Wednesday, September 30, 2015

ஐ.நா அமைதிகாக்கும் பணி: இலங்கை தொடர்ந்து அர்ப்பணிக்கும்: மைத்தி!

 Wednesday, September 30, 2015
ஐ. நா அமைதிக்காக்கும் பணிக்கு தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை மகிழ்ச்சியடைகிறது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

ஐ. நா அமைதிகாக்கும் படையின் காரணமாக இன்று உலகம் பாதுகாப்பாக உள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலங்களில் இப்பணியில் இருந்தபோது தங்களது உயிர்களைத் தியாகம் செய்த நூற்றுக்கனக்கான அமைதிகாக்கும் பணியாளர்களை நினைவுகூர்ந்து நாம் இச்சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளைச் செலுத்துவதோடு, அவர்களது பணிகளை அங்கிகரித்து பாராட்டுவோம் என்றும் தெரிவித்தார்.

ஐ. நா தலைமையகத்தில்  நடைபெற்ற ஐ. நா அமைதிகாக்கும் பணிகள் தொடர்பான உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஐந்து தசாப்தங்களாக ஐ.நா அமைதிகாக்கும் முயற்சிகளுக்கு இலங்கை தன்னடக்கமான பங்களிப்புகளைச் செய்துவந்துள்ளது. ஐ நா அமைதிகாக்கும் திணைக்களத்தின் நடவடிக்கைகளில் இலங்கையின் ஒத்துழைப்பை இவ்வருடம் ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத்; தொடர்ந்து ஐ.நா உடனான உடன்பாடான ஈடுபாட்டிற்கான அரசாங்கத்தின் கொள்கையின் ஒரு விரிவாக்கமாகவே கருதுகிறோம் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

அமைதி நடவடிக்கைகள் தொடர்பான உயர்மட்ட குழுவின் அறிக்கை சிவிலியன்களின் பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு முக்கிய கடப்பாடாக அடையாளப்படுத்துகிறது. ஐ.நா அமைதிகாக்கும் பணியாளர்கள் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குக் கிடைக்கும் எல்லா கருவிகளையும் பயன்படுத்த வேண்டுமென அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கையில் சிவிலியன்களைப் பாதுகாப்பது தொடர்பான கிகாலி கோட்பாடுகளை இலங்கை அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த முன்னெடுப்பில் மேலும் பல நாடுகள் இணைந்து கொள்ளுமென நாம் எதிர்பார்க்கிறோம். என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மாநாடு அமைதிகாக்கும் பணிகள் அதன் ஆணையை மிகச் சரியாக நிறைவேற்றும் வகையில் அதற்குத் தேவையான மேலும் பல வளங்களை வழங்குவன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்துமென நாம் எதிர்பார்க்கிறோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்...
 
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாராட்டியுள்ளார். இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்தல் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் போன்றன தொடாபில் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியது என ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காக நியூயோர்க் விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதியை, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அரச தலைவர்களுக்கு வழங்கிய விருந்துபசாரத்தில் சந்தித்த போது ஒபாமா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு பூரண ஒத்துழபை;பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment