Monday, August 17, 2015

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயார் நிலையில் யாழ் மாவட்டம்!

Monday, August 17, 2015
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள்  ஆரம்பமாகியிருக்கின்றன. இதன் முதற்கட்டமாக பிரதான தேர்தல் வாக்கெண்ணும் நிலையமான யாழ். மத்திய கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது.
 
யாழ். தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வாக்குப் பெட்டிகள் பேருந்துகளில் பூரண பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
 
இதேவேளை யாழ்.தீவகப் பகுதிகளுக்கான வாக்குப் பெட்டிகள், புங்குடுதீவு வரையில் பேருந்துகளில் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கப்பல்களில் தீவுப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
 
இதேவேளை இன்று காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரையில் வாக்களிப்பு இடம்பெறும் எனவும், மாலை 4 மணிக்குப் பின்னர் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து பிரதான வாக்கெண்ணும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரிக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்படும் எனவும் யாழ். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், இன்று மாலை 4 மணிக்கு தபால் மூல வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
 
இதேவேளை யாழ்.குடாநாட்டில் சிவில் உடையில், பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைள் மற்றும் திடீர் சோதனைக்கான தயார்ப்படுத்தல்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்.மத்திய கல்லூரி சுற்றாடலில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு கடமைகளுக்காக அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment