Monday, January 30, 2012

செனட் சபை உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

Monday, January 30, 2012
இலங்கை::செனட் சபை உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் எனினும் அதிகாரப் பரவலாக்கத்திற்கும் செனட் சபைக்கும் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையின் கீழ் அரசியல் தீர்வு யோசனையாக அதிகாரப்பகிர்வு குறித்தே தாம் பேசிவருவதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும் அதிகாரப்பரவலுடன் தொடர்புபடுத்தி செனட் சபை பற்றிய விடயங்களை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதற்கு எவ்விதத்திலும் தாம் தயாரில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment