Friday, July 22, 2011

அமெரிக்காவில் இந்தியரை கொன்றவருக்கு மரண தண்டனை: விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டான்!

Friday, July 22, 2011
இந்தியரை சுட்டுக் கொன்ற அமெரிக்க வாலிபருக்கு அந்நாட்டு கோர்ட்டு விதித்த மரண தண்டனை நேற்று நிறை வேற்றப்பட்டது.இந்தியரான வாசுதேவ் பட்டேல் (45) என்பவர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார்.

இந்த நிறுவனம் அரேபியாவில் உள்ள ஒருவருக்கு சொந்தமானது. அதே நிறுவனத்தில் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் வேலை பார்த்து வந்தனர்.

2001-ம் ஆண்டு, அந்த நிறுவனத்துக்குள், “மர்ம” மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் நுழைந்தான். வெறித்தனமாக அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் வாசுதேவ் பட்டேல், பாகிஸ்தானைச் சேர்ந்த வாக்கர் ஹசன் உயிர் இழந்தனர்.

வங்காள தேசத்தைச் சேர்ந்த ரியாஸ் டிய்யான் குண்டு காயத்துடன் தப்பினார். இவர்களை துப்பாக்கியால் சுட்டவனை ஹீஸ்டன் போலீசார் கைது செய்தனர். அவனது பெயர் மார்க்ஸ்ட் ரோமேன் (40). இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட சம்பவத்துக்கு பழி வாங்கவே, அரேபியருக்கு சொந்தமான கடை ஊழியர்களை சுட்டதாக அவன் வாக்கு மூலம் அளித்தான்.

டெக்சாஸ் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் மார்க் ஸ்ட்ரோ மேனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தான். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவனுக்கு நேற்று டெக்சாஸ் ஜெயிலில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. விஷ ஊசிபோட்டு கொல்லப்பட்டான்.

No comments:

Post a Comment