Wednesday, September 30, 2015

உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பில் சீர்திருத்தம்!

Wednesday, September 30, 2015
அடுத்த தேர்தலுக்குள் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பிலான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் திணைக்களத்தின் அறுபதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டின் சட்ட வரையறைக்கு அமையவே நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடல்கள் முன் எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாடு நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவானதாகவே இருக்கும் என அவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய முகாமைத்துவ நிறுவனம் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
சகல தரப்பினருடனும் கலந்துரையாடியதன் பின்னரே நாட்டுக்கே உரித்தான நடவடிக்கைகளின் ஊடாக நல்லாட்சியை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment