Tuesday, September 29, 2015

இலங்கை பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு: பான்-கி-மூன்!

Tuesday, September 29, 2015
உள்நாட்டு அரசியல் பிரச்னைகளுக்கு பேச்சு மூலம் சுமுக தீர்வு காண வேண்டும்' என, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன், இலங்கை அதிபர் சிறிசேனவிடம்,
வலியுறுத்தியுள்ளார்.
 
ஐ.நா., 70ம் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்க, நியூயார்க் வந்த, சிறிசேன, பான்-கி-மூனை சந்தித்து பேசினார். அப்போது, பான்-கி-மூன் பேசியது குறித்து, அவரது செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
 
இலங்கையில், சுமுக அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சை முன்னெடுத்துச் செல்ல இதுவே சரியான தருணம். இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி, இலங்கையில் நிலையான, நீடித்த அமைதிக்கு அடித்தளம் இட வேண்டும். ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், இலங்கை அரசு நேர்மறையான, திடமான நடவடிக்கையைத் துவக்கியுள்ளது.

இது வரவேற்கத்தக்கது. அதேபோல், ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை, இலங்கை அரசு நிறைவேற்றும் என, ஐ.நா., நம்புகிறது. இது தொடர்பாக, இலங்கை அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க, ஐ.நா., தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment