Saturday, July 23, 2011

சகிக்க முடியாத தமிழ்க் (புலி)கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது சேறுபூச முயற்சி!

Saturday, July 23, 2011
சகிக்க முடியாத தமிழ்க் (புலி)கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது சேறுபூச முயற்சி!
அரசாங்கம் வடபகுதியில் முன்னெ டுத்துவரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களின் விளைவாகவே தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு மற்றும் எதிர்க் கட்சிகளின் அபேட்சகர்களும், முக்கியஸ்தர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைகின்றனர் என்று கமநல சேவைகள், வனவிலங்குகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

ஐ.ம.சு.மு. எவரையும் பலாத்காரப் படுத்தியோ, வசதி வாய்ப்புக்களையும், வாக்குறுதிகளையும் வழங்கியோ தம் பக்கம் சேர்த்துக்கொள்ள வில்லை. மாறாக சகலரும் சுயவிருப்பின் பேரிலேயே ஆளும் கட்சியுடன் இணைவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஓரிரு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வடபகுதியில் நடைபெறுகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறப்போவதை சகித்துக் கொள்ள முடியாத தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு உள்ளிட்ட சில எதிரணிக் கட்சிகள் சில ஊடகங்களைப் பயன்படுத்தி ஐ.ம.சு.முன்னணி மற்றும் அரசு மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

அரசாங்கம் வடபகுதியில் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் எதனையும் செய்யவில்லை. மாறாக வெவ்வேறு விதமான அழுத்தங்களையும், வசதி வாய்ப்புகளையும் வழங்கி த.தே.(புலி)கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் அபேட்சகர்களையும், முக்கியஸ்தர்களையும் ஆளும் ஐ.ம.சு. முன்னணி தம்பக்கம் இழுத்துக் கொள்வதாகவும் கூறுகின்றனர்.

இக்கூற்றுக்களில் எதுவிதமான உண்மையுமே கிடையாது. அவை அப்பட்டமான பொய்கள்.

பயங்கரவாதம் காரணமாக அழிவுற்ற வட பகுதியைத் துரிதமாக மீளக் கட்டியெழுப்பவென பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பயனாக வடபகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கைகோர்த்துள்ளார்கள்.

நான் ஒரு மாதகாலத்திற்குள் மூன்று தடவைகள் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ளேன். அங்கு 15 கமநல சேவை நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களுக்கு நேரில் விஜயம் செய்து விவசாய மக்களுடன் அளவளாவினேன். அம்மக்கள் எம்மிடம் நிலமிருக்கின்றன, தண்ணீரையும், பசளையையும் வழங்கும்படியே எம்மிடம் கோரினார்கள்.

இதற்கேற்ப பொருனாதார அபிவிருத்தி அமைச்சும், கமநல சேவைகள் அமைச்சும் இணைந்து வடபகுதியில் 69 குளங்களை தற்போது புனரமைக்கின்றன. இவ்வருட முடிவுக்குள் நூறு குளங்களையும் புனரமைத்து பூர்த்தி செய்யவுள்ளோம்.

அரசாங்கம் நெற்செய்கையாளர்களுக்கு ஐம்பது கிலோ எடைகொண்ட ஒரு மூடை பசளையை ரூபா 350.00 மானிய விலைக்கு வழங்கி வருகின்றது. இது வடபகுதி நெற் செய்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றது. அத்தோடு திராட்சை, பப்பாசி, வாழை, உள்ளிட்ட மரக்கறி செய்கையாளர்களுக்கும் பழச் செய்கையாளர்களுக்கும் பசளை மானிய விலையில் வழங்கப்படுகிறது.

யாழ். குடாநாட்டில் இப்போது மலையகப் பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படும் கரட், பீட்ரூட் மற்றும் லீஸ் போன்ற மரக்கறி வகைகளும் பயிரிடப்படுகின்றன. இவர்களுக்கும் பசளை மானிய விலையில் வழங்கப்படுகின்றது. பசளையை மானிய விலையில் எந்த இடத்திலும் கொள்வனவு செய்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கென விசேட அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. அந்த அட்டைக்கு எந்த இடத்திலும் பசளையைப் பெற்றுக்கொள்ள முடியும். யாழ். குடாநாட்டிலுள்ள சகல கமநல நிலையங்களிலும் இந்த அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுற்றதும் அவை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

ஏ-9 நெடுஞ்சாலையை காப்பட் முறையில் செப்பனிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இப்பணி பூர்த்தி செய்யப்படும். ஏ-39 நெடுஞ்சாலை பூநகரி, மன்னார், புத்தளம் ஊடாக ஐந்து மணித்தியாலங்களுக்குள் கொழும்பைச் சென்றடையக் கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

வடபகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதைப் பிரதான நோக்காகக் கொண்டு தான் மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வடபகுதிக்கான ரயில் சேவையை மீண்டும் துரிதகதியில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது ரயில் தண்டவாளப் பாதை அமைப்புப் பணிகள் ஓமந்தைக்கு அப்பாலும் சென்றுள்ளது. இத்தண்டவாளப் பாதை ரயில்கள் வேகமாகப் பயணிக்கக் கூடிய வகையில் அமைக்கப்படுகின்றன. காங்கேசன் துறை துறைமுகம் வடபகுதியில் பாரிய துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது. வடபகுதியிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின் வசதியை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வடபகுதியிலுள்ள சகல அரசாங்க ஆஸ்பத்திரிகளும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. உள் வீதிகளும், பாடசாலைக் கட்டடங்களும் புனரமைத்து மேம்படுத்தப்படுகின்றன. சகல அரச கட்டடங்களும் புனரமைத்து நவீனப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு வடபகுதியில் இடம்பெறுகின்ற பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத த.தே.(புலி)கூட்டமைப்பும், ஏனைய சில எதிரணி கட்சிகளுமே ஐ.ம.சு.மு. மீதும் அரசு மீதும் சேறுபூசுகின்றன. இராணுவத்தையும், பொலிஸாரையும் இதற்குள் இழுத்து விடுகின்றனர்.

அ. அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ் தலைவர்களைப் படுகொலை செய்ததும், வடபகுதி தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைச் சீரழித்ததும் தேர்தல் ஏற்பாடுகளை குழப்பியடித்ததும் புலிகள் தான். மாணவர்களை பலவந்தமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களுக்கு சயனைட் வில்லைகளை வழங்கியதும் புலிகள்தான். இதனால் வடபகுதியின் கல்வித்துறை பாரிய வீழ்ச்சி கண்டது. இலங்கைக்கு அதிக புத்திஜீவிகளை வழங்கிய பிரதேசங்களில் யாழ். குடாநாடும் ஒன்றாகும். அந்த நிலைமையைச் சீரழித்தவர்களும் புலிகள்தான்.

ஆகவேதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடபகுதியின் கல்வித்துறையை அபிவிருத்தி செய்து புத்திஜீவிகளை உருவாக்கும் பிரதேசமாக மீண்டும் வடபகுதியைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். வடபகுதியில் அச்சம், பீதியில்லாத ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்களை சுதந்திரமாக நடத்தக் கூடிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு ஆயுதம் ஏற்தியவர்கள் இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளுடனும் இளைஞர்கள் இணைந்துள்ளார்கள். தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றார்கள். வடபகுதியில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலிலும் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

No comments:

Post a Comment