Tuesday, January 31, 2012இலங்கை::இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரான எம்.ஏ.ஜே. மெண்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் ஜனாதிபதியால் இவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது, உலகிலேயே சிறந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை மாற்றுமாறு ஜனாதிபதி எம்.ஏ.ஜே. மெண்டிஸிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதற்காக தான் அனைவருடனும் ஒன்றிணைந்து பாடுபட்டதாகவும் ஜூன் மாதமளவில் தொடர்ந்து ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை தன்னால் முன்கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்ந்ததாகவும் மெண்டிஸ் தெரிவித்தார்.
இதனாலேயே தான் பதவி விலக எண்ணியதாகவும் அவர் குறிப்பிட்டார். மெண்டிஸின் சுயவிருப்பின் அடிப்படையிலான பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment