Saturday, July 23, 2011

ஊட்டியில் இல‌ங்கை ராணுவ ‌வீர‌ர்களு‌க்கு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்த ராணுவ ப‌யி‌ற்‌‌சி ‌திடீரென ர‌த்து ‌-அனுராதபுரத்தில் மோதல் - ஒருவர் பலி!

Saturday, July 23, 2011
ஊட்டியில் இல‌ங்கை ராணுவ ‌வீர‌ர்களு‌க்கு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்த ராணுவ ப‌யி‌ற்‌‌சி ‌திடீரென ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிக் கழகத்தில் இல‌‌ங்‌கை ராணுவ ‌வீர‌ர்க‌ள் 25 பேரு‌க்கு பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது. இதனால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு அமை‌ப்பை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டனர். இதனால் போரா‌ட்‌ட‌ம் வலு‌த்ததா‌ல் இல‌ங்கை இராணுவ‌ ‌வீர‌ர்களு‌க்கு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்த ப‌யி‌‌ற்‌சி இ‌ன்று ‌திடீரென ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அனுராதபுரத்தில் மோதல் - ஒருவர் பலி!
அனுராதபுரம், சாலியபுர, பானியன்கடவல பகுதியில் இன்று காலை இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் பானியன்கடவல பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் என தெரியவருகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டதாக பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment