Tuesday, January 31, 2012

பாக்.கில்தான் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன: தேசிய புலனாய்வு மையம்!

Tuesday, January 31, 2012
கொச்சி::இந்தியாவில் கைப்பற்றப்படும் கள்ள நோட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டுள்ளவை என்று கொச்சி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கோழிக்கோடு மற்றும் கொச்சி விமான நிலையங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகளை கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

கொச்சி தனி நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையை என்ஐஏ நேற்று தாக்கல் செய்தது.

அதில், இந்தியாவில் கைப்பற்றப்படும கள்ள நோட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில்தான் அச்சடிக்கப்படுகின்றன என்றும் கள்ள நோட்டுகளை முக்கிய நகரங்களில் புழக்கத்தில் விட ஏஜென்டுகள் உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment