Wednesday, August 12, 2015

ஐக்கிய தேசிய கட்சியை வெல்ல வைப்பதற்காக தற்போதைய அரசாங்கம் பிரபாகரனின் உடலையும் தோண்டுவார்கள்: மஹிந்தானந்த!

Wednesday, August 12, 2015
ஐக்கிய தேசிய கட்சியை வெல்ல வைப்பதற்காக தற்போதைய அரசாங்கம் பிரபாகரனின் உடலையும் தோண்டுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
 
றகர் வீரர் வசிம் தாஜுடீனின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், சடலங்களை தோண்டியெடுத்து மக்கள் மத்தியில் போலி பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இதனை இந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மஹிந்த ராஜபக்சவின் சுயரூபத்தை மாற்றுவதற்காக திருடன் என்று கூறினார்கள். அதனையும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
தற்போது மஹிந்த ராஜபக்சவை கொலையாளி என சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள். இதனையும் மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எதிர்வரும் நாட்களில் வேலுபிள்ளை பிரபாகரனின் சடலத்தை தோண்டினால் வெற்று பெற முடியும் என கூறினால் ரணில் விக்ரமசிங்க அதனையும் செய்வார்.
 
நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒன்று கூற விரும்புகின்றோம், கடந்த 5 மாதங்களினுள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு என்ன செய்ததென்று மக்கள் நன்கு அறிந்துள்ளனர். ஜனவரி மாதம் 08ம் திகதி செய்த தவறு மக்களுக்கு தற்போது புரிந்துள்ளது. மக்கள் அத் தவறினை சரிப்படுத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.

No comments:

Post a Comment