Friday, July 22, 2011

காலணித்துவ நாடுகளின் சதித் திட்டங்களை புரிந்து கொள்ள வேண்டும்-பசில் ராஜபக்ஷ!

Friday, July 22, 2011
காலனித்துவ நாடுகளின் சதித் திட்டங்களை புரிந்து கொள்ள வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பென்தர எல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய நாடொன்று அபிவிருத்தி அடைவதனை காலனித்துவ நாடுகள் ஏற்றுக்கொள்ளாது என அவர் தெரிவித்துள்ளார். ஏதேனும் ஒர் வழியில் சிறிய நாட்டுக்குள் புகுந்து அபிவிருத்தியை சீர் குலைக்க காலனித்துவ நாடுகள் முயற்சிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வியட்நாம் நாடு இந்த துர்ப்பாக்கிய நிலைமையை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலும் இதே நிலைமை ஏற்பட்டதாகவும், லிபியா இந்தத் சதித் திட்டத்தினை தற்போது எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இதனை புதிதாக நோக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த சதித் திட்டங்களுக்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment