Wednesday, September 30, 2015

இலங்கை பற்றிய யோசனை குறித்து உறுப்பு நாடுகள் கருத்து!

Wednesday, September 30, 2015
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு யோசனைகள் தொடர்பில் இன்றைய தினம், உறுப்பு நாடுகள் தமது கருத்துக்களை வெளியிடவுள்ளன.

இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கும் 3.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த அமர்வு இடம்பெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல இணைந்து யோசனை ஒன்றை முன்வைத்துள்ளன.

இந்த யோசனைக்கு இலங்கை தற்போதைய நிலையில் தமது ஆதரவினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment