Friday, July 22, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுப்பையா ஐ.ம.சு.மு வில் இணைந்துகொண்டார்
:-ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான சிதம்பரப்பிள்ளை விஜயகுமார் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டார்!

Friday, July 22, 2011
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரச்சி பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளரான எம். சுப்பையா என்பவர் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி முன்னிலையில் ஐ.ம.சு.மு வில் நேற்று முன்தினம் இணைந்தார். இது இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி யின் கிளிநொச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் வடபகுதி தமிழ் மக்களின் மேம் பாட்டுக்காக முன்னெடுக்கப்படு கின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங் களே தம்மை இவ்வாறான முடிவு எடுக்க இட்டுச் சென்றதாக த.தே. கூட். அபேட்சகரான எம். சுப்பையா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடு சுதந்திரமடைந்து இற் றைவரையும் இப்போது போன்ற அபிவிருத்தி முன்னொரு போதுமே எமது பிரதேசங்களில் முன்னெடுக்க ப்படவில்லை. அவ்வாறான அபிவி ருத்தியைத் த.தே.கூட்டமைப்பினால் கொண்டுவரவும் முடியாது. இத னாலேயே எமது மக்களுக்காக எம் மோடு இணைந்து அர்ப்பணிப்புடன் உழைக்கின்ற இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் முன் னிலையில் ஐ.ம.சு. முன்னணியில் இணையத் தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

த.தே.கூட்டமைப்பினாலும் புலிகளாலும் தமக்கோ, தமிழ் மக்களுக்கோ எந்த நன்மையுமே கிடைக்கவுமில்லை.

அவற்றை அவர்களால் பெற்றுக் கொடுக்கவும் முடியாது. எனக்கு ஏழு பிள்ளைகள் இருந்தனர். அவர் களில் ஒரு மகன் பேராதனை பல்க லைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் படித்துக் கொண்டிருந்தார். அவரை பலாத்காரமாகப் பிடித்துச் சென்று புலிகள் ஆயுதப் போராட் டத்தில் ஈடுபடுத்தினர்.

அதனால் அவரை இழந்தேன். புலிகளின் செயலால் மேலும் மூன்று பிள்ளைகளை நான் இழந்துள்ளேன். இப்போது மூன்று பிள்ளைகள் தான் எஞ்சியுள்ளார்கள் என்றும் அவர் மிகுந்த மன வேதனையுடன் குறிப்பிட்டார்.

என்னைப் போல் எல்லா தமிழ் மக்களும் புலிகளால் ஏதோவொரு வகையில் துன்ப - துயரத்தை அனு பவித்திருக்கின்றார்கள்.

இந்த நிலைமை மீண்டும் ஒரு போதும் ஏற்பட்டு விடக்கூடாது. அதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களை மேலும் பலப்படுத்துவது ஒவ்வொரு தமிழரது பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------
சி. விஜயகுமார் (ஐ.தே.க)
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான சிதம்பரப்பிள்ளை விஜயகுமார் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டார்.

கிளிநொச்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ முன்னிலையில் சிதம்பரப்பிள்ளை விஜயகுமார், ஆளும் கட்சியில் இணைந்துகொண்டார். இவருடன் சேர்ந்து 300 பேரும் ஆளும் கட்சியுடன் இணைந்துகொண்டனர்.

ஆளும் கட்சியில் இணைந்துள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவித்த சிதம்பரப்பிள்ளை விஜயகுமார், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. இளைஞர்களுக் கான நாளை அமைப்பின் தலைவரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கடந்த ஒரு வருடமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உட்சாகத்துடன் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

பல பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பல திட்டங்களை மேற்கொண்டுள்ளார். கிளிநொச்சி நகரை வடமாகாணத்தில் செல்வாக்கு மிக்க நகரமாக மாற்றுவதற்கும் அவர் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இவற்றைக் கண்டே ஆளும் கட்சியில் இணைவதற்கு தீர்மானித்தேன்.

இவ்வாறு எமது கிராமத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பதை உணர்ந்தே ஆளும் கட்சியில் இணையத் தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான ஐ.ம.சு.மு. கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment