Saturday, July 23, 2011

சிவகங்கை அகதிகள் முகாம்களில்,புலிகள் (எல்.டி.டி.இ.) ஊடுருவியிருக்கலாம் என தகவல் வந்துள்ளதால், கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்!

Saturday, July 23, 2011
சிவகங்கை அகதிகள் முகாம்களில்,புலிகள் (எல்.டி.டி.இ.) ஊடுருவியிருக்கலாம் என தகவல் வந்துள்ளதால், கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்!

சிவகங்கை அகதிகள் முகாம்களில், புலிகள் (எல்.டி.டி.இ.) ஊடுருவியிருக்கலாம் என தகவல் வந்துள்ளதால், கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நாட்டரசன்கோட்டை, தேவகோட்டை உட்பட ஐந்து இடங்களில், அகதிகள் முகாம் உள்ளது. இங்கு, நூற்றுக்கணக்கான அகதிகள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்களது நடவடிக்கைகளை, உள்ளூர் போலீசார் மட்டுமின்றி, கியூ பிரிவு போலீசாரும் கண்காணிக்கின்றனர். முகாம்களில் வசிப்போர் தவிர்த்து, புதிதாக ஒருவர் வந்தால், அவர் பற்றியும், எந்த நோக்கத்திற்காக வந்தார் என்பது போன்ற பல்வேறு விவரங்களை அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து தப்பித்து வரும் புலிகள், தமிழகத்திற்குள் ஊடுருவி வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, ராமேஸ்வரம் வழியாக சிவகங்கைக்குள் அதிகளவில் வந்துள்ளதாக, போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அகதிகள் முகாம்களில் கண்காணிப்பினை, கியூ பிரிவு போலீசார் பலப்படுத்தியுள்ளனர். மத்திய அமைச்சர் அடிக்கடி வந்து செல்லும் மாவட்டமாக இருப்பதால், அரசும் தீவிர கண்காணிப்பினை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""இலங்கை, கண்டியைச் சேர்ந்த ஒருவர், 2 ஆண்டிற்கு முன், புலிகள் தலைவர்களில் ஒருவரான கருணாகரனிடம் இருந்துள்ளார். அவர், ஆந்திராவில் இருந்து 60 அகதிகளை, போலி பாஸ்போர்ட் மூலம் ஆஸ்திரேலியா அனுப்பியுள்ளார். கேரளாவிலிருந்து ஆட்களைக் கடத்த முயற்சித்த அவரை, கொச்சி போலீசார் கைது செய்தனர். போலீசிடமிருந்து தப்பியவரை, அவரது மொபைல் "சிக்னலை' வைத்து, தேவகோட்டையில் போலீசார் கைது செய்தனர். மேலும், புலிகள் நடமாட்டம் இருக்கிறதா என, தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment