Monday, September 28, 2015

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் - பாதாள குழுக்களிடையே மோதலா?

Monday, September 28, 2015
மினுவான்கொடை கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த இவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்தவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலே சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

அத்துடன் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கானவர் துப்பாக்கியை வைத்திருத்தல், கப்பம் கோருதல் உள்ளிட்ட குற்றங்கள் பலவற்றுடன் தொடர்புடையவர் என பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
- அபகஹவத்தை சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

No comments:

Post a Comment