Saturday, July 23, 2011

ஜெயலலிதாவின் இலங்கை விஜயத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்!

Saturday, July 23, 2011
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இலங்கை விஜயத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் ஊடாக ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வேலைப் பளு காரணமாகவோ அல்லது வேறும் காரணிகளினாலோ ஜெயலலிதாவினால் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியாவிட்டால் பாராளுமன்றக் குழுவொன்றை அனுப்பி வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்துடன் பேசி பாராளுமன்றக் குழுவொன்றை அனுப்பி வைக்க முடியும் எனவும், அதனை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பிரதிநிதிகள் மட்டுமன்றி இந்தியாவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக வடக்கு நிலைமைகளை பார்வையிட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைப்பதன் மூலம தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும், பரிந்துரைகளின் அடிப்படையில் தேவையான அரசியல் சாசனத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும அ;வர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்hளர்.

வடக்கில் இராணுவ ஆட்சி நிலவுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இராணுவ முகாம்கள் காணப்படுவதாகவும் வடக்கில் மட்டும் இராணுவ முகாம்கள் காணப்படுவதாக தெரிவிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment