Monday, September 28, 2015

அரசியல் தீர்வு காண ஜனாதிபதி சிறிசேனாவிடம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன் வலியுறுத்தல்!

Monday, September 28, 2015
இலங்கையில் அமைதி காண்பதற்கும் அரசியல் தீர்வு காண்தற்கும் பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று இலங்கை ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனாவிடம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின்  மனித உரிமை ஆணையம் இலங்கை போர் நிறுத்த விதி மீறலை மேற் கொண்டது தொடர்பாக அறிக் கை வெளியிட்டது. அந்த அறிக் கையின் பரிந்துரைப்படி உரிய நடவடிக் கை எடுங்கள் என்று இலங்கை ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனாவிடம் ஐக்கிய நாடுகள்  பொதுச்செயலாளர் பான் கி-மூன் தெரிவித்தார்.
 
இலங்கை ஜனாதிபதியை பான் கி-மூன் சனிக்கிழமையன்று சந்தித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த மேம்பாடு இலக்கு குறித்த  கூட்டத்திற்கு இடையே பான் கி-மூன் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் இலங்கை போர் விதி மீறல் குறித்து அறிக் கை வெளியிட்ட ஆணையரையும் பான்கி-மூன் பாராட்டினார்.இலங்கை ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனா செயல்படுத்துவார் என்றும் பான்கி மூன் நம்பிக் கை தெரிவித்தார்.
 
இலங்கையில் கடந்த 2002ம்ஆண்டு முதல் 2011ம்ஆண்டு வரை கடுமையானபோர் நிறுத்த விதிமுறைகள் மீறப்பட்டு இருக்கின்றன-இது குறித்து ஐநா மனித உரிமை ஆணையர் சையத் ராட் அல் ஹூசைன் கூறுகையில் இலங்கையில்நடந்த உள்நாட்டுப்போரில் கடுமையான போர்நிறுத்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன.அந்தபோரின் போது கண்மூடித்தனமாக குண்டு வீசப்பட்டு விதிமுறைகள் மீறப்பட்டு இருக்கின்றன. இலங்கை போர் நிறுத்த விதி முறைகள் காரணமாக எல்.டி.டிஇயினருக்கும் இலங்கை அரசு இடையேயும் கடுமையான போர் நிறுத்த விதிமுறைகள் மீறப்பட்டு இருக்கின்றன. என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment