Saturday, August 15, 2015

புலி சந்தேகநபரை இலங்கையிடம் ஒப்படைத்தது மலேசியா!

Saturday, August 15, 2015
மலேசியாவில் கைது செய்யப்பட்ட  புலிகள் இயக்க சந்தேக நபர் நேற்று கொழும்பக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கோலாலம்பூரில் வைத்து அவர் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.   இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

37 வயதான குறித்த நபர் கடந்த 2012ம் ஆண்டு சுற்றுலா வீசா மூலம் மலேசியாவிற்குள் பிரவேசித்துள்ளார்.   புலிகளின் சார்பில் மலேசியாவில் குறித்த நபர் பணம் திரட்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பிரஜைகளுடன் இணைந்து கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக விசாரணைகளின் போது குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment