Monday, September 28, 2015
சவுதி அரேபியாவின் மினா நகரில் ஏற்பட்ட
கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 29 ஆக
அதிகரித்துள்ளது.சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து 5 கிலோமீட்டர்
தொலைவில் உள்ள மினா நகரில் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்கள்
சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் கடந்த வாரம் கலந்து கொண்டபோது கூட்ட
நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 769 ஆக
ஆகியுள்ளது. இந்த விபத்தில் 934 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில்
கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை நேற்று29 ஆக
அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம்வரை பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 22
ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது பலியான 7 இந்தியர்களின் விபரம் தெரிய
வந்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூருல் ஹக், உத்தர
பிரதேசத்தைச் சேர்ந்த அன்வர் ஜான்ஹா, கேரளாவைச் சேர்ந்த எப்.ஏ. முனீர்
வீட்டில், ஆமீனா பீவி, அப்துல் ரஹ்மான் அசரிதோடி, பி.வி. குன்ஹிமோன்,
மொயுத்தீன் அப்துல் காதர் ஆகியோர் தான் அந்த 7 பேர் ஆவர்.
கடந்த
25 ஆண்டுகளில் மினா நகரில் கூட்ட நெரிசலில் அதிகமானோர் பலியாகியுள்ளது
தற்போது தான் என்பது குறிப்பிடத்தக்கது. பலியானவர்களில் 18 பேர்
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.முன்னதாக கடந்த 11ம்
தேதி மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் கிரேன் முறிந்து விழுந்து 11
இந்தியர்கள் உள்பட சுமார் 100 பேர் பலியாகினர்.
No comments:
Post a Comment