Saturday, July 23, 2011

இலங்கையர்கள் உட்பட 114 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆஸியில் கைது!

Saturday, July 23, 2011
இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட 114 பேர் பயணித்த 02 படகுகள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த குழுவினர் தற்போது கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட குழுவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment