Wednesday, August 12, 2015

தேர்தல் நிறைவடையும் வரை நிதி மோசடி பிரிவிற்கு அழைக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது !

Wednesday, August 12, 2015
தேர்தல் நிறைவடையும் வரை வேட்பாளர்கள் காவற்துறை நிதி மோசடி பிரிவிற்கு அழைப்பது கைவிடப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார.

தேர்தல்கள் ஆணையாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் கட்சி பிரதிநிதிகளுக்கிடையே நேற்றை தினம் சந்திப்பு இடம் பெற்றது.

இந்த சந்திப்பின் போது சுதந்திர கூட்டமைப்;பின் பிரதிநிதி இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

வேட்பாளர்கள் காவற்துறை நிதி மோசடி பிரிவிற்கு அழைக்கப்படும் பட்சத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என கூட்;டமைப்பின் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.            

No comments:

Post a Comment