Wednesday, August 12, 2015

அமைச்சர் சம்பிக்கவின் புத்தகத்தை கிழித்து தீயிட்டு கொளுத்திய அஸ்வர்!

Wednesday, August 12, 2015
அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இஸ்­லாத்­தையும், முஸ்­லிம்­க­ளையும் அடிப்­படை வாதி­க­ளாகச் சித்­தி­ரித்து எழுதிய அல்மி­ஜிஹாத் அல்கைதா எனும் புத்­த­கத்தை கிழித்து தீயிட்டு கொளுத்­திய முன்னாள் முஸ்லிம் விவ­கார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் அப்­புத்­த­கத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தடை­செய்ய வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்தார்.
 
நேற்று முன்தினம் ­காலை பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள பர்ல் கிராண்ட் ஹோட்­டலில் நடை­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அஸ்வர் குறிப்­பிட்ட வேண்­டு­கோளை விடுத்தார்.
 
அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க எழு­த­ியுள்ள அல்மி­ஜிஹாத், அல்­கைதா என்ற புத்­த­கத்தில் இலங்­கையில் குர்ஆன் மத­ர­சாக்­களும் அரபு கல்­லூ­ரி­களும் அஹ­திய்யா பாட­சா­லை­களும் பல்­க­லை­க்க­ழ­கங்­களின் இஸ்­லா­மிய பீடங்­க­ளும் இஸ்­லா­மிய தீவிர வாதத்தை போதிப்­ப­தா­கவும் இவ் விட­யங்­க­ளி­லி­ருந்து தான் முஸ்லிம் அடிப்­படை வாதம் பரப்­பப்­ப­டு­வ­தா­கவும் கூறி­யுள்ளார்.
 
அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை, தௌஹீத் ஜமாஅத் போன்ற இஸ்­லா­மிய நிறு­வ­னங்கள் அடிப்­படை வாதத்­திற்கு துணை­போ­வ­தா­கவும் கூறி­யுள்ளார். இவ்­வி­யக்­கங்கள் சமா­தா­னத்­தையும், நல்­லொ­ழுக்­கத்­தையுமே போதிக்­கின்­றன என்­பதை சம்­பிக்க அறி­யா­தி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­யது. குர்ஆன் பாட­சா­லைகள் உரு­வா­கு­வ­தற்கு கார­ண­மாக இருந்­தவர் இன்­றைய அமைச்சர் கபீர்­ஹா­ஷிமின் அப்பா இப்­ராஹிம் என்­ப­வ­ராவார். குர்ஆன் மத­ர­ஸாக்­களைப் பற்­றிய தவ­றான கருத்­துக்­களை தெரி­வித்­துள்ள சம்­பிக்க ரண­வக்க இப்­போது ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் கூட்டுச் சேர்ந்­துள்ளார். இந்­நி­லையில் இது பற்றி அமைச்சர் கபீர் ஹாஷிம் என்ன சொல்­கிறார் என்­பதை தெளிவுப்­ப­டுத்த வேண்டும்.
 
இதே­வேளை ஒலுவில் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழகம் மறைந்த தலைவர் அஷ்­ரபின் ஏற்­பாட்­டிலேயே ஆரம்­பிக்­கப்­பட்­டது. அங்கு இஸ்­லா­மிய பிரிவு இயங்­கு­கி­றது என்­றாலும் அங்கு சிங்­கள, தமிழ் மாண­வர்­களும் உயர்­கல்வி பெறு­கி­றார்கள்.
 
இந்­நி­லையில் தற்போது அமைச்சர் சம்­பிக்­க­விடம் கூட்டு சேர்ந்­துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதற்கு என்ன சொல்­கிறார். பல்­க­லை­க்க­ழக இஸ்­லா­மிய பீட­ங்­களில் தீவி­ர­வாதம் போதிக்­கப்­ப­டு­கி­றதா? சம்­பிக்­கவின் கூற்றை அவர் ஏற்றுக் கொள்­கி­றாரா என்­பதை நாட்டு மக்­க­ளுக்கு தெளிவு­ப்ப­டுத்த வேண்டும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கொள்கைகளைக் கொண்டவர்கள் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்? கலிமா சொன்ன முஸ்லிம்கள் இவ்வாறானவர்கள் ஒற்றிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

No comments:

Post a Comment