Saturday, July 23, 2011

சர்வதேச குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ரஸ்யாவுடன் இலங்கை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது!

Saturday, July 23, 2011
சர்வதேச குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ரஸ்யாவுடன் இலங்கை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு, போதைப் பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட சர்வதேச குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சட்ட விவகாரங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மூன்று நாட்கள் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளைக் பரிமாறிக் கொள்வது தொடர்பிலும் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. கைதிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment