

Friday, July 22, 2011நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடைபெறவுள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் இன்று முற்பகல் அளவில் ஆரம்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் தத்தமது
நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு.பீ.சுமனசிறி கூறினார்.
இரண்டாயிரத்து 226 நிலையங்களில் இம்முறை வாக்களிப்பு இடம்பெறவுள்ளதுடன் இதற்காக 22 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட
உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் வாக்கு எண்ணும் பணிகளுக்காக 27 ஆயிரத்துக்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment