Saturday, July 23, 2011

தமிழர்கள் இன்றைய தேர்தலில் நல்ல முடிவெடுத்து பயனடைய வேண்டும்!

Saturday, July 23, 2011
எங்கள் நாட்டில் இன்று பாராளுமன்ற ஜனநாயக உரிமை தழைத் தோங்கி இருக்கின்றது. கடந்த சுமார் 40 ஆண்டு காலமாக, முதலில் ஜே.வி.பி.யினர் 1971 ஏப்ரலில் ஆரம்பித்த ஆயுதப் போராட்டத்தின் மூலம், அன்றைய பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண் டாரநாயக்க அம்மையாரின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எடுத்த முயற்சியை அடுத்து, அதனை ஒரு முன்மாதிரியாக வைத்து, எல்.ரி. ரி.ஈ.யினர் நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக உரிமையை பறித்து விடுவதற்கு நடத்திய பயங்கரவாத யுத்தமும் இன்று வெற்றிகரமான முறையில், நாட்டுத் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின் மூலம் முறியடிக்கப்பட்டது.

பாராளுமன்ற ஜனநாயக உரிமை அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டது என்று இன்று வெறுமனே கொக்கரித்துக் கொண்டிருக்கும் ஜே.வி.பி. யினர், இந்தியாவின் அன்றைய பிரதம மந்திரி ராஜீவ் காந்தியின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜய வர்தன 1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டவுடன், மீண்டும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து மக்க ளுக்கு கொடுமை புரிந்து அரச உடமைகளை அழித்தும், அப்பாவி சிங்கள மக்களை மரணிக்கச் செய்தும் வந்த இருள் சூழ்ந்த கடந்த கால அனுபவங்கள் இன்றும் நம்நாட்டு மக்கள் மனதில் வேரூன்றி பதிந்திருக்கிறது.

இவ்விதம் எங்கள் நாட்டில் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்க எத்தனித்த முயற்சிகளை எதிர்த்து, மக்களை மீட் டெடுத்து அவர்களின் ஜனநாயக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக உதய சூரியனைப் போன்று, தென்னிலங்கையிலிருந்து தோன்றிய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டில் நாட்டின் ஜனாதி பதியாக தெரிவாகிய தினம் முதல் நாடு எத்தனையோ சவால்களை யும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கியிருந்தாலும், ஜனநாயகத்தி ற்கு தீங்கு ஏற்படாத வகையில், அவர் தன்னுடைய ஆளுமைத்தி றமை மூலம் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்தார்.

அன்னாரது இந்த கடும் உழைப்பின் மூலம் நம் நாட்டு மக்கள் பயங்கர வாதிகளின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு, இன்று சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டு, நாட்டின் சகல பகுதிகளிலும் நிம்மதி யான வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தத் தலைவரின் நற்பணிகளை நன்கு உணர்ந்திருந்த மக்கள் 2005 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் ஆரம்பித்து அதையடுத்து நடத்தப்பட்ட சகல தேர்தல்களிலும் அடுத்தடுத்து, முந்திய தேர்தலில் அரசாங்க கட்சிகள் பெற்ற வாக்குக¨ள் விட, கூடுதலான வாக்குக ளுடன் அரசாங்கக் கட்சியை பாராளுமன்றத்திற்கும், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தொடர்ந்தும் தெரிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

எமது நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில் இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், குறிப்பாக வடபகுதி மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைப் பெற் றுக்கொடுப்பதாக அமைந்திருக்கிறது.

இதுவரை காலமும் வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு தங்கள் விருப்பத்தி ற்கு அமைய, ஒரு கட்சியை அல்லது ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்யும் உரிமையை எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் பறித்து, அவர் களை அடிமைகளைப் போன்று சர்வாதிகார நாடுகளில் நடத்தப்ப டும் ஒரு கட்சித் தேர்தலைப் போன்று தங்கள் ஆணைப்படி தாங் கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும், வேறு சில சந்தர்ப்பங்களில் தேர்தல்கள் முற்றா கப் பகிஷ்கரிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டு தமிழ் மக் களின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தை முற்றாக அபகரித்திருந் தனர்.

இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஜனாதிபதி அவர்கள் இந்த மக்களை பயங்கரவாதிகளின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்குப் பூரண ஜனநாயக சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தி ருக்கிறார்.

இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிப் பெற்றாலும், அது இந்நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரம் அடைந்த மாபெரும் வெற்றி என்றே, நாம் நினைக்கிறோம். இதுவரை காலமும் அடிமைகளைப் போன்று எல்.ரி.ரி.ஈ. எசமானர்களின் சொற்படி தங்கள் வாக்கை பிர யோகித்து வந்த வடபகுதி தமிழ் மக்கள் இன்றைய தேர்தலில் தாங் கள் விரும்பிய கட்சிக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ வாக்க ளிக்கும் பூரண சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

ஜனாதிபதி அவர்கள் இதுபற்றி ஒரு தடவை கருத்துத் தெரிவிக்கையில், வடபகுதி தமிழர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும், அது ஜன நாயகத்திற்குக் கிடைக்கும் ஒரு வெற்றி என்று கூறியிருக்கிறார். எனவே, தங்களுக்கு இந்த சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த தேசத் தலைவர் தொடர்ந்தும் தமது பிரதேசத்திற்கு தன்னுடைய நற்பணி களை நீங்கள் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ செய்யத்தான் போகிறார்.

ஆகவே, இன்றைய தேர்தலில் வடபகுதி தமிழ் மக்கள் எந்தக்கட்சி தங் களுக்கு நன்மையளிக்கக்கூடிய திட்டங்களை நிறைவேற்றும், எந்தக் கட்சி பேசிப் பேசி வாக்குறுதிகளை மாத்திரம் அளிப்பதுடன் கால த்தை கடத்திவிடும் என்று தீர்மானிப்பது அவசியமாகும்.

வடபகுதி தமிழ் மக்கள் இது விடயத்தில் தீர்க்கமாக சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வந்து, இன்றைய தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த விலை மதிப்பற்ற வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தி, நன் மையடைய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.

No comments:

Post a Comment