Friday, July 22, 2011

கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Friday, July 22, 2011
கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவால் எதிர்வரும் 2011, நவம்பர் மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ள அறிக்கைக்கான அனைத்து ஆதரங்களையும் திரட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

ஆணைக்குழு, பொதுமக்களிடம் இருந்து ஆதாரங்களை திரட்டும் பணிகளை தற்போது நிறுத்தியுள்ளதாகவும், அறிக்கையை தயாரிப்பதற்கு போதுமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, எதிர்வரும் நவம்பர் மாதம் பரிந்துரையுடன் கூடிய இறுதி அறிக்கையானது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவால் நியமிக்கப்பட்ட இவ் ஆணைக்குழுவானது, 2002 பெப்ரவரி 21 முதல் 2009 மே 19 வரை இடம்பெற்ற நிகழ்வுகளில் எவரிடம் இருந்தாவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச் சம்பவங்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் அனுவங்களை சேகரி்க்கவென நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment