Tuesday, September 29, 2015

ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் செயல்கள் மனிதாபிமானத்திற்கு இழுக்கு: ஒபாமா!

Tuesday, September 29, 2015
ஒரு பயங்கரவாத அமைப்பு, பிணைக்கைதிகளை கொல்வதும், பெண்களை துன்பப்படுத்தவதும் மனிதாபிமானத்திற்கு ஏற்பட்ட இழுக்கு எனவும், உலகத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை தங்களால் மட்டும் சரி செய்ய முடியாது என அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா., பொதுச்சபையில் பேசினார்

அவர் பேசியதாவது: ஐ.நா., பொதுச்சபையில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது: உலகத்தின் பிரச்னையை அமெரிக்காவால் மட்டும் தீர்க்க முடியாது.அமெரிக்காவையும், நட்பு நாடுகளையும் காப்பாற்ற தயங்க மாட்டோம்.ஐ.நா.,வின் செயல்பாடு சாதிக்க முடியாதது என நினைக்கின்றனர். தூதரகம் மற்றும் பேச்சுவார்த்தை ரீதியிலான அமைதி நடவடிக்கை சாத்தியமாகாது என சிலர் வாதாடுகின்றனர்.
ஐ.எஸ்., மீது சாடல்:
 
உலகில் சில பயங்கரவாத அமைப்புகள் நம்மை பின் தள்ளுகின்றன. பயங்கரவாத அமைப்புக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும். ஒரு பயங்கரவாத அமைப்பு பிணைக்கைதிகளை கொல்வதும், பெண்களை கொடுமைப்படுத்துவதும் மனிதாபிமானத்திற்கு இழுக்கு. சிரியாவில் சர்வாதிகாரி சொந்த மக்களையே கொடுமைப்படுத்துகிறார். இது நம்மை பாதிக்கிறது.உங்கள் எதிரிகளை சிறையிடலாம், சிந்தனைகளை தடுக்க முடியாது.இன்றைய சர்வாதிகாரிகள், நாளை புரட்சி ஏற்படுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கின்றனர்.சிரியாவில் உள்ள பிரச்னையை தீர்க்க ரஷ்யா ஈரான் மற்றும் மற்ற நாடுகளுடன் பேச தயார்.ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போர் ஐநாவின் நோக்கமாக இருக்க வேண்டும். சாமான்ய மக்களின் பாதுகாப்பு சிலரின் நடவடிக்கை மற்றும் கொள்கைகளால் பாதிக்கப்படுகிறது.
சர்வதேச சமூகத்தின் சாதனை:
 
ஈரான் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை பார்க்கவே தடை விதிக்கப்பட்டது. ஒரு ஈரான் தொடர்பான திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது சர்வதேச சமூகத்தின் சாதனையாக பார்க்கப்படும்.நாட்டின் சாதனை, அந்நாட்டு மக்களின் வளர்ச்சி அடிப்படையில் தான் பார்க்கப்படும்.
சீனாவுக்கு அறிவுரை:
 
தென் சீன கடல் பிரச்னையை சீனா, மற்றும் அதனை சார்ந்த நாடுகள் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்.சீனா சர்வதேச விதிகளை மதிக்க வேண்டும் என கூறினார்.
பனிப்போரை விரும்பவில்லை:
 
ரஷ்யாவை தனிமைப்படுத்த விரும்பவில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம்.ரஷ்யா மீதான தடை அந்த நாட்டை தண்டிப்பதற்கு அல்ல. உக்ரைன் பிரச்னையை தீர்க்கவே. அமெரிக்கா - ரஷ்யா இடையே பனிப்போர் துவங்கியுள்ளதாக கூறுவது தவறு.பினிப்போர் துவங்குவதை விரும்பவில்லை. உக்ரைன் பிரச்னையை தீர்க்க விரும்புகிறோம்.உக்ரைன் மக்கள் ஐரோப்பாவுடன் இணைந்து இருக்கவே விரும்புகின்றனர்.ரஷ்யாவுடன் அல்ல என கூறினார்.

No comments:

Post a Comment