Monday, September 14, 2015

துப்பாக்கியுடன் தலதா மாளிகைக்குள் சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் வெளியேற்றம்!

புதிய பாதுகாப்பு செயலாளருக்கு பாதுகாப்பு அளித்து துப்பாக்கியுடன் தலதா மாளிகைக்குள் சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் வெளியேற்றப்பட்டுள்ளார். புதிய பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலதா மாளிகைக்கு வழிபாடுகளில் ஈடுபடச் சென்றிருந்தார்.
 
அவருடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சென்றதுடன் அதிதிகள் செல்லும் பிரதான நுழைவாயிலில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன்போது துப்பாக்கியுடன் சென்ற உத்தியோகத்தர் தலதா மாளிகை பாதுகாப்பு பிரிவினரால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment