Wednesday, August 12, 2015

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 40 மீனவர்கள் விடுதலை!

Wednesday, August 12, 2015
சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, 40 தமிழக மீனவர்கள், இன்று தமிழகம் வருகின்றனர்.
 
ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து, கடந்த ஜூன் மாதம் மீன்பிடிக்கச் சென்ற, 40 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் பிடித்து சிறையில் அடைத்தனர். அவர்களை விடுக்க வேண்டும் என, மீனவ அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
 
நேற்று முன்தினம், 40 பேரும் விடுவிக்கப்பட்டனர்.அவர்கள், இலங்கையில் உள்ள இந்திய துணை துாதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இன்று மாலை, கடலோர காவல்படை உதவியுடன் தமிழகம் வருகின்றனர்.'காரைக்கால் வரும், 40 பேரும் அங்கிருந்து நாகை மற்றும் ராமேஸ்வரம் செல்வார்கள். அவர்களின் படகுகளை மீட்கவும் முயற்சி நடந்து வருகிறது' என, தமிழக மீன்வளத் துறையினர் கூறினர்.

No comments:

Post a Comment