Tuesday, September 15, 2015

விழுப்புரத்தில் கேஎப்சி உணவகத்தை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியினர் கைது!

Tuesday, September 15, 2015
அமெரிக்க அரசின் இலங்கை உள்நாட்டு விசாரணைக்கான தீர்மானத்தை கண்டிக்கும் விதமாக இன்று விழுப்புரத்தில் கேஎப்சி உணவகத்தை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியினர் நாற்பதுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
ஐநா அவையில் இலங்கை போர்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையே போதுமானது எனும் வகையில் அமெரிக்கா முன்மொழிய இருக்கும் வரைவு தீர்மானமானது ஈழத்தில் தமிழ் மக்களுக்கு பெரும் அடியாக இருக்கும் என தெரிவித்த தமிழர் விடியல் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷைலேந்தர் எனவே அமெரிகாவின் வணிக நிறுவனத்தை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவிப்பதாக கூறினார்.
 
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்த கோரியும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையை உடனடியாக கொண்டுவர வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
 
மேலும் அமெரிக்க வணிக பொருட்களை தொடர்ந்து புறக்கணிப்பதின் மூலமாக மட்டுமே தமிழர்கள் அமெரிக்காவை அடிபணிய வைக்க முடியும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment