Friday, July 22, 2011

ஹிலரி கிளின்ரனின் கருத்தையோ நாமும் வெளிப்படுத்துகின்றோம்-ஐ.தே.க!

Friday, July 22, 2011
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த போது இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களையே ஐக்கிய தேசியக் கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசியப் பிரச்சினை மற்றும் இடம்பெயர் மக்கள் விவகாரம் தொடர்பில் புத்தாக்க கொள்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஹிலரி அண்மையில் வலியுறுத்தியிருந்தார். சர்வதேச விவகாரங்களை அரசாங்கம் தந்திரோபாயமாக அணுக வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடக்குமுறை மற்றும் ஆவேசத்தினால் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment