Friday, July 22, 2011

136 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் விபத்திலிருந்து தப்பியது!

Friday, July 22, 2011
டெல்லியிலிருந்து கௌஹாத்தி நோக்கி சென்று கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் விபத்திலிருந்து நூழிலையில் தப்பியது. ஜெட் ஏர்வேஸ் விமானமும் மற்றொரு விமானமும் பாட்னா எல்லைக்குள் பறந்து கொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோத இருந்த வேளையில் கடைசி நிமிடத்தில் இரு விமானங்களும் விபத்திலிருந்து தப்பின.

நேற்று காலை 10.15 மணிக்கு 136 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் டெல்லியிலிருந்து கிளம்பியது. 11.35 மணியளவில் பிகார் தலைநகர் பாட்னா மீது பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த விமானம் பல மீட்டர் தூரம் கீழே இறங்கியது. இதனால் பயணிகள் அலறிப்போனார்கள். இதையடுத்து இன்டர்காமில் பேசிய பைலட், எதிரே மிக அருகே ஒரு போயிங்- 747
சர்வதேச விமானம் வந்ததால், விமானத்தின் உயரத்தை உடனடியாக 1,000 அடி குறைக்குமாறு தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து உத்தரவு
வந்ததால் தான் விமானத்தை 1000அடி கீழே இறக்கியதாக கூறினார். இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர்.

No comments:

Post a Comment