Thursday, August 13, 2015

தேர்தலில் வாக்களிக்க விடுமுறை அவசியம்: உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட்!

Thursday, August 13, 2015
இந்த முறை பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு தமது வாக்குகளை அளிக்க விடுமுறை வழங்காத தொழில் தருனர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று தேர்தல்கள் திணைக்களம் எச்சரித்துள்ளது.

உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் இதனை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய ஆயிரத்து 407 முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

அதில் அமைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத சுவரொட்டி மற்றும் பதாதைகள் தொடர்பிலேயே அதிக அளவான முறைபாடுகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் 205 முறைபாடுகள் பதிவாகியுள்ளன.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவடைகின்றன.            

No comments:

Post a Comment