Tuesday, March 28, 2017

எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சம்பந்தன் விலக வேண்டும் : ஆனந்தசங்கரி!

எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் வீ.ஆனந்தசங்கரி இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
 
தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய பல உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை.
 
இந்த நிலையில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment