாக்கிச்சூடு சம்பவம் கச்சத்தீவு ஆலய விழாவை எந்தவிதத்திலும் பாதிக்காது. இருநாட்டு மீனவ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியம். திருவிழாவை சிறப்பாக நடத்த இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பு தருவார்கள்.

துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என கடற்படை கூறுகிறது. பிழை ஏற்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தயாராக உள்ளது. தமிழக மீனவர் சுடப்பட்டது தொடர்பாக முழு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடக்கும் இருநாட்டு பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படும் என நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, March 7, 2017

இந்திய மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலை: இலங்கை கடற்படை பேச்சாளர், சமிந்த வலகுலுகே மறுத்துள்ளார்!

இந்திய மீனவர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலை, இலங்கை கடற்படை பேச்சாளர், லுத்தினன் கொமான்டர் சமிந்த வலகுலுகே இன்று மறுத்துள்ளார். 
 
தமிழகத்தின் ராமேஸ்வர மாவட்டத்தின் தங்கச்சிமடம் பகுதியிலிருந்து கச்சத்தீவு அருகேவந்து மீன்பிடியில் பிரிட்கோ எனப்படும் மீனவர் நேற்றிரவு 8.30 மணியளவில் சுடப்பட்ட நிலையில் இறந்துள்ளதாகவும், அவருடன் வந்த சரவணன் என்பவர் காயமுற்றுள்ளதாகவும் இந்திய மீனவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்
குளஞ்சிநாதன் இந்திய ஊடகங்களுக்கு செவ்வியளித்துள்ளார். 
இருப்பினும் கண்காணிப்பில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் யார் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என கடற்படை பேச்சாளர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தேசத்தைப் பங்குபோட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது :முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

தேசத்தைப் பங்குபோட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டை நேசிக்கும் நாம் எவ்வாறு நாட்டை துண்டாடும் நகர்வுகளுக்கு ஆதரவாக கை தூக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அகலவத்தையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எப்.சி. ஐ.டி., நீதிமன்றம், சிறைச்சாலை ஆகியன இருந்தால் மாத்திரம் ஆட்சியை நடத்தலாம் என எண்ணுகின்றனர். உடல் முழுவதும் குரோதம் வைராக்கியத்தை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகின்றனர். நாட்டை துண்டாடும் பௌத்தத்தை அழிக்கும் அரசியல் அமைப்பிற்கு எம்மால் எந்த சந்தர்ப்பத்திலும்
கை தூக்க முடித்து. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் துணை போகும் கொள்கையில் நாம் துணை போக மாட்டோம்.
எம்மை பழிவாங்கவும் தண்டிக்கவுமே இந்த ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். இன்று உருவாக்க முயற்சிக்கும் புதிய அரசியல் அமைப்பில் பெளத்த மதத்தை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. சிங்கள தேசம் பங்குபோட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு எவ்வாறு நாம் இடமளிக்க முடியும். இந்த நாட்டை நேசிக்கும் நாம் எவ்வாறு நாட்டை துண்டாடும் நகர்வுகளுக்கு ஆதரவாக கை தூக்க முடியும்.
இந்த ஆட்சியாளர்களிடம் பழிவாங்கும் பண்பும் எம்மை தண்டிக்க வேண்டும் என்ற ஒரே எதிர்பார்ப்பும் மட்டுமே உள்ளது. இந்த பழிவாங்கும் தன்மைகளின் மூலமாக நாட்டை ஆட்சிசெய்ய முயற்சிக்கின்றனர். இவர்கள் எந்த முயற்சிகளை முன்னெடுத்தாலும் எம்மை தண்டிக்க எமக்கு எதிராக எந்த குற்றங்களை சுமத்தினாலும் இவர்களால் அவற்றை நிருபிக்க முடியாது. எம்மை குற்றவாளிகள் ஊழல் மோசடிக் காரர்கள் என கூறிக்கொண்டு மக்களின் பணத்தை பூரணமாக கொளையடித்துள்ளனர். மத்திய வங்கி கொள்ளைகள் மூட்டப்பட்டு வருகின்றது. நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கி வருகின்றது. ஊழல் மோசடிகள் ஆயுத கலாசாரம் பரவி வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு; ராமேஸ்வரம் மீனவர் பலி!

இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ(22) என்பவர் கழுத்தில் குண்டு பாய்ந்து பலியானதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன. அச்சமடைந்த மீனவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை திரும்பிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
5 ஆண்டிற்கு பின் உயிரிழப்பு

இலங்கை மீனவர்கள் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்தல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வந்தாலும் கடந்த 5 ஆண்டுகளாக உயிரிழப்புகள் ஏதும் நடைபெறவில்லை, ஆனால் தற்போத மீ
னவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கரை வந்தது உடல்

பலியான மீனவர் பிரிட்சோ வின் உடல் ராமேஸ்வரத்திற்கு வந்தது. அவரது உடல் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான பிரிட்சோ வின் உடலை எஸ்.பி. மணிவண்ணன் நேரில் பார்வையிட்டார்.
 
குண்டு மழை பொழிந்தனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் ஆதம்பாலம் பகுதியில் நடந்தது. இலங்கை கடற்படையினர் குண்டுமழைகளை பொழிந்தனர். அதனால் நாங்கள் உயிருக்கு பயந்து ஓடி வந்துள்ளோம். தாக்குதல் நடந்த பகுதியில் இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபடவில்லை.

Monday, March 6, 2017

பொருள் வாங்கிவிட்டு பணம் தர வில்லை என்று கூறி அ தி மு கா பிரமுகரை வெளுத்து வாங்கும் நபர்!



முன்னாள் புலிகளினால் நாட்டுக்கு ஆபத்து: விநாயகமூர்த்தி முரளிதரன்!

வடக்கு கிழக்கில் இராணுவத்தையும் புலனாய்வுப் பிரிவினையும் அதிகரிக்குமாறு முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்
 
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்தால் நன்று. மேலும் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறித்த மாகாணங்களில் அதிகளவு கடமையில் ஈடுபடுத்தினால் நன்று.இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
 
வடக்கு கிழக்கிற்கு பாதுகாப்பு காணப்படுகின்றது. எனினும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் படையினரையும் புலனாய்வுப் பிரிவினரையும் அதிகரிப்பது பொருத்தமானதாக அமையும்.இந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவர்களே வடக்கு கிழக்கில் புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் கடமையில் அமர்த்தப்பட்ட புலனாய்வுப் பிரிவினரை கடமையில் ஈடுபடுத்துவதே பொருத்தமாக அமையும்.ஏனெனில் அவர்களுக்கு வடக்கு கிழக்கின் அனைத்து மூலை முடுக்குகளும் நன்றாகத் தெரியும்.புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 14000  முன்னாள் புலிபோராளிகள்   வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
 
முன்னாள் புலிகள் என்ன செய்கின்றார்கள் என்பதனை கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
அவ்வாறு இல்லையென்றால் மீளவும் அவர்கள் ஆயுதம் ஏந்தி நாட்டுக்கு அழிவினை ஏற்படுத்தக்கூடும்.
முன்னாள் புலி போராளிகளுக்கு வெளிநாட்டு தொடர்பு உண்டு. இந்த விடயங்கள் குறித்து நான் ஏற்கன அமைச்சர்களிடமும் கூறியுள்ளேன்.
 
 புலிபயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட நாட்டில் மீளவும் வன்முறை வெடிக்க இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதியிடம் கோருகின்றேன் என கருணா தெரிவித்துள்ளார்.

வடக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, மாகாண பொலிஸ் தேவையில்லை : பாட்டலி சம்பிக்க ரணவக்க!


வடக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, மாகாண பொலிஸ் தேவையில்லை என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஹோமாகம, குடுமாதுவ பிரதேசத்தில், இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஆவா குழு எனும் பாதாள உலகக்கோஷ்டி உருவானது. புலி உறுப்பினர்கள் இருவர், ரி-56 ரக துப்பாக்கிகளுடன் மட்டக்களப்பில் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இவற்றிலிருந்து, சமாதானத்துக்கு பங்கம் விளைவிக்கும் காலம், மீண்டும் தலைதூக்கிவி ட்டது என்பது புலனாகின்றது.

அவ்வாறான சக்திகளுக்கு பின்னால், அரசியல் பலம் இருக்குமாயின், அவற்றை தோற்கடிப்பதற்கு நீதிமன்றம், பொலிஸ் மற்றும் சமூகம் ஆகியன ஒன்றிணையவேண்டும். பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கவேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் அனுசரனையில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தில் என்ன இருக்கின்றது.
 
இந்தியாவில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது. சகல மாநிலங்களிலும் பயங்கரவாதம் தலைத்தூக்கிக்கொண்டிருக்கின்றது. அந்த பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமைக்கு பிரதான காரணம், மாநிலங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கியமையாகும். ஆகையால், அந்தநாட்டில் சட்டம் மற்றும் சமாதானம் சீர்குலையும் நிலைமைக்கு சென்றுவிட்டது.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை கொடுத்தால், சமயங் குழு, ஆவா குழு என்று இன்னும் பல பாதாள உலகக் கோஷ்டி உருவாகிவிடும். பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்வதனால் எவ்விதமான பிரயோசனமும் இருக்காது. எனினும், தமிழ்மொழி பேசுகின்றனவர்களின் கலாசாரத்தை கண்டறிந்து, அவ்வாறானவர்களையும் பொலிஸில் இணைந்துகொள்வதன் ஊடாக, இவ்வாறானப் பிரச்சினையை வெற்றிக்கொள்ளமுடியும். இந்த அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறியதன் பின்னர், தமிழ்மொழி பேசுக்கிற நிறையபேர் இணைத்து கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில், பிரச்சினைக்கு தீர்வுக் காண்பதற்கு, மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கவேண்டிய தேவையில்லை. பிரச்சினையை தேசிய பொலிஸினால் மட்டுமே தீர்த்துவைக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கத்திலும் எந்தப் பதவியையும் வகிக்கப் போவதில்லை : முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச!

எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கத்திலும், எந்தப் பதவியையும் வகிக்கப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். புத்திஜீவிகளின் குரல் என்ற அமைப்பின் கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போது அதில் பங்கேற்று இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
 
 புத்திஜீவிகள் அரச நிர்வாக நடவடிக்கைகளில் பங்கேற்றாலும், அரசியல்வாதியாக வேண்டிய அவசியமில்லை. நாட்டை சரியான வழியில் இட்டுச் செல்ல புத்திஜீவிகளை இணைத்துக் கொண்டு திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும்.
 
எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றாலும் பதவி எதனையும் ஏற்கப் போவதில்லை. எனினும் மக்களுடன் இணைந்து சேவையாற்ற வேண்டிய அவசியமுண்டு. நாம் எப்போதும் மக்களுடன் இணைந்திருப்போம் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Sunday, March 5, 2017

நாகை மீனவர்கள் எட்டு பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்!

நாகப்பட்டினம், கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த, நாகை மீனவர்கள் எட்டு பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்; இலங்கை கடற்படையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவுகிறது.

நாகையைச் சேர்ந்த மீனவர்கள், எட்டு பேர், கடந்த 1ம் தேதி, மீன் பிடிப்பதற்காக கடலுக்கு புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு, கோடியக்கரைக்கு தென்கிழக்கே, 35 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
 இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, தங்களை தாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள், இந்திய கடலில் தங்களை சுதந்திரமாக தொழில் செய்ய விடுமாறு, இலங்கை கடற்படையினரிடம் தெரிவித்தனர்.

அப்போது, இலங்கை கடற்படையினரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்தோஷ், 30, என்ற மீனவர், படகில் இருந்த பாட்டிலை உடைத்து, தன்னை குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆவேசமடைந்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த மீனவர்களை கைது செய்து, இலங்கை திரிகோணமலைக்கு அழைத்துச் சென்றனர்.

உயிருக்கு போராடிய மீனவரை, திரிகோணமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சக மீனவர்கள், ஏழு பேரையும், அந்நாட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
கடந்த, மூன்று நாட்களில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த, நான்கு படகுகளை பறிமுதல் செய்து, 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது, மீனவர்கள் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் பிரான்சிஸ் உள்ளிட்ட 318 பேர் பரிந்துரை !

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் பிரான்சிஸ் உள்ளிட்ட 318 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 1901ல் இருந்து அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 318 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் 215 தனிநபர், 103 சமூக அமைப்புகள் அடங்கும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் பிரான்சிஸ்
, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு, இரண்டாவது முறையாக 300க்கு மேற்பட்டோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன், கடந்த ஆண்டு அதிகபட்சமாக 376 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.
நோபல் கமிட்டி, வரும் அக்., 6ல் விருதுக்கு தேர்வான நபரின் பெயரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, March 4, 2017

பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அங்குள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்படாது : ரொசான் செனவிரட்ன!

கேப்பாப்பிலவில் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அங்குள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்படாது என்று முடியாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படுவதைப் போன்று அங்குள்ள இராணுவ முகாம்கள் தொடர்பிலும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன -
அன்று இந்தக் கேள்வி எழுப்பப்பட்டபோது இதே பதிலைத்தான் வழங்கியிருந்தேன். இராணுவ முகாம்கள் அங்கிருந்து அகற்றப்பட
மாட்டாது. இங்கு விமானப்படை முகாம் விமான ஓடுபாதையும் உண்டு. பலாலி இராணுவ முகாம்பகுதியில் மக்கள் எவ்வாறு குடியமர்ந்துள்ளார்களோ அவ்வாறே இப்பகுதியிலும் மீளக்குடியமர்வார்கள். இப்பிரதேச மக்களின் காணிகள் இன்று கையளிக்கப்படுவதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது” - என்றார்.