முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பகல் கனவு காண்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை ரத்தோட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட 58 லட்சம் வாக்குகள் மீண்டும் தமக்கு கிடைக்கும் என்று எண்ணுகிறார்.
இது பகலில் காணும் கனவு எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில்,
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அரச சேவையாளர்கள் தொடர்பில் கருத்து
வெளியிட்டிருந்தார்.
அரச சேவையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை
அமுலாக்கும் வகையில், தற்போதைய அரசாங்கம் அவர்களுக்கு 5 வருடங்களுக்கு
விடுமுறை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது.
அதாவது, 5 வருடங்களுக்கு பதவி உயர்வு இல்லை. ஓய்வூதியம் இல்லை.
இது அரச பணியாளர்களை குறைக்கும் முதற்கட்ட நடவடிக்கையாகும் என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment