Friday, July 22, 2011

வடமாகாண மக்கள் கடந்த காலங்களைவிடவூம் இம்முறை தேர்தல் குறித்து மிக ஆர்வமாக உள்ளார்கள்-கண்காணிப்பாளர்கள் கருத்து!

Friday, July 22, 2011
வடமாகாண மக்கள் கடந்த காலங்களைவிடவூம் இம்முறை தேர்தல் குறித்து மிக ஆர்வமாக உள்ளார்கள் என்று தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரஸங்க ஹரிச்சந்திர நேற்றுத் தெரிவித்தார்.

பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் வடபகுதியில் நடை பெறும் முதலாவது தேர்தல் இதுவாகும். அச்சம்- பீதியற்ற சு+ழலில் இத்தேர்தல் நடைபெறுவதன் பயனாகவே வடமக்கள் அதிக ஆர்வமாக இருப்பதாகவூம் அவர் கூறினார்.

65 உள்ளுhராட்சி சபைகளுக்குமான தேர்தலை கண்காணிக்கும் பணியில் 250 பேரை ஈடுபடுத்துவதற்கு தமது நிலையம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவூம் அவர் குறிப்பிட்டார்.

நாளை 23ஆம் திகதி நடைபெறும் உள்ளுhராட்சி சபைகளு க்கான தேர்தல் குறித்து ஊடகவிய லாளர்களுக்கு தௌpவூபடுத்துவதற்காக செய்தியாளர் மாநாடொன்றை தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு நிலையம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடாத்தியது. இச்செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கை யில்- 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்குமாகாணசபைத் தேர்தல் முதல் நாம் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறௌம். ஒவ்வொரு தேர்தல் கண்காணிப்பு பணி முடிவூற்றதும் அது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையாளருக்கு கையளிக்கின்றௌம்.

இத்தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் வடமாகாணத்தில் 5 நடமாடும் வாகனங்களை ஈடுபடுத்தவூள்ளோம். நாம் தேர்தல் கண்காணிப்பு பணியில் வைத்தியர்கள்- சட்டத்தரணிகள்- ஆசிரியர்கள் என மக்களின் அங்கீகாரம் பெற்றவர்களையே ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த காலங்களில் வடபகுதியில் உள்ள காவலரண்களில் பாதுகாப்பு படையினரே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இப்போது காவலரண்ங்களில் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தலை நீதியாகவூம்இ நேர்மையாகவூம் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது என்றார்

No comments:

Post a Comment