Monday, September 28, 2015

இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு இங்கிலாந்து வரவேற்பு!

Monday, September 28, 2015
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் (UNHRC) சமர்ப்பிக்கப் பட்ட தீர்மான வரைவு தொடர்பில் இலங்கை அரசு எடுத்த நிலைப்பாட்டை இங்கிலாந்து வரவேற்றுள்ளது. இலங்கையின் ஒத்துழைப்பானது மோதல் மரபிலிருந்து சுமூக பேச்சுக்கான புதியதொரு நெருக்கமான படி என இங்கிலாந்தின் பொது நலவாய மற்றும் வெளிநாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வைர் தெரிவித்தார்.
 
இவ்வார ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட பின் மூல உரையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திருத்தங்களுடன் இலங்கை மீதான தீர்மான வரைவு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் (UNHRC) கூட்டத்தில் நேற்று (செப்டம்பர், 26) சமர்ப்பிக்கப்பட்டது.

மாசிடோனியா முன்னாள் யூகோஸ்லாவியா குடியரசு, மொண்டிநீக்ரோ, ஐக்கிய ராச்சியம் மற்றும் வட அயர்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் இணை அனுசரணையுடன் ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமை பேரவையின் 30வது அமர்வில் இத்தீர்மானம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment