Thursday, July 21, 2011

இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் ஜெயலலிதாவுடன் சந்திப்பு!

Thursday, July 21, 2011
தமிழகத்திற்கு நேற்று விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனிடம் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மறு வாழ்வு அவர்களை பாரம்பரீய பிரதேசங்களில் குடியேற்றுதல் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக பேசிய நிலையில் சென்னை கோட்டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார்.

சற்று நேரத்திற்கு முன்னர் நடந்த சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்துமாறு கரியவாசத்திடம் வலியுறுத்திய ஜெயலலிதாவிடம் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மறு குடியேற்றம் எப்படி நடக்கிறது என்று எடுத்துக் கூறினார் கரியவாசம். ஹில்லாரியின் விஜயத்திற்;குப் பின்னர் இலங்கைத் தூதர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்திருப்பது மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment