Friday, July 22, 2011

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு மூன்று நாள் பயிற்சி!.

Friday, July 22, 2011
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள, வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ பயிற்சி மையம் அருகே ராணுவ பயிற்சிக் கல்லூரி அமைந்துள்ளது.

இக்கல்லூரியில், இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான், இலங்கை, ஜப்பான், சீனா என பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள், அவ்வப்போது வந்து சுழற்சி முறையில் பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த, 25 முக்கிய ராணுவ அதிகாரிகள் 21.07.2011 அன்று குன்னூர் வெலிங்டன் அருகே உள்ள தனியார் ஓட்டலில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.

என்ன நிகழ்ச்சி என்பது போன்ற விவரங்களை தெரிவிக்க, அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இவர்கள் தங்கியுள்ள ஓட்டலைச் சுற்றி, 20க்கும் மேற்பட்ட போலீசார் "மப்டி'யில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வருகை குறித்து செய்தி சேகரிப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் ஓட்டல் நிர்வாகம் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

குன்னூர் வந்துள்ள இலங்கையைச் சேர்ந்த, 25 முக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு மூன்று நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment