நல்லாட்சி அரசாங்கத்திற்கு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் ஆதரவளிக்கும் என பிரதமர் ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி கொள்கைகளுக்கு ஆதரவளிக்க இரண்டு கட்சிகளும் இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தமது கொள்கைகளிலிருந்து மாறுபடாது, நல்லாட்சிக்கு ஆதவரளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு இந்த இரண்டு கட்சிகளும் ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இனவாத பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வினை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றில் பெரும்பான்மை ஆசனங்களை வென்றெடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரத்தை பகிர்வதாக மஹிந்த ராஜபக்ஸ இந்திய பிரதமருக்கு உறுதிமொழி வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment